Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

த.தே.கூ. தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு பாராட்டு - முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு அறிக்கை ஒன்றை இன்று  வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழுவின் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.முஹைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

'கிழக்கு மகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இருந்துவந்த இழுபறி நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சமயோசிதமாக அரசியல் பட்டறிவு சாணக்கியத்துடன் எடுத்த முடிவு, கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் இன ஐக்கியத்தை வலுப்படுத்த உதவியுள்ளது.

 

இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும். கிழக்கு மாகாணசபை ஆட்சியமைப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இன முறுகல் ஏற்பட்டு விடுமோ என அனைவரும் அஞ்சிக்கொண்டிருந்த சமயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்  எடுத்த துணிச்சலும் அரசியல் சாணக்கியமும் மிக்கதான இறுதிநேர முடிவு இரு இனங்களுக்கிடையிலும் நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.

 

பேரினவாதிகளோடு ஒட்டி உறவாடும் முன்னாள் ஆயுததாரிகளான முன்னாள் மாகாண ஆட்சியாளர்கள் 'ஆதரவு தருகின்றோம் வாருங்கள் ஆட்சியமைப்போம்' என்று சம்பந்தனின் கால்களில் விழுந்தபோதும் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகவில்லை.

 

கொள்கையற்ற அத்தகைய குழப்பவாதிகளை நிராகரித்து விட்டு கொள்கைப்பிடிப்புடனும் சிறுபான்மை இனப் பற்றுடனும் உறுதியாக இருந்து முன்னுதாரண வழிகாட்டலைச் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு பாராட்டுகிறது. அதேவேளை, இன்னும் நூறாண்டுகள் போனாலும் இந்த இணக்கப்பாட்டு அரசியலை எதிர்காலத்திலும் தமிழ,; முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்றும் எமது செயற்குழு கேட்டுக்கொள்கின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 http://www.tamilmirror.lk/141061#sthash.Q9F4ApB5.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தேர்தல் முடிந்த சமயத்தில் மு.கா இன ஐக்கியம் பற்றி யோசித்திருக்கவில்லை.. மகிந்தவுடன் பதவி ஐக்கியம் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது.. :o:D

ஆனால் தேர்தல் முடிந்த சமயத்தில் மு.கா இன ஐக்கியம் பற்றி யோசித்திருக்கவில்லை.. மகிந்தவுடன் பதவி ஐக்கியம் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது.. :o:D

 

எதிர் காலத்திலும் அப்படித்தான் இருந்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறையும் இளிச்ச வாயராய் இருங்க. நாங்க பொட்டும் வைச்சு, காதில பூவும் சொருகி அழகு பார்போம், என்று சொல்கிறார். :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நூறாண்டு சென்றாலும் சம்பந்தன் ஐயாவைப் போலவே ஒரு தலைவர் முஸ்லீம்களுக்குக் கிடைக்கவேண்டும்

ஒரு கொஞ்சமாவது இப்போதுதான் உருப்படியான அரசியல் நம்மவர்கள் செய்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுடன் ஆட்சிப் பொறுப்பில் பங்கெடுத்து கிழக்குத் தமிழர்களைச் சற்று ஆறுதலடையச் செய்திருக்கிறது.  ஆரோக்கியமானவோர் அரசியற் சூழல் உருவாகியிருப்பதை இது உணர்த்துகிறது.  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் சாதுரியமான காய்நகர்த்தலால் மத்திய அரசைப் போலவே கிழக்கிலும் ஒரு தேசிய மாகாண அரசு உருவாகியிருக்கிறது.  முஸ்லீம் காங்கிரஸைக் காட்டிலும் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் ஆட்சியை அமைக்கும் அரசியல் ராஜதந்திரத்தில் வெற்றி பெறமுடியவில்லை.  ஆனால் தன்னைவிட அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் பேரம்பேசி தற்போது முஸ்லீம் காங்கிரஸ் தனது முதலமைச்சரின் தலைமையில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடித்துவிட்டது. இருந்தாலும் கிழக்கில் பெரும்பான்மைப் பலமிருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இயலாமையால் ஆட்சியில் பங்கெடுக்க முடியாது போன கிழக்குத் தமிழர்களின் ஏக்கப்பெருமூச்சை அனுதாபக் கண்கொண்டு நோக்கி முஸ்லீம் காங்கிரஸ்  தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனது மந்திரி சபையில் உள்வாங்கி தமிழர்களின் ஆதங்கத்துக்குப் பரிகாரம் செய்திருக்கிறது.  இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் நாட்டு நலனையும் மேம்படுத்தக்கூடிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸினது> குறிப்பாக அதன் தலைவர் ரவூப் ஹக்கீமினது இந்த ராஜதந்திர நடவடிக்கையானது போற்றுதலுக்குரியது.  

உன்னதமான விடுதலைப் போராட்டத்திலிருந்து திசைதிரும்பி தங்களது மனிதத்துக்குப் புறம்பான கொடூரச் செயல்களால் கிழக்குத் தமிழர்களைத் தம் இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த கயவர்கள் சிலர் இன்றும் கிழக்கு மாகாண சபையில் மக்கள் பிரதிநிதிகளாக உலவுகின்றார்கள். பல படுகொலைகளைச் செய்த இந்த இரக்கமற்ற கொடியவர்கள் வெகு விரைவில் கம்பியெண்ண வேண்டியவர்கள்.  இவர்களது குட்டையைக் குழப்பும் முயற்சிக்கு விலைபோகாது ஐயா சம்பந்தர் கிழக்கு மாகாண சபையின் மந்திரி சபையில் இடம்பிடித்து சரியான பாதையில் மக்களை வழிநடத்த முற்பட்டிருப்பதனால் அவரின் கரத்தைப் பலப்படுத்த வேண்டியது கிழக்குத் தமிழர்களின் பெரும் கடமையாகும்.  சமூக விரோதிகளுடன் கூட்டுச்சேர்ந்து அவர்களை அரசியலில் வளர்த்தெடுத்து விடாமல் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு கெதியில் பொது வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்தி விடவேண்டும். அப்போதுதான் கிழக்கில் ஆரோக்கியமான அரசியல் தளைத்தோங்க முடியும்.  

நிலைமையின் விபரீதத்தையுணர்ந்து முஸ்லீம் காங்கிரஸ் தலைமை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக்கொண்டு கிழக்கின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முற்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும்.  மூவின மக்களும் இணைந்து வாழும் கிழக்கில் இனமத அடிப்படையிலான குழுக்களின் குரோத> அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு> ஒரே தேசிய நீரோட்டத்தில் மக்கள் இணைந்து செல்ல வழியேற்படுத்த வேண்டியதே தற்போதைய தேவையாக இருக்கிறது. அதற்கான உகந்த சூழ்நிலையும் தற்போது  உருவாகியிருக்கிறது.

ஒரு பச்சை கரு .(புள்ளி கை வசம் இல்லை )

ஆஹா கரு உங்களுக்கு ஒரு சல்யூட் + நன்றி

முஸ்லீம் காங்கிரசும் எதிர்காலத்தில் நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற இணக்கப்பாட்டுடன் செயல்பட்டால், எமது இலட்சிய பாதையினை இலகுவில் எட்ட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் காங்கிரசும் எதிர்காலத்தில் நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற இணக்கப்பாட்டுடன் செயல்பட்டால், எமது இலட்சிய பாதையினை இலகுவில் எட்ட முடியும்.

2007 இல் இணைந்த தராக்கி மூன்று பதிவுகள்தான் போட்டிருக்கிறார். நாள் பார்த்துதான் போடுவீங்களா? :D

முஸ்லீம் காங்கிரசும் எதிர்காலத்தில் நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற இணக்கப்பாட்டுடன் செயல்பட்டால், எமது இலட்சிய பாதையினை இலகுவில் எட்ட முடியும்.

 

அவர்களுக்கு முதலமைச்சர் பதவி தேவை.. அதற்காக ஆடும் அவர்களை இலட்சியம் அது இது என்று பெரிய வார்த்தைகளுடன் சம்பந்தப்படுத்தாதீர்கள்! முதலமைச்சர் பதவி கேட்ட கூட்டமைப்பு அமைச்சர் பதவிக்கு சோரம்போனதுதான் சம்பந்தரின் அரசியல் சாணக்கியம்!!

அவர்களுக்கு முதலமைச்சர் பதவி தேவை.. அதற்காக ஆடும் அவர்களை இலட்சியம் அது இது என்று பெரிய வார்த்தைகளுடன் சம்பந்தப்படுத்தாதீர்கள்! முதலமைச்சர் பதவி கேட்ட கூட்டமைப்பு அமைச்சர் பதவிக்கு சோரம்போனதுதான் சம்பந்தரின் அரசியல் சாணக்கியம்!!

 
கூட்டமைப்பிற்கு முதலமைச்சர் பதவி தேவை.. அதற்காக ஆடும் அவர்களை இலட்சியம் அது இது என்று பெரிய வார்த்தைகளுடன் சம்பந்தப்படுத்தாதீர்கள்! முதலமைச்சர் பதவி கேட்ட கூட்டமைப்பு அமைச்சர் பதவிக்கு சோரம்போனதுதான் எமது அரசியல் சாணக்கியம்!!
 
இவ்வாறு இஸ்லாமிய சகோதரர்களும் கருதலாம்தானே!!!
 
(சிவப்பில் உள்ளவை மாற்றம் செய்யப்பட்டவை).
  • தொடங்கியவர்
திமுக நிறுவனர் அண்ணாவின் புகழ்பெற்ற உதாரணங்களில் ஒன்று:
 
"வெறும் கரண்டியை பிடித்திருப்பவர் அதை எப்படிவேண்டுமானாலும் ஆட்டி அசைத்து ஆவேசம் காட்டலாம். ஆனால் தன் கைக்கரண்டிக்குள் சீனியோ பருப்போ வைத்திருப்பவர் அப்படியெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கைக்கரண்டியை விரும்பியபடி ஆட்டி அசைத்து ஆவேசமெல்லாம் காட்டிவிட முடியாது".
 
காரணம் தன் கைக்கரண்டியில் இருக்கும் சீனியையும், பருப்பையும் கொட்டாமல் இருக்கவேண்டும் என்கிற கவலையுடனான பொறுப்புணர்வு. எனவே பருப்புக்கரண்டியை பிடித்திருப்பவர் தன் கைக்கரண்டியை கவனமாகத்தான் அசைக்க வேண்டும். அசைக்கவும் முடியும்.
 
தொலைவில் இருப்பவருக்கு இந்த சூட்சுமம் தெரிவதில்லை. வெறும் கரண்டிகளின் வெற்று ஆட்டம் அவர்களுக்கு வீரம் மிக்கதாகவும், பருப்புக்கரண்டிகளின் பொறுப்புணர்வு பயந்தாங்கொள்ளித்தனமாகவும் தோன்றும். அது பார்ப்பவருக்கு ஏற்படும் தோற்ற மயக்கமே தவிர, பருப்புக்கரண்டிகளின் போதாமையல்ல.
பொறுப்பில் இருப்பவர்களும், தம் செயல்களின் விளைவுகளுக்கான முழு பொறுப்பு ஏற்பவர்களும் வாய்வீரம் காட்டமாட்டார்கள். அவர்களின் சிந்தனை, சொல், செயல் எல்லாமே, பொறுமையுடனும், பொறுப்புடனும் இருக்கும். வெறும் கரண்டிகளின் வீராவேசத்தை மட்டுமே பார்த்துப் பழகி வளர்ந்த தலைமுறைக்கு வெறும் கராண்டி எது, பருப்புக்கரண்டி எது என்று பாகுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை.
 
அது அவர்களின் குற்றமல்ல. எது வெறும் கரண்டி? எது பருப்புக்கரண்டி என்று பிரித்துப்பார்க்கும் பயிற்சியை அவர்களுக்கு அளிக்கத்தவறிய பருப்புக்கரண்டிகளின் பொறுப்பு தவறியமையே முதன்மைக் காரணம்

 

முகநூலில் ரசித்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.