Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முடிந்தபின் ஒரு இராணுவ வீரனிடமிருந்து ஒரு கடிதம்.

Featured Replies

என் தொப்பியையும், துப்பாக்கியையும் தொலைத்துவிட்டு... 

சட்டைப் பையில் மீதமாய் இருப்பது, 

என் வியர்வையின் ஈரம் ஊறிய பாண் துண்டு மட்டுமே...

இங்கே அறைகள் சுத்தமாகவும், சுவர்கள் கதகதப்பாகவும் இருக்கின்றன 

நான் தேநீர் குடிக்கின்றேன், 

என் வாய் யாரையும் சபிக்கவில்லை 

கொஞ்சம் புகை பிடிக்கின்றேன்

ஆம், இப்படித்தான் ஒருமுறை இருந்தது..... 

„நான் என் பயத்தை தொலைத்துவிட்டேன் 

இங்குள்ள தாங்க முடியாத வெக்கையால் எழும் பயம், 

ஒவ்வொரு குளிகாலப் பயத்தை நினைவுபடுத்திச் செல்கிறது 

அங்கே எங்கோ ஓர் இடத்தில் தொலைத்த என் பயத்தை 

நான் தேடவில்லை....

வயிறு நிறைய உண்டபின் உறங்க விரும்புபவர்கள் போல 

மரணத்தைக் காதலித்து வீழ்ந்துகிடந்த என் நண்பர்களைக் கடந்து செல்கின்றேன்

ஆம், ஆறு நாட்களாக சன்னங்களை உணவாக உண்டோம் 

அந்தச் சன்னங்களை தொண்டை வழி விழுங்க உதவியாக, 

காய்ந்து போன எம் கண்ணீர் இருந்தது.... 

வழமை போலவே, உண்டபின் வரும் களைப்பு ஒவ்வொருவருக்கும்...

சன்னங்களை உண்டபின்பும்....

ஆனாலும், அந்தக் கறுப்பு மரணத்தை வெறுக்கும் ஒரு நோயாளியைப் போல்,

இரவிவிலும் நான் என் தூக்கத்தை வெறுத்தேன்“

பார்த்தாயா, இப்பொழுது கூட என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை, 

இப்பொழுதும் நான் விழித்தே இருக்கின்றேன்... 

இங்கே மெல்லிய குளிராக இருக்கிறது 

திறந்துள்ள சாளரம் வழி வரும் எச்சரிக்கையுடன் கூடிய 

சாலையோர அசைவுகளைக் கேட்கின்றேன்... 

அயலவர்கள் தாமாக இசைத்துப் பாடுகிறார்கள் 

இங்கே யாரையும் எனக்குத் தெரியாது

இந்தச் சாளரம் வழியாக ஒரே ஒரு முறை எட்டிப் பார்த்தேன் 

உனக்குத் தெரியும், உயரத்துக்கான என் பயத்தை. 

இந்தப் பயம் மட்டும் என்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது 

ஒவ்வொரு சாளரம் வழியே தெரியும் முகிற்கூட்டங்களும் 

மிகத் தொலைவாகத் தெரிகின்றன.... 

கீழே கீழே, மிகத் தொலைவாக முகிற்கூட்டங்கள்… 

கீழே கீழே 

மிகத் தொலைவாக.........

(மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது. "அவர்கள் சன்னங்களை உணவாக உண்டார்கள்" என்ற வரி என்னை எழுதத் தூண்டியது. உங்கள் உணர்வுகளைப் பகிருங்கள். நன்றி. பிழைகளை பொறுத்தருளவும் :))

10649998_824693484241903_721915581232946
சுகிர்தா சண்முகநாதன் ...பேஸ்புக் 

 

கனமான வரிகள் !!

 

"அவர்கள் சன்னங்களை உணவாக உண்டார்கள்" ... அஞ்சரன்,சன்னங்கள் என்றால் துப்பாக்கி குண்டுகளிலிருந்து உதிரும் உலோகங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சரன் உங்கள் மொழி பெயா்ப்பு முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்... 

சன்னங்கள் - துப்பாக்கித் தோட்டாக்கள் / ரவைகள்  இதை விட எறிகணைகள், விமானக்குண்டுகளிலிருந்து வெடித்து சிதறும் உலோகங்களையும் அப்படி அழைப்பா்

Edited by Nitharsan

  • தொடங்கியவர்

அஞ்சரன் உங்கள் மொழி பெயா்ப்பு முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்... 

சன்னங்கள் - துப்பாக்கித் தோட்டாக்கள் / ரவைகள்  இதை விட எறிகணைகள், விமானக்குண்டுகளிலிருந்து வெடித்து சிதறும் உலோகங்களையும் அப்படி அழைப்பா்

நிதர்சன் இது என்னுடைய மொழிபெயர்ப்பு இல்லை ...

 

சுகிர்தா சண்முகநாதன் ...பேஸ்புக்  பக்கத்தில் இருந்த ஒரு கவிதை நல்லா இருக்கு என்பதால் இங்கு பகிர்த்தேன் .

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சுகிர்தாவின் கவிதையா அருமையாக உள்ளது

பகிர்வுக்கு நன்றி அஞ்சரன்... கவிதை நன்றாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு சாளரம் வழியே தெரியும் முகிற்கூட்டங்களும் 

மிகத் தொலைவாகத் தெரிகின்றன.... 

கீழே கீழே, மிகத் தொலைவாக முகிற்கூட்டங்கள்… 

கீழே கீழே 

மிகத் தொலைவாக.........

 

இணைப்புக்கு நன்றி, அஞ்சரன்!

 

ஒரு யுத்தத்தின் விளைவுகளை... மேலுள்ள வரிகளை விடத் தெளிவாக யாரும் சொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை!

 

முகில் கூட்டங்கள் தான் மழை பொழிபவை!

 

இங்கு அவை, 'நம்பிக்கை' என்னும் பொருளில் வருகின்றன என்று நினைக்கிறேன்!

 

இப்போது பின்வரும் வரிகளை இன்னுமொரு முறை வாசித்துப் பாருங்கள்!

 

கீழே கீழே, மிகத் தொலைவாக முகிற்கூட்டங்கள்… 

கீழே கீழே 

மிகத் தொலைவாக.......

  • தொடங்கியவர்

வருகை தந்த அனைவருக்கும் நன்றி ...

 

ஒரு போர் சூழலில் இருந்து வந்தால் இந்த கவிதையின் ஆழம் சட்டென்று மனதில் நிழலாடும் .

  • கருத்துக்கள உறவுகள்

கொடிய போரில் உயிரைக் கையிலேந்திக் கனத்த இருளில் மூழ்கிக்கிடக்கும் ஒரு சிப்பாயின் உள்ளம் பேசுகிறது கவிதையின் வாயிலாக....சாளரத்தினூடாக வரும் மெல்லிய குளிர்மையான காற்றும் அச்சத்தின் வெப்பத்தைப் பிரசவிக்க வெளியே அயலில் கேட்கும் இசையையும் கிரகிக்க முடியாத அவலத்தை மட்டுமே சுமக்கிறது வீரனின் இதயம். மன அடுக்குகளில் உறைந்துபோன மரணத்தின் வடுக்கள் ஆழமா இன்னும் ஆழமாக வேரூன்றி கிடக்க நிகழ்காலத்திற்குள் மீளாத தாக்கத்திற்குள் மாண்டு போகிறது வீரனின் உணர்வுகள்.... கவிதை மிக நேர்த்தியாக வெளிக்கொணர்கிறது யுத்தத்தின் தாக்கத்தை.. சுகிர்தாவை பாராட்டாமல் விலக முடியாது.

Edited by வல்வை சகாறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.