Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் மரக்கடத்தல் அதிகரிப்பு

Featured Replies

tree_1.jpg

 

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரக்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த ஒரு  வாரத்தில் மாத்திரம் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
 
இவ்வாறு சட்டவிரோதமாக  வெட்டப்படும் மரக்குற்றிகள் வெளிமாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்படுகின்றன.
 
பெறுமதிமிக்க முதிரை, பாலை உள்ளிட்ட மரங்களே சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 
 
  • தொடங்கியவர்

2 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்பு 

 

article_1428586703-unnamed.jpg

 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை வியாழக்கிழமை(09) கைப்பற்றியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் கூறினர்.

 

பொலிஸார் துரத்துவதைக் கண்டதும் டிப்பர் வாகனத்தை விட்டுவிட்டு வாகன சாரதி தப்பி ஓடிவிட்டார்;. முல்லைத்தீவு கோட்டை கட்டிய குளம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரமின்றி வெட்டி வரப்பட்ட முதிரை மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. வாகனமும், மரக்குற்றிகளும் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளதுடன், தப்பியோடிய சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். -

 

http://www.tamilmirror.lk/143805#sthash.GIC3ATUE.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

மர மண்டைகள்....
தமிழினத்தில், இருக்கும் வரை....
மரக் கடத்தல், நடந்து கொண்டே..... இருக்கும்.
பழி, தமிழன் மீது.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு 5 / 6 வருசத்துக்கு முதல் உந்த மரக்கடத்தல் மண்கடத்தல் ஒன்றுமேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 5 / 6 வருசத்துக்கு முதல் உந்த மரக்கடத்தல் மண்கடத்தல் ஒன்றுமேயில்லை.

 

இதற்குள்  நின்று... லாபம் பார்ப்பவர்கள்....

சிறிலாங்கா முஸ்லிம். சிங்கள ஆமி.

 

ஒரு 5 / 6 வருசத்துக்கு முதல் உந்த மரக்கடத்தல் மண்கடத்தல் ஒன்றுமேயில்லை.

தனிய ஆள் கடத்தல் தான் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிய ஆள் கடத்தல் தான் . :icon_mrgreen:

 

குற்றம் செய்தவர்களை பூமாலை போட்டு வரவேற்றிருக்க வேண்டும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தனிய ஆள் கடத்தல் தான் . :icon_mrgreen:

 

ஆள்கடத்தல் செய்வதில்.....

புளொட் என்ற இயக்கம், முதன்மையானது,

அதில்....  நீங்களும், உங்களை அறியாமல்... சென்று, தப்பிப் பிழைத்து...... வந்தீர்கள் :rolleyes:

 

(உங்களது அனுபவப் பதிவுகளை, வாசித்ததில் அறிந்து கொள்ள முடிந்தது) :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முழத்துக்கு முழம் ஆமி பொலிசு புலனாய்வுக்காரன் முற்று முழுதாக ஆயுதத்துடன் நிற்கிறான்.

 

இந்த லட்சணத்தில் அங்கிருந்து சிறு துரும்பாவது நகர்த்த முடியுமா?

 

சிங்கள தேசத்துக்கு 10 லொறி போகும் போது இடை இடை ஒரு லொறியை இப்படி பிடிக்கிறம் என்று காட்ட வேண்டியது தான்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

43 முதிரை மரக்குற்றிகளுடன் 4பேர் கைது

 

article_1429438458-adam.JPG

 

ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளை இரண்டு டிப்பர் வாகனங்களில் சட்ட விரோதமாக கொண்டு சென்ற நால்வரை ஞாயிற்றுக்கிழமை (19) காலை கைது செய்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து இரண்டு டிப்பர் வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர். அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணதிலக்கவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இம் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு டிப்பர் வாகனங்களில் மடுவில் இருந்து கிளிநொச்சிக்கு கொண்டுசெல்லப்படவிருந்த 43  முதிரை மரக்குற்றிகளை பள்ளமடு பகுதியில் வைத்து பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்;. இரண்டு டிப்பர் வாகனங்களிலும் முதிரை மரக்குற்றிகள் வைக்கப்பட்டு அதற்கு மேல் கல், மண் என்பன இடப்பட்டு கொண்டு செல்லப்பட்டபோதே பொலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர். இதன் போது இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவரையும் அதன் உரிமையாளர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 43 முதிரை மரக்குற்றிகளும் இரண்டு டிப்பர் வாகனங்களும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

article_1429438471-adam1.JPG

 

article_1429438483-adam2.JPG

 

 

http://www.tamilmirror.lk/144259#sthash.LKYQlTfD.dpuf

 

maram%20kadattal%20g5878893.jpg

http://www.malarum.com/article/tam/2015/04/19/9669/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.html

  • கருத்துக்கள உறவுகள்

தனிய ஆள் கடத்தல் தான் . :icon_mrgreen:

அது ஆண்மை இல்லாதவர்கள் வாழ்ந்த பகுதிகளில்.
செய்தி கிளிநொச்சி பற்றியது 
தலைப்பை பார்க்கவில்லைபோல். 
 
புலி செய்வதைத்தான் சொல்லும் 
சொல்லிட்டுதான் செய்யும்.
 
ஆமியின் கக்குசுக்குள் நின்று கழுவிறது 
அப்பாவிகளை கடத்துறது 
அதுகளை 
ஆரம்பத்திலேயே 
ஊரைவிட்டு அனுப்பியாச்சு. 
 
நாயாக பிறந்தால் 
குரைக்கவேண்டும் 
என்பது 
படைப்பின் பராபாலன் 
அதை மனிதர்களால் தடுக்க முடியாது.
ஒருவித மிருக வதை அல்லவா ?? 

முழத்துக்கு முழம் ஆமி பொலிசு புலனாய்வுக்காரன் முற்று முழுதாக ஆயுதத்துடன் நிற்கிறான்.

 

இந்த லட்சணத்தில் அங்கிருந்து சிறு துரும்பாவது நகர்த்த முடியுமா?

 

சிங்கள தேசத்துக்கு 10 லொறி போகும் போது இடை இடை ஒரு லொறியை இப்படி பிடிக்கிறம் என்று காட்ட வேண்டியது தான்

இந்த பிடிச்ச குத்திகளும் அங்குதான் போக போகிறது ....

  • தொடங்கியவர்

விடுவிக்கப்பட்ட இடங்களில் இருந்து மரக்கடத்தல்கள் தொடர்கின்றன 

 

article_1429506181-a.jpg

 

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்குப் பகுதியிலுள்ள காணிகளிலுள்ள பயன்தரு மரங்கள், இரவு வேளைகளில் சூறையாடப்பட்டு வருவதாக  மீளக்குடியேறத் தயாராகும் மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர்களிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் கூறினர். பகல் நேரத்தில் காணிகளுக்குள் விறகு பொறுக்கச் செல்வதாகக் கூறிச் செல்லும் நபர்கள், மரங்களை அடையாளப்படுத்தி இரவு வேளையில் வந்து தறித்துச் செல்கின்றனர். வேம்பு, புளி, பலா மரம், மா மரம் ஆகிய மரங்களே இவ்வாறு தறித்துச் செல்லப்படுகின்றன. விடுவிக்கப்பட்ட இடங்களில் இருந்த வீடுகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், மரங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளது. அதனையும் இவர்கள் தறிந்து செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் கூறினர்.

 

article_1429506189-b.jpg

 

http://www.tamilmirror.lk/144299#sthash.M84ia7NS.dpuf

  • 1 month later...
  • தொடங்கியவர்
4 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்பு
 
article_1434028049-paraoorthi.jpg
 
கிளிநொச்சி தர்மபுரம் வீதியில் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளுடன் தப்பித்துச் செல்ல முற்பட்ட பாரவூர்தியொன்றை புதன்கிழமை (10) மாலை கைப்பற்றியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
 
பாரவூர்தி சாரதியும், அதன் உதவியாளரும் வாகனத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.  இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தர்மபுரம் பகுதியில் வீதிப் போக்குவரத்துக் கடமையிலிருந்த பொலிஸார் பாரவூர்தியை மறித்து சோதனையிட முற்பட்டபோது, பாரவூர்தி நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து, பாரவூர்தியைக் துரத்திச் சென்ற பொலிஸார் பரந்தன் - பூநகரி வீதியில் வைத்து பொலிஸார் பாரவூர்தியை மறித்தனர். பாரவூர்தியின் சாரதியும், உதவியாளரும் அதிலிருந்து இறங்கி தப்பி ஓடினர். முதிரை மரங்களுடன் பாரவூர்தியை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற பொலிஸார், வாகன உரிமையாளர் தொடர்பான விபரங்களை மோட்டார் திணைக்களத்தினூடாகப் பெற்றனர்.  தொடர்ந்து மேலதி விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தனிய ஆள் கடத்தல் தான் . :icon_mrgreen:

 

ஆள்கடத்தல் செய்வதில்.....

புளொட் என்ற இயக்கம், முதன்மையானது,

அதில்....  நீங்களும், உங்களை அறியாமல்... சென்று, தப்பிப் பிழைத்து...... வந்தீர்கள் :rolleyes:

 

(உங்களது அனுபவப் பதிவுகளை, வாசித்ததில் அறிந்து கொள்ள முடிந்தது) :lol:

 

பொல்லுக்கொடுத்து அடிவாங்குகிறது என்பதற்குச் சிறந்த உதாரணம். slam.gif
  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் எல்லா குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதற்குக் காரணம்.. வினைத்திறனற்ற சிறீலங்கா சிங்கள காவல்துறையின் இருப்பும்.. சிங்கள முஸ்லீம் அரசியல்வாதிகளின்.. இராணுவத்தின்.. ஆக்கிரமிப்புமே தான். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.