Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க சி.வி மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10(7).jpg
சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும்  செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகும் இந்தியச்செய்தி தெரிவிக்கின்றது.

மக்கள் சிவில் உரிமை கழகதலைவராக இருந்து மறைந்தவர் சட்டத்தரணி கே.ஜி.கண்ணபிரான். இவரது நினைவு சொற்பொழிவு சென்னை தியாகராயநகர் வித்யோதயா பள்ளியில் 9 ஆம் திகதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, 'பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்' என்ற தலைப்பில் நினைவு சொற்பொழிவாற்றுகிறார். 'கண்ணபிரான் மற்றும் கண்ணபிரானுக்கு அப்பால்' என்ற தலைப்பில் தென் ஆப்பிரிக்காவின் அரசமைப்பு நீதிபதியாக பணியாற்றிய சக்காரியா முஹமது யாகூப் பேசுகிறார்.

இது தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் வரும் 9 ஆம் திகதியன்றே சி.வி. விக்னேஸ்வரன் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தனது பயணத்திட்டத்தை மாற்றினார் விஸ்னேஸ்வரன். அதன்படி சென்னையை இன்று வந்தார். 

வடக்கு மாகாண முதல்வர் வருகையையொட்டி விமான நிலையத்தில் நிருபர்கள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் எதுவும் பேசாமல் விக்னேஸ்வரன் சென்றுவிட்டார். இன்னும் இரு நாட்களுக்கு அவர் சென்னையில்தான் தங்கியிருக்க உள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்நாட்டுக்கு மட்டுமே இம்முறை பயணம் செய்வார் என்றும், டெல்லிக்கு செல்லமாட்டார் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 

மேலும் இந்தப் பயணத்தின் போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையோ, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களையோ விக்னேஸ்வரன் அதிகாரபூர்வமாகச் சந்திக்கமாட்டார் என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 

ஆனால், இரு நாட்களுக்கு முன்பே விக்னேஸ்வரன் சென்னை வந்துள்ளதால், அவர் தமிழக அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தக்கூடும் என்றே தெரிகிறது. ஐந்து தமிழ் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து விக்னேஸ்வரன் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

கடந்த ஆண்டு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விக்னேஸ்வரன் மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/132348-2014-11-07-09-05-46.html

 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேலை செய்தார்.. இல்லாவிட்டால் இந்து, தினமலர் தங்கள் வசதிக்கு திரித்து எழுத ஏதுவாகியிருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சென்னை சென்றடைந்துள்ளார். இருப்பினும் விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களை சந்திக்காது அங்கிருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் சிவில் உரிமை கழகதலைவராக இருந்து மறைந்தவர் சட்டத்தரணி கே.ஜி.கண்ணபிராநின் நினைவு தினம் நாளை மறுநாள் சென்னை தியாகராயநகர் வித்யோதயா பள்ளியில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, ‘பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்‘ என்ற தலைப்பில் நினைவு சொற்பொழிவாற்றுகிறார்.

'கண்ணபிரான் மற்றும் கண்ணபிரானுக்கு அப்பால்' என்ற தலைப்பில் தென் ஆப்பிரிக்காவின் அரசமைப்பு நீதிபதியாக பணியாற்றிய சக்காரியா முகமது யாகூப் உரையாற்றவுள்ளார்..

இது தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால்  9ம் திகதி தான் விக்னேஸ்வரன் சென்னை செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தனது பயணத்திட்டத்தை மாற்றினார் விஸ்னேஸ்வரன். அதன்படி இன்றே சென்னை சென்றுளார்.

வடக்கு மாகாண முதல்வர் வருகையையொட்டி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் எதுவும் பேசாமல் விக்னேஸ்வரன் சென்றுவிட்டார்.

இன்னும் இரு நாட்களுக்கு அவர் சென்னையில்தான் தங்கியிருக்க உள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்நாட்டுக்கு மட்டுமே இம்முறை பயணம் செய்வார் என்றும், டெல்லிக்கு செல்லமாட்டார் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் பயணத்தின் போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையோ, திமுக. தலைவர் மு.கருணாநிதி, மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களையோ விக்னேஸ்வரன் அதிகாரபூர்வமாகச் சந்திக்கமாட்டார் என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஆனால், இரு நாட்களுக்கு முன்பே விக்னேஸ்வரன் சென்னை சென்றுள்ளதால்  அவர் தமிழக அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விக்னேஸ்வரன் மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பதுடன். வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற காலப்பகுதியில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி பலராலும் விமர்சிக்கப்பட்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

07-cv-vigneswaran-600.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=112643617807895570#sthash.bUwRSmzL.dpuf

தவறு

படிச்சவன் எப்பவும் படிச்சவன் தான் நிறை குடம்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவன், எப்பவும்.... பெரியன் தான்.
தற்செயலாக, நீங்கள், ஒரு சந்திப்பை.... நிகழ்த்தி இருந்தால்,
அந்த... அவமானத்தில்,  இருந்து மீள எமக்கு, நாள் எடுக்கும்.
நல்ல, வேலை செய்தீர்கள் ஐயா.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 ஒருசில இடங்களிலை மவுனவிரதம் மாதிரி ஒரு அணுஆயுதம் ஒரு இடமுமில்லை.  :D

தமிழக ஊடகங்கள் ஈழத் தமிழர் குறித்த விடயங்களை புறக்கணிக்கின்றனர் என்றும் கூப்பாடு போடுகின்றோம். பிறகு தமிழக ஊடகயிவலாளர்களிடம் பேசவும் மாட்டோம் என்றால் .......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் 2009ன் தாக்கம் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

 ஒருசில இடங்களிலை மவுனவிரதம் மாதிரி ஒரு அணுஆயுதம் ஒரு இடமுமில்லை.  :D

 

தலைவரிடம் கற்றுக்கொண்டிருப்பார் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஊடகங்கள் ஈழத் தமிழர் குறித்த விடயங்களை புறக்கணிக்கின்றனர் என்றும் கூப்பாடு போடுகின்றோம்.

யார் கூப்பாடு போட்டது?

தமிழக ஊடகங்கள் தாராளமாகவே ஈழத் தமிழர் விடயங்களை வைத்து வியாபாரம் செய்கின்றனவே? இந்த வியாபாரத்தால் கிடைத்த நன்மைகளிலும் பார்க்க தீமைகளே அதிகம்.

 

பிறகு தமிழக ஊடகயிவலாளர்களிடம் பேசவும் மாட்டோம் என்றால் .......

  1. பிச்சைக்காரர்கள் கூட எல்லா வியாபரிகளுடனும் வியாபாரம் செய்வது இல்லை.
  2. ஈழத் தமிழர் விடயங்கள் தாரளமாக விலை போக கூடியவை. ஆகவே ஊடக வியாபாரிகள் கூப்பிடும் பொது வருவார்கள்.
  3. தேவையான ஊடகங்களை தேவையான நேரத்தில் தேவையான முறையில் ஈழத் தமிழர் தலைவர்கள் பயன்படுத்தி கொள்வதே சிறப்பானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.