Jump to content

பாடசாலைக்காதல் - அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பரே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரியும் இடத்திலாவது இருவரும் மனம் திறப்பார்கள் என்று நினைத்தேன் . ஏமாற்றி விட்டீர்கள் .

அது சரி , என்ன ஒரு அதிர்ச்சிக்கு தயாராகும்படி முன் எச்சரித்து விட்டீர்கள் . எப்பொழுது நீங்கள் மூவரும் மீண்டும்

சந்தித்தீர்கள் ?

திரைப்படங்களில் வரும் Climax மாதிரி காத்திருக்க வேண்டியது தான் .

ஒவ்வொருவரும் அந்த நாள் ஞாபக கதைகளை அவிழ்க்க போயினம் . :wub:  இனி யாழில் கொண்டாட்டம் தான் போங்க :D :D

 

நன்றி  சகோதரி...

 

 

எல்லோருக்கும் இருக்கும் ஒரு பருவம் இது

இதைத்தாண்டித்தான் எல்லோரும் வந்திருப்பார்கள்

எல்லோரும் எழுதணும் என்பதே வேண்டுகோள்..

 

திரைப்படங்களில் இவ்வாறு மூவருக்குமான ஒரு மீள் சந்திப்பு வந்திருக்கா எனத்தெரியவில்லை

(இத்தனைக்கும் நான் திரைப்படப்பிரியன். அநேகமாக எல்லாப்படங்களையும் பார்ப்பவன்)

 

 

நன்றி சகோதரி

வருகைக்கும் கருத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, அந்தப் பெண் தான் இப்ப உங்கள் மனைவியா?????  :D

 

இல்லை

அவர் எனது மைத்துணியின் மகள்..

நான் சித்தப்பா முறை அவருக்கு...

இனிக்கதையை  முடிக்கணும்போல...

தேவையில்லாத பக்கம் கதை ஓடப்போகுது... :o  :o  :o

விசுகண்ணா உங்கள் காதல் அனுபவங்களும்

Link to comment
Share on other sites

இல்லை

அவர் எனது மைத்துணியின் மகள்..

நான் சித்தப்பா முறை அவருக்கு...

இனிக்கதையை  முடிக்கணும்போல...

தேவையில்லாத பக்கம் கதை ஓடப்போகுது... :o  :o  :o

ம்ம்.... உண்மை, உண்மை :lol: கெதியாய் எழுதி முடியுங்கோ அடுத்த கேள்வி வர முன்னர் :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள் உறவுகளே....

 

இறுதி அத்தியாயத்துக்கு வரும் முன்

இதை தற்பொழுது எழுத தூண்டியது எது என்பதை எழுதிவிடுகின்றேன்...

காலத்தின் கோலமோ என்னவோ

3 பேரும் பிரான்சில் தான் வந்து இறங்கினோம்...

 

இன்று எனது மூத்தமகனும்

அவனது மூத்தமகனும் எங்களைப்போல இணைபிரிய நண்பர்கள்

நானும் அவனும் பேசிக்கொள்வோம்

நம்ம தொடர்ச்சி என....

 

அண்மையில் ஒரு கல்யாணத்தரகருடன் பேசிக்கொண்டிருந்தேன்

அவர்  என்னிடம் உங்க இடத்து பெண்ணின் குறிப்பு ஒன்று என்னிடம் வந்துள்ளது

நல்ல மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள் என்றார்

சரி யாரு பெண் என்று நான் கேட்டதற்கு இன்னாரது மகள் என்றார்

(அவருக்கும் தெரியும் நாங்கள் ஒரே வகுப்பு மாணவர்கள் என்று)

ஆம்

அவளின் மகளே தான்...

பாருங்கள்

காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது

அது எவ்வாறு புள்ளி வைத்து நகர்கிறது

எவ்வாறு எங்கெல்லாம் எம்மை ஆட்கொள்கிறது... 

 

இனி சந்திப்பின் இறுதிப்பாகம் வரும்..

நன்றி  :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையும் அதன் கிளைமாக்சும் நல்லாத்தான் போகுது
இன்னுமொரு கதாசிரியர் யாழில் உருவாகிவிட்டார் :D

வாழ்த்துக்கள் விசுகு அண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனும் அவளும் விலகத்தொடங்கினார்கள்

எந்தவித தகவல்களும் பரிமாறப்படவில்லை

என்னால் அதற்கு மேல் எதுவும் செய்யமுடியவில்லை...

எங்கள் மூவரின் தலைகளும் மறையும்வரை  திரும்பிப்பார்ப்பதும்

கை அசைப்பதுமாக பிரியமுடியாமல் விடைபெற்றோம்...

கடைசிப்பிரிவு

அதன் பின்னர் நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் சேரவே இல்லை....

அவர்கள் இருவரும் சந்திக்கவே இல்லை...

அன்றைய பிரிவு இவ்வாறு தான் நடக்கப்போகிறது என்பதை நாம் உணர்ந்திருக்கவுமில்லை..

காலம் அதன்  ஓட்டத்தில் எல்லாவற்றையும் மாற்றிவிடும்

வாழ்க்கை அதன் வழியே ஓடிக்கொண்டிருக்கும்

அது தடைப்படுவதே இல்லை... 

முற்றும்..

 

விடுமுறைக்கு நான் கொழும்பு சென்றேன். அவனும் கொழும்பு வந்தான்.

சாதராணதரப்பரீட்சையில் மூவரும் திறமைச்சித்திகளைப்பெற்றோம்.

என்னைக்கொழும்பிலேயே இருத்தி

அங்கேயே உழு என்று பம்பலப்பிட்டி இந்துவில் சேர்த்துவிட்டார்கள்

அவளைத்தூக்கி வேம்படியில் நட்டுவிட்டார்கள்

அவன் மட்டும் ஊரில் படித்தான்...

 

ஒவ்வொரு விடுமுறைக்கும் நான் ஊருக்குப்போவேன்

அதற்கிடையில் அவள் வேம்படி போனதாலோ என்னவோ

அவனுக்கு ஈகோ வந்ததோ என்னமோ

நாட்டம் குறைந்திருந்தது

 

நான் ஊருக்குப்போகும் போதெல்லாம் ஒரு நாள் அவளது வீட்டுக்குப்போவேன்

தாய் எனது மைத்துணி என்பதால் என்னை அனுமதித்தார்கள்

(கட்டுப்பாடான குடும்பம்)

சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருப்போம்

தாய் சகோதரர்கள் விலகும் நேரம் பார்த்து அவனைப்பற்றி நிச்சயமாக கேட்கத்தவறமாட்டாள்..

ஆனாலும் இருவருக்குமான இடைவெளி அதிகரித்திருப்பதை புரிந்து கொள்ளமுடிந்தது..

 

 

ரியூசன் என்று யாழ்ப்பாணத்துக்கு திரிந்து

 பழகும் நண்பர்களின் கூட்டாலும் கெட்டபெயர் வாங்கத்தொடங்கினான்

படிப்பை இழந்தான்.

 

சில வருடங்களில் 

வேறு ஒருத்தியை பார்ப்பதாக சொன்னான்

அவளைச்சந்தித்தபோது அவளுக்கும் இது தெரிந்திருந்ததை அறிந்தேன்...

அவளது முகம் கறுத்திருந்ததை உணரமுடிந்தது...

 

படிப்பைத்தொலைத்தவன் வெளிநாட்டுக்கு வந்தான்

நான் தான் கட்டுநாயக்காவால் பயணம் அனுப்பினேன்

 

பிரான்சுக்கு வந்தவனுக்கு 

விசா பிரச்சினை 

வேலைப்பிரச்சினை என இழுபட்டவனுக்கு 

சாதிப்பிரச்சினையால் இவனது காதலியும் பாதிக்கப்பட்டு

இவனைத்தூக்கி எறிந்துவிட்டு இயக்கத்துப்போக

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...

 

குடிக்கத்தொடங்கினான்...

நான் 83 கலவரத்தால் பாதிக்கபட்டு இவனிடம் வரும் போது குடிக்கு முழுமையாக அடிமையாகியிருந்தான்.

 

எப்பொழுதும் என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் சொல்வான்

என்னோடு இருந்திருந்தால் தனது படிப்பும் போயிருக்காது குடித்தும் இருக்கமாட்டேன் என்று..

 

குடும்பத்தாரின் வற்புறுத்தலுக்காகவும் சகோதரர்களின் வளர்ச்சிக்காகவும் ஏற்பாட்டுத்திருமணம் செய்து

தகப்பனாகிய போதும் குடியை நிறத்தமுடியவில்லை

நானும் படாதபாடு இல்லை.

ஆனால் என்னோடு இருக்கும்வரை தான் சொல்லுக்கேட்பான். 

அசைந்தவுடன் மாறிவிடுவான். சொல்லாத புத்தியில்லை...

 

குடித்துக்குடித்து

ஒரு நான் போய்விட்டான்....

 

இறுதிச்சடங்கு நடந்த அன்று.

எல்லோரோடும் அன்பாக பழகியதாலும்

பலருக்கும் உதவியாலும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தார்கள்.

 

நான் அவளைத்தேடினேன்...

இறுதி ஊர்வலத்துக்கு உறவுகள் விடை கொடுக்கமுடியாத அளவுக்கு பாசத்தால் உருகி இருந்தனர்

அவ்வளவு பேரையும் விலக்கி

அழது குழறி வழியனுப்பிவிட்டு வெளியே வரும் பொது தான் அவளைக்காண்கின்றேன்

 

ஓடி என்னிடம் வந்தவள் அப்படியே என் தோளில்  சாய்கிறாள்

என் தோள் வழியே கண்ணீர் சிந்துவதை உணர்கின்றேன்

எதுவுமே பேசவில்லை

அன்றைக்கு நாம் ஒரு முடிவு எடுத்திருந்தால்

இது நடந்திருக்காது என்று சொல்லணும் போல இருந்தது

ஆனால் வாயைத்திறந்தால் அழுதுவிடுவேன்

கத்திவிடுவேன்

எல்லோருக்கும் தெரிந்துவிடும்

அமைதியானேன்..

 

எனது தோழிலிருந்து  எழும்பியவள் கண்ணைத்துடைத்துக்கொண்டு

விடைபெறுகின்றேன் என்று தலையை மட்டும் அசைத்தபடி சென்றாள்..

 

எங்கள் மூவரின் இறுதிச்சந்திப்பு நடைபெறவே இல்லை...

அவனும் அவளும் சந்திக்கவே இல்லை...

சந்தித்தோம்

ஆனால் அவன் ........??? :(  :(  :(

 

முற்றும்.

 

(மன்னித்துவிடடா என்னை.  தெரிந்தோ தெரியாமலோ உன் இழப்புக்கு நானும் ........??

.உன் ஆத்மசாந்திக்காக என்றும் வேண்டுகின்றேன்.)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா இந்த பாடசாலைக்காதல் கதையும் இந்தக்கதையும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்கிறதே... அண்மையில்தான் வாசித்தேன்

 

 

.http://www.yarl.com/forum3/index.php?/topic/153858-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/

 

 

இருந்தாலும் காலம் பலரின் கதைகளை எப்படியெல்லாம் எழுதுகிறது என்பதற்கு நீங்கள் எழுதிய கதைகளே உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் உங்கள் நண்பனை இழந்து விட்டீர்கள் எனபதை கேட்க கவலையாக இருந்தது . நீங்கள் மூவரும் இறுதியில் சந்தித்திருப்பீர்கள்

என்றே நினைத்தேன் . அதற்குள் முடிவு இப்படியாகி விட்டதே . இது தான் வாழ்க்கை .

பகிர்ந்தது கொண்டமைக்கு மிகவும் நன்றி . நெஞ்சை தொட்டு விட்டது .

Link to comment
Share on other sites

  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.