Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நஞ்சருந்திய காதல் ஜோடி : யுவதி சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

03a020fe508392169eee58989a0fc924.jpg

சாவகச்சேரி கச்சாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் நஞ்சருந்திய நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.
 
இந்தச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 
 
இந்தச் சம்பவத்தில் பாலாவி தெற்கைச் சேர்ந்த அழகரத்தினம் நித்தியமலர் (வயது-23) என்ற யுவதியும்,கெற்பேலியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்லையா தெய்வேந்திரன் (வயது -45 )என்பவரையும் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த யுவதி உயிரிழந்துள்ளார். 
 
மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
 
இவர்கள் இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமற் போயிருந்த நிலையில் இன்று கச்சாய்ப்
பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இவர்களைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த ஆலயத்துக்கு பொலிஸார் சென்ற வேளை அவர்கள் நஞ்சருந்திய நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
அதனையடுத்து இவர்களை மீட்ட பொலிஸார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது யுவதி உயிரிழந்துள்ளதுடன் குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 

 

http://onlineuthayan.com/News_More.php?id=530183685229162606

  • கருத்துக்கள உறவுகள்

இது காதல் ஜோடியா?????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

சாதல் ஜோடி.. :(

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாதத்தில் நெடுக்கர் வரமாட்டார்....இல்லாட்டி பிச்சு உதறியிருப்பார்.

ஆனாலும் 5 பிள்ளையளுக்கு பின் 23 வயசு பெண்ணை காதலித்து, சாவுவரை கூட்டிப்போய், தப்பித்தும் கொண்ட ஆள் வேலக்காரந்தான்.

இது ஒரு சேதி ..................என்ன உலகமடா  :D  :lol:


இது காதல் ஜோடியா?????????????????????

இல்லை காம ஜோடி  :icon_mrgreen:  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

sonne.gifசந்தர்ப்பம் பார்த்து, தாக்குதல் நடத்தும்,
கோசானின்,  புத்திக் கூர்மையை, மெச்சுகின்றேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உங்களை மெச்சி இரெண்டு வரி எழுதினேன், பொறமைக்காரர்கள் வெட்டிப்போட்டார்கள்.

பாத்திருப்பியள் என நம்புகிறேன். உங்கள் வாழ்த்தைக் கண்டேன். மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்க்க, சந்தரிப்பம் கிடைக்கவில்லை... 
தனி மடலில், அனுப்பி விடுங்களேன்... கோசான்,
வெட்டியதை, வாசிக்காவிட்டால்... எனக்கு, நித்திரை வராது.

 

அண்ணை உங்களை மெச்சி இரெண்டு வரி எழுதினேன், பொறமைக்காரர்கள் வெட்டிப்போட்டார்கள்.

பாத்திருப்பியள் என நம்புகிறேன். உங்கள் வாழ்த்தைக் கண்டேன். மகிழ்ச்சி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சதா என் உள்ளாடைபற்றியே சிந்திக்கிறீர்களே, நீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் எல்லாம் ஒரு காதல் ஜோடி. அந்த பெருமகனை சூப் வைச்சு நாய்களுக்குப் போட வேணும்!

  • கருத்துக்கள உறவுகள்

வாலி,

பல்லுள்ளவன் பாக்குப்போடுறான், உங்களுக்கேன் காண்டு?

  • கருத்துக்கள உறவுகள்

சமூகவிழுமியம் எண்டு ஒன்று இருக்கு. 5 பிள்கள் இவருக்கு இருக்கு. 45 வயது நபருக்கு 23 வயது பெண் மகள் போன்றவள். இவ்வாறான பேர்வழிகளுக்கு மிக உயர்ந்த தண்டனை வழங்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன சமூக விழுமியம். 5 பிள்ளை பெற்ற ஒருவர் 43 வயசில், 23 வயதுப் பிள்ளையை இருவரும் மனமொத்து விரும்புவதில் என்ன தவறு?

எனது தாத்தா தனது இரண்டாவது மனைவியை (மூதவர் இறந்த பின்) கட்டும் போது அவருக்கு 32 வயது அவவுக்கு 17 (70 வருடத்துக்கு முன்). 2 பிள்ளையள்.

அப்போ தன்னை விட 17 வயது கூடிய பெண்ணை மனந்த மார்க் வோ( கிரிகெட்) 9 வயது கூடிய பெண்ணை மணந்த சச்சின், இருபது வயது குறைந்த பெண்ணை மணந்த மைகேல் டக்லஸ் எல்லோரையும் என்ன செய்யலாம்?

இதே ஆண் தனது 63 வயதில் இதே பெண் 43 வயாதாயிருக்கும் போது கட்டி இருந்தால் அது ஓக்கேயா?

இப்பதான் இங்க இருந்து ஒரு 42 வயசு நண்பர் ஊருக்கு போய் கல்யாணம் செய்தவர் - பிள்ளைக்கு 25.

நமக்கு பிடிக்கவில்லை என்பது வேறு ஆனால் இது ஒண்டும் பெரிய குற்றமில்லை. இலங்கை சட்டப்படிகூட.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாதத்துக்கு சரி என்று வைத்துக்கொண்டால் ஏன் இருவரும் தலைமறைவாகப் போகவேண்டும்? துணிவாகச் சமூகத்தின் முன்னர் நடமாடியிருக்கலாமே. அவர்கள் இருவரின் மனச்சாட்சிக்கும் தெரியும் தவறு என்று. மேலே நீங்கள் குறிப்பிட்டவர்கள் சமூகத்துக்கு ஒழிந்து வாழ்வில்லை. எனது மனைவியும் என்னைவிட 4 மாதங்கள் மூத்தவள்தான். இங்கு தலைமுறை இடைவெளி என்பது முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிழை யார் மீது? ஒழித்து ஓட வைத்த சமூகம் மீதா, அல்லது இவர்கள் மீதா?

இவர் விவாகரத்து ஆனவர் அல்லது தபுதாரன் என்றால் - ஒரு 23 வயது பொண்ணின் மேல் காதல் கொண்டது அவர் குற்றமா?

ஜாதி, மதம் அந்த்ஹஸ்து போல ஒரு அளவிடைதானே வயதும்.

தலைமுறை இடைவெளி தப்பி காதல் வரக்கூடாதா? உங்களுக்கு இதே உறுத்தல் இவர்களிருவரும் 64, 44 வயதாய் இருந்தால் இருக்குமா? அப்போதும் ஒரே இடைவெளிதானே?

இவர் இன்னமும் விவகரத்து ஆகாதவர் என்றால் கூட அது இவர் மனைவி, இவர், இந்த பெண் சம்பந்தப்பட்ட ஒரு தனி நபர் பிரச்சினை அல்லவா. இது விவாகரத்தில் முடியாமல் நஞ்சருந்துமளவுக்கு காண்டுமிராண்டித்தனமாகத்தானே இருக்கிறது நமதூ சமூகச் சூழல்?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த்வொரு சமூகமும் தீமையானதைச் செய்யச் சொல்லிக்கொடுப்பதில்லை. கட்டுப்பாடு இல்லாத சமூகம் கடிவாளம் இல்லாத குதிரை போன்றது.

யாரும் யாரோடையும் ஓடலாம் ஒன்றாக வாழலாம் பிள்ளை குட்டிகளையும் பெற்றுக்கொள்ளலாம் அனால் பெற்ற குழந்தைகளை பார்ப்பதும் பராமரிப்பதும் அவர்களை நல்ல பிரசைகளாக வளர்ப்பதும் அவர்களது கடமை. 

 

அந்த கடமையி இருந்து விடுபட்டால் அவர்களுக்கு நல்லதொரு சமூகம் மரியாதை கொடுக்காது.

 

அந்த பிள்ளைகளையும் நம்பி வந்தவளையும் தவிக்கவிட்டு விட்டு அப்பிடி அம்போவென்று போவது சரியான செயல் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிழை யார் மீது? ஒழித்து ஓட வைத்த சமூகம் மீதா, அல்லது இவர்கள் மீதா?

இவர் விவாகரத்து ஆனவர் அல்லது தபுதாரன் என்றால் - ஒரு 23 வயது பொண்ணின் மேல் காதல் கொண்டது அவர் குற்றமா?

ஜாதி, மதம் அந்த்ஹஸ்து போல ஒரு அளவிடைதானே வயதும்.

தலைமுறை இடைவெளி தப்பி காதல் வரக்கூடாதா? உங்களுக்கு இதே உறுத்தல் இவர்களிருவரும் 64, 44 வயதாய் இருந்தால் இருக்குமா? அப்போதும் ஒரே இடைவெளிதானே?

இவர் இன்னமும் விவகரத்து ஆகாதவர் என்றால் கூட அது இவர் மனைவி, இவர், இந்த பெண் சம்பந்தப்பட்ட ஒரு தனி நபர் பிரச்சினை அல்லவா. இது விவாகரத்தில் முடியாமல் நஞ்சருந்துமளவுக்கு காண்டுமிராண்டித்தனமாகத்தானே இருக்கிறது நமதூ சமூகச் சூழல்?

தமிழ்மாெழியும் அதன் பண்பாடும் பழமை வாய்ந்தது. அவா்களுக்கென்று ஒரு வாழும் நெறிமுறை  உண்டு. அதை அழிந்து பாேகாமல் பேணியும் வந்திருக்கிறாா்கள் நம், உம் முன்னாோ்கள். அதற்காகத்தான் இவ்வளவு பாேராட்டம், இழப்பு, வலி, அவலம். இப்பாே நாடாேடிகளாய் வெளியேறி மற்றவா்களைப் பாா்த்து நாமும் இப்படி வாழ்ந்தால் என்ன என்று வாழ்வதற்கு தமிழா் ஒன்றும் பன்னாடைகள் அல்லா். உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் இதே நியாயம் கூறி சோ்த்து வைப்பீா்களா? 
எப்படியும் வாழலாம் என்று வாழ்பவா்களுக்கு இது ஒன்றும் பிரச்சனையே இல்லை. அவ்வளவுதான். நன்மை செய்யாவிட்டாலும் தீமையான செயல்களுக்கு, கருத்துக்களுக்கு ஊக்கமளிக்காமலிருப்பதுவும் நமது சமூகத்துக்கு செய்யும் நன்மைதான். ஆராேக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு எம் ஒவ்வாெருவருக்குமுண்டு. மற்றவா்களில் குறைகாணுவதை விடுத்து நாம் செய்வதைச் சரிவரச்செய்வாேம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.