Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு நாயாறில் சிங்கள மீனவர் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாகாணசபையில் தீர்மானம்

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கடற்பகுதியில் தொழில் செய்வதற்கு பெற்றுக்கொண்ட தற்காலிக அனுமதிகளுக்கு அப்பால் தென்னிலங்கை மீனவர்கள் யாருடைய அனுமதியுமின்றி அதிகமாகப் படகுகளைக் கொண்டு வந்து தொழில் செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கை மீறி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு வடக்கு மாகாணசபையில் நேற்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வடக்கு மாகாணசபையின் 27 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது மேற்படி விடயம் தொடர்பான பிரேரணை வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்மொழியப்பட்டது..

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு கடல்பகுதியில் 2011ஆம் ஆண்டு பருவகாலத் தொழிலுக்காக வந்து தங்கியிருந்த சிங்கள மீனவர்களுக்கு படையினர் மற்றும் அரசியல்வாதிகள் சிலரின் கடுமையான அழுத்தங்களால் 72 மீனவர்களுக்கு மட்டும் தற்காலிக அனுமதி ஒரு ஆண்டுக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்று அதற்கு மேலதிகமாக மீனவர்கள் வந்து தங்கியிருந்து கடற்றொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்னதாக கொக்கிளாய் பகுதியிலும் இதேபோன்று பருவகாலத் தொழிலுக்காக வந்து தங்கியிருந்த  சிங்கள மீனவர்கள் பின்னர் அந்த இடம் தமக்குச் சொந்தமானது எனக் கூறிக்கொண்டு அங்கேயே தங்கி விட்டனர்

இதே போன்றதொரு நிலைமை நாயாறு பகுதியிலும் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்களே அதிகம்.நாயாறு பகுதியில் வந்து தங்கியிருந்த மீனவர்களில் 72 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டபோதும் அங்கே 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள்.தெற்கில் ஆட்சி மாறியபோதும் இவ்விடயத்தில் எந்த சாதகமான மாற்றமும் ஏற்படவில்லை. எனவே இவ்விடயத்தில் முதலமைச்சர் அவர்கள் கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.ன்று ரவிகரன் குறிப்பிட்டார். பிரேரணையை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் வழிமொழிய சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

http://www.worldtamils.com/?p=152779

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எல்லை தாண்டி (சொந்த ஊரை விட்டு அடுத்தவன் ஊருக்கு வந்து).. குடியிருந்து.. மீன்பிடிக்கும்.. சிங்களவனை யார் சுடுவது..?!

 

அணில் விளக்கம் தருவாரா..?! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அணில் கலாவிடம் கேட்கச்சொல்லும்...கல ஒரு கண் சிமிட்டலுடன் அலுவலை முடித்து விடுவா...அப்புறம் என்ன இன்னம் 100 சிங்களர் கூடுதாலக நிப்பினம்..

எங்கட கிருமிகள் சம்பந்தனும் சுமந்திரனும் சொல்வார்கள் இதுவும் ஒரு இன ஒற்றுமைதான் என்று .....

  • கருத்துக்கள உறவுகள்

வாலி சாரை, இந்தப் பக்கம் காணவில்லை. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சிங்கள மீனவர்களின் அடாவடித்தனம் தடுத்து நிறுத்தப்படவேண்டும். சிங்கள மீனவர்கள் வந்து மீன்பிடிக்கிறார்கள் என்பதற்காக தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறல்களை அனுமதிக்க முடியாது! இது இலங்கை என்ற நாட்டுக்குட்பட்ட விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சிங்கள மீனவர்களின் அடாவடித்தனம் தடுத்து நிறுத்தப்படவேண்டும். சிங்கள மீனவர்கள் வந்து மீன்பிடிக்கிறார்கள் என்பதற்காக தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறல்களை அனுமதிக்க முடியாது! இது இலங்கை என்ற நாட்டுக்குட்பட்ட விடயம்.

எல்லை தாண்டிச் செய்யும் அடாவடித்தனத்தை தமிழக மக்கள் நிறுத்த வேண்டும்!

இரண்டிற்கும் கருத்திற்கும் வித்தியாசம் உள்ளது வாலி சார்

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் சுடணும்  என்பதற்கு வக்காலத்து வாங்கியவர்களைக்காணோம்....

தமிழனுக்கும் தமிழனுக்கும் பிரச்சினை என்றால் தான் வருவார்கள்

எண்ணெய் ஊற்ற............... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று யாழ் மீனவர் வலையை கிளிநொச்சியில் சகதமிழ் மீனவர் அறுத்தெறிந்ததாய் செய்தி வந்த்தே?

பாரம்பரிய உரிமையில் வெளியாட்கள் கைவைப்பது தப்புத்தான். அது தமிழக, சிங்கள, யாழ் யாராயினும்.

வாலிசார் உங்க லோஜிக் எங்கேயோ இடிக்கிற மாரித்தான் தெரியுது :)

  • கருத்துக்கள உறவுகள்

கோசான், இலங்கையில் உள்ள எந்த ஒரு மீனவனும் இலங்கையின் கடலெல்லைக்குள் மீன்பிடிக்கலாம் என சொல்லப்படுகிறது. வட கடலில் சிங்கள மீனவர் மீன்பிடிப்பது சட்டப்படி குற்றமல்ல. ஆனால் இருதரப்பு உடன்பாடுகளுக்கமைய எல்லைகளை வரையறுத்துக் கொள்ளலாம். இந்திய மீனவர்கள இலங்கையின் எல்லைக்குள் அடாத்தாக வந்து மீன்பிடிப்பவர்கள், மற்றும் செம்மர விவகாரம் அனுமதியின்றி ஆந்திராவில் மட்டுமல்ல தமிழகம் கர்நாடகாவில் கூட சட்டத்துக்குப் புறம்பானது. தமிழகத்தில் இவர்கள் வெட்டினாலே அது தண்டனைக்குரிய குற்றம். அதைவிட இவர்கள் ஆந்திராவில் புகுந்து வெட்டியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கு கடற்பரப்பில்... சிங்களவர்களை குடியேற்றி மீன்பிடிக்க விடுவது போல.. மேற்கு.. தெற்குக் கடற்பரப்பில் தமிழர்கள் குடியேறி...மீன்பிடிக்க சொறிலங்காவுக்கு வக்காளத்து வாங்குபவர்கள் ஏற்பாடு செய்யலாமே..?!

 

தமிழக.. தமிழீழ கடல் எல்லை தென் பகுதி கடற்பரப்பு போன்று பரந்த ஒன்றல்ல. குறுகிய கடற்பரப்பு. மேலும் கச்சதீவை அண்டி மீன்பிடிக்க இரண்டு பகுதிக்கும் அனுமதி உண்டு.

 

சீன மீனவர்கள் வந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்கும் சிங்கள இனவாதிகள்.. தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதில் மட்டும்..?!

 

ஆந்திர தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் எத்தனையோ வகையில் கொள்ளை அடிக்கிறார்கள்... மலை மாவட்டங்களை சார்ந்த... தமிழர்கள் ஆந்திர கொன்ராக் காரர்களால்.. கூலிகளாய் அமர்த்தப்பட்டு.. சட்டவிரோத நடவடிக்கையில் அவர்களை ஈடுபடுத்துவது.. யார் தப்பு...! அப்பாவி கூலித் தொழிலாளர்களின் தப்பல்ல. தமிழகத்தை விட்டு தொழிலாளர்கள்.. ஆந்திராவில் தொழில் செய்ய முடியாது என்றால்.. தமிழகத்தில் உள்ள அத்தனை ஆந்திரனும், கன்னடனும்.. சிங்களவனும்.. மலையாளியும்.. ஹிந்தியனும்.. அதனைவிட்டு வெளியேறுவதுதான் முறை. அதன் பின் தமிழன் எல்லை தாண்ட வேண்டிய தேவையே வராது. வசதி எப்படி..?! :icon_idea:

 

கிளிநொச்சியில்.. மரக்கடத்தல் உச்சமாம். இதே புலிகள் இருந்த காலத்தில்.... இந்த புல்லுருவிகள்.. புடுங்கி வீசப்பட்டிருந்தார்கள். இன்று.. மீண்டும்.. சிங்களக் காடைகளோடு சேர்ந்து காடழிக்கிறார்கள்.

 

ஆக மொத்தத்தில்.. சிங்கள ஆளும் வர்க்கமும்.. ஹிந்திய ஆளும் வர்க்கமும் வேறு வேறல்ல. தமிழர்களை மட்டும் வேறுபடுத்தும் தமிழர்களே.. தான் தமிழர்களின் அழிவை பரிசகிக்கின்றனர். :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.