Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.இந்துக் கல்லூரி வாகனத்தின் கண்ணாடிகள் உடைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சபாலிங்கம், என்பது பெயர்.
அங்கு அவர்களின் குடும்பத்தில், உங்களது சகோதரியை கலியாணம் கட்டிக் கொடுத்த விடயம் எல்லாம் வரும்.. ஓகேயா... அர்ஜூன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சிறி ,

ஒரு நாள் ஜெயக்குமாருடன் படித்தது என்கின்றீர்கள் ,பிறகு ஐங்கரநேசனுடன் படித்தனான் என்கின்றீர்கள் இப்ப புங்கையிடம் கேட்கவும் என்கின்றீர்கள் .எத்தனை தரம் பெயில் விட்டீர்கள் . :icon_mrgreen:

சபாலிங்கத்தை பற்றி விரைவில ஒரு பதிவு எழுதவுள்ளேன் .

அதிபர் சபாலிங்கம் பற்றி எழுதுங்கள் அர்ஜூன். நான் படித்தபோது அவர் மாறி, பி.எஸ்.குமாரசாமி வந்தார். அதிபர் சபா பற்றி நினைக்கும்போது இப்போதும் கால் கிடுகிடுசென்று நடுங்குது (நான் கொஞ்சம் குளப்படி)

சபாலிங்கம், என்பது பெயர்.

அங்கு அவர்களின் குடும்பத்தில், உங்களது சகோதரியை கலியாணம் கட்டிக் கொடுத்த விடயம் எல்லாம் வரும்.. ஓகேயா... அர்ஜூன்.

அதைதான் எழுத போகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

எவன் எப்பிடி நடைபோட்டாலும் யாழ் இந்துவின் மைந்தன் திமிராகப் போடும் நடைக்கு ஒப்பாகாது, அது கான மயிலாட கண்டிருந்த வான் கோழிக்கு ஒப்பாகும்! இந்தக் களத்தில் பெரும்பாலானோர் இந்துவின் மைந்தர்களாக இருப்பது மகிழ்வாக இருக்கிறது! வாழிய யாழ் நகர் இந்துக் கல்லூரி!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வாதமும் முடிஞ்சு இப்ப பாடசாலை வாதம். :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வாதமும் முடிஞ்சு இப்ப பாடசாலை வாதம். :rolleyes::lol:

 

அதுவும் ஒருவகை திமிர் ,,,,,:D

அதுவும் ஒருவகை திமிர் ,,,,, :D

 

ஆம் அது ஒருவகை திமிர் + மமதைதான் ஆனால் பாதகம் குறைந்தது. யாழ்ப்பாணத்தில் தாய்நாட்டுப் பற்று போல பாடசாலைப் பற்றும் அதிகம்தான். இது சில சந்தர்ப்பங்களில் வெறியாக மாறி கைகலப்பும் வரும். ஆனால் யாழ் களத்தில் சண்டை வராது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வாதமும் முடிஞ்சு இப்ப பாடசாலை வாதம். :rolleyes::lol:

 

 

அதெப்படி  ஐயா

தமிழனுக்குள் மட்டும் இத்தனை பிரிவினைகளும்

வரட்டுப்பிடிவாதங்களும்

கெடுபிடிகளும்

சுய கௌரவங்களும்.... :(  :(

அதுவும் ஒருவகை திமிர் ,,,,, :D

 

திமிர்களும்.... :o

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி  ஐயா

தமிழனுக்குள் மட்டும் இத்தனை பிரிவினைகளும்

வரட்டுப்பிடிவாதங்களும்

கெடுபிடிகளும்

சுய கௌரவங்களும்.... :(  :(

 

திமிர்களும்.... :o

 

இப்படி எழுதிபோட்டு சிலர் ஒற்றுமையை பற்றி பாடம் எடுப்பினம் அதுதான் மனக்கவலை.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் அது ஒருவகை திமிர் + மமதைதான் ஆனால் பாதகம் குறைந்தது. யாழ்ப்பாணத்தில் தாய்நாட்டுப் பற்று போல பாடசாலைப் பற்றும் அதிகம்தான். இது சில சந்தர்ப்பங்களில் வெறியாக மாறி கைகலப்பும் வரும். ஆனால் யாழ் களத்தில் சண்டை வராது.

 

மமதை சிங்களவனுக்கும் வர கைகலப்பு முற்றி சர்வதேசம் தலையிட ,......:D உலகத்தில முக்கால்வாசி பிரச்சனை இந்த பற்றால்தான்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல யாழில் யாழ் இந்துவில் நடந்தது நடப்பது எதுவும் தெரியாமல் கருத்துகள் குவிகின்றன .

 

மரணித்த ஒரு முன்னாள் போராளிக்கே நடந்ததை பார்த்தோம் தானே ,அதனுடன் ஒப்பிடும்  போது இது எம்மாத்திரம்.

 

யாழ்ப்பாண யாழ் இந்து பழைய மாணவர்களில் இரு பிரிவுகள் இருக்கு இவர்களுக்குள் எப்போதும் யார் அதிகாரத்தை கையில் எடுப்பது என்பதில் பிரச்சனை .

நான் கனடா கிளையின் செயலாளராக இருந்த இருவருடங்களும் மைதானத்தை பெருப்பிக்க சேர்த்த பணத்தை கூட அனுப்பமுடியாத நிலை (பழைய மாணவர் இரு பிரிவு அதைவிட அதிபரில் பலத்த குற்றசாட்டுகள் ).

இருந்தும் ஒரு புரிந்துணர்வுடன் வெளிநாட்டு கிளைகளுடன் வேலை செய்துகொண்டிருந்தார்கள் . 

 

இந்த வருடம் யாழ் இந்து 125 வருடநிறைவு .வருடம் முழுக்க பல நிகழ்வுகள் நடாத்த திட்டமுள்ளார்கள் .செப்டம்பரில் பெரும் விழா ஒன்று நடக்க ஏற்பாடு உலகின் பல பகுதியில் இருந்து பழைய மாணவர்கள் ஒன்று கூட இருக்கின்றார்கள் .

 

இதற்குள் இந்த பிரச்சனைகள் தொடங்கியிருக்கு ,உள்பிரச்சனைகள் தான் காரணம் என நம்புகின்றேன் ஆனால் எத்தனையோ பிரச்சனைகளை முகம் கொடுத்த யாழ் இந்துவிற்கு இவைகள் எல்லாம் ஒரு தூசு, இருந்தாலும் இவை எவரும் வேண்டாத விரும்பாத நிகழ்வுகள் தான் .

 

எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி யாழ் இந்து அன்னை தனக்கே உரிய மிடுக்குடன் நடைபோடுவாள் என்பது மட்டும் உறுதி .

 

அடுத்த மாதம் மரத்தான் ஓட்ட போட்டி அதற்கு அடுத்த மாதம் புது பவிலியன் திறப்புவிழா .இப்படி இன்னும் பல தொடரும் .

 

விக்டோரியா கல்லூரியிலும் நிர்வாகத்தில் (லண்டலின் இருந்து சென்றவரால்)  அட்டகாசம் காரணமாக வெளி நாடுகளில் இருந்து பணம் அனுப்பி செயற்பாடுகளை செய்ய முடியாத நிலை இருப்பதாக அறிந்தேன்.

  • தொடங்கியவர்

ஆசிரியரை தாக்கிய இரு மாணவர்களின் எதிர்காலம் குறித்து கல்விச் சமூகம் கவலை 

 

யாழ்நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் இருவரின் எதிர்காலம் குறித்து கல்விச் சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

 
 
கடந்த வாரம் இப்பாடசாலை மைதானத்தில், பாடசலை ஆசிரியர் ஒருவர் மீது உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் திடீர் தாக்குதலை நடத்தியிருந்தனர். இவ்வேளையில் மைதானத்தில் வேறு ஆசிரியர்கள், பல மாணவர்கள், பெற்றோரும் நின்றிருந்தனர்.
 
 
இது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் குடாநாட்டில் பெரும் பரபரப்பாகவும் பேசப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து அந்த இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டு யாழ். நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது இருவரையும் நீதிபதி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
 
 
பல கல்விமான்களை உருவாக்கி யாழ்ப்பாணத்தின் கல்வி வளர்ச்சியிலும் மாணவர்களின் ஒழுக்கத்திலும் பெரும் புகழ்பெற்றுள்ள இப்பாடசாலையில் இவ்வாறானதொரு ஒழுக்கக்கேடான சம்பவம் நடைபெற்று இதன்மூலம் இரு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அவர்களது பெற்றோரும், கல்விச் சமூகமும் கவலை தெரிவித்துள்ளனர். 
 
 
இந்தப் பாடசாலையில் பொறுப்பான பதவிகளிலிருந்து விலகிச் சென்ற சிலரதும் தற்போது இங்குள்ள சிலரதும் தூண்டுதலிலேயே இந்த மாணவர்கள், தவறாக வழி நடத்தப்பட்டு சிறைக்கூண்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்விச் சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளதுடன் மாணவர்களை தவறான திசையில் வழி நடத்த தொடர்ந்தும் சிலர் முயல்வதாகவும் கூறியுள்ளனர்.
 
 
கல்விப் பெறுபேறுகளின் அடிப்படையில் தொடர்ந்தும் முன்னிலையிலுள்ள ஆண்கள் பாடசாலையான இப்பாடசாலையில் புதிய  அதிபர் பொறுப்பேற்றதும் இவ்வாறான சம்பவங்களை உருவாக்கி ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்த அவர்கள் முனைந்துள்ளனர்.
 
இவர்களுக்கெதிரான தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு இனிவருங்காலங்களில் வேறு எந்த பாடசாலையிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருக்க முன்னுதாரணமாக அமைய வேண்டுமென யாழ். கல்விச் சமூகம் எதிர்பார்க்கின்றது.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.