Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அந்தநாள் ஞாபகங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்தநாள் ஞாபகங்கள்

சில பாடல்களைக் கேட்டால் கடந்துபோன காலங்களின் இனிமையான நினைவுகள் மனதில் நிழலாடும். எப்போதுமே கடந்து சென்ற காலங்கள் இனிமையானவைதான் மனதைப் பொறுத்த வரைக்கும். அந்த வகையில் பழைய நினைவுகளை மீட்டிச் செல்லும் பாடல்களை இங்கே இணைக்கப் போகிறேன். நீங்களும் இணைக்கலாம். :D ஒவ்வொரு பாடலுக்கும் உங்களது உள்ளங்களில் கிளர்ந்தெழும் எண்ணக்குவியல்களையும் எழுத மறக்க வேண்டாம்.

1) சனம் தேரி கசம்

இந்தப்பாடலைக் கேட்டால் ஊரில் இருந்த ஞாபகம் எனக்கு வரும். :unsure: நேற்றுத்தான் இதன் காணொளியை தற்செயலாகப் பார்த்தேன். அதிலிருந்து பலதடவைகள் பார்த்து / கேட்டு ரசித்துவிட்டேன்.

ஆர்.டி. பர்மனின் இசையில் கிஷோர் குமாரின் ஆளுமைமிக்க குரல் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும். குறிப்பாக அவர் சரணம் பாடும்போது அதில் உள்ள நேர்த்தி மிகவும் அலாதியானது. பாடலின் இசையோ ஆகா ரகம்.

ஆரம்ப இசை முடிந்து பல்லவி ஆரம்பிக்கும் 0:19 நேரக்கணக்கில் பேஸ் வேறு தளத்திற்குச் சென்று சஞ்சரிப்பது மிகவும் இனிமையாக இருக்கிறது.

சரணம் ஒரு தெளிந்த நீரோடை போல வளைந்தும் நெளிந்தும் அதே நேரம் நெருடல் இல்லாமலும் போகின்றது. இப்படியான பாடல்கள் இனியும் வருமா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆராதனா அருமையான படம் ,70களில் வந்தது. இப்படத்தில் எல்லாப் பாடல்களும் சிறப்பானவை.
 
ஆஷா போஷ்லே , மகமட் ரபி பாடிய பாடல். இசை ஆர். டி. பர்மன்.
 
ராஜேஷ்கண்ணா, ஷர்மிளா தாகுர். நடிப்பு.
 
இதில் ஷர்மிளா தாகுர் அணிந்திருக்கும் சேலை மாதிரி  ஒரு சேலையும் அந்த விடியோ கெசட்டும் கலியாண எழுத்துப் பரிசாக 83ல் எனது மனைவிக்கு வாங்கிவந்து கொடுத்தேன். அவ்வளவுக்கு அந்தப் பாடலும், பின்னனிக் காட்சிகளும் இசையும் ஒருவிதமான மயக்கத்தையே எனக்குக் கொடுத்திருந்தது.

 

நீங்களும் கேட்டு அந்த சேலையையும் பாருங்கள்...! :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆராதனா அருமையான படம் ,70களில் வந்தது. இப்படத்தில் எல்லாப் பாடல்களும் சிறப்பானவை.

 

ஆஷா போஷ்லே , மகமட் ரபி பாடிய பாடல். இசை ஆர். டி. பர்மன்.

 

ராஜேஷ்கண்ணா, ஷர்மிளா தாகுர். நடிப்பு.

 

இதில் ஷர்மிளா தாகுர் அணிந்திருக்கும் சேலை மாதிரி  ஒரு சேலையும் அந்த விடியோ கெசட்டும் கலியாண எழுத்துப் பரிசாக 83ல் எனது மனைவிக்கு வாங்கிவந்து கொடுத்தேன். அவ்வளவுக்கு அந்தப் பாடலும், பின்னனிக் காட்சிகளும் இசையும் ஒருவிதமான மயக்கத்தையே எனக்குக் கொடுத்திருந்தது.

 

நீங்களும் கேட்டு அந்த சேலையையும் பாருங்கள்...! :):D

அருமையான பாடல் சுவி அண்ணா.. இதே பாடலை தமிழிலும் பிரதியெடுத்திருந்தார்கள். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அபிமான் படப் பாடல்கள் இல்லையா?இருந்தால் தரவிறக்கி விடுங்களே ஐயா!லிடோ தியேட்டாரில் மனம் மகிழ்ந்து பின் நெகிழ்ந்து பார்த்து ரசித்த படம்.

  • கருத்துக்கள உறவுகள்

அபிமான்,
அமிதாப் பச்சன் - ஜெயபாதுரி....ஸ்சுவீட் கப்பிள்...!
 
நடியா கினாரே ...சுப்பர் சோங்க்ஸ்...
 
யாழிவன் இது சம்பந்தமாய் உங்கள் நினைவு அனுபவங்களை பதிய வேண்டும்... அதுதான் கொன்டிசன்... இல்லையா இசை...!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபிமான் படப் பாடல்கள் இல்லையா?இருந்தால் தரவிறக்கி விடுங்களே ஐயா!லிடோ தியேட்டாரில் மனம் மகிழ்ந்து பின் நெகிழ்ந்து பார்த்து ரசித்த படம்.

நீங்கள் கேட்ட பாடல்கள் எல்லாம் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ளன யாழிவன்.. உங்களது எண்ணச்சிதறல்களையும் எடுத்துவிடுங்கோ.. :D

யாழிவன் இது சம்பந்தமாய் உங்கள் நினைவு அனுபவங்களை பதிய வேண்டும்... அதுதான் கொன்டிசன்... இல்லையா இசை...!!!

அதே.. அதே. சுவி அண்ணா.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2) ஜானா ஓ மெரி ஜானா..

இந்தப்பாடலையும் அண்மையில்தான் கண்டுபிடித்தேன். பல காலமாக மனதுக்குள் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கும் பாடல். இதில் இருக்கும் ஒருவித துள்ளல் நடை எனக்கு மிகவும் பிடித்தது. :wub:

ஆர்.டி. பர்மன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.. லைலா எனும்போது அவர் குரலில் காட்டும் அசைவு பிரமாதம்.. அந்த அசைவை கமலும் தனது நடனத்தில் அட்டகாசமாக வெளிப்படுத்துவார். :D

இந்தப்பாடலைக் கேட்கும்போது ஊரில் மழைநாள் ஒன்றில் பட்டம் ஏற்ற முயற்சித்தது ஞாபகத்துக்கு வரும்.. :o

ஆராதனா-ரூப்பதெரா  மஸ்தானா பாடல் முடிய என்ன நடக்கும் என்று கேட்க அந்த நேரம் "அது "அறியாமல் முழுசிய காலம் .ராஜேஷ் கண்ணா ஒரே படத்துடன் உச்சிக்கு போனார் .

அபிமான் -லண்டனால் வந்த நண்பனுடன் காரில் போய் ஸ்டவுட் அடித்துவிட்டு லிடோவில் பார்த்தபடம் .கொழும்பில் அதற்கு முதல் ஒரு ஐந்து தடவைகள் பார்த்திருப்பேன் .பாட்டுகள் சொல்லி வேலையில்லை 

 

சனம் தேரி கசம் -இது லண்டனில் பார்த்தது .கமல் மவுத் ஒர்கனுடன் பஸ் எல்லாம் ஏறி விழுந்த சீன் கண்ணுக்குள் நிற்குது .

 

எனது நினைவுகள் பின்னர் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டுத் தனமான காதல்.வீட்டுக்கு போய் வாறபடியால் நிறையவே பாட்டுக்களை எமதாக்கி கொள்வோம்.

 

கீழே உள்ள பாடல் வெளிநாடு போவதென்று கொழும்புக்கு அடிக்கடி போவேன்.

 

அந்த நேரங்களில் அடிக்கடி பாடும் பாடல்.எமக்காக தான் போட்ட மாதிரி இருக்கும்.

 

இப்போது கூட சொல்லி சிரிப்போம்.

 

 

சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்

படம்--காற்றினிலே வரும் கீதம்

பாடியவர்---ஜெயசந்திரன்.

 

https://www.youtube.com/watch?v=7omh_arDvrE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருட்டுத் தனமான காதல்.வீட்டுக்கு போய் வாறபடியால் நிறையவே பாட்டுக்களை எமதாக்கி கொள்வோம்.

 

கீழே உள்ள பாடல் வெளிநாடு போவதென்று கொழும்புக்கு அடிக்கடி போவேன்.

 

அந்த நேரங்களில் அடிக்கடி பாடும் பாடல்.எமக்காக தான் போட்ட மாதிரி இருக்கும்.

 

இப்போது கூட சொல்லி சிரிப்போம்.

 

 

சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்

படம்--காற்றினிலே வரும் கீதம்

பாடியவர்---ஜெயசந்திரன்.

 

https://www.youtube.com/watch?v=7omh_arDvrE

இந்தப்படத்தில் எல்லாமே ஹிட்டான பாடல்கள்தான்.. ஒரு வானவில் போலே.. கண்டேன் எங்கும்.. இப்படி..

இந்தப் பாடலும் எனக்கு மிகப்பிடித்த பாடல்தான்.. ஜெயச்சந்திரனின் மந்திரக்குரல் மனதை மயக்கும். மேலும் நம்மாளு வேறை இசையமைத்திருக்கிறார்.. சொல்லவா வேணும்.. :D

குறிப்பாக 2:30 இல் ஆரம்பிக்கும் அந்தப் புல்லாங்குழல் / வயலின் இசை இதயத்தை சின்னதா ஒரு சுண்டு சுண்டுவதுபோல் இருக்கும்.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3) Baazigar

இந்தப்பாடலைக் கேட்டால் தனிக்காட்டு ராஜாவாக சிங்கையில் வலம் வந்தது ஞாபகத்துக்கு வரும்.. இந்தப் பாடலை விசிடியில் போட்டு பல தடவை தேய்த்திருப்பேன்.. :D எல்லாத்துக்கும் கனவுக்கன்னி கஜோல் குடுத்த நெருக்கடிதான் காரணம்.. :wub:

யாழ் இந்துவில் படித்துக் கொண்டிருந்த காலம். வீட்டுக்கருகில் நல்லூர் திருவிழா நேரம் சைக்கிள் பார்க் நடத்துபவர்கள் இந்தப் பாடலை அடிக்கடி போடுவார்கள். 
 
சக மாணவிகளின் பார்வைப் பரிமாற்றங்களில் கனவுகளில் மிதந்த காலம். அவர்கள் தேவதைகளாகத் தெரிந்த காலம்.
 
பாடலைக் கேட்டால் நல்லூர்த்திருவிழா, பருவகாலம், பருவகாலம் தந்த கனவுலகம், இனிமையான உணர்வுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வரும். கூடவே திரும்பவும் அந்தக்காலத்துக்குப் போகமுடியாது என்ற கவலையும் வரும்.
 
Epidiascope என்ற சினிமா புறொஜெக்டர் மாதிரியான உபகரணம் ஒன்றைச் செய்து அதில் அழகான இரவு நேர நிலாக்காட்சி ஒன்றை சுவரில் விழுத்தி வீட்டு லைட் எல்லாத்தையும் அணைத்து விட்டு பின்ணனியில் இந்தப் பாடலைப் போட்டு வீட்டில் இருந்தவர்களை மகிழ்வித்த ஞாபகமும் இருக்கிறது.
 
 
 
 
https://www.youtube.com/watch?v=qjnorxdJ2J8
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக் கூட பருவம். கன்னியின் கடைக் கண் பார்வை கிடைத்து விட்டாலே, மனம் ஆனந்த வெள்ளத்தில் நீந்தும். school bus இல் எங்களை ஏற்ற மாட்டார்கள், ஆனால் எங்கள் சைக்கிள் அதனுடன் போட்டி போடும். பல இடங்களில் செயினும் கழறும். அந்த கால கட்டத்தில் வந்ததுதான் ஒரு தலை ராகம். இதில் வரும் ஒவ்வொரு பாடலும் ஏதோ எங்களுக்காக எழுதப்பட்டதாக நினைத்தோம். அப்படி மனதில் பதிந்ததுதான் இந்த பாடல் வரிகள்.

........ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும், அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் அனுபவப் பகிர்வுகளுக்கு.. ஈசன் மற்றும் அகஸ்தியன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பள்ளிக் கூட பருவம். கன்னியின் கடைக் கண் பார்வை கிடைத்து விட்டாலே, மனம் ஆனந்த வெள்ளத்தில் நீந்தும். school bus இல் எங்களை ஏற்ற மாட்டார்கள், ஆனால் எங்கள் சைக்கிள் அதனுடன் போட்டி போடும். பல இடங்களில் செயினும் கழறும். அந்த கால கட்டத்தில் வந்ததுதான் ஒரு தலை ராகம். இதில் வரும் ஒவ்வொரு பாடலும் ஏதோ எங்களுக்காக எழுதப்பட்டதாக நினைத்தோம். அப்படி மனதில் பதிந்ததுதான் இந்த பாடல் வரிகள்.

........ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும், அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் .....

 

இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். தங்களை பாடசாலை பேரூந்தில்  ஏற்ற மறுப்பு தெரிவித்ததன் காரணத்தை யானும் அறிந்து கொள்ளலாமா?  :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குமாரசாமி

பாடசாலை பஸ் என்றால் அதில் பெண் பிள்ளைகள் மட்டும்தான் போகலாம். பெயரை மாற்றி வைத்திருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=b7JIfXxw6OU

 

1966´ம் ஆண்டு வெளிவந்த, "செம்மீன்" என்ற மலையாளப் படத்தில்... ஜேசுதாஸ் பாடிய பாடல்.
இதன் அர்த்தங்களை... தமிழர்களாலும் இலகுவில்  புரிந்து கொள்ள முடியும்.
அக்காலத்தில்.... இப்பாடல் ஒலிக்காத, தேநீர் கடைகளே இல்லை எனலாம்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=9lswDCuLwh8

 

சேட்டன், சேச்சிகளின்.... கோரஸ் பாடல்.

 

 

"தென்னமரத் தோப்புக்குள்ளே"~எஸ்.செல்லத்துரை & லில்லி மயில்வாகனம்!~பாடல் வரிகள்;இறைதாசன்(அப்துல் ஹமீது) இசையமைப்பு;அப்சராஸ் எம்.மோகன்ராஜ்!

Edited by BLUE BIRD

 

 

ஈழத்து கவிஞர் சில்லையூர் செல்வராஜனின் வரிகளில்

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.