Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீதா.. அடி கள்ளி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்போடு... கூட்டம் கூடுகிறது... கேள்விகளை தொடுக்கிறார்...

 

(வெள்ளையின ஆங்கிலேய) முகாமையாளர்: உங்கள் பெயர்தான் கோலியாத்தா..?!

 

கோலியாத்: ஆம்.. நானே தான் அது.

 

முகாமையாளர்: உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அது எமது நிறுவன ஒழுங்கு விதிக்கமைய பராதூரமாக பார்க்கப்படுகிறது..! அந்த வகையில் தான் இந்த விசாரணைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நீங்கள் அண்மையில் அப்படி ஏதாவது குற்றம் செய்ததாக உணர்கிறீர்களா..??!

 

கோலியாத்: நானா. அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லையே..?!

 

முகாமையாளர்: உங்களுக்கு சீதாவை தெரியுமா..??!

 

கோலியாத்: என்ன அந்த மகாபாரத சீதாவா.. மன்னிக்கனும்.. இராமாயண சீதாவா.... அவாவை தெரியும்.

 

(முகாமையாளர் இந்தப் பதிலைக் கேட்டு முழிக்கிறார். என்ன நம்ம கம்பனில இரண்டு சீதாவா..என்று அவருக்கே ஒரு டவுட்டு வருகுது.)

 

முகாமையாளர்: எந்த சீதாவோ.. எங்கட நிறுவனத்தில் உள்ள சீதாவைத் தெரியுமா...?!

 

கோலியாத்: ஆம்.

 

முகாமையாளர்: எப்ப இருந்து தெரியும்..?!

 

கோலியாத்: இதே நிறுவனத்தில் என்னோட பகுதியில் என்னோடு தான் அவாவும் வேலை செய்கிறா. அதுவும் எனக்கு முன்னாடி நின்று தான் வேலை செய்யுறா. அந்த வகையில் தெரியும்.

 

முகாமையாளர்: நீங்கள் இருவரும் தமிழர்களா..??!

 

கோலியாத்: நான் தமிழ் பேசத் தெரிந்த தமிழன். அவாவுக்கு தமிழ் நல்லா பேச வரும்.

 

முகாமையாளர்: (இவனுக்கு திமிர் அதிகம் போல.. என்று நினைச்சுக் கொண்டே... மீண்டும்...) நீங்கள் இருவரும் நிறுவன வேலை நேரத்தில் தமிழில் பேசிக்கொள்வீர்களா..??!

 

கோலியாத்: அவா சிரிப்பா.. எடி கள்ளி ஏண்டி சிரிக்கிறாய் என்று கேட்பேன்.. அவ்வளவும் தான்.

 

(முகாமையாளர் கடுப்பாகிறார்.. மீண்டும் உச்சசாயலில்.. )

 

முகாமையாளர்: நீங்கள் இருவரும் தமிழில் பேசுவீர்களா.. ஆமா.. இல்லையா என்று பதில் அளிக்கவும்.

 

கோலியாத்: (மனசுக்க: அப்படி தெளிவாகக் கேட்கிறது).. ஆம். பேசுவோம்.

 

முகாமையாளர்: எப்போது நீங்கள் சீதாவை  முதன்முதலில் பார்த்தீர்கள்..?!

 

கோலியாத்: எங்கள் வீட்டுக்கு அருகில் பூங்காவில் பார்த்தேன். அவா அவருடைய சின்ன மகளோடு வந்திருந்தார்.

 

முகாமையாளர்: அவர் ஒரு குடும்பப் பெண் என்று உங்களுக்கு தெரியுமா..?!

 

கோலியாத்: ஆம். ஒரு குழந்தையோடு ஒரு பெண் வந்திருப்பதால்.. அதுவும் தமிழ் பெண் என்பதால்.. அப்படி தான் நினைச்சுக் கொண்டேன்.

 

முகாமையாளர்: மேலும்.. கண்டதும் அவா தமிழ் என்று எப்படி தெரிந்து கொண்டீர்கள்.

 

கோலியாத்: சிவப்பு.. ஸ்ரிக்கர் பொட்டு வைச்சிருந்தா. அதோடு தமிழ் பெண் என்பதை முகச்சாயலும் காட்டிக் கொடுத்தது.

 

முகாமையாளர்: சரி அது இருக்கட்டும்.. குழந்தை இருக்கு என்பதற்காக குடும்பப் பெண் என்று எப்படி நினைத்தீர்கள். கண்டு கதைத்தீர்களா..??!

 

கோலியாத்: தமிழர்கள் ஒரு பெண்ணை குழந்தையோடு கண்டால் அப்படித்தான் நினைப்பார்கள். கண்டு கதைக்கவில்லை.. புன்னகைத்தேன். அவரும் பதிலுக்கு புன்னகைத்தார்.

 

முகாமையாளர்: அந்தச் சந்திப்பின் பின் சீதாவை பல தடவைகள் நிறுவனத்தில் கண்டுள்ளீர்கள். சந்தித்துள்ளீர்கள். அப்போதெல்லாம் அவரிடம் என்ன பேசினீர்கள்..கேட்டீர்கள்..??!

 

கோலியாத்: என்ன என்னை கண்டால் சிரிக்கிறீங்க.. கதைக்கிறீங்க இல்லையே என்று கேட்டேன்.

 

முகாமையாளர்: அந்தக் கேள்வியின் அர்த்தம் என்ன..??!

 

கோலியார்: சிரிக்கத் தெரிந்த உனக்கு.. உயிரே கதைக்கத் தெரியாதோ என்பது தான்..

 

(முகாமையாளர் பாடலைக் கேட்டுவிட்டு முழிக்கிறார்..)

 

முகாமையாளர்: இதன் உள்ளார்ந்த அர்த்தம்.. தமிழில் என்ன..??!

 

கோலியாத்: தெரியாது.

 

முகாமையாளர்: (கடுப்பாகி) யோவ்.. அப்ப எதுக்கையா அதைப் பாடினே...

 

கோலியாத்: கூலாக.. அவர் என்னைப் பார்த்து அடிக்கடி சிரிப்பார். அதனால் ஜொள்ளுக் கூடி அப்படி பாடினேன்.

 

 

முகாமையாளர்: அடிக்கடி என்றால்...

 

கோலியாத்: என்னை அவர் காணும் போதெல்லாம் சிரிப்பார். நானும் பதிலுக்கு சிரிப்பேன்... அந்த வகையான அடிக்கடி.

 

முகாமையாளர்: இதனை நீங்கள் இருவரும் கண்கால் பேசி.. சிரிப்பால் காதல் செய்தது என்று தமிழில் அர்த்தப்படுத்த முடியுமா..??!

 

கோலியாத்: தெரியாது.

 

முகாமையாளர்: அப்ப எதுக்கையா.. சிரித்துத் தொலைச்சீர்..??! (மனசுக்க.. அதுங்க வேலைக்கு வந்திட்டு.. சம்பளமும் வாங்கிட்டிட்டு.. சிரிக்கிறது.. கண்ணடிக்கிறது.. என்று ஜாலியா இருக்குதுங்க.. சீனிய மனேஜர் அதை விசாரணை பண்ணு என்று.. நம்ம உயிரை வாங்கிறாய்யா.)

 

கோலியாத்: அவா சிரித்தா... பதிலுக்கு.. நானும் சிரித்தேன்.

 

முகாமையாளர்: ஆனால் சீதா பதிவு செய்துள்ள குற்றச்சாட்டில்.. நீங்கள் சிரிப்போடு நின்றுவிடவில்லை அவரை படுக்கைக்கு கூப்பிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளதே..?!

 

கோலியாத்: படுக்கையா.. அப்படின்னா என்ன..??!

 

முகாமையாளர்: பெட்.. என்று அர்த்தம். நீங்கள் சீதாவை பெட்டுக்கு அழைத்தீர்களா..?!

 

கோலியாத்: சீதாவை அந்த இராவணன் பெட்டுக்கு அழைச்சிருக்கலாம். ஐயா முகாமையாளரே நான் அப்படி செய்வேனா. என் மூஞ்சியை பாருங்க சாமி. நான் ஒரு அப்பாவி. குடும்பஸ்தன் வேற. எனக்கு சிரிக்கத் தெரியுமே தவிர.. சிந்திக்க வராது சாமி.

 

முகாமையாளர்: அப்படி என்றால்.. நீங்கள் முன்னர் பாடிய பாடலின் தமிழ் அர்த்தம் என்ன..??! (சிரிக்கத் தெரிந்த உனக்கு.. உயிரே கதைக்கத் தெரியாதோ.. என்று பாடிக்காட்டுகிறார்.)

 

கோலியாத்: (மனசுக்க.. அட வெள்ளைக்காரன்.. இவனும்.. செளந்தராஜன்  விசிறி போல.. நல்லாப் பாட்டு படிக்கிறானே..) அது சும்மா பாட்டு சார். மற்றும்படி ஒன்னுமில்ல. நான் மெசேஜ் வைச்சு ஒன்னும் பாடல்ல சார். நான் அப்பாவி சார். வேலையை புடுங்கிடாதேங்க சார். இந்த வேலைல தான் என் குடும்பம்.. வீடு.. வங்கிக் கணக்கு..பெனிபிட்..எல்லாமே தங்கி இருக்குது.

 

முகாமையாளர்: உயிரே என்று சீதாவை விளித்துப் பாடி இருக்கிறீர்களே அதற்கு என்ன அர்த்தம்..??!

 

கோலியாத்: நான் அவரை பூங்காவில் சந்தித்தது முதல்.. இங்கு வேலைத்தளத்தில்.. தினமும் என்னைப் பார்த்து.. சிரித்து வந்தார் சீதா.  திடீர் என்று ஓர் நாள்.. அவர் சிரிப்பதை குறைக்கவும்.. நிறுத்தவும் ஆரம்பித்தார். அதனால் எழுந்த சோகத்தில்.. அப்படி பாடிட்டேன் சாமி. தப்பா ஒன்னுமே சொல்லேல்ல சாமி.

 

முகாமையாளர்: ஒரு பெண்ணைப் பார்த்து.. அதுவும் குடும்பப் பெண்ணைப் பார்த்து உயிரேன்னு பாடி இருக்கிறீர்களே. அவள் கணவன் அல்லது காதலனுக்கு தானே அந்த உரிமை உள்ளது. தமிழிலும் அப்படித்தானே இருக்கும்..??!

 

கோலியாத்: இல்லை சாமி. தமிழில் அதுக்கு வேறை அர்த்தம். நான் அவருடனான நட்பை மட்டும் உயிராக மதித்தேன் சாமி. அம்புட்டுத்தான்.

 

முகாமையாளர்: இல்லையே. சீதா உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு.. நீங்கள் அவரை இதே நிறுவனத்தில் வேலையிடத்தில் வைச்சு.. வெளியே பெட்டுக்கு அழைத்ததாக கூறியுள்ளாரே..! நீங்கள் அவரை உயிரேன்னு அழைத்தது.. தமிழில் அப்படி அர்த்தப்படுத்துமா..??!

 

கோலியாத்: (மனசுக்க.. ஒரு பாட்டைப் படிக்கப் போய்.. அதுவும் தமிழில் படிக்கப் போய்.. நான் படுறபாடு. பாவி மவ.. சிரிச்சு பேசிட்டு.. மாட்டி விட்டுட்டாளே. நம்ம மனிசி பிள்ளைகளுக்கு இது தெரிஞ்சா நிலைமை என்னாகிறது.)..  இல்லை சாமி. நான் தனுசு மாதிரி எல்லாம்.. உன்னை உயிர் தந்து காப்பாற்றுவேன் என்று இரட்டை அர்த்தத்தில் பாடேல்ல சாமி.

 

முகாமையாளர்: அது யார் தனுசு. அவருக்கும் இதில் கூட்டுப் பங்களிப்பு உள்ளதா..?! அவரும் எமது நிறுவனத்திலா வேலை செய்கிறார்..??!

 

கோலியாத்: (மனசுக்க.. போடா வெள்ளைக்காரப் பயலே. உனக்கு தனுசே யார் என்று தெரியல்ல.. நீ எல்லாம் எங்க தமிழ் சினிமா பார்த்திருப்பே. 3 இலட்சம் தமிழர்கள் இந்த இங்கிலாந்தில இருந்து என்ன பயன்.)...  தனசு.. தமிழ் சினிமா நடிகர் சாமி. அவர் அங்கின சினிமால.. சொன்னதை ரிப்பீட் பண்ணினேன் சாமி. மன்னிச்சுக்கோங்க. அந்த வார்த்தைகளை பின்வாங்கிக் கொள்கிறேன்.

 

முகாமையாளர்: அப்போ எதுக்கு சீதாவை பார்த்து உயிரேன்னு பாடினீர்கள்..??!

 

கோலியாத்: தப்புத்தான் சாமி. எனி அந்த சண்டாளியை பார்த்தால் சிரிக்கவே மாட்டேன் சாமி. மூஞ்சியை உம் என்று வைச்சுக்கிட்டு போயிடுறேன் சாமி. மன்னிச்சு விட்டிடுங்க சாமி. ரெம்ப கொடுமையா இருக்குதுங்க சாமி.

 

முகாமையாளர்: அப்போ சீதா உங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா..?!

 

கோலியாத்: இல்லை சாமி. நான் சீதாவை பார்த்தேன்.. சிரித்தேன்.. பாட்டுப் படித்தேன் என்பது எல்லாம் உண்மை. படுக்கைக்கு அழைத்தேன் என்பது மகா பொய். (மனசுக்க.. இப்ப தானே புரியுது.. ஏன் பொம்பள சிரிப்பை நம்பாதே.. அது ஒரு நச்சுப் பாம்புன்னு சொன்னாங்கன்னு.)

 

முகாமையாளர்: உங்களை இறுதியாக எச்சரிக்கிறேன். எனிமேல்.. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களிடம்..இப்படி பார்த்தேன்.. சிரித்தேன்..பாட்டுப் பாடினேன் என்று சொல்லி ஏதாவது குற்றச்சாட்டுக்கள் உங்கள் மீது பதிவானால்.. நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதோடு.. பெண்களுக்கு எதிராக செயற்பட்டதாகக் கூறி சட்ட நடவடிக்கைக்கும் ஆளாவீர்கள். இத்தோடு இந்த விசாரணை நிறைவடைகிறது. இதன் தீர்ப்பு உங்களுக்கும் மூத்த முகாமையாளருக்கும்.. பிரதி ஒன்று சீதாவுக்கும் அனுப்பி வைக்கப்படும். நன்றி உங்கள் ஒத்துழைப்புக்கும் வரவுக்கும்.

 

கோலியாத்: (மனசுக்க.. நன்றி ஒன்று தான் இப்ப குறைச்சல்...  எனி மேல்.. நானுன்னு என் வேலைன்னு என்று இருந்திடனும். இந்த தமிழ் சினிமா கீரோத்தனம் எல்லாம்.. இங்கிலாந்து கம்பனிகளில் வைச்சுக்கவே கூடாதுடா சாமி. பட்டது போதும்.) நன்றி சார். அப்ப நான் கிளம்பலாமா.

 

முகாமையாளர்: தாரளாமா. கிளம்பலாமே.

 

கோலியாத்: (மனசுக்க) அடியே சீதா.. வெளில..சிரிச்சுப் பேசிட்டு.. உள்ளுக்க கவுத்திட்டேயேடி. உன்னைப் போய் அடி கள்ளி.. நொள்ளின்னு செல்லம் கொஞ்சினேனே. எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.

 

(இங்கிலாந்தில் தமிழர்கள் வேலை செய்யும்.. ஆங்கிலேயர்கள் நடத்தும் நிறுவனம் ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவியது. இப்படியும் நடக்குது என்பதற்காக.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நடந்த சம்பவத்தைப் பார்த்திருந்தாலும் எதிர்மறையாகத்தான் எழுதுவீர்கள் நெடுக்ஸ். அல்லது ஒரு ஆண் உங்களுக்குச் சொல்லியிருந்தாலும் தன தவறை மூடி மறைத்துத்தான் சொல்லியிருப்பார். அது ஆண்களின் இயல்பு. மற்றப்படி உதுக்குப்போய் யாராவது மேலிடத்தில் சொல்வார்களா???? தனியவே நல்ல திட்டுத் திட்டியிருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடந்த சம்பவத்தின் சாரம்சத்தை.. உள்ளப்படி தான் சொல்லி இருக்குது. அதில சந்தேகம் தேவையில்லை. எதில எல்லாம் சந்தேக்கிறதே என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு. :lol:

 

மிகுதி வாசகர்கள் தீர்மானிக்க வேண்டியது.

 

சில சமயங்கள் பெண்கள் அளவுக்கு மீறிய சந்தேகப் புத்தியோடு மேன்முறையீடுகளை.. பல்வேறு நோக்கங்களை மையமாக வைத்து.. உ+ம்.. நிறுவனத்தின் அனுதாபத்தை சலுகைகளை எதிர்பாத்தும்.. செய்வதுண்டு. அதனால் தான் நிறுவனங்கள் சரியான விசாரணைகளை முன்னெடுத்து தீர்வுகளை தீர்மானங்களை எடுக்கின்றன..! இப்ப எல்லாம் நிறுவனங்கள்..பெண் என்பதற்கான உடனடியாக அனுதாபம் காட்டுவதில்லை.. சரியான நடைமுறைகளைப் பின்பற்றி தீர்மானங்களை எடுக்கத் தலைப்படுகின்றன. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளபடி சொல்லியிருந்தா சந்தோசம் தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதை  நல்லாயிருக்கு

 

நான் தம்பி நிழலியின் கதை என்று வாசித்தேன்.... :lol:  :D

இருக்குமிடத்தை ரசித்து வாழணும்

சந்தோசமாக எம்மையும்

கூட உள்ளோரையும் வைத்திருக்கணும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்ட தம்பி அவர்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நடந்த சம்பவத்தைப் பார்த்திருந்தாலும் எதிர்மறையாகத்தான் எழுதுவீர்கள் நெடுக்ஸ். அல்லது ஒரு ஆண் உங்களுக்குச் சொல்லியிருந்தாலும் தன தவறை மூடி மறைத்துத்தான் சொல்லியிருப்பார். அது ஆண்களின் இயல்பு. மற்றப்படி உதுக்குப்போய் யாராவது மேலிடத்தில் சொல்வார்களா???? தனியவே நல்ல திட்டுத் திட்டியிருக்கலாம்.

 

நெடுக் அண்ணா இந்த விடையத்தில் எப்படியோ எனக்கு தெரியாது..ஆனால் அனேகமான ஆண்கள் சக ஆண்கள் செய்தது,செய்வது தப்பு என்று தெரிந்தாலும் சம்பந்தப்பட்ட ஆணுக்கு சார்ப்பாகவே நிற்பது பல காலமாக நடக்கும் நாடகம் தானே சுமே அக்கா..எது சரி,பிழை என்பதற்கும் அப்பால் தங்கள் நட்பு என்ற ஒன்றை வைத்துக் கொண்டு சக பெண் நட்பையே எதிர்ப்பது இன்றும் நடக்கிறது..சக நட்பின் மேல் உண்மையான அக்கறையா இல்லை பெண்ணிற்காக பேசினால் அந்த நட்பை இளக்க நேரிடும் என்ற ஆதங்கமாக ஒன்றும் புரிவதில்ல...அப்படியான தருணங்களில் எங்களை விலத்தி சென்றவர்களே மேல் என்ற அளவுக்கு மனசு வந்துடும்....ஏன் எனில் அவர்களோ,நாங்களோ தவறு விடும் சந்தர்ப்பத்தில் வெளியில் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தாலும் உள் மனத்தில் தன்னை,தான் சொன்ன பொய்களை நிறையவே நம்பியவள் என்ற களிவிரக்கமாவது இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

கோலியாத் அவனைக் கண்டதும் சீதா மயங்கினாள், அடிக்கடி சிரித்தாள், கண்சாடை காட்டிணாள். பாவம் அவனுக்கு கோமோன் சுரக்கவில்லை என்பதை அறியாது கோபம் கொண்டாள். போட்டுக் கொடுத்துவிட்டாள். :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோலியாத் அவனைக் கண்டதும் சீதா மயங்கினாள், அடிக்கடி சிரித்தாள், கண்சாடை காட்டிணாள். பாவம் அவனுக்கு கோமோன் சுரக்கவில்லை என்பதை அறியாது கோபம் கொண்டாள். போட்டுக் கொடுத்துவிட்டாள். :o

 

கோமோன் சுருக்காமலா.. பதிலுச்சு சிரிச்சிருப்பார்..???! தியறி தப்பாச்சே. :lol:

கனடாவிலும் வேலைதளங்களில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த இழவுக்கு தான் நான் வேலைக்கு போனமா வேலை செஞ்சமா வீட்ட வந்தமா என்டு இருக்கிறன். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு
 
Don't sh*t where you eat. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.