Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

பயன் இல்லை என்று

பயந்து போதல் வேண்டாம்

அயர்ந்து படுத்தல் விட்டு

முயன்று பார்த்தல் நன்று

வியக்க வைக்கும் தலைவனவன்

விளக்கம் சில நாளில் வரும்

வழக்கம் என்று எண்ணாதே

ழுழக்கம் போன்று அது இருக்கும்

கலக்கம் வேண்டாம் தமிழா!

வன்னி மைந்தன் எழுதியதை கவனிக்கவில்லை. மன்னிக்கவும்

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

தமிழா

கல் தோன்றி

மண் தோன்றாக்

காலத்தில்

முன் தோன்றிய

மூத்த குடிமகனே..

அளவாகக் குடிமகனே..

குடிமகனே விகடகவி

குடி குடியைகெடுக்கும் என்பர்

உன் குடியை நீ காப்பாற்ற

இன்றே மறந்துவிடு திருமணத்தை

விடியலாய் எண்ணி நானும்

விமானத்தில் காலை வைத்தேன்

விட்டிலாய் விழுந்தேன் இங்கே

விமோசனம் எனக்கும் உண்டோ

மனம்நிறை கணவன் என்று

மகிழ்வுடன் வந்த என்னை

அறிவிலி என்று எள்ளி

ஆக்கினை பண்ணும் கோரம்

மதுவினை மணம் முடித்தான்

மங்கைகள் தேடி நின்றான்

அடிமையாய் வேலை செய்ய

அமர்த்தினான் என்னை இங்கே

புலத்திலே நிறைவே என்று

மனத்திலே கொண்ட எண்ணம்

தவறது உணர்ந்து விட்டேன்

தப்பிட வழியும் உண்டோ

உண்டோடி பெண்ணே விமோசனம் இவ்விதியிலிருந்து

உண்டேடி என்று சொல்வேன் என் மதியிலிருந்து

வெற்றி தோல்விகள் எங்கெங்கும் உலகம் வந்ததிலிருந்து

செப்பனிடு வாழ்கையை நீ சென்றதை மறந்து

மறந்து போக நினைக்கின்றேன்

மங்கை மனம் கனக்கிறதே

பறந்து செல்ல துடிக்கின்றேன்

பேதை மனம் பதைக்கிறதே

தூர தேசம் செல்ல எத்தணிக்கிறேன்

தூயவளின் இதயம் துடிக்கிறதே

பரலோகம் நுழைய முனைகின்றேன்

சொர்க்கமே நீ என்னருகில் வருவாயா ஒருகணம்

ஒருகணப் பார்வையில்

ஊறிய அன்பே..

மெய்யா..மாயமா..

இளமையின் வரம்பில்

நடந்திட நிழல்கள்

விழுமா..வாழுமா..

தனிமைக்குத் துணையாய்..

தேடிடும் காதல்..

முதுமை காணுமா.. மாறுமா..

காதல் என்பது..

இந்தக் காலத்தில்

மெய்யா.. பொய்யா..

ஒருகணப் பார்வையில்

ஊறிய அன்பே..

மெய்யா..மாயமா..

இளமையின் வரம்பில்

நடந்திட நிழல்கள்

விழுமா..வாழுமா..

தனிமைக்குத் துணையாய்..

தேடிடும் காதல்..

முதுமை காணுமா.. மாறுமா..

காதல் என்பது..

இந்தக் காலத்தில்

மெய்யா.. பொய்யா..

மானுடம் பொய் மக்களும் பொய்

காதல் மட்டும் காணுமெப்படி மெய்

கடவுள் காசாகும் காலமப்பா இது

காதலும் காமமாகும் தடுப்பது எது

பொய்யாக

வந்து

ஏனோ

பொய்யாக

பேசுகிறாய்...???

மெய்யான

என்

காதலதை

ஏன்

பொய்யாக

தூற்றுகிறாய்...???

என்

மனதில்

உன்

நினைவு....

உன்

மனதில்

யார்

நினைவு...???

சொல்லிடடி

பெண்ணே...

பெண்ணே..

நீ பேசாதிருந்து

அன்று கொன்றாய்..

மணத்தின் பின்..

பேசிப்பேசியே..

என்னைக் கொல்கிறாயே..

கொல்கிறாயே

கொல்கிறாயே

மகிந்தா

ஏனோ

கொல்கிறாயோ....???

எம் தமிழை

ஏனோ

வந்து

தினம் தோறும்

கொல்கிறாயோ...???

வானேறி

வந்து

எம்தன்

வாழ்விடங்கள்

அழிக்கிறாயே...

அகதியாக்கி

எம் தமிழை

ஏனோ தினம்

கலைக்கிறாயோ....???

ஆண்டாண்டாய்

நாம்

ஆண்ட

மண்ணை

அட பாவி

வந்து

பறிக்கிறியே...

உந்தன்

படை

கூட்டி வந்து

குந்த வேறு

வைக்கிறியே...

எம் தமிழை

விதைவையாக்கி

இன்று

வேறு

கலைக்கிறியே...

உனக்கே

இது

முறையோ....???

முறையோ எனக்கேட்டு

முறை தவறி

நடக்கும்..

சர்வதேசம்..

தலைபோகும் முன்னே

முடமான

யாழ்நாட்டை

காக்க வா...

இல்லை..

காக்குமெம்மவரை

பார்க்காமல் போ..

போ...போ...

தமிழா போ....

போர்களம்

நாடியே போ....

தேடியே

பகை

எம்மை

தாக்குறான்..

எங்கள்

திண்ணையில்

குண்டதை

வீசிறான்....

குந்தவே

இடமின்றி

கலைக்கிறான்....

எங்கள்

குடிகளை

வந்தவன்

பிய்க்கிறான்...

எம் தமிழ்

உயிர்களை

குடிக்கிறான்...

தெருவிலே

பிணங்களாய்

எறிகிறான்....

தெரு நாய்க்கு

உணவதாய்

கொடுக்கிறான்...

எத்தனை

கோரங்கள்

ஆடுறான்....

எம்

தமிழ்

என்னடா

செய்கிறான்....???

இத்தனையும்

கண்டேன்

இருக்கிறாய்...???

எழுந்தோடி

களமாடா

போடா....!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போடா என்ற சொன்னதற்கே கோபப்படுகிறாயே

பையன் என்பதால் தானே அப்படிச்சொன்னேன்

பதிலுக்கு நீயும் என்னை போடி என்று சொல்லியே

உரிமை கொண்டாடி உள்ளத்தினில் நெருங்காதே

நெருங்காதே அன்பே நெருங்காதே

நெருப்பாக நீயும் என்னை தீண்டாதே

நெஞ்சினில் வந்து உறங்காதே

நெஞ்சத்தை வருடிப்போகாதே

நெருங்காதே

பெண்ணே

நீ

நெருங்காதே....

நான் நீறு

புத்த

நெருப்பு

நெருங்காதே....

நெருங்கி

வந்து

என்னை

நீ

நெரிக்காதே....

நான்

தீண்டிவிடும்

அரவமடி

தீண்டாதே....

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

அவள்

போக்கிடமாய்

ஆக்கிடுவாள்

போகாதே...

ஆசை மொழி

பேசி

உன்னை

இழுத்திடுவாள்...

அம்போ

என்று

வீதியிலே

விட்டிடுவாள்....

காதல்

என்று

போலி

வேடம்

புண்டிடுவாள்...

உன்னை

கண்ணீரிலே

வாழும்படி

விட்டிடுவாள்...

நீ

காலம்

எல்லாம்

தேவதாசாய்

ஆகிடுவாய்...

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

அவள்

போக்கிடமாய்

ஆக்கிடுவாள்

போகாதே...

ஆசை மொழி

பேசி

உன்னை

இழுத்திடுவாள்...

அம்போ

என்று

வீதியிலே

விட்டிடுவாள்....

காதல்

என்று

போலி

வேடம்

புண்டிடுவாள்...

உன்னை

கண்ணீரிலே

வாழும்படி

விட்டிடுவாள்...

நீ

காலம்

எல்லாம்

தேவதாசாய்

ஆகிடுவாய்...

போகாதே

பெண்

பின்னால்

போகாதே....

தீண்டாதே தீண்டாதே

அவள் தீயானாலும்-நீ

தீண்டாதே என் அன்பே

பாம்பு தீண்டினால் விசம்

அவள் தீண்டினால் ரனம்

காதல் என்பது காட்டுத்தீ

அதற்கு நீயும் எரிதருவாகாதே B)

இறந்தேனே உன்னை பிரியும் போதெல்லாம் இறந்தேனே

துறந்தேனே யாரின் பாசமெலாம் உனக்காய் துறந்தேனே

பறந்தேனே உன் அன்பு வானில் நான் சிட்டாய் பறந்தேனே

விழுந்தேனே உன் அவநம்பிக்கை அம்பு பட்டு நான்விழுந்தேனே

காயங்கள் மனதெல்லாம் ரணங்களின் வேதனைகள் கல்லாய்

போனதுன் இதயம் கனவாய் போனது உன் அன்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் கவி படைக்க வந்திட்ட அன்பானவனுக்கு

அன்புடன் வரவேற்புக்களுடன் வடித்த கவி தனி அழகே

கவியின் முடிவுச்சொல்லில் இருந்தே ஆரம்பித்திட வேண்டும்

கவிதை அந்தாதியின் நிபந்தனை நிஜமாய் வடித்திட வேண்டும்

வேண்டும் வேண்டும்..

விலக்கவேண்டும்..

ஐயிரண்டு மாதங்கள்

ஈன்றெடுத்த அன்னைமனம்

நோகவைக்கும் பிள்ளைகுணம்

விலக்கவேண்டும்..

மனைவியவளிருக்க..பிறர்

மாதர் நாடும்..சில

ஆடவர் குணம் இன்றே

விலக்கவேண்டும்..

ஆடை விலக்கி-காளை

மனங்கெடுக்கும்..சில

மாதர்குணம் உடனே..

விலக்கவேண்டும்..

இன்சொல் பலவிருக்க

பிறர் இதயம் நொருக்கும்

வன்சொற்கள் பாவனையை

இக்கணமே விலக்கவேண்டும்..

வட்டியென்றும் குட்டியென்றும்

ஏழைவயிறடிக்கும்-பண

விற்பனையை ஒருநொடிக்குள்

விலக்கவேண்டும்..

உறவுஎன்ற பாலங்களை

உடைத்தெறியும் ஏற்றத்

தாழ்வுகளை இன்றே.

விலக்கவேண்டும்..

காதலென்ற வெள்ளைப்பூக்கள்

சேற்றிலிடும் பாதகரை

தேசம்விட்டு..உடனே..

விலக்கவேண்டும்..

பிஞ்சுகளின் நெஞ்சுகளில்

நஞ்சையிடும் வஞ்சகத்தை

செய்வோரை புவிவிட்டு

இன்றே விலக்கவேண்டும்..

ஆசைகளில் கோட்டைகட்டி

இராசலீலை நடத்துகின்ற

மன அலைபாய்ச்சல்

யாவற்றயும்..இந்நாளே..

விலக்கவேண்டும்..

எனக்குள்ளே இருந்துகொண்டு

சமயங்களில் கழுத்தறுக்கும்

அறியாமை அதனை

விலக்கவேண்டும்..

விலக்கவேண்டும் விலக்கவேண்டும்

அடிமை விலங்கை தகர்க்கவேண்டும்

விடுதலை பெற்று நம் இனத்தின்

அவலங்கள் நீங்கிடவேண்டும்

பால்மா இல்லாது அழும்-எம்

பச்சிழம் குழந்தகளின் அவலம்

பாரினில் எங்கு உண்டு-எம்

பாச உறவுகளின் சோகம் போல்

சோகம் போல்..

முகத்தை வைத்து..

விழிகளாலே..சுட்டெரித்து..

உண்ணாமல்..விட்டொளிந்து..

மாலையாக என் மங்கை..

போர்வைக்குள் போவாளே..

தொட்டால் சிணுங்குவதும்..விரல்

பட்டால் உறுமுவதும்..அன்பு

முத்தத்தில்..ஊடல் தொலைய..

பூப்பூக்கும் கூடலே..

கூடலே

வந்து

என்னில்

கூடுதே....

அன்பே

என்னில்

வந்த நேரம்

வந்து கூடுதே...

கண்கள்

வந்து

உன்னுருவை

காவுதே...

எந்தன்

நெஞ்சமது

உன் உருவை

தாங்குதே....

நித்தம்

உன்னை

கனவுயதாய்

காணுதே....

உன்னை

காணவில்லை

என்றால்

நெஞ்சம்

ஏங்குதே ஏன்...???

ஏங்குதே ஏன் அன்பே

ஏழை என் மனம்-இங்கு

ஏங்குதே கண்ணே

ஏனிந்த ஏக்கம்

ஏமாந்த என் வாழ்வில்

ஏன் இந்த மாற்றம்

ஏங்குவது ஏனென்று

எனைப்பார்த்துக் கேட்டதென்ன?

ஈங்கு இளவேணில் தரும்

இனிய கவி காண்கிலேனே....

வார்த்தை கோர்த்து

வரிகள் செதுக்கி

பாடல் செய்யும் புலவீரே!

அர்த்தமுள்ள ஆயிரம் கவி

அந்தாதியில் வரைகவே!

அ ஆ வரிகள்

அந்தாதியில் வரைகவே-என

ஆதங்கம் உந்தனதை

இனிய கவிதையாக

ஈந்த உந்தனுக்கு

உணர்வு அதிகம்-ஆதி

ஊக்கம்தனை நீயும்

என்னக்கருவாக்கி

ஏறிந்தாயே வசமாக

ஜயமில்லை உன் கவி

ஒளிக்கிறது வளமா

ஓசை நயத்துடன்

ஒளவைபோல யார்

அஃதே வரைவது

கவிதை இங்கே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.