Jump to content

தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி எதுவுமே மைத்திரியின் விஞ்ஞாபனத்தில் இல்லை


Recommended Posts

my%20manifesto%20878790.jpg

 

தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை முதன்மைப்படுத்தி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். இதில் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்தோ, தீர்வுத் திட்டம் குறித்தோ எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை.
 
மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் '100 நாட்களுக்குள் புதிய தேசம்' என்ற மகுட வாக்கியத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-
 
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன்.
 
1994இலிருந்து நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக மக்களுக்கு உறுதியளித்து வந்துள்ள போதிலும், அதனை அரசமைப்பு ரீதியாக மேற்கொள்ள முடியவில்லை. நாடாளுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் காணப்பட்ட போதிலும், அதனால் கடந்த 23 வருடங்களாக அதனை நிறைவேற்ற முடியவில்லை.
 
பிரதான கட்சியின் தலைவரான ஜனாதிபதியே அதற்கான தலைமைத்துவத்தை வழங்கவேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். இதற்காக ஜனாதிபதி முக்கிய அரசியல் கட்சிகளுடன் உடன்பாட்டிற்கு வரவேண்டும்.
 
இந்த பணியை நிறைவேற்றுவதற்காகவே நான் பொதுவேட்பாளராக போட்டியிட முன்வந்துள்ளேன். என்னால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினது ஆதரவைப் பெற முடியும். ஐக்கிய தேசிய கட்சி இதற்கான ஒப்பந்தமொன்றில் என்னுடன் கைச்சாத்திட்டுள்ளது. ஜே.வி.பி. 1994 ஆம் ஆண்டு முதல் எங்களுடைய கட்சியுடன் இது தொடர்பாக இணக்கப்பாட்டை கொண்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவும் இது தொடர்பான உடன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆகவே நான் இது குறித்து ஏனைய கட்சிகளுடன் ஆலோசித்து 100 நாள்களுக்குள் நிறைவேற்றுவேன். நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதற்கான ஆவணங்களாக மாதுளுவாவே சோபித தேரரின் நீதியான சமூகத்திற்கான இயக்கத்தால் முன்வைக்கப்பட்ட ஆவணங்களையும், அத்துரலிய ரத்தினதேரரின் தலைமையிலான குழுவால் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 19 திருத்தத்திற்கான யோசனைகளையும், ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளையும் நான் பின்பற்றுவேன். புதிய முறையின் கீழ் நாடாளுமன்றமே முக்கியம்பெறும். ஜனாதிபதி நாட்டின் ஏனைய பிரஜைகளை போன்று சட்டத்தின் முன் சமமானவராகக் காணப்படுவார்.
 
சர்வஜன வாக்கெடுப்புடன் மாத்திரமே மாற்றப்படவேண்டிய அரசமைப்பு மாற்றங்களில் நான் கைவைக்கமாட்டேன். நாட்டின் இறமை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய அரசமைப்பு மாற்றங்கள் எதனையும் செய்யமாட்டேன். நாட்டின் தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்யப்படும் அதேவேளை, நாட்டின் நல்லாட்சியை கண்காணிப்பதற்கான பொறிமுறை ஒன்றும் உருவாக்கப்படும்
 
வெளிவிவகார கொள்கை 2009 இராணுவ வெற்றிக்குப் பின்னர் எமது வெளிவிவகாரக் கொள்கை முழுமையான குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை முழு உலகும் அறிந்த விடயம். முறையான வெளிவிவகார கொள்கை எம்மிடத்தில் இல்லாத அதேவேளை இராஜதந்திர செயற்பாடுகள் குறித்த அறிவும் திறமையும் உள்ளவர்கள் எமது இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்படவில்லை. அவர்கள் தமது கிராமங்களில் செயற்படுவது போன்று வெளிவிவகார செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்கின்றனர்.
 
இலஞ்சத்தையும், காடைத்தனத்தையும் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இலங்கை குறித்த சர்வதே அபிப்பிராயத்தில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது, நாட்டை உடனடியாக இதிலிருந்து விடுவிக்கவேண்டும். இதற்காக தேசத்தின் கருத்திற்கேற்ப நாட்டின் வெளிவிவகார கொள்கை உருவாக்கப்படும். நூறு நாள்களுக்குள் வெளிவிவகார சேவைக்கு அரசியல் ரீதியாக நியமனம்பெற்ற அனைவரினது சேவையும் இரத்துச்செய்யப்படும். ஆசியாவின் முக்கிய நாடுகளுடன் சமமான உறவு ஏற்படுத்தப்படும். இந்தியாவின் பன்முகத் தன்மையை கருத்தில்கொண்டதாக எமது இந்திய கொள்கை அமைந்திருக்கும். இந்தியாவிடம் சார்ந்திருக்காத அதேவளை அதற்கு விரோதமற்ற கொள்கை பின்பற்றப்படும். பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன்.- என்று அமைந்துள்ளது.
 
 
 
 
Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி சொன்னவங்கள் என்னத்தை கிளிச்சாங்கள்?

 

இப்ப இவர் ஏதாவது சொன்னா மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சனை முடிஞ்சிருமா? சும்மா மைத்டிரியோட சிண்டு முடியாமல் சோலியை பாருங்கப்பா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே எதிபார்த்ததுதானே 

Link to comment
Share on other sites

 
பொது மேடையில் கூறிவிட்டார்." நானும் ஒரு பேரினவாதி தமிழ் மக்களுக்காக கூட்டணி கேட்கும் எந்த அதிகாரத்தையும் வழங்கத்தயாரில்லை" இரண்டாவது பிக்குகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சிறிலங்கா ஒரு பெளத்த தேசம் முக்கியமாக தமிழர்களுக்கு என்ன தீர்வும் வழங்கமாட்டேன்.ஆனாலும் ஒரு விடயம்.ஒப்பந்தத்தில் கையெழுத்து வைத்தது.மைத்திரி.இவர் ஜனாதிபதி முறைமையை நீக்கினால் ஒப்பந்தம் செல்லுபடியற்றதாகிபோகும் வாய்புகளே அதிகம் பொறுத்திருந்து பார்ப்போம்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தோற்றால் போர்க்குற்ற விசாரணைக்குள் மாட்டி விடலாம் என்ற தமிழ் மக்களின் முயற்சிக்கு தனது நாட்டின் பிரஜைகளை சர்வதேசத்திடம் கையளிக்க மாட்டேன் என்று ஆப்பு வைத்து விட்டார்.சர்வதேசமும் ஆட்சி மாறினால் போர் குற்ற விசாரiணையை மறந்து விடும். சர்வதேசத்துடன் முரண்படும் மகிந்த வந்தால் சர்வதேசம் மீண்டும் முரண்படும்.நெருக்கடிகளைக் கொடுக்கும் தமிழர் பிரச்சனை நீர்த்துப் போகமலாவது இருக்கும்.இனி மைத்திரி வந்தால் அவர் ஜனாதிபதி முறைமையை நீக்கி விடுவாரா?இந்த ஒரு தேர்தலுக்குத்தான் தமிழ் மக்களின் ஆதரவை சிங்களத்தலைவர்கள் கேட்டுவருகிறார்கள். இதுவும் போய் விட்டால் தமிழர்களின் தேவை அவர்களுக்கு எதற்கு?

மைத்திரியார்? அவரும் இந்த போர்க்குற்றவாளிகளின் அரசில் இருந்தவர்தானே.தமிழ்மக்கள் தனியான வேட்பாளரை நிறுத்தி இதனை சுயநிர்னயக் கோரிக்கைக்காள சர்வசன வாக்கெடுப்பாக மாற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்கு ஒன்றுமில்லை

Dec 19, 2014 

எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

விகாரமாதேவி பூங்காவில் புத்தர் சிலையருகே இன்று காலை 9 மணியளவில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், இறுதி நேரத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு வேறொரு இடத்தில் வைத்து தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒலிபெருங்கி கருவிகளும் இயங்கவில்லை.

எனினும் திட்டமிட்டபடி, மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

100 நாள் செயற்திட்டத்தை உள்ளடக்கிய அவரது தேர்தல் அறிக்கையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்த எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை.

அதேவேளை, தாம் வெற்றி பெற்றால், ஏப்ரல் 23ம் நாள் அல்லது அதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து காபந்து அரசின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவு ஆசனங்களை வெல்லும் கட்சியில் இருந்து பிரதமர் நியமிக்கப்படுவார்.

இரண்டாவது கூடிய ஆசனங்களை வெல்லும் கட்சியின் தலைவர் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார்.

maithri-manifesto-1.jpg

maithri-manifesto-2.jpg

ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் எல்லா அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவர்.

தேசிய அரசாங்கத்தின் கீழ், மோசமான தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கொள்கைத் திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.

மகிந்த ராஜபக்ச அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டால், இன்னொரு போர் உருவாகும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், மீண்டும் விடுதலைப் புலிகளைத் தலையெடுக்க விடமாட்டோம்.

தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனவரி 10ம் நாள் சிறிலங்கா அதிபராகப் பதவியேற்பேன்.

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வரும் ஏப்ரல் வரை பிரதமராக நியமிப்பேன்.

சட்டவிரோத ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்படும். அவற்றின் தலைவர்களும், அவர்கள் பயன்படுத்திய அரசு சொத்துக்கள் குறித்தும் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சரத் பொன்சேகாவும், முன்னாள் பிரதம நிதீயரசர் சிராணி பண்டாரநாயக்கவும் இழந்த நிலைகள், உரிமைகள் மீள வழங்கப்படும்.” என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2014/12/19/news/1954

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் முடிஞ்சு போனதோடு.. தமிழர்கள் முடிஞ்சு போனார்கள் என்றது தான் சிறீலங்காவில் சிங்களவர்களின்.. முஸ்லீம்களின் நிலைப்பாடு. கசப்பு என்றாலும்.. இதுதாங்கோ யதார்த்தம். நீங்க எனி தலைகீழா நின்னு வேடிக்கை பார்த்தாலும்.. எந்த அறிக்கையிலும்.. தமிழர்கள் என்ற பதத்தை எனி சிங்களம் பாவிக்காது. ஏன் ஹக்கீமே பாவிக்கமாட்டார். :D:icon_idea:

Link to comment
Share on other sites

தமிழரை பற்றி சொல்லப்போய் வாக்கு கிடைக்காமல் போகவா , மகித்தவின் திட்டமே இந்த பொது அணி ஏற்கனவே கூட்டமைப்புடன் ஒப்பந்தம் என்றெல்லாம் சொல்ல தொடங்கிவிட்டார்கள் இந்த நிலையில் அவர்கள் ஒன்றுமே சொல்லமாட்டர்கள் . மைத்திரி வெல்லவேண்டும் அதனால் தமிழர் பற்றி இப்ப கூற மாட்டர்கள் . இந்தியாவை கொண்டு முதலில் 13 ஆம் திருத்தத்தை முதலில் அமுல் படுத்தவேண்டும் அப்படியே படி படியாகத்தான்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ மாத‌ம் ஒரே விளையாட்டு தான்......................கிரிக்கேட் உல‌க‌ கோப்பை ஒலிம்பிக்...............................................................................
    • வெஸ்சின்டீஸ் அணியிட‌ம் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை   அதிர‌டியா அடிச்சு ஆட‌க் கூடிய வீர‌ர்கள் ப‌ல‌ர் இருக்கின‌ம் ப‌ந்து போட‌ ந‌ல்ல‌ வீர‌ர்கள் இல்லை  ரம்பவுல் எப்படி அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துகிறார் என்று பாப்போம்......................................
    • நன்றி சுவி அண்ணா. =================== உண்மையில் இது ஒரு உண்மைச் சம்பவத்தை ஒட்டிய கிறுக்கல். காலை நேரம்.. வேலைக்கு கிளம்புகிறான் அந்த பையன். தன் துணைவி.. குடும்பத்திற்காகவும்.. தனக்காவும்.. நனிகுளிர் காலத்தின் அந்த நடுங்கும் குளிருக்குள் இருந்து தப்ப.... இழுத்துப் போர்த்திக் கொண்ட ஜாக்கட்டுக்குள் பதுங்கிய படி.. தொடரூந்தில் ஏறி அமர்கிறான். அதுவரை எதனையும் அவதானிக்காதவன்.. எதிர்முனையில் அமர்ந்திருந்த அந்த இளம் பெண்ணை காண்கிறான். தலையில் கறுத்த முக்காடு.. ஓரளவு மேக் கப்.. ஆனாலும் அவளுக்குள் ஏதோ ஒரு படபடப்பு என்பதை பார்த்த மாத்திரத்தில் உணர்ந்துவிடுகிறான். இருந்தாலும்.. அந்த நாட்டுச் சட்டப்படியும்.. அவனின் மனச்சாட்சிப்படியும்.... ஒருவரை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது.. வரவேற்கப்படவில்லை.. என்பதால்.. தன் நீளக்காற்சட்டை பொக்கட்டுக்குள் இருந்த போனை எடுத்து நோட்ட மிடுகிறான்.. என்ன ஒரு அதிர்ச்சி. எதிர்முனையில் அமர்ந்திருந்த பெண்.. அழுவது விம்பமாக விழுகிறது மீண்டும் அவன் கண் திரையில். எதற்கும் உறுதி செய்து கொள்ள நோட்டமிடுகிறான். ஆம் அவள் அழுகிறாள் தான். கண்ணீர் தாரையாகி கன்னங்களில் வழிந்தோடிய நெடிய கோடுகள் இரண்டு.. இரண்டு பக்க விழிகளின் கீழும்... பேட்டிருந்த மேக் கப்பை கழுவித்தள்ளியபடி.. வழிந்தோடி இருந்ததன் அறிகுறிகள் அவை.  சிறிது நேரத்தில் மீண்டும் அதிர்ச்சி. தன் கைப்பையில் இருந்த பேனை எடுத்து தான் அழுவதை ஒரு செல்பி எடுக்கிறாள் அந்த இளம்பெண். அதனை அவசர அவசரமாக வாட்ஸ் அப் வழியாக அஞ்சல் செய்வது தெரிகிறது. மீண்டும்.. போனை கைப்பையில் இடுகிறாள். மீண்டும் இவன் நோட்ட மிடுகிறான். அவள் கண்களில் மீளவும்.. கண்ணீர் திரண்டு வழிகிறது. மீண்டும் செல்பி எடுக்கிறாள்..  இப்படியே.. செய்து கொண்டிருந்தவள்.. அவளின் தரிப்பிடம் வந்ததும் இறங்கிச் சென்று விடுகிறாள். ஆனாலும்.. அந்தப் பையனுக்குள் ஒரு கேள்வி.. அவளின் பரிதவிப்பு.. கண்ணீர் எல்லாமே.. பட்சாபத்திற்குரியது என்றாலும்.. எதற்கு அதனை செல்பி ஆக்கினாள்.. அஞ்சல் செய்தாள்.....???! விடை காண தேவையற்றவனாயினும்.. தனக்குள் எழுந்த வினாக்களோடு.. உலக மனித நடத்தைக் கோலங்களின் மாற்றங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவனாய்.. தன் வேலையிடம் நோக்கிப் போகிறான் அவன். வினாக்களுக்கோ விடையில்லாமலே தன்னைச் சுற்றிய உலகத்தில் நடப்பவற்றை எல்லாம் நொந்தபடி...!
    • சுவுக்கு அடிப்படையில்  கம்மனியூசுக்களுக்கு ஆதரவாக இருந்தவர். கம்னியூஸ்ட்டுக்களுக்கு புலிகள் என்றால் அலர்ஜி(தா.பாண்டியன் போன்றோர் விதிவிலக்கு). சவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்தார்.இந்தமுறை அதிமுகவை ஆதரித்தார். கம்னியூசத்தை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. சவுக்கு புலிகளுக்கு எதிராக பல முறை கருத்து தெரிவித்திருக்கிறார்.கடந்த முறை சிறைக்குப் போய் வந்த பிறகு திமுகவை கடுமையாக விமர்சித்தார்.  எதிரியின் எதிரி நன்பன் என்ற வகையில் கடந்த முறை சிறைக்குப் போன பொழது சீமான் அவருக்கு ஆதரவளித்தார். புலிகள் போதைப் பொருள் கடத்தியதாக ஒருமுறை குரத்துத் தெரிவித்திருந்தார். அதற்கு சீமான் நேரடியாக சவுக்குச் சங்கரை கண்டித்ததாக நான் அறியவில்லை. சீமான் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் நாம் தமிழர்கட்சி சவுக்கு சங்கரை பலமாக விமர்சித்திருக்கிறது. குறிப்பாக சுவுக்குக்கு எதிராக சாட்டை  துரைமுருகன் சாட்டைவலையொளியில் பல முறை விமர்சித்திருக்கிறார்.  அண்மைக்காலமாக சவுக்கு சங்கர் நாம் தமிழரை ஒரு கட்சியாகவே  மதிப்பதில்லை.( யாழில் இருக்கும் சில சீமான் எதிர்ப்பாளர்களும் கிட்டத்தட்ட அந்த நிலைப்பாடுதான்).அதை ஒரு எங்சினியரிங் கொலிங் என்று விமர்சித்திருந்தார். ஒரு தொகுதி படிப்பு முடிந்து வெளியேற அடுத்த தொகுதி மாணவர்கள் வருவது போல என்றார். சின்னமே சிக்கவில்லை. நாடு எப்படிச்சிக்கும் என்று எக்காளமிட்டுச் சிரித்தார்.இடையில் அரசியலில் இறங்கப் போவதாக ஒரு ஸ்டன்ட் அடித்தார். யூன்  ஆ ம்திகதி தேர்தலில் நாம் தமிழ் கட்சியின் வாக்கு சதவீதம் அது எஞசியனியரிங் கொலிங்சா இல்லை களத்தில் நிற்கும் அரிசியல் கட்சியா என்று தெரியவரும். என்கு கொம்னியூஸ்ட்டுக் கொள்கையைும் அதனைப் பின்பற்றுவோரையும் அறவே பிடிக்காது. ஆது எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருக்குமே ஒழிய  எந்த முன்னேற்றத்திற்கும் உதவாது. ஆது ஒரு ஒரு தோல்வி அடைந்த கோட்பாடு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.