Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழ் அகதி ஒருவர் லண்டன் "Heathrow" விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Navaranjan-260215-200-seithy.jpg

இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதி ஒருவர் லண்டன் "Heathrow" விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 27 வயது நிரம்பிய முன்னாள் போராளியான நவரத்னராசா நவரஞ்சன்(உயர்ச்சி) என்பவரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவராவார். இவரை இலங்கைக்கு நாடுகடத்தப்போவதாக இன்று பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

   

மேலே குறிப்பிடப்பட்ட நபர் "எயிற்றர்" எனப்படும் முத்த போராளியின் மகனாவர். இவருடைய குடும்பம் இலங்கை இராணுவத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவரின் மூன்று உடன்பிறப்புகள் முள்ளிவாய்காலில் இராணுவச் சுற்றிவளைப்பிற்குள் காணாமற் போயுள்ளனர். இது தவிர இவரின் தாயார் சுகையினம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த வேளை 2006ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் கொல்லப்பட்டார். தந்தையாரான நவரத்னராசா (எயிற்றர்) அவர்கள் முள்ளிவாய்காலில் சைனைட் அருந்தி வீரச்சாவடைந்தார்.

 

உயர்ச்சி என்றழைக்கப்பட்ட நவரத்னராசா நவரஞ்சன் 2009ம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்தபோது வவுனியா யோசெப் முகாம், பூசா முகாம், ஆறாம் மாடி மற்றும் CRP எனப்படும் விசாரணைப்பிரிவு (கொழும்பு) போன்ற சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். வதைமுகாம்களில் அவர் அனுபவித்த சித்திரவதைகளாலும், குடும்ப உறுப்பினர்களின் தொடர்ச்சியான இழப்புக்களாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்துள்ளார். தொடர்ந்தும் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வந்தார்.

 

இதன் காரணமாக அங்கிருந்து தப்பித்து, எப்படியோ பிரித்தானியா சென்றடைந்த அவர் தனது முதலாவது நேர்முகத்தேர்வை (Interview) "Home Office"க்கு வழங்கிய பின்னர் இரண்டாவது நேர்முகத்தேர்வுக்காக அங்கு சென்ற வேளை, அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 

இவரை நாடுகடத்தினால் இவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது நிச்சயம். எனவே பிரித்தானிய அரசானது குறித்த இந்நபர் தொடர்பாகவும் இலங்கை அகதிகள் தொடர்பாகவும் சரியான முறையில் விசாரணையை மேற்கொண்டு, உண்மைகளைத் தெரிந்துகொண்டு, இவர்களின் இருப்பிற்கான நடவடிக்கைகளை மனிதாபிமான முறையில் மேற்கொள்ள வேண்டும். மேலும் பிரித்தானியா வாழ் தமிழ் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் இவ்விடையத்தை கருத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக ஆவன செய்யுமாறு வேண்டி நிற்கின்றோம்.

 

http://seithy.com/breifNews.php?newsID=127308&category=TamilNews&language=tamil

மிகவும் வேதனையான விடயம்... சட்ட உதவிகள் வழங்கக்கூடிய பல தமிழ் அமைப்புகள் லண்டனில் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் விடுவிக்கப்பட்டதாக முகநூலில் எழுதியுள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை செய்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இன்ரவியு போறவர்களை பிடிப்பதும்.. சிலரை அனுப்புவதும்.. பலரை பின்னர் விடுவித்து.. விசாக்களும் வழங்கியுள்ளனர்.

 

இவரின் சட்டத்தரணி நினைத்தால்.. பெயிலில் வெளிய கொண்டு வரலாம்.

 

எனினும் தமிழ் ஓலையில் இருந்து இலவச சட்ட ஆலோசணை அமைப்பு ஒன்றின் தகவலை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்..

 

அவசரத்துக்கு தொடர்பு கொண்டால்.. அவர்கள் உதவி செய்யக் கூடும்.

 

Tamil welfare association Newham (UK) - TWAN (Manor park. London. E12 5AF)

TP: 0208 478 0577

 

இவர்கள் அகதிகள்  விவகாரங்களை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இலவசமாக அரசு உதவிப்பணத்தோடு வழங்கி வருவதாக அறியக் கிடைக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுவிக்கப்படவில்லை என்றொரு செய்தியும் வருகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

வேதனையான விடயம் என்னவெனில், இலவச சட்ட உதவி இருந்த போது, நம் சட்டவாளர்கள், தமது தவறுகளை, ஆங்கில நிறுவனத்திற்கு தள்ளி விட்டு நிலைமையை காப்பாத்தி விடுவார்கள்.

இப்போது, எல்லாவற்றுக்கும், அகதி பணம் கொடுத்தாக வேண்டிய நிலையில் தரமான சட்ட உதவி இல்லா அவலம் தான் இந்த நிலைமைகளுக்கு காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.