Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை ஒருபோதும் எவரும் அடக்கமுடியாது! சிங்கப்பூர் முன்னாள்பிரதமர் லீகுவான்யூ புத்தகத்தில் கருத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழர்களை ஒருபோதும் எவரும் அடக்கமுடியாது! சிங்கப்பூர் முன்னாள்பிரதமர் லீகுவான்யூ புத்தகத்தில் கருத்து. 
[Thursday 2014-08-21 22:00]
leekuwanju-singapoor-210814-300-seithy.j

சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத் தனி நாடே தீர்வாகும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  

"லீ குவான் யூவுடனான உரையாடல்கள்" என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலிலேயே "சிங்கப்பூரின் நவீன சிற்பி' என்று அழைக்கப்படும். சிங்கப்பூரின் முதல் பிரதமரும் தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சிங்களவர்கள் இலங்கையில் இருந்த காலம் முதல் தமிழர்களும் இருந்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரையில் மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையில் இன பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்க நம்ப வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

அடங்காத் தமிழன்

ஈழத்தமிழர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடவும் மாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத் தமிழர்களை சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால் தான் அவர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.

சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.

நடப்பது இன அழிப்பே

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப் பேராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=115407&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான்.
அதே
  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பு என்று பேசுவது தவறு. பிறகு சுமந்திரன் கோவிப்பார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பு என்று பேசுவது தவறு. பிறகு சுமந்திரன் கோவிப்பார்.. :D

 

அவரை கண்டால் இனசுத்திகரிப்பு என மாத்தி சொல்வோம்..... :D

அவரை கண்டால் இனசுத்திகரிப்பு என மாத்தி சொல்வோம்..... :D

 

கலக்கிறீங்க தலைவா  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகப்பற்றுள்ள ஈழத்தமிழனைப்பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளார் இந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர்.அவ்வளவுத்துக்கு இராசரத்தினத்தின் வலிமை இருந்திருக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பு என்று பேசுவது தவறு. பிறகு சுமந்திரன் கோவிப்பார்.. :D

ஸ்ஸ்ஸ்ஸ்...........அதை சத்தமாய் சொல்லாதிங்க இங்குள்ள சிலர் கோபப்படபோகினம்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பு என்று பேசுவது தவறு. பிறகு சுமந்திரன் கோவிப்பார்.. :D

 

அவரை கண்டால் இனசுத்திகரிப்பு என மாத்தி சொல்வோம்..... :D

 

சூப்பர்...... :lol: ha-ha-ha-smiley-emoticon.gif

உலக தலைவர்கள், ராஜதந்திரிகள் எல்லோரும் ஓய்வு பெற்றபின்னர் ஈழதமிழருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். தமிழரின் போராட்ட நியாயம் பற்றி தாம் எழுதும் புத்தகங்களில் எழுதுகிறார்கள்.  ஏன் தாம் அங்கம் வகித்த அல்லது பிரதிநிதித்துவம் வகித்த  அரசாங்கம் செய்த தவறுகளை (பதவியில் இருக்கும் போது நியாயபடுத்தியவர்கள் கூட) பட்டியல் போடுகிறார்கள். அமைதிபடை தளபதி கல்கட், தீட்சித், நட்வர்சிங் இப்படி பலர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.