Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்கள் அனைவரும் கடந்தகால வரலாற்றை கருத்திற்கொண்டு சிந்தித்து வாக்களிக்கவேண்டும் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Featured Replies

தமிழ் மக்கள் அனைவரும் கடந்தகால வரலாற்றை கருத்திற்கொண்டு சிந்தித்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தேர்தலானது தமிழ் மக்களாகிய எமக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத் தரும் என்றோ எமது உரிமைகளுக்கு மதிப்பளிக்குமென்றோ நாம் துளியளவும் நம்பவில்லை.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி என்ற கொள்கையில் இருந்து தளராது தமிழ் மக்களின் உரிமைக்காக என்றும் குரல்கொடுக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

jaffna%20university-%2002.JPG
jaffna%20university-%2001.JPG
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நேரத்தில்

நல்லதொரு அறிக்கை

நன்றி உறவுகளே

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அறிக்கை
நன்றி உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்
"இன்று தமிழர்கள் ஆகிய நாம் ஸ்திரதன்மை அற்ற சிறப்பான அரசியல் தலைமை அற்று இருக்கிறோம்"
 
ஏன் இவர்களுக்கு நாட்டில் சுமந்திரனும் சம்மந்தரும் இருப்பது பற்றி யாரும் சொல்லவில்லையா ??  
  • கருத்துக்கள உறவுகள்

எங்க புலிப்பினாமிகளின் தூண்டுதலுக்கு பலியாகிவிட்டார்கள்.

 

இன்னும் புலி நினைவில் வாழ்கிறார்கள். சம்பந்தன் சுமந்திரனை அறிவாளியா ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை..

 

என்ற கூக்குரல்களை இங்கு காணம். :lol::D

 

இளைய சமூகம் நல்ல தெளிவாவே இருக்குது புகலிடத்திலும் சரி தாயகத்திலும். சரி.

 

நேற்று சூறாவளியாருக்கு எழுதின பதிலில் குறிப்பிட்டிருந்தோம்..

 

தமிழ் தேசியம்.. சுயநிர்ணயம்..சுயாட்சி அல்லது சமஷ்டி.. வடக்குக் கிழக்கு இணைந்த தாயகம்.. இந்த அடிப்படைகளில் இருந்து தாம் சிந்திக்கனும் என்று. இன்று அதையே பல்கலைக்கழக மாணவ சமூகமும் வலியுறுத்தி உள்ளது.

 

சம்பந்தன்.. சுமந்திரன் போன்றவர்கள்.. இதில் எங்கே வேறுபடுகிறார்கள் என்றும் எழுதி இருந்தோம். மீண்டும்.. அதனை தாயக படித்த இளைய சமூகமும் பிரதிபலித்து நிற்கிறது. :):lol::icon_idea:


நேற்று எங்களால்.. பதியப்பட்ட கருத்து இங்கு:

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/151567-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/


தமிழ் மக்கள்.. தேசியம்.. சுயநிர்ணயம்.. சமஸ்டி.. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்..இந்த 3 அடிப்படைகளில் இருந்து தான் தீர்வை எதிர்பார்க்கிறார்கள் என்பது சம்பந்தனுக்கு நன்கே தெரியும். தெரிந்து கொண்டும் அவற்றை தானே கைவிட்டு விட்டு.. ஒற்றையாட்சி.. சிங்கள இறையாண்மை.. 13வது திருத்தம்.. வடக்கு கிழக்கு பிரிந்த மாகாண சபைகள் என்று கொக்கரிச்சுக்கிட்டு திரிகிறார். தமிழ் மக்கள் ஒன்றும் தமிழீழத்தை கைவிடச் சொல்லேல்ல. ஆனால் சம்பந்தன் சொல்கிறார். தமிழ் மக்கள் தமிழீழத்துக்கு மாற்று என்ன என்று சொல்கிறார்கள். அதைச் சொல்லக் கூட சம்பந்தனுக்கு வக்கில்ல.. இதில புலிகள் மீது மட்டும் விமர்சனம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் ஜனநாயக் குரல்கள் வெளிவராமல் அடக்கியாளும் மகிந்தவிற்கான எதிர்ப்பு வாக்குகளாகவே தமிழ் மக்கள் மைத்திரிக்கு அளிக்கும் வாக்குகளைப் பார்க்கவேண்டும். மக்கள் எப்போதுமே தெளிவாக இருப்பதால் அவர்களின் உண்மையான விருப்பங்களை இத் தேர்தலிலும் காட்டுவார்கள். இதற்குப் பின்னால் வரும் பொதுத்தேர்தலிலும் காட்டுவார்கள்.

தமிழ் மக்கள் எப்போதும் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற கொள்கைகளை முன்னெடுப்பவர்களையே எப்போதும் ஆதரித்து வருகின்றனர். ஆனால் தற்போதைய அரசியல் தலைமைகள் இவற்றினைக் கைவிட்டவர்களாகவும், இணக்க அரசியலுக்குத் தமிழ் மக்களைத் தயார்படுத்தவும் முனைகின்றனர். எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்கக் கூடிய சரியான அரசியல் தலைமை கிட்டும்வரை கூட்டமைப்பை அவர்கள் தேர்தல்களில் தெரிவு செய்யக்கூடும். ஆனால் இது நிரந்தரமான வாக்குவங்கி என்று கூட்டமைப்பு நினைத்தால் அதைப் போல முட்டாள்தனம் வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான் கருத்து கிருபன்.யாழ் பல்கலைக்கழகம் ஒவ்வொரு தேர்தல்களிலும் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கிறது.இந்த முறையும் சரியான ஒரு அறிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது.மகிந்த வெல்லக்கூடாது என்ற நிலையில் முடிவை எடுக்கும் அதே வேளையில் தமிழர்களின் தாயகம் ,தேசியம் ,தன்னாட்சி உரிமை விடயத்தில் சமரசம் செய்யத்தயாராக இல்லை என்பதை தெளிவு படுத்தி உள்ளது.கூட்டமைப்புதொடர்ந்தும் தமிழர்களின் உரிமை விடயத்தில் அக்கறையின்றிச் செயற்படுமாயின் அது மக்களால் நிராகரிக்கப்பட்டு ஒரு புதிய அரசியல் தலமையை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.அந்தத் தலமை பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடன் உருவாக்கப்படுவது சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட குழப்பமான ஒரு அறிக்கை இருக்க முடியாது.

கடந்த கால வரலாற்றை யோசித்து வாக்களிக்க வேண்டும் எண்டால்

மகிந்தக்கா, மைத்திரிக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட குழப்பமான ஒரு அறிக்கை இருக்க முடியாது.

கடந்த கால வரலாற்றை யோசித்து வாக்களிக்க வேண்டும் எண்டால்

மகிந்தக்கா, மைத்திரிக்கா?

 

வரிகளுக்கிடையே படியுங்கள் கோஷான் !!! (Read between the lines mate !)

 

  • கருத்துக்கள உறவுகள்

வரிகளுக்கிடையே இப்படியும் வாசிக்கலாம்.

1) வரலாற்றில் எமக்கு பெரும் துயர் தந்த மகிந்தவை தோற்கடியுங்கள்

2) வரலாற்றில் எந்த சிங்கள தலைவரும் எமக்கு ஒன்றும் தரவில்லை ஆகவே மைதிரியை தோற்கடித்து, மகிந்தவை வெல்ல வைத்து - தற்கொலை ராசதந்திரம் செய்யுங்கள்

3) வரலாற்றில் இருந்த படிப்பினை படி வாக்கை செல்லுபடியற்றதாக்கி விடுங்கள்

எனக்கு இது மக்களை குழப்பும் பதிவு போன்ற புலயாவாரிகளின் வேலை போலத்தான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

வரிகளுக்கிடையே இப்படியும் வாசிக்கலாம்.

1) வரலாற்றில் எமக்கு பெரும் துயர் தந்த மகிந்தவை தோற்கடியுங்கள்

2) வரலாற்றில் எந்த சிங்கள தலைவரும் எமக்கு ஒன்றும் தரவில்லை ஆகவே மைதிரியை தோற்கடித்து, மகிந்தவை வெல்ல வைத்து - தற்கொலை ராசதந்திரம் செய்யுங்கள்

3) வரலாற்றில் இருந்த படிப்பினை படி வாக்கை செல்லுபடியற்றதாக்கி விடுங்கள்

எனக்கு இது மக்களை குழப்பும் பதிவு போன்ற புலயாவாரிகளின் வேலை போலத்தான் தெரியுது.

 

அட சும்மா இருங்கள் ஐய்யா, எதுக்கெடுத்தாலும் புல வியாபாரி, பழ வியாபாரி எண்டு கொண்டு. இன்னும் ஒரே ஒரு நாள் , அதுக்குப் பிறகு எல்லாம் தெரிஞ்சுபோகும் !

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பகிரங்கமாக சொன்னதை இவர்கள் மறைமுகமாக சொல்லுறார்கள். 

 

இதைத்தான் கூட்டமைப்பும் அரசியல் முடிவாக அறிவித்திருந்தார்கள். 

 

இங்கே கவனிகப்படவேண்டியது அநேகமானோர் தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என்றும் மகிந்தவை ஆதரிக்க வேண்டாம் என்றுமே சொல்லுகிரார்க்கள்.

 

மற்றயது எங்கள் தாயக கேட்பாட்டை யார் இங்கே கைவிட்டது ? 

இணைந்த வடக்கு கிழக்குக்கு எங்கள் தாயகம் அதில் அதி கூடிய தீர்வு தனி ஈழம் குறைந்தது மாகாணசபை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.