Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரலாற்றில் இடம்பிடித்தவர் மைத்திரி! - சுமந்திரன் பாராட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் இடம்பிடித்தவர் மைத்திரி! - சுமந்திரன் பாராட்டு

[Wednesday 2015-04-29 08:00]
sumanthiran-200-news5.jpg

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய இணங்கிய முதல் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் 19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

18ம் திருத்தச் சட்டத்தின் முதல் பேச்சாளராக உரையாற்றிய நான், ஜனநாயகத்தின் முடிவு இதுவெனக் குறிப்பிட்டேன்.இன்று 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய விவாதம் நடத்தப்படுகின்றது அதில் பங்கேற்கக் கிட்டியமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட பலரும் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக கூறியிருந்தனர்.எனினும் எவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய இணக்கம் தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தியவர் என்ற ரீதியில் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=131118&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஜனாதிபதிப் பதவியை விட்டுத்தர மறுத்த சந்திரிகாவை கூப்பிட்டு உறவு கொண்டாடுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய இணக்கம் தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தியவர் என்ற ரீதியில் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்

 

 

ஈழத்தமிழர் பிரச்சனை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. ஈழத்தமிழர் பிரச்சனை 60 வருடங்களுக்கு மேற்பட்டது. இடையில் வந்த அற்பசொற்ப பிச்சை பிரச்சனைகளை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு தியாக வேடங்கள் போடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரத்துக்கு முன்னிருந்து தொடரும் சிங்கள - தமிழ் இனப்பிரச்சனைக்கு இது எந்த வகையில் தீர்வைத் தரும் மிஸ்டர் சுமந்திரம். மைத்திரி.. மகிந்த வரலாற்றில் இடம்பெறுவதால்.. தமிழர்களுக்கு என்ன நன்மை. என்ன அரசியல் உரிமை கிடைத்துவிடப் போகிறது. அல்லது தமிழர்களின் அன்றாட வாழ்வியலில் சிங்கள இராணுவத்தின் கெடிபிடி தன்னும் நீங்கவா போகிறது.

 

உங்களை எல்லாம் தமிழ் மக்கள் அல்லது மக்கள் சார்பில் பாராளுமன்றம் அனுப்பினது.. சிங்கள தலைவர்களை வரலாற்றில் பதிவிக்க அல்ல. தமிழ் மக்களின் பிரச்சனைகள் இனங்காட்டி தீர்வு தேட. இந்த 19 எந்த வகையில் தமிழ் மக்களுக்கு நன்மையாகும்.

 

ஜனாதிபதி என்ற ஒரு சிங்களவரிடம் இருந்த அதிகாரம்.. இப்போ சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்றத்திற்குப் போகப் போகிறது. அதாவது ஜே ஆரின் அரசியலமைப்பில் இருந்து.. சிறீமா.. பண்டா கால அரசியலமைப்புக்கு போகிறது. இதனால் தமிழர்கள் காணும் நன்மைகள் என்ன மிஸ்டர் சுமந்திரம்.

 

சும்மா பெரிசா தமிழ் மக்களுக்கு சாதித்ததாகப் படம் காட்ட வேண்டாம். இது மகிந்த ஜே ஆரின் அரசியலமைப்பை தனது குடும்பத்தைப் பலப்படுத்த பாவித்ததன் விளைவால் எரிச்சலடைந்து சிங்களவர்களில் ஒரு பகுதியினர் மேற்கொண்ட நடவடிக்கையே அன்றி.. தமிழர்களை அழிப்பது அடக்குவது என்ற திடநிலையில் இருந்து சிங்களம் மாறுவதற்கான எந்த அறிகுறியும் இதில் இல்லை..!

 

உள்ள ஆணைக்குழுக்களின் விசாரணைகளிலேயே உண்மை தேட வேண்டி உள்ள நிலையில்.. சிங்களத்தின் சுயாதீன ஆணைக்குழுக்கள்.. உண்மையில் சுயாதீனமாக.. நடுநிலையோடு இயங்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை..!

 

அடிப்படையில்.. ஒரு சிங்களவன்.. தீர்மானிச்சு தமிழனை அடிப்பதில் இருந்து.. சிங்களவர்கள் கூட்டுச் சேர்ந்து கும்மும் நிலைக்கு தமிழர்களை.. 19 கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்பது தான் யதார்த்தம். :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
தேர்தல் நெருங்குது .....
இனி இடைக்கிடை புலி பற்றி பேசவேண்டி வரும்.
 
முன்னெச்சரிக்கையாய் கொஞ்சம் ஐஸ் வைக்கிறார். 
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு.... ஒரு செருப்பு, அல்லது கல்லு... வீசத் தன்னும், 
ஊரில்.... ஒரு ஆக்கள் இல்லையா?

என்ன... உலகமடா, இது.

சுமந்திரனுக்கு.... ஒரு செருப்பு, அல்லது கல்லு... வீசத் தன்னும், 

ஊரில்.... ஒரு ஆக்கள் இல்லையா?

என்ன... உலகமடா, இது.

 

என்ன அண்ணை செய்யிறது. அனைவரும் எங்களை மாதிரி சுயநலவாதிகளா மாறிட்டாங்கள் போல இருக்கு.  :(
முந்தி என்டால் குண்டை வீசி தங்கட உயிர குடுத்து போராட நாங்கள் அதை பார்த்து விசிலடிச்சு குஷியா இருந்தம். இப்ப ஒரு கல்லை வீசி எங்களை தன்னும் எங்களை மகிழ்ச்சி படுத்த ஒருவரும் இல்லை. எங்கட நிலமை இப்படியா போய் விட்டது.  :unsure:  :(
இதுக்கு ஒரே தீர்வு நீங்கள் ஊருக்கு போய் கல்லை நீங்களே எறிவது தான்.  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

 

என்ன அண்ணை செய்யிறது. அனைவரும் எங்களை மாதிரி சுயநலவாதிகளா மாறிட்டாங்கள் போல இருக்கு.  :(
முந்தி என்டால் குண்டை வீசி தங்கட உயிர குடுத்து போராட நாங்கள் அதை பார்த்து விசிலடிச்சு குஷியா இருந்தம். இப்ப ஒரு கல்லை வீசி எங்களை தன்னும் எங்களை மகிழ்ச்சி படுத்த ஒருவரும் இல்லை. எங்கட நிலமை இப்படியா போய் விட்டது.  :unsure:  :(
இதுக்கு ஒரே தீர்வு நீங்கள் ஊருக்கு போய் கல்லை நீங்களே எறிவது தான்.  :icon_idea:

 

 

ஒய்... தெனாலி ,

நாங்கள் எறிஞ்ச கல்லுத்தான்....

40 வருட போராட்டத்தின், ஆரம்பம்.

இன்னும்::: இழவு எடுக்க, நீங்கள் நிற்பது நியாமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.