Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈரோஸ் தலைவரைக் காப்பாற்ற பதவியைத் தூக்கி எறிவேன்: பசீர் சேகுதாவூத் ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எனது 35 வருடகால அரசியல் வரலாற்றில் நான்கண்ட மக்கள் தலைவன் என்றால் அது ஈரோஸ் இயக்கத்தின் தலைவன் பாலகுமாரராகும். இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காப்பாற்றப்பட்டது என்றால் இந்த ஈரோஸ் பசீரே தவிர, முஸ்லிம் காங்கிரஸின் பசீர் அல்ல என்று முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். 
 
basheer.jpg
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏராவூரில் மர்ஹூம் றூபி முஹைதீன் மாதிரிக்கிராமத்தை திறந்துவைத்த பின்னர் "இம்முறையும் பசீர் வெல்லுவாறு; அது எப்படியென்று மேடையில் சொல்லுவாரு" என்ற தலைப்புடன் இடப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். 
 
நாங்கள் முகாமிலே இருந்தவேளை எங்களை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எங்களின் பின்பக்கத்தில் தட்டியெழுப்பி விட்டு அந்த முகாமின் முற்றத்தை சுத்தம் செய்து, ஒரு பீங்கான் தட்டில் சோற்றை பிசைந்து தந்ததற்கு பின்னர் எங்களை உடற்பயிற்சி செய்யுமாறு பணிப்புரை வழங்கிய தலைவனே எனக்கு அரசியல் கற்றுத்தந்த ஈரோஸ் தலைவன் பாலகுமாராகும்.
 
அது மட்டுமல்லாமல் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணத்துக்கு பின்னரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை காப்பாற்றுவதற்கான வலுவையும் அறிவையும், ஞானத்தையும், புலனாய்வுத் திறனையும் எனக்கு தந்ததும் ஈரோஸ் தலைவன் பாலகுமாராகும்.
 
முஸ்லிமாகவும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருந்துகொண்டு ஈரோஸின் தலைவர் பாலகுமாரை விடுதலை செய்யக்கோரி கடிதம் எழுதியது சரிதானா என பலர் தன்னிடம் கேட்பது சம்பந்தமாகவே நான் பாலகுமாரைப் பற்றி இங்கு உரையாற்ற கடமைப்பட்டுள்ளேன்.
 
நான் இயக்கத்தில் இருக்கும்போது பாலகுமாரிடம் கற்றுக்கொண்ட அனுபவப்படிப்பு, அரசியல், ஆயுதம், வியூகம், புலனாய்வுத்துறை என்பனவே முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையையும் காப்பாற்ற எனக்கு உதவியது. முதன் முதலில் வன்னி முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பம் என்றால் ஈரோஸ் தலைவன் பாலகுமாரின் குடும்பமே.
 
இப்போதும் எனக்கு அரசியல் கற்றுத்தந்த தலைவன் பாலகுமார் உயிருடன் இருக்கின்றார் என்ற சந்தேகம் இருக்கின்றது. ஏனென்றால் கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் பாலகுமாரை கொண்டுவந்தால் வெல்ல முடியுமா என்ற கேள்வியினை பசில் ராஜபக்ஷவினால் கேற்கப்பட்டதாக அறியக்கிடைத்தது.
 
பஷில் ராஜபக்ஷ நினைப்பதுபோல தன்மானமிழந்த, இடம் மாறித்திரிகின்ற தலைவனாக நான் பாலகுமாரை பார்த்ததில்லை. பாலகுமார் மக்களுக்காக போராடுபவன். சுத்தமான அரசியல் செய்யபவன், தத்துவவாதி, நான்கண்ட தமிழ் தலைவர்களில் உன்னத தலைவன்.
 
என்னுடைய பார்வையில் சொல்லப்போனால், தந்தை செல்வாவை விடவும் பெரும் தலைவன். எனக்கு உயிரூட்டியவர், உணர்வூட்டியவரும் அவரேயாவார். முதன் முதலில் எனக்கு பாராளுமன்ற பதவியை ஈரோஸ் தந்திராவிட்டிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் என்னை கணக்கெடுத்தும் பார்த்திருக்காது.
 
நாங்கள் எல்லோரும் முஸ்லிம்கள். ஆகையால், எமது மார்க்கத்தில் மாற்றுமத்தினர் செய்த உதவிகளை மறக்கச்சொல்லி எந்த இடத்திலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா?ஆகையால் பாலகுமாரின் உயிருக்காக குரல் கொடுப்பது எனது தார்மீகப் பொறுப்பாகும்.
 
பாலகுமார் அண்ணனையும், அவருடைய மகன் சூரிய தீபனையும் என்னால் வெளியில் கொண்டுவர முடியுமாக இருந்தால் எனது பாராளுமன்ற பதவியைக் கூட தூக்கியெறிவதற்கு தயாராக உள்ளதாக மிக உணர்ச்சிவசப்பட்டவாராக பசீர் சேகுதாவூத் உரையாற்றினார்.
 
அவருடைய பிள்ளைகள் எனது பிள்ளைகளைப் போன்றவர்கள் என்றே நான் எப்போதும் நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவன். ஆகவே எமது முஸ்லிம் சமூகம் இவ்வாறு நாங்கள் செய்கின்றோம் என பெருமைப்பட வேண்டும். அதனை தமிழ் சமூகம் அங்கீகரிக்கவும் வேண்டும்.

- See more at: http://www.thuruvamnews.com/

 

  • கருத்துக்கள உறவுகள்
ரொம்ப நன்றி உள்ள மனிதர்போல இருக்கு....
இப்போதைய உலகில் இது தேவை இல்லாதது !
  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன்னை தோற்றுவித்த தலைவருக்கு விசுவாசமாக இருக்க விரும்புவது வரவேற்கத்தக்கது.

 

கிழக்கில் முஸ்லீம்களின் நிலையை உணர்ந்து வைச்சிருக்கிறார். தமிழ் மக்களின் தேர்தல் பகிஸ்கரிப்புக்களால்.. முஸ்லீம்கள்.. ஒரு குறிப்பிடத்தக்க சக்திகளாக அங்குள்ளதை ஏற்றுக் கொள்கிற நேர்மை அவசியம். அது இவரது பேச்சில் உள்ளது. வடக்குக் கிழக்கு இணைந்திருப்பதே இரண்டு சமூகங்களுக்கும் நல்லது என்பதையும் உணர்ந்திருக்கிறார்.

 

ஆனால்.. புலிகளுக்கு எதிராக செயற்பட்டும் இருக்கிறார். கருணாவின் இன்றைய தப்பிப்புக்கும் காரணமாக இருந்திருக்கிறார். அவற்றை தவிர்த்து தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து செயற்படுவது வடக்குக் கிழக்குக்கு நல்லது என்ற இவரின் கருத்து வரவேற்கத்தக்கது. நீண்ட கால நன்மைகளை கொணரக் கூடியது.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கருணாவின் நெருங்கிய நண்பரல்லவா??

 

ரணில் இவரை வைத்துத்தானே கருணாவைப் பிரித்து கொழும்பிற்கு இவருடனேயே கூட்டி வந்தார் ??

 

அப்படியிருக்க பாலக்குமாருக்கு இவர் இரக்கப்படுவது ஏனோ ?

இவர் கருணாவின் நெருங்கிய நண்பரல்லவா??

 

ரணில் இவரை வைத்துத்தானே கருணாவைப் பிரித்து கொழும்பிற்கு இவருடனேயே கூட்டி வந்தார் ??

 

அப்படியிருக்க பாலக்குமாருக்கு இவர் இரக்கப்படுவது ஏனோ ?

 

இல்லை . கருணாய் தப்பிக்க உதவியவன் அலிசாகிர் மௌலானா என நினைக்கிறேன்
  • கருத்துக்கள உறவுகள்
 
ஜனாதிபதி  தேர்தலுக்கு  முன்னர்  இப்படிக் கூறியிருந்தார் பசீர்:
 
இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!- பஷீர் சேகுதாவூத் புகழாரம்
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 12:54.08 AM GMT ]
baseer-seku.jpg
நாட்டு மக்களை பாதுகாப்பதில் விசேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது  நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கட்சியின் முடிவுக்கமைவாகவே தான் வெளியேறுவதாகவும்  முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பஷீர் சேகுதாவூத் நேற்று முன்தினம் அரசிலிருந்து வெளியேறினார்.

தாம் வெளியேறியமைக்கான காரணங்களை ஜனாதிபதி மகிந்தவுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

தமது கட்சி எடுத்த தீர்மானத்திற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், முஸ்லிம் மக்களிடையே தமது கட்சி துரோகம் இழைக்கிறது என்ற நிலைப்பாட்டை இல்லாமல் செய்யவும் அதிகாரத்தில் பேராசை கொண்டவர்கள் அல்ல என்பதை தெரிவிக்கவுமே தாம் இராஜினாமாச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்ட அதிருப்தியோ அல்லது நம்பிக்கையின்மை காரணமாகவோ தாம் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் கூறியுள்ள அவர், நாட்டுப்பற்றுள்ள பிரஜையாக அனைத்து மக்களிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ஆற்றிய சேவையை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரசார நடவடிக்கையெதிலும் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஓர் அமைச்சராக இருந்து ஜனாதிபதிக்காக வாக்கு சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டமையைிட்டு வருந்துவதை தாழ்மையாக அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்ட தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பஷீச் சேகுதாவூத் ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

 


http://www.tamilwin.com/show-RUmszCQUKaes6.html

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து செயற்படுவது வடக்குக் கிழக்குக்கு நல்லது என்ற இவரின் கருத்து வரவேற்கத்தக்கது. நீண்ட கால நன்மைகளை கொணரக் கூடியது.  :icon_idea:

 

ஒரு தமிழ்க் குடும்பத்தில் அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தால் அந்த நால்வருக்கும் தனித்தனியாகக் காணி கொடுக்க வசதி இல்லாத போதும் தாங்கள் வசிக்கும் ஒரே ஒரு காணியை நான்காகப் பிரித்து ஒவ்வொரு காணிக்கும் கிணறு வெட்டி வீடும் கட்டிக் கொடுப்பது தமிழர்கள் வழமை.  :)
 
பத்துப் பிள்ளைகள் இருந்தால் பக்கத்திலுள்ள காணிக்காரரை பொருள் பலத்தாலோ, காடைத்தனப் பலத்தாலோ துரத்திவிட்டு தமது பிள்ளைகளைக் குடியேற்றி விடுவது முசுலீம்கள் வழமை. பக்கத்திலுள்ள காணிக்கார் முசுலீமாக இருந்தால் அந்த நகரத்தில் இருக்கும் வேற்று இனத்தவரின் காணிகளைத் தேடிச் செல்வதும் அவர்கள் வழமை.  :o
 
வேலியில் ஓடும் ஓண்னைப் பிடித்து மடியில் கட்டுவானேன். :blink:  
 
இலங்கையில் இன்றுவரை முசுலீம்களோடு இணைந்து இருந்ததால் தமிழர்கள் கண்ட நன்மை என்ன? முசுலீம்கள் அடைந்துள்ள பேறுகளை யதார்த்தம் கூறிநிற்கிறது. :(  

இணைய  போராளிகள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை சும்மா  பொங்கிட்டு  இருக்காமல என்றாவது  குரல்  கொடுத்தோமா  நாம் என்று  :(

 

இல்லை . கருணாய் தப்பிக்க உதவியவன் அலிசாகிர் மௌலானா என நினைக்கிறேன்

 

ஆம் அலிசாகிர் மெளலானா தான். அலிசாகிரின் மனைவியும் கருணாவின் மனைவியும் நண்பிகளாக இருந்தனர் என்று அறிய முடிகின்றது.

கருணாவும் ..மெளலானாவும்  சிறு வயது  பள்ளி  தோழர்கள்  என்றுதான்  கேள்வி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.