Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தேசிய அரசாங்கம் இன்று உதயம்! ஐ.தே.கவும்-ஸ்ரீல.சு.கவும் இணைகின்றன

Featured Replies

ranil%20maithiri%2088f.jpg
 
இலங்கையில் இன்று புதிய தேசிய அரசாங்கம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று நடந்த இரகசிய சந்திப்பிலேயே புதிய தேசிய அரசாங்கத்தை அமைக்க இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
 
புதிய தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி 15 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களையும் 15 பிரதி அமைச்சுக்களையும் பெறும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் 29 அமைச்சர்களைக் கொண்ட தற்போதைய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு 44 அமைச்சர்கள் பதவியேற்பர். அத்துடன் 15 பிரதி அமைச்சர்களும் பொறுப்பேற்கவுள்ளனர். மேலும் 10 இராஜாங்க அமைச்சுப் பதவிகளை சுதந்திரக் கட்சிக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
எனினும் இது குறித்த இறுதி முடிவு இன்று காலை நடக்கும் கூட்டத்திலேயே எட்டப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அமைச்சுப் பதவிகளுக்கான பெயர்ப் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டிசில்வா, ஜோன் செனவிரத்ன, அநுர பிரியதர்சன யாப்பா ஆகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணித் தலைவர்களின் பெயர்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. புதிய தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறும் எனவும் கூறப்பட்டது.
 
 
 
 
 
 
 

அப்ப அந்த நூறு நாட்கள் கல்சாவா? 

அப்ப அந்த நூறு நாட்கள் கல்சாவா?

எந்த 100 நாட்கள்?

  • தொடங்கியவர்

பௌஸி, யாப்பா, எஸ்.பி. உள்ளிட்ட 26 பேர் அமைச்சர்களாக நியமனம்

 

11-CABINET-MINISTERS-FROM-SLFP.jpg

 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்களான  ஏ.எச்.எம்.பௌஸி, எஸ்.பி.திசாநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், பீலிக்ஸ் பெரேரா, மஹிந்த யாப்பா, ரெஜினோல்ட் குரே மற்றும் மஹிந்த அமரவீர உள்ளிட்ட 26 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்களாக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 

11 பேர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் 5 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 

http://virakesari.lk/articles/2015/03/22/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-26-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

 

  • கருத்துக்கள உறவுகள்

http://100days.lk/

ஏப்ரல் 20 உடன் ஜனாதிபதி ஆட்சிமுறை முடிவுக்கு வந்துவிடும். :rolleyes:

  • தொடங்கியவர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 அமைச்சர்களில் ஐவர் இராஜாங்க அமைச்சர்கள் எனவும், 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
 
01. ஏ.எச்.எம்.பெளசி - அனர்த்த முகாமைத்துவம்
 
02. எஸ்.பி.நவீன் - தொழில் மற்றும் தொழில் உறவுகள்
 
03. பியசேன கமகே - திட்ட முகாமைததுவ திறன் அபிவிருத்தி
 
04. சரத் அமுனுகம - ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி
 
05. எஸ்.பி.திஸநாயக்க - கிராமிய பொருளாதார அபிவிருத்தி
 
06. ஜனக பண்டார தென்னக்கோன் - உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
 
07. பீலிக்ஸ் பெரேரா - விசேட திட்டங்கள்
 
08. மஹிந்த யாப்பா - நாடாளுமன்ற அலுவல்கள்
 
09. றெஜினோல்ட் கூரே - சிவில் விமானப் போக்குவரத்து
 
10. விஜிதமுனி சொய்சா - நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவம்
 
11. மஹிந்த அமரவீர - கடற்றொழில் மற்றும் நீரியல் வளம்
 
ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
 
ராஜாங்க அமைச்சர்களாக,
 
1. பவித்திரா வன்னியாராச்சி - சுற்றுச் சூழல்
 
02. ஜீவன் குமாரதுங்க -தொழில் மற்றும் தொழில் உறவுகள்
 
03. மஹிந்த சமரசிங்க - நிதி
 
04. சி.பி. ரட்நாயக்க - பொது நிர்வாகம்
 
05. டிலான் பெரேரா - வீடமைப்பு மற்றும் சமுர்த்தி
 
ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.
 
பிரதி அமைச்சர்களாக,
 
01. திஸ்ஸ கரலியத்த
02. தயாஸ்ரீத திசேரா
03. ரஞ்சித் சியம்பலாபிட்டிய
04. லக்ஷ்மன் செனவிரத்ன
05. லக்ஷ்மன் யாப்பா
06. லலித் திஸாநாயக்க
07. ஜெகத் புஷ்பகுமார
08. லசந்த அழகியவன்ன
09. சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே
10. ஷாந்த பண்டார
 
ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர். -
 
 
 
  • தொடங்கியவர்

cabinet%205665f.jpg

எந்த வீட்டில இழவு விளுந்தாலும் என்களுத்தில மாலை விளவேணு என்று நினைக்கும் இந்த கூட்டம் எந்த கட்சி ஆட்சிக்கு வன்தாலும் அமைச்சராகும்.

இதுகலுக்கெல்கலாம் ஒட்டு போடும் உரிமையை கொண்ட நாடு எப்படி விளங்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்த நூறு நாட்கள் கல்சாவா? 

 

நூறாவது அமைச்சராக யார் தெரிவு செய்யப்படலாம் என்பதே இப்போதைய கேள்வி.

 

தமிழ் கட்சிகளும் இவர்களுடன் இணைந்து யுத்தத்தால் சீரழிந்த நாட்டை முதலில் கட்டிஎழுப்ப வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிக்கு நோகக் கூடாது என்ற சுமந்திர.. மாத்தையாவக் காணேல்ல.

 

சிறீலங்காவை சிங்கப்பூராக கட்டி எழுப்பிறது இருக்கட்டும்.. தமிழ் சனத்தின் காணி ஆக்கிரமிப்பை முதலில நிறுத்துங்கள். சிவில் நிர்வாகம் என்பதை வடக்குக் கிழக்கில் அமுல்படுத்தி.. இராணுவ நிர்வாகத்தை.. இருப்பை முற்றாக அகற்றி முதலில்.. இலங்கையை நெருக்கடி கால நிலைக்கு அப்பால்.. சட்டரீதியிலும்.. பொதுசன மதிப்பீட்டு ரீதிலும் கொண்டு வர முயலுங்கள். :icon_idea::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இவா.. பவித்திரா வன்னியாராச்சி.. ரெம்ப பவ்வியமா நடந்துக்குவாவோ... வாரவை எல்லாரும் மந்திரியாக்கி பார்க்கினம். :lol::D

 

pavithra-in-obeisance.jpg

 

z_p06-Development-01.jpg

 

news%5C2008%5C3%5Cimages%5Cnewsmahinda_p

 

 

 

 

 

  • தொடங்கியவர்
புதிய தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள் - மஹிந்த ராஜபக்ச
 
Mahinda%20i%20am_CI.jpg
 
 
புதிய தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
 
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தேசிய அரசாங்கம் பற்றி தாம் பேசிய போது, அதனை சிலர் எள்ளி நகையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
 
 
மாத்தறை தெலிஜ்ஜிவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்னும் கொஞ்ச காலத்தில் தெரிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
 
  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது – விமல் வீரவன்ச

 

wimal%20n_CI.jpg



 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதன் மூலம், வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர்.

பத்தரமுல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ன செய்துள்ளார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதியாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


ரணில் விக்ரமசிங்க, ஆர்.சம்பந்தன், அனுரகுமார திஸாநாயக்க, சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம் போன்றவர்களே ஜனாதிபதி மைத்திரிபாலவை ஆட்சி பீடத்தில் ஏற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவிற்கு வலுவான அரசாங்கமொன்றை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


நம்பிக்கையில்லா தீர்மானங்களின் மூலம் ஆட்சி கவிழ்க்க முடியாத அரசாங்கமொன்றை ரணிலுக்கு  அமைத்துக் கொடுப்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117887/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்சிகளும் இவர்களுடன் இணைந்து யுத்தத்தால் சீரழிந்த நாட்டை முதலில் கட்டிஎழுப்ப வேண்டும் .

 

அடுத்தது அது தான் அர்ஜுன் அண்ணை

கூட்டமைப்பிலிருந்தும் நாட்டைக் கட்டி எழுப்பச்  சிலர் அரசுடன் இணைந்து கொள்வார்கள்

 

  • தொடங்கியவர்

article_1427080979-Cartoon2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.