Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதித் தேர்தலில் யாரையும் ஆதரிக்கமாட்டேன் - ரவிகரன்

Featured Replies

ravikaran%208546554652.jpg

 

 

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்துப் பிரசாரம் செய்ய மாட்டேன் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழ் மண்ணில் இருந்து தமிழர்களின் உரிமைகளுக்காக நியாயமாகக் குரல் கொடுப்பவர்களைத் தவிர வேறு எவரையும் ஆதரித்து பிரசாரம் செய்வதில்லை என்பது தனது கொள்கை சார் முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
 
எங்கள் மண்ணில் வரலாறு, அதற்கு முன் கண்டிராத சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட யாழ். மக்களின் இடப்பெயர்வை எங்களுக்கு பரிசளித்தவர் சந்திரிக்கா. செம்மணிப்புதைகுழி உள்ளிட்ட பல பேரவலங்களை இவரது ஆட்சியில்தான் தமிழர்கள் முகம்கொடுத்தோம். தமிழர்களுக்கெதிரான போரில் 75% வெற்றி தன்னுடையது என்று அவரே உரிமை கோருகிறார். எங்கள் மக்கள் மீதான இன அழிப்பின் குறியீடாக நிற்கிற கொடூரமான முள்ளி வாய்க்கால் பேரவலத்தை எமக்கு வழங்கியது மஹிந்த ஆட்சியே. இன்றும் இந்த அவலத்திலிருந்து மீண்டு எழாத நிலையில், உடலில் குண்டுச் சிதறல்களோடும் உளச் சிதைவுகளோடும் நடைப்பிணங்களாக வாழ்கின்றனர் எங்கள் மக்கள்.
 
இப்போரின் தளபதியாக முன் நின்று உழைத்து அழிவுகளையும் அவலங்களையும் தமிழர் குடிக்கு வழங்கியவர் சரத் பொன்சேகா. முள்ளிவாய்க்காலில் எங்கள் இனம் அழிக்கப்பட்ட போது கொழும்பில் பால்சோறு அரசியலையும் பட்டாசு அரசியலையும் பங்கு போட்டவரே மைத்திரி பால சிறிசேன. இவர்கள் எவரையும் ஆதரித்து என்னால் பிரசாரம் செய்ய இயலாது. மரணித்த எங்களின் உறவுகளின் உணர்வுகளினை மிதித்து இவர்களுக்காக வாக்குக் கேட்க முடியாது. வாழ்த்துப்பா பாடவும் முடியாது. தமிழ் மண்ணில் இருந்து தமிழர்களின் உரிமைகளுக்காக நியாயமாக குரல் கொடுப்பவர்களைத் தவிர வேறு எவரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனது கொள்கை சார் முடிவு.-என்றார் -
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  ஐயா....

 

தீர்க்கமான கருத்தும் பார்வையும்........

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான எதார்த்தமான அறிக்கை. நன்றி ரவிகரன் அவர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் எங்கள் இனம் அழிக்கப்பட்ட போது கொழும்பில் பால்சோறு அரசியலையும் பட்டாசு அரசியலையும் பங்கு போட்டவரே மைத்திரி பால சிறிசேன. இவர்கள் எவரையும் ஆதரித்து என்னால் பிரசாரம் செய்ய இயலாது. மரணித்த எங்களின் உறவுகளின் உணர்வுகளினை மிதித்து இவர்களுக்காக வாக்குக் கேட்க முடியாது. வாழ்த்துப்பா பாடவும் முடியாது. தமிழ் மண்ணில் இருந்து தமிழர்களின் உரிமைகளுக்காக நியாயமாக குரல் கொடுப்பவர்களைத் தவிர வேறு எவரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனது கொள்கை சார் முடிவு.-என்றார் -

உறுதியான முடிவு

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்காக உயிரிழந்த மாவீரர்களின் இரத்தம் இன்னும் சிலரில் ஓடுவது மகிழ்ச்சி தருகிறது.

புள்ளரிச்சுப்போனேன் ,அடடடடா என்ன கொள்கைப்பற்று இதிலிருந்து என்ன விளங்குதெண்டால் புலம் பெயர் தேசியவாதிகளுக்கு ,எவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை இன்றைக்கு தேர்தலை புறக்கணிப்பவர்கள் தீர்க்கமான கருத்தும் பார்வையும்...கொண்டவர்,மாவீரர்களின் இரத்தம் ஓடுது அவரிலை, உறுதியான முடிவுகாரர் ,உண்மையான எதார்த்தமான அறிக்கையாளர்


1.முல்லை மண்ணில் இருந்தது மாகாணசபைக்கு தெரிவானவர் ,முதலில் தமிழரசுக்கட்சியில் தேர்தலில் நிற்பதற்கு விண்ணப்பித்தபோது மாவை அண்ணன் நிராகரித்துவிட்டார் ,பின்பு சுரேஷ் முலமாக EPRLF ஊடாக TNA கு வந்தபோது இதையும் மாவை அண்ணன் நிராகரிக்க ,சுரேஷ் சொன்னவராம் தங்களுடைய கட்சியால் தருபவர்களை நீங்கள் கேள்வி கேட்டு நிராகரிக்கமுடியாது .இப்பொழுது விளங்குதா என்ன காரனத்திற்காக ஓரு கட்சியாக TNA பதிவதில் உள்ள சிக்கல் .


2.விடுதலைப்புலிகள் இரவிகரனுக்கு 90லட்சம் ரூபாய் தண்டம் அறவிட்டவர்கள்.

சிவாஜிலிங்கம்,இரவிகரன் இருவரதும் பைல்கள் மகிந்தவிடமும் ,புலம் பெயர் போலித்தேசியவாதிகளிடம் இருக்காம்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் எத்தனை இலட்சம் கொடுத்தவர்.. நீலனை போட்ட கணக்கா என்னை போடவேன்னு... என்ற கணக்கையும் அண்ணன் ஹரி அவர்கள் தனது சி ஐ ஏ ஏட்டில் இருந்து.. திருமலையில்.. சரிபார்த்துச் சொல்லலாமே. :D

 

வன்னிக்கு போய் பேசும் போது தம்பி.. இப்போ.. கொழும்பில் இருந்து கொண்டு காட்டுமிராண்டி.. இப்படிச் சொல்லிக்கிட்டு திரியுற.. சம்பந்தனை காட்டிலும்.. இரவிகரன் போன்றவர்கள்.. உண்மையில்.. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அதிகம் மதிக்கிறார்கள்.. ஏனெனில்.. சம்பந்தன் போல் நாட்டுக்கு வெளியில்.. 3/4 வருசத்தை கழிப்பதில்லை..(மிகுதி 1/4 கொழும்பில்.). அவர்கள் மக்களோடு மக்களின் அன்றாட நிகழ்வுகளை கண்டு வாழும் அரசியல் பேர்வழிகள். மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வரை அவர்களை நம்பலாம். சம்பந்தனை விட நேர்மையானவர்கள். :icon_idea:

 

 

களவிதிகளின்படி நிறுவனங்கள், அமைப்புகளின் உறுப்பினர்களின் செயற்பாடுகளை விமர்சிக்கும்போது இயன்றளவு ஆதாரத்தோடு கருத்துக்கள் வைக்கவேண்டும். எனவே, ஆதாரமற்ற அவதூறு விமர்சனங்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்தாடல்களைத் தொடருங்கள்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.