Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

19 ஆவது திருத்தம் நிறைவேற்றம்

Featured Replies

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நேற்று 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

 

பிரேரணைக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக சரத் வீரசேக எம்.பியும் வாக்களித்தனர். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார எம்.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 

 

இந்த சட்டமூலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் 27ஆம் திகதி சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். நேற்று செவ்வாய்க்கிழமையும் விவாதம் நடத்தப்பட்டது.  இரண்டு நாட்கள் விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்பு நேற்று மாலை 6 மணிக்கு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவையமர்வு ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.  அதன்பின்னர் பெயர் கூப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் சமூகமளிக்கவில்லை

 

- See more at: http://www.tamilmirror.lk/144975#sthash.G61jUTsU.dpuf

Edited by Sooravali

  • தொடங்கியவர்
அரசியலமைப்பின் 19ஆவது திருத்த வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, 19ஆவது திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/144982#sthash.2qRWlIPr.dpuf

 

hero of the day

  • கருத்துக்கள உறவுகள்

 

19வது திருத்தம் ஜனநாயகம், நல்லாட்சியை உறுதிப்படுத்தும்! - நாடாளுமன்றில் சம்பந்தன் உரை!!

1e65c927-7cb3-495c-83a9-e1fb6d9ac5cb1.jp

 

சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கு வழிகோலுவதுடன், நல்லாட்சியையும் உறுதிப்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

19வது திருத்தச்சட்டம் தொடர்பில் சிறிலங்காவின் நாடாளுமன்றில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'19வது திருத்தச்சட்டத்தில் இருக்கின்ற ஜனநாயகத்தை  பாதுகாப்பதற்கான பல்வேறு விடயங்களை நாம் வரவேற்கின்றோம். இந்தத் திருத்தச்சட்டம் மூலம் நல்லாட்சி உறுதிப்படுத்தப்படுவதுடன், மக்களின் இறைமையும் பாதுகாக்கப்படும்.

சிறிலங்காவின் தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், சிறிலங்காத ஜனாதிபதி ஒரு ஆண்டுக்குப் பின்னர், எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளார். இது சட்டவாக்கத்துறைக்கும், மக்களின் ஆணைக்கும் பாதகமாகவே அமைந்தன. ஆனால் இத்திருத்தச்சட்டம் ஊடாக சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த அதிகாரம் நீக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.

அதேவேளை, கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதிலும் முன்னர் சிக்கல்கள் இருந்து வந்தது. ஆனால் 19வது திருத்தச்சட்டம்  மூலம் இந்தச் சிக்கல்களுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. கட்சி தாவும் உறுப்பினர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட கட்சி சுதந்திரமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என நம்புகிறேன். 

அதேவேளை, கடந்த காலங்களில் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்படவில்லை. அதன் நம்பகத்தன்மையில் சந்தேகம் இருக்கின்றது. நிறைவேற்றுத்துறையின் தலையீடு இருந்தது. நியமனங்கள் சுதந்திரமாக இடம்பெறவில்லை. 19வது திருத்தச்சட்டம் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அரசியல் தலையீடுகள் நீங்கும். 

இவ்வாறு ஏற்பட்டால் மக்களின் இறைமை பாதுகாக்கப்படுவதுடன், ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்குரிய சூழல் உருவாகும். அத்துடன், ஜனநாயகத்துக்குரிய அம்சங்கள் இந்தத் திருத்தச்சட்டத்தில் இருப்பது வரவேற்கத்தக்கது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலுள்ள அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்துள்ளதை நாம் மதிக்கின்றோம். இதன் மூலம் அவருக்கு நன்மை ஏற்படாவிட்டாலும், நாட்டு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.

18வது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டது. இதன் ஊடாக அவர் எத்தனை தடவைகளும் போட்டியிடலாம் என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனால் எதேச்சாதிகாரம் உருவாகியது. இதனை ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலின் ஊடாக மக்கள் தோற்கடித்து தெளிவான ஆணையை வழங்கினர். எனவே, மக்களின் ஆணை மதிக்கப்பட வேண்டும்' என்று அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

http://ponguthamizh.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=1e65c927-7cb3-495c-83a9-e1fb6d9ac5cb

  • கருத்துக்கள உறவுகள்
19வது திருத்தம் நிறைவேற்றம்; 37 வருடங்களின் பின் நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு!
TUESDAY, 28 APRIL 2015 15:55

maithri%2B19A.jpg

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 07.00 மணி) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 215 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். 

வாக்கெடுப்பில் 7 பேர் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ளாதவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனக பண்டார தென்னக்கோன், பஷில் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சரத் வீரசேகர எதிராக வாக்களித்துள்ளார். 

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுறுத்தி அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு பகிரும் முகமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் சமர்ப்பித்த 19வது திருத்தச் சட்டமூலம் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நிறைவேறியுள்ளது.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், 37 வருடங்களின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டுள்ளது.

http://4tamilmedia.com/newses/srilanka/30518-19th-amendment-sri-lanka-april-28-2015

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு நல்ல செய்தி 

 

தமிழரைப்பொறுத்தவரை இராமன் ஆண்டாலென்ன?

இராவணன் ஆண்டாலென்ன..... :( 

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான பாராளுமன்ற ஆட்சி முறையில்: எண்பது வீத சிங்களவர்கள் போடும் பிச்சையில்தான்  தமிழர்கள் தங்கியிருக்க வேண்டிவரும்.  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாபதியைத் தமிழ் மக்கள் தங்களது செல்வாக்கினால் தெரிவு செய்யும்போது  ஜனாதிபதியின் தனிப்பட்ட கரிசனை, பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் என்ற இரண்டு அம்சங்கள் எமது நலனில் ஆதிக்கம் செலுத்தும்.  ஆதலால் ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாமற் செய்வதைச் சற்றுக் கவனமாகப் பரிசீலித்தே செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஒரு பிரசங்கம் வைப்பார்.. 13.. போல 19 க்கும். இதால தமிழருக்கு ஒரு பயனும் இல்லை..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த 19லை என்னென்ன இருக்கெண்டு ஆராவது சொல்லுவியளே? 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த 19லை என்னென்ன இருக்கெண்டு ஆராவது சொல்லுவியளே? 

 
19வது திருத்தம் நிறைவேற்றம்; 37 வருடங்களின் பின் நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு!அவ்வளவே
  • கருத்துக்கள உறவுகள்

உந்த 19லை என்னென்ன இருக்கெண்டு ஆராவது சொல்லுவியளே? 

 

எனக்கு என்றால் ஒன்றும் ஒன்பதும் தான் தெரியுது மற்றப்படி விசேசம் ஒன்றுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உந்த 19லை என்னென்ன இருக்கெண்டு ஆராவது சொல்லுவியளே? 

 

ஐயா சாமியார், ஒன்றிலிருந்து தொடர்ந்து எண்ணுங்கள், 19 பது வர முள்ளிவாய்க்காலும் வரும் உங்களின் கண்களில் ரத்தக் கண்ணீரும் வரும். 
  • கருத்துக்கள உறவுகள்
19வது திருத்தச் சட்டம்: மகிந்தவுக்கு கொடுக்கப்பட்ட பாரிய அரசியல் அடி
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 06:54.02 AM GMT ]
mahinda_19_001.jpg
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதை தடுக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்ட போதிலும் அவை தோற்கடிக்கப்பட்டு, திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த கடந்த 21 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் அதனை குழப்பியதுடன் நாடாளுமன்ற அவையை தமது நித்திரை செய்யும் அறையாக மாற்றியதுடன் பாரிய சதித்திட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் மகிந்த ராஜபக்சவின் சகல சதித்திட்டங்களும் தோற்கடிக்கப்பட்டு, நேற்று நாடாளுமன்றத்தில் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மகிந்தவையும் கோத்தபாயவையும் இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்தமையை காரணமாக கொண்டு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்த மகிந்த தரப்பு மேற்கொண்ட திட்டம், மக்கள் சக்திக்கு முன்னால் தவிடுபொடியாகி போயுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச மீண்டும் அந்த பதவிக்காக போட்டியிட முடியாது.

இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க கூடிய வகையில் மகிந்த ராஜபக்ச நிறைவேற்றிய 18ஆவது திருத்தச் சட்டம் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இரத்துச் செய்யப்பட்டிருப்பது மகிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்ட அரசியல் ரீதியான பாரிய அடி எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

tamilwin.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.