Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை!

Featured Replies

2015-ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடு குறித்து  உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்காத நிலையில் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாக எழுதுவதுபோல் பல திடுக்கிடும் அரசியல் ஆய்வுகள் தமிழ் இணையங்களில் சில வெளியிட்டுள்ளன. அதனை சிலர் யாழ் கருத்துக்களம் பகுதியில் இணைத்துள்ளனர்.
 
தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையை மேற்போக்காக வாசித்தால் தமிழ்த்தேசியத்தின் பால் காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கியது போல் தெரியும். ஆனால் அந்த கட்டுரையின் வரிகளுக்கிடையில் கூர்ந்து அவதானித்தால் தெரியும் அவை அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டு எழுதப்பட்ட அரசியல் அவதூறுகள் ஆகும். இன்னும் பசையாகச் சொன்னால் மகிந்தவுக்கு எதிராக தமிழ் மக்கள் அளிக்கப் போகும் வாக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான அரசியல் குறளி விளையாட்டாகும். தனது அரசியல் குறளி வித்தையை பார்வையாள கண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழ்த்தேசியத்தை போர்த்திக்கொண்டு மேடையேறியுள்ளார்.
 
சுமந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு, கனடா நக்கீரன் அவர்களின் பதில் இது. சுமந்திரன் பற்றி இப்படிக் கன்னா பின்னா என்று எழுதுபவர்கள் உண்மை எது பொய் எது என்பதைப் பிரித்து அறிய முடியாத அறிவிலிகள். யதார்த்தமாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள். அல்லது காழ்புணர்ச்சி காரணமாக வேண்டும் என்றே இப்படியான வதந்திகளை உலா விடுகிறார்கள். அமைச்சர் பதவிக்கு அலைபவர் அல்ல சுமந்திரன். அமைச்சர் பதவி வேண்டும் என்றால் அவர் நேரடியாக சுதந்திரக் கட்சியில் சேர்ந்து பெற்றுக் கொள்ளலாம். கருணாவுக்கு மூத்த துணைத் தலைவர் பதவியும் துணை அமைச்சர் பதவியும் கொடுத்தவர்கள் இரு மொழியிலும் பாண்டித்யம் பெற்றவரும் சிறந்த சட்டத்தரணியான சுமந்திரனுக்கு முழு அமைச்சர் கொடுப்பார்கள் என்பதில் எந்த அய்யமும் இல்லை.``  ஓரளவு இலங்கை அரசியல் தெரிந்தவர்களுக்கும் இதை புரிந்து கொள்ள முடியும். 
 
ஆக, மகிந்தவுக்கு எதிராக தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளுகொள்ளையாக போட்டுவிடக் கூடாது என்பதற்காக சுமந்திரனின் தலையை உருட்டியுள்ளார் அந்த கட்டுரையின் பிதாமகன். அவர்வேறு யாருமல்ல ஐபிசி வானொலியில் இக்கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்து கருத்துகளையும் தனது வாயினால் சொல்லி `எங்கப்பன் குதிருக்குள் இல்லை` என்பதையும் போட்டுடைத்ததை பலர் அவதானித்திருப்பீர்கள்.
 
அடுத்து, ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜனசூரிய பற்றி ஒரு குறிப்பு. இவர் தமிழ் தேசிய இனத்தின் பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையை முழுமையாக ஆதரிப்பதாக யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியளார்கள் சந்திப்பில் வெட்டவெளியாக அறிவித்ததாக யாழ். உதயன் பத்திரிகை கூட அடுத்தநாள் செய்திக்குறிப்பொன்றை தந்து முன்பக்கத்தில் வெளியிட்டிருந்து.

அவரது கட்சியின் லண்டன் அடிப்பொடியான சேனன் என்னும் நபர் முகநூலில் இப்படி வெட்டி முழங்கியுள்ளார். ''இத் தேர்தலை கணித முறையில் நாம் பார்க்காமல் மக்கள் எதிர்ப்புச் சக்தியை திரட்டுவது எவ்வாறு என்ற அடிப்படையில் நாம் அணுகுகிறோம். மக்கள் எதிர்ப்பு தேர்தலின் பின்பும் தொடர வேண்டும். அதனாற்தான் மக்கள் தம் எதிர்ப்பை எம்முடன் பதிய வேண்டும் எனக் கோருகிறோம்.

கடந்த வட மாகாணத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். அது தொடர வேண்டும். ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறுவதால் மட்டும் மக்களுக்கு பலனில்லை. கொள்கை மாற வேண்டும். அரசியல் யாப்பு தூக்கி எறியப்பட வேண்டும். இந்த அர்த்தத்தில் எதிர்ப்பவர்கள் தமது எதிர்ப்புக் குரலை எம்முடன் பதிய வேண்டும். இத்தனை பேர் அனைத்து இனவாதிகளையும் எதிர்த்து வாக்களித்தனர் என்பது வரலாற்றில் பதியப்படவேண்டும்.``

மேம்போக்காக பார்த்தால் புரட்சிகரமாக முழக்கம் மாதிரிதான் இருக்கும். ஆனால் அத்தனையும் வடிகட்டிய அரசியல் பித்தலாட்டம். உங்களுக்கு கொஞ்சம் நேரமிருந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்த தினத்தன்று தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த கூத்தையுரியூப்பில் தேடிப்பாருங்கள். சக வேட்பாளர்களுக்கு கைகுலுக்கி விடை பெறும் நேரத்தில் மகிந்த அனைவருக்கும் கைலாகு கொடுக்குகிறார் ஒருவரை தவிர. அவர் வேறுயாருமில்லை ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜனசூரிய. ஆம் இவரை மட்டும்தான் கட்டி அணைத்து மகிந்த தனது தோழமையை வெளிப்படுத்தினார்.`எங்கப்பன் குதிருக்குள் இல்லை` என்பதை போட்டுடைத்து, மகிழ்ச்சியில் உருகும் ஐஸ் போல வழிந்து நின்றார் ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க.

தேர்தல் நெருங்க நெருக்க மகிந்தவுக்கு ஆதரவான புலி வேசம்கட்டி ஆட பல நரிகள் ஊடகங்களில் குதித்தாட குழுக்குழுவாக களமிறங்குவார்கள். ரூம் போட்டு யோசித்து புதிசு புதிசாக பல அரசியல் கதைகளை அவிட்டு விடுவார்கள். 

Edited by ராஜகுரு

 

 

அடுத்து, ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜனசூரிய பற்றி ஒரு குறிப்பு. இவர் தமிழ் தேசிய இனத்தின் பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையை முழுமையாக ஆதரிப்பதாக யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியளார்கள் சந்திப்பில் வெட்டவெளியாக அறிவித்ததாக யாழ். உதயன் பத்திரிகை கூட அடுத்தநாள் செய்திக்குறிப்பொன்றை தந்து முன்பக்கத்தில் வெளியிட்டிருந்து.

அவரது கட்சியின் லண்டன் அடிப்பொடியான சேனன் என்னும் நபர் முகநூலில் இப்படி வெட்டி முழங்கியுள்ளார். ''இத் தேர்தலை கணித முறையில் நாம் பார்க்காமல் மக்கள் எதிர்ப்புச் சக்தியை திரட்டுவது எவ்வாறு என்ற அடிப்படையில் நாம் அணுகுகிறோம். மக்கள் எதிர்ப்பு தேர்தலின் பின்பும் தொடர வேண்டும். அதனாற்தான் மக்கள் தம் எதிர்ப்பை எம்முடன் பதிய வேண்டும் எனக் கோருகிறோம்.

கடந்த வட மாகாணத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். அது தொடர வேண்டும். ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறுவதால் மட்டும் மக்களுக்கு பலனில்லை. கொள்கை மாற வேண்டும். அரசியல் யாப்பு தூக்கி எறியப்பட வேண்டும். இந்த அர்த்தத்தில் எதிர்ப்பவர்கள் தமது எதிர்ப்புக் குரலை எம்முடன் பதிய வேண்டும். இத்தனை பேர் அனைத்து இனவாதிகளையும் எதிர்த்து வாக்களித்தனர் என்பது வரலாற்றில் பதியப்படவேண்டும்.``

 

 

 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சியின் ஆதரவாளரை அடிப்பொடி என்று தூற்றியுள்ள இக்கட்டுரையாளரும் ஒரு கட்சியின் அடிப்பொடியா?

  • தொடங்கியவர்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சியின் ஆதரவாளரை அடிப்பொடி என்று தூற்றியுள்ள இக்கட்டுரையாளரும் ஒரு கட்சியின் அடிப்பொடியா?

 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பல செயல்முறைகள் குறித்து எனக்கு தனிப்பட்ட விமர்சனமும் வேறுபட்ட பார்வைகளும் உண்டு. அதுபற்றி அல்ல தற்போதைய விவாதம். 

 

வரும் ஜனாதிபதி தேர்தலில் இரு வேட்பாளருக்கே வெல்லக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது. ஒருவர் மகிந்த. மற்றவர் மைத்திரிபால. 

 

இருவருக்கும் தமிழ்ர்கள் வாக்களிக்கக் கூடாது என்பது மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகும் வேலையை மறைமுகமாக செய்வதாகும். அதே போல் ஒருபோதும் வெல்ல முடியாத சிறிய கட்சிகளுக்கு சோசலிச பெயிற் அடித்து வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கோருவதும் மகிந்தவை பின் கதவால் ஜனாதிபதியாக்கும் வேலையாகும்.

 

யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களை அல்லும்பொழுது இலங்கை இராணுவ புலனாய்வுக்காரர்கள் துரத்தித்துரத்தி நோண்டி நொங்கெடுகிறார்கள். அதெப்படி ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜனசூரிய யாழ்ப்பாணத்தில் ஹோட்டலில் தங்கி நின்று தமிழருக்கு தமிழீழம் பெற்றுதர தனக்கு வாக்களிக்கும் படி பகீரங்கமாக கோர முடிகிறது?

 

அண்மையில் மாகாணசபை கூட்டத்தில்  நடந்த குழப்பத்துக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுபினர்கள்தான் காரணமென ஈபிடிபி யாழ் பொலிஸில் முறைபாடு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸ் அவர்களை விசாரணை என்றழைத்து வறுத்தெடுறார்கள்.

 

தமிழருக்கு ஈழம் எடுத்துத்தருவதாக யாழ்ப்பாணத்தில் வைத்து  பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும்  சிறிதுங்க ஜனசூரியாவுக்கு  பொலிஸ் பாதுகாப்பு கொடுப்பது ஏன்?

Edited by ராஜகுரு

  • கருத்துக்கள உறவுகள்
சரிதான் ஆனா நம்ம வாக்கு, எதிர்கால ஜனாதிபதி மகேந்திரனுகே. :icon_mrgreen:
 
அவர் வந்தால் தமிழர் உரிமை கிடைக்கும், கண்டியில் துறைமுகம் அமையும், சிவனொளி பாத மலை உச்சியில் விமான நிலையம் அமையும்.... :icon_mrgreen:
 
எனவே அவருக்கே எங்கள் வாக்குகள்.... மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்து விடாதீர்கள். 8ம் திகதி அதிகாலை சூரியன் உதித்ததும் எழுந்து நேர காலத்துடன் வாக்குச் சாவடி சென்று வெற்றிக் கனி எங்கள் நவ சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிடும் சுந்தரம் மகேந்திரனை நாடி வர செய்யுங்கள்.  :icon_mrgreen:  :icon_mrgreen:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பல செயல்முறைகள் குறித்து எனக்கு தனிப்பட்ட விமர்சனமும் வேறுபட்ட பார்வைகளும் உண்டு. அதுபற்றி அல்ல தற்போதைய விவாதம். 

 

வரும் ஜனாதிபதி தேர்தலில் இரு வேட்பாளருக்கே வெல்லக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது. ஒருவர் மகிந்த. மற்றவர் மைத்திரிபால. 

 

இருவருக்கும் தமிழ்ர்கள் வாக்களிக்கக் கூடாது என்பது மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகும் வேலையை மறைமுகமாக செய்வதாகும். அதே போல் ஒருபோதும் வெல்ல முடியாத சிறிய கட்சிகளுக்கு சோசலிச பெயிற் அடித்து வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கோருவதும் மகிந்தவை பின் கதவால் ஜனாதிபதியாக்கும் வேலையாக்கும்.

 

யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களை அல்லும் பொழுது இலங்கை இராணுவ புலனாய்வுக்காரர்கள் துரத்தி துரத்தி நோண்டி நொங்குகெடுகிறார்கள். அதெப்படி ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜனசூரிய யாழ்ப்பாணத்தில் ஹோட்டலில் தங்கி நின்று தமிழருக்கு தமிழீழம் பெற்றுதர தனக்கு வாக்களிக்கும் படி பகீரங்கமாக கோர முடிகிறது?

 

அண்மையில் மாகாணசபை கூட்டத்தில்  நடந்த குழப்பத்துக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுபினர்கள்தான் காரணமென ஈபிடிபி யாழ் பொலிஸில் முறைபாடு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸ் அவர்களை அழைத்து விசாரணை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. 

 

தமிழருக்கு ஈழம் எடுத்துத்தருவதாக யாழ்ப்பாணத்தில் வைத்து  பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும்  சிறிதுங்க ஜனசூரியாவுக்கு  பொலிஸ் பாதுகாப்பு கொடுப்பது ஏன்?

 

கவலை படாதீர்கள், இந்த மாதிரி சில்லறை விளையாட்டுக்கள் எல்லாம் நம்ம ஆளுங்க கரைத்துக் குடித்தவர்கள்.
 
முதலாவது ஜனாதிபதி தேர்தலில், JRJ வேண்டுதலில், குமார் பொன்னம்பலம் கூட நின்று தானே பார்த்தார்.... :icon_idea:

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

 

சரிதான் ஆனா நம்ம வாக்கு, எதிர்கால ஜனாதிபதி மகேந்திரனுகே. :icon_mrgreen:
 
அவர் வந்தால் தமிழர் உரிமை கிடைக்கும், கண்டியில் துறைமுகம் அமையும், சிவனொளி பாத மலை உச்சியில் விமான நிலையம் அமையும்.... :icon_mrgreen:
 
எனவே அவருக்கே எங்கள் வாக்குகள்.... மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்து விடாதீர்கள். 8ம் திகதி அதிகாலை சூரியன் உதித்ததும் எழுந்து நேர காலத்துடன் வாக்குச் சாவடி சென்று வெற்றிக் கனி எங்கள் நவ சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிடும் சுந்தரம் மகேந்திரனை நாடி வர செய்யுங்கள்.  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

கவலை படாதீர்கள், இந்த மாதிரி சில்லறை விளையாட்டுக்கள் எல்லாம் நம்ம ஆளுங்க கரைத்துக் குடித்தவர்கள்.
 
முதலாவது ஜனாதிபதி தேர்தலில், JRJ வேண்டுதலில், குமார் பொன்னம்பலம் கூட நின்று தானே பார்த்தார்.... :icon_idea:

 

 

தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி  இந்த கட்டுரையை வெளியிட்ட இணையங்களை அவதானித்தால் தெரியும் அவர்கள் யார் பின்னால் மறைந்திருந்து இந்த அம்புகளை எய்கிறார்கள் என்பதை. உதாரணத்துக்கு இதை thesamnet.co.uk எனும் ஒரு இணையம் வெளியிட்டிருந்தது. அந்த இணைய நடத்துனர்களுக்கும் ஈபிடிபி வடமாகாண சபை உறுப்பினர் தவராசவுக்கும் உள்ள உறவு லண்டனில் அனைவருக்கும் தெரிந்த இரகசிம்.

 

இன்னொன்று புளொட் அமைப்பின் முன்னால் உறுப்பினர்களால் சுவிசில் இருந்து நடத்தப்படும் அதிரடி எனும் இணையம். அவர்களில் ஒருவர் அண்மையில் பிரான்சில் இருந்து வன்னிக்குப் போய் கொத்தபாயாவின் உதவியுடன் புளெட்  அமைப்பு தான்தான் என்று உரிமை கோரியுள்ளார். அவரின் பேட்டியை ஈபிடியின் இன்னொரு இணையமான சலசலப்பு  வெளியிட்டுள்ளது. அவர்களும் மேற்படி இரவி எழுதிய கட்டுரைக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

 

ஆக மொத்தத்தில் தமிழ் விரோத சக்திகளில் அரசியல் திருவிளையாடல் இவை. மகிந்தவின் தோல்வி இவர்களை தமிழ் அரசியலில் இருந்து  ஓரங்கட்டிவிடுமென அதிகமாக பயப்படுகிறார்கள். 

 

இந்த ஜனாதிபதி தேர்தல் அரசியல் தீர்வை பெறுவதற்கான தேர்தல் அல்ல. தமிழ் மக்கள் பெறவேண்டிய அரசியல் தீர்வை தடுக்கும் அரச ஒட்டுக்குழுக்களை அரசியல் அரங்கில் இருந்து அந்நியப்படுத்த தமது வாக்குகளை தமிழ் மக்கள் பெருவாரியாக பயன்படுத்த வேண்டிய தேர்தல் என்பதைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

Edited by ராஜகுரு

  • கருத்துக்கள உறவுகள்

ராஜகுரு,  இரு சிங்களப் பெளத்த இனவாதிகளும் தமிழருக்கு எதையுமே விட்டுத்தரப்போவதில்லை. ஆனால், மகிந்த என்கிற இனக்கொலையாளி எமக்குச் செய்த அநியாயத்திற்காகவேனும் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும். அதன்மூலம் அவர் மீதான போர்க்குற்ற மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களுக்கான விசாரணைகளை நடத்துவதற்கு இதுவரை தடையாகவிருந்த அவரது "நட்டின் தலைவருக்கான விசாரணைகளுக்கெதிரான தடுப்பு" இல்லாமல்ப் போகும், அதன்மூலம் அவரைச் சிக்கவைக்கலாம் என்கிற சந்தர்ப்பமாவது எமக்குக் கிடைக்குமென்றால் அவரைத் தோற்கடிப்பது நல்ல விடயமே !

  • தொடங்கியவர்

ராஜகுரு,  இரு சிங்களப் பெளத்த இனவாதிகளும் தமிழருக்கு எதையுமே விட்டுத்தரப்போவதில்லை. ஆனால், மகிந்த என்கிற இனக்கொலையாளி எமக்குச் செய்த அநியாயத்திற்காகவேனும் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும். அதன்மூலம் அவர் மீதான போர்க்குற்ற மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களுக்கான விசாரணைகளை நடத்துவதற்கு இதுவரை தடையாகவிருந்த அவரது "நட்டின் தலைவருக்கான விசாரணைகளுக்கெதிரான தடுப்பு" இல்லாமல்ப் போகும், அதன்மூலம் அவரைச் சிக்கவைக்கலாம் என்கிற சந்தர்ப்பமாவது எமக்குக் கிடைக்குமென்றால் அவரைத் தோற்கடிப்பது நல்ல விடயமே !

 

ரகுநாதன், நீங்கள் குறிப்பிட்டதும் முக்கியமான ஒரு புள்ளி. பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் தீவிரம் மிகக்குறைவாக அல்லது முழுமையாக இல்லாமலே இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் மக்களால் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பின் மகிந்தவிற்கெதிராக திரும்பும் போர்குற்ற விசாரணை தடுத்து நிறுத்தக்கூடிய எந்தவித பாதுகாப்பும் மகிந்தவிக்கு இருக்க முடியாது. 

 

முஸ்லீம் கட்சிகள் தமது சில கடைகள்  எரிக்கப்பட்டதற்கும் ஒரு சில முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கும் மகிந்த அரசை ஆட்சியில் இருந்து துரத்த தீவிரமாக முன்னிற்கிறார்கள். அதேபோல் தமிழ் தரப்பு எந்தவெரு அரசியல் கட்சியும் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கும்  மில்லியன் கணக்கான கோடி ரூபாய் தமிழரின் சொத்துகள் அழிக்கப்பட காரணமான மகிந்தவை  சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து தப்பித்துப் போய் விடக்கூடிய வகையில் மைத்திரியுடன் சமப்படுத்தும் அரசியலை இந்த தேர்தலில் செய்து விடக்கூடாது.

  • தொடங்கியவர்

<iframe width="560" height="315" src="//www.youtube.com/embed/pnoUIVkChEw" frameborder="0" allowfullscreen></iframe>
 
குகநாதன் யாழ்ப்பாணத்தில் இருந்து நடாத்தப்படும் டான் ரிவி  இலங்கை இராணுவத்துடன் நெருக்கிய உறவு ஊரறிந்த விடயம்.

Edited by ராஜகுரு

  • கருத்துக்கள உறவுகள்

1- 2015-ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடு குறித்து  உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்காத நிலையில் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாக எழுதுவதுபோல் பல திடுக்கிடும் அரசியல் ஆய்வுகள் தமிழ் இணையங்களில் சில வெளியிட்டுள்ளன. அதனை சிலர் யாழ் கருத்துக்களம் பகுதியில் இணைத்துள்ளனர்.

 

2- தேர்தல் நெருங்க நெருக்க மகிந்தவுக்கு ஆதரவான புலி வேசம்கட்டி ஆட பல நரிகள் ஊடகங்களில் குதித்தாட குழுக்குழுவாக களமிறங்குவார்கள். ரூம் போட்டு யோசித்து புதிசு புதிசாக பல அரசியல் கதைகளை அவிட்டு விடுவார்கள். 

 

சாதாரணமாக

எதுவும் தெரியாது 

எவருக்கும் ஆதரவில்லை......... என்பது போல் எழுதத்தொடங்கி 

உங்களது ஆதரவை தெரிவித்தது மட்டுமல்ல

மற்றவர்களும் அவ்வாறே செய்யணும் எனவும் எழுதியுள்ளீர்கள்

 

அதன்படி நீங்களும் அதேவேலையைத்தான் செய்கிறீர்கள்

அது தான் தமிழருக்கு வழி காட்டுவது.... :( 

  • தொடங்கியவர்

சாதாரணமாக

எதுவும் தெரியாது 

எவருக்கும் ஆதரவில்லை......... என்பது போல் எழுதத்தொடங்கி 

உங்களது ஆதரவை தெரிவித்தது மட்டுமல்ல

மற்றவர்களும் அவ்வாறே செய்யணும் எனவும் எழுதியுள்ளீர்கள்

 

அதன்படி நீங்களும் அதேவேலையைத்தான் செய்கிறீர்கள்

அது தான் தமிழருக்கு வழி காட்டுவது.... :( 

 

மைத்திரியை ஆதரிக்க வேண்டுமென்பது தமிழ் மக்களில் விருப்பமும் அல்ல கோரிக்கையும் அல்ல. 

 

மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டுமென்பதே அவர்கள் விருப்பமும் கோரிக்கையும்.

 

அதை நிறைவேற்றவே மகிந்தவுக்கெதிரான  வாக்களிக வேண்டுமென்பது தான் எனது விருப்பமும் கோரிக்கையும். மைத்திரிக்கு வாக்காளிக்காமல் மகிந்தவை ஆட்சியில் இருந்து துரத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜகுரு அண்ணே.. மகிந்தவை விட கொடிய போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா.

 

உங்களுக்கே தெரியும் செம்மணி படுகொலை உட்பட முள்ளிவாய்க்கால் வரை இவர்களின் கட்டளைக்கு அமையவே நடந்தது. மகிந்த எவ்வளவுக்கு எவ்வளவு தண்டிக்கப்படனுமோ அதற்கு ஈடாக தண்டிக்கப்பட வேண்டியவர்களில் சரத் பொன்சேகா அடக்கம்.

 

சென்ற முறை தேர்தலில்.. சம்பந்தன் பேச்சை கேட்டு அவரை ஆதரித்த தமிழ் மக்களுக்கு இறுதியில்.. தேர்தல் முடிந்ததும் என்ன செய்தார்..????! ஒன்றும் இல்லை.

 

சிங்கள மக்களா தமக்கான தலைமை மாற்றத்தை விரும்பினால் அன்றி தமிழ் மக்களால்.. அதன் தலைமையை தீர்மானிக்க முடியாது. வடக்கு கிழக்கு மக்கள் இந்தத் தேர்தலில் மீண்டும்.. சம்பந்தன் பேச்சைக் கேட்டு ஏமாளியாகாமல்.. இருந்தாலே போதும் என்பது போல் உள்ளது.

 

தமிழ் மக்களின் வாக்கு கட்டாயம் தனக்கு தேவை என்று மைத்திரியோ.. மகிந்தவோ.. கருதி இருந்தால்.. தமிழ் மக்களின் சில அடிப்படை அபிலாசைகளை என்றாலும் பூர்த்தி செய்ய வாக்குறுதி அளித்திருப்பார்கள். ஆனால்.. அப்படி எதுவும் அமையவில்லையே. நாளை தேர்தல் வெற்றியின் பின் நான் அளிக்காத வாக்குறுதியை நீங்கள் அமுல்படுத்தக் கோருகிறீர்கள் என்று மைத்திரி தமிழ் மக்களின் அபிலாசைகளை நிராகரித்தால்.. அவருக்கு வாக்குப் போடச் சொல்லி கேட்கக் கூடிய கூட்டமைப்பு என்ன செய்யும்..??????! இப்ப போல்.. அப்போதும் கையாலாகமல் புலம்பெயர் தமிழர்களை நோக்கி ஓடி வருவார்களா...???! சர்வதேச விசாரணையை முன்னிறுத்துக்கள் என்று.

 

சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களை களத்தில் செய்து கொண்டு அங்கு ஏற்படும் அரசியல் பின்னடைவுகளை பூசி மொழுக தேர்தலுக்கு தேர்தல்.. சகட்டு மேனிக்கு மக்களை நோக்கி வாக்குறுதிகள் அளிப்பதும்.. பின் அவற்றை செய்ய முடியாமல் கைவிரிப்பதும்.. கூட்டமைப்பின் இராஜதந்திர அரசியலை விளங்கிக் கொள்ள முடியாமல் தமிழ் மக்கள் தவிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.. கடந்த 5 ஆண்டுகளில்.

 

இன்னும்...?????! :icon_idea::)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.