Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளி வாய்க்கால் நினைவாக.....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Evening-Tamil-News-Paper_1538813115.jpg

 

இன்றோடு.....!

 

இன்னுமொரு ஆண்டு .

எமைக் கடந்து செல்கின்றது!,

 

முள்ளி வாய்க்காலின்,

வெள்ளைக் கடற்கரையில்,

துளை போடும் சிறு நண்டுகள்,

இடை நடுவில்.....,

துளையிடுதலை நிறுத்துகின்றன!

 

ஏதோ...!

அவற்றின் கால்களுக்குத்,

தடை போடுகின்றன!

 

வேறென்ன...?

இடை நடுவில் எமைப் பிரிந்த,

எங்கள் சொந்தங்களின்,

எலும்புக்கூடுகளாகத் தான் இருக்கும்!

 

உழுது விதைக்கப் பட்ட,

பாளையங்கோட்டையின் நினைவில்,

மனம் புதையுண்டு போகின்றது!

 

அன்றைய...,

பாஞ்சாலங் குறிச்சியின்,

குறு நிலத்து மன்னர்கள்,

இன்றைய ராஜதந்திரிகளாய்,

எமக்கென ஒரு தீர்வு தேடுகின்றார்கள்!

 

பதின்மூன்று..பதினாலு.,

பத்தொன்பது என்று,

தீர்வுத் திட்டங்களின்,

வரிசை நீள்கின்றது!

 

எல்லோரும்....!

இணைந்து வாழும் தேசத்தில்,

எனக்கென்ன குறையிருக்கின்றது,

என்ற கேள்விகளும் தொடர்கின்றன!

 

புத்தனுக்கு விடுதலையளித்த,

போதி மரத்தின் கிளையொன்று,

தங்க வேலியினுள்ளே.

பத்திரமாகப்....,

பொத்தி வைக்கப்பட்டுள்ளது!

 

எனக்கென்ன சுதந்திரமா இல்லை?

 

இறுதியாகப் போன போதும்,

எல்லா இராணுவத்தினரது பார்வையும்,

என் மீதே நிலை குத்தியபடி....!

 

மேலாடையிழந்த,

இளம் பெண்ணொருத்தியின்,

மன நிலையில் நான்..!

 

எனக்கு மட்டும் புரிகின்றது,

இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்வில் எதையும மறக்கவிரும்புவதில்லை

சிலவற்றை அனுபவங்களாக

பாடங்களாக

தூண்களாக

 

வாழ்வில் மறக்க நினைக்கும் ஒரே ஒரு விடயம் முள்ளி வாய்க்கால்

ஆனால் முடியாததும் அதுவே...

 

நன்றியண்ணா.

கவிதைக்கு

எம்மைத்தவிர யார் பாடுவார் எம் வலியை..???

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஒரு முள்ளாக குத்தி இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை தாங்கி வந்த புங்கையூரனின் கவிதையை படிக்கும் பொழுது முள்குத்திய இடத்தில் ஏற்படும் வலி.. இந்த வலி நிரந்தரமானது. எம் வாழ்நாள் முழுவதும் எம்முடன் இந்த நினைவுகளும் வலிகளும் கூடவே வருவதைத் தவிர்க்க முடியாது. நன்றிகள் உங்கள் கவிதைக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்வில் எதையும மறக்கவிரும்புவதில்லை

சிலவற்றை அனுபவங்களாக

பாடங்களாக

தூண்களாக

 

வாழ்வில் மறக்க நினைக்கும் ஒரே ஒரு விடயம் முள்ளி வாய்க்கால்

ஆனால் முடியாததும் அதுவே...

 

நன்றியண்ணா.

கவிதைக்கு

எம்மைத்தவிர யார் பாடுவார் எம் வலியை..???

 

உலகத்து நாடுகளின்,

ஊது குழல் ஓசை வழி நடந்து,

ஒரு மூலையில் ஒதுக்கப் பட்டு...,

நிராதரவாக்கப் பட்ட இனம்!

 

எட்டிப் பிடிக்கும் தூரத்தில்,

உணவுகள் புதைந்திருந்தும்,

பட்டினியின் வலி தாங்காது,

வடலிப் பனை பிழந்து..,

பசியாறிய இனம்!

 

மான்கள் நீரருந்த...,

மீன்கள் அவற்றின் முகம் பார்க்கும்,

வளம் கொழிக்கும் வன்னி மண்ணில்.

வலிகள் ஏந்தி அழிந்த இனம்!

 

எப்படி மறக்க முடியும், விசுகர்?

 

வருகைக்கும் கருத்துக்கும், நன்றிகள்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

----

முள்ளி வாய்க்காலின்,

வெள்ளைக் கடற்கரையில்,

துளை போடும் சிறு நண்டுகள்,

இடை நடுவில்.....,

துளையிடுதலை நிறுத்துகின்றன!

 

ஏதோ...!

அவற்றின் கால்களுக்குத்,

தடை போடுகின்றன!

 

வேறென்ன...?

இடை நடுவில் எமைப் பிரிந்த,

எங்கள் சொந்தங்களின்,

எலும்புக்கூடுகளாகத் தான் இருக்கும்!

------

இறுதியாகப் போன போதும்,

எல்லா இராணுவத்தினரது பார்வையும்,

என் மீதே நிலை குத்தியபடி....!

 

மேலாடையிழந்த,

இளம் பெண்ணொருத்தியின்,

மன நிலையில் நான்..!

 

எனக்கு மட்டும் புரிகின்றது,

இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று!

 

இந்த உலகில் கடைசி தமிழன் இருக்கும் வரை முள்ளிவாய்க்கால் சோகம், மறக்க முடியாதது.

கைக்கு எட்டும் வரை, எமது போராட்டத்தை நடாத்திய தமிழன்.....

எமது இனத்து  எட்டப்பர்களாலும், உலக வல்லரசுகளாலும் தோற்கடிக்கப் பட்ட ஆத்திரத்தை, இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவுக் கவிதைக்கு, நன்றி புங்கையூரான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஒரு முள்ளாக குத்தி இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை தாங்கி வந்த புங்கையூரனின் கவிதையை படிக்கும் பொழுது முள்குத்திய இடத்தில் ஏற்படும் வலி.. இந்த வலி நிரந்தரமானது. எம் வாழ்நாள் முழுவதும் எம்முடன் இந்த நினைவுகளும் வலிகளும் கூடவே வருவதைத் தவிர்க்க முடியாது. நன்றிகள் உங்கள் கவிதைக்கு.

உண்மை தான்.. காவலூர் கண்மணி!

 

முள்ளி வாய்க்கால், விட்டுச்சென்ற கோர நினைவுகளை மறப்பது என்பது இயலாது என்பது தான் எனது கருத்தும் கூட!

 

எனினும் கால வெள்ளம்.. அனைத்தையும் கழுவிச் செல்கின்றது என்பது.. இங்கு கருத்துப் பகிர்ந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தே புரிந்து கொள்ள முடிகின்றது!

 

ஒரு வேளை...மறதி என்பது.. மனிதர்களுக்கு இறைவனால் அழிக்கப்பட்ட வரப்பிரசாதமோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது! :o

 

 

வருகைக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்.. காவலூர் கண்மணி!

 

முள்ளி வாய்க்கால், விட்டுச்சென்ற கோர நினைவுகளை மறப்பது என்பது இயலாது என்பது தான் எனது கருத்தும் கூட!

 

எனினும் கால வெள்ளம்.. அனைத்தையும் கழுவிச் செல்கின்றது என்பது.. இங்கு கருத்துப் பகிர்ந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தே புரிந்து கொள்ள முடிகின்றது!

 

ஒரு வேளை...மறதி என்பது.. மனிதர்களுக்கு இறைவனால் அழிக்கப்பட்ட வரப்பிரசாதமோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது! :o

 

 

கவலைப் படாதீர்கள் புங்கை.

கிரிக்கெட் சீசனில், இப்படியான திரிகளுக்கு வாசகர்களின் வருகை குறைந்தே இருக்கும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் சீசனில், இப்படியான திரிகளுக்கு வாசகர்களின் வருகை குறைந்தே இருக்கும். :icon_mrgreen:

 

:wub::o

 

தாய் தந்தை மறைந்தாலே காலவெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கையில் இவையும் அடித்துச் செல்லப்படும்..

இந்திய சுதந்திர வரலாற்றில் பெரிதாக பேசப்படும் ஜாலியன் வாலபாக் படுகொலையை அக்கால பெருசுகள் உணர்வு கொப்பளிக்க பேசுவதை கேட்டிருக்கிறேன்..ஆனால் நாங்கள் ஏட்டில் மட்டுமே படித்ததால் அவ்வளவு தாக்கம் இல்லை.

அதே போல் முள்ளிவாய்க்கால் துயரமும் இத்தலைமுறையால் அதிகம் பேசப்பட்டு அடுத்துவரும் இளசுகள் ஏட்டளவில் மட்டுமே படிக்கப்போவதால், அது ஒரு துயர நிகழ்வு என்ற பேச்சோடு நின்றுவிடும் என்றே தோன்றுகிறது.. (No offense) :(

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும், ஆறுதலான கருத்துக்கும் நன்றி, தமிழ் சிறி, ராஜவன்னியன்!

 

இன்றைய நாள்....எமது ஈழத்தமிழனின் வரலாற்றில்... என்றுமே மறக்க முடியாத நாள்!

 

விடிகாலைப் பொழுதில், சேவல் என்றுமே கூவ மறந்ததில்லை! அதன் குரல் ஓசையிழந்த பின்னும் கூட.... வெறும் காற்றையாவது வெளியில் துப்புகின்றது!

 

நினைவேந்தல் நாள் வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் எழும் போதே.....
மனமெல்லாம் ஒரு வித சோகமாக, எதையோ... பறி கொடுத்த மாதிரி உள்ளது.
6 வருடம் கடந்தும், மனதை விட்டு நீங்காத சோகம்... முள்ளிவாய்க்கால்.

  • கருத்துக்கள உறவுகள்
நான் இருக்கும்வரை என் நெஞ்சை சுட்டெரிக்கும் கொடூர நெருப்பு முள்ளிவாய்க்கால். இறந்தபின்பும் என் சாம்பல் தகிக்குமோ தெரியவில்லை. காலம் எதனையும் குளிர்வித்துவிடும் என்பது அனுபவம். ஈழச் சரித்திரம்பற்றி சிறு பகுதியொன்றை முன்பு படித்த ஞாபகம்... ஒரு காலத்தில் சிங்களம் முழு இலங்கையையும் கைப்பற்றி இருந்ததாகவும் அந்நேரத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் அழிக்கப்பட்டதாகவும் படித்தேன். அக்காலத்தின் சனத்தொகையைக் கணிக்கிக்கும்போது இலட்சம் என்பது இன்றைய கோடிக்குச் சமமாகும். சம்பவம் ஏட்டில் குளிர்ந்துவிட்டது. ராசவன்னியர் கூறியதுபோல்... காலவெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கையில் இவையும் அடித்துச் செல்லப்படும். இயற்கை மாறாதது.
 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

Evening-Tamil-News-Paper_1538813115.jpg

 

இன்றோடு.....!

 

இன்னுமொரு ஆண்டு .

எமைக் கடந்து செல்கின்றது!,

 

முள்ளி வாய்க்காலின்,

வெள்ளைக் கடற்கரையில்,

துளை போடும் சிறு நண்டுகள்,

இடை நடுவில்.....,

துளையிடுதலை நிறுத்துகின்றன!

 

ஏதோ...!

அவற்றின் கால்களுக்குத்,

தடை போடுகின்றன!

 

வேறென்ன...?

இடை நடுவில் எமைப் பிரிந்த,

எங்கள் சொந்தங்களின்,

எலும்புக்கூடுகளாகத் தான் இருக்கும்!

 

உழுது விதைக்கப் பட்ட,

பாளையங்கோட்டையின் நினைவில்,

மனம் புதையுண்டு போகின்றது!

 

அன்றைய...,

பாஞ்சாலங் குறிச்சியின்,

குறு நிலத்து மன்னர்கள்,

இன்றைய ராஜதந்திரிகளாய்,

எமக்கென ஒரு தீர்வு தேடுகின்றார்கள்!

 

பதின்மூன்று..பதினாலு.,

பத்தொன்பது என்று,

தீர்வுத் திட்டங்களின்,

வரிசை நீள்கின்றது!

 

எல்லோரும்....!

இணைந்து வாழும் தேசத்தில்,

எனக்கென்ன குறையிருக்கின்றது,

என்ற கேள்விகளும் தொடர்கின்றன!

 

புத்தனுக்கு விடுதலையளித்த,

போதி மரத்தின் கிளையொன்று,

தங்க வேலியினுள்ளே.

பத்திரமாகப்....,

பொத்தி வைக்கப்பட்டுள்ளது!

 

எனக்கென்ன சுதந்திரமா இல்லை?

 

இறுதியாகப் போன போதும்,

எல்லா இராணுவத்தினரது பார்வையும்,

என் மீதே நிலை குத்தியபடி....!

 

மேலாடையிழந்த,

இளம் பெண்ணொருத்தியின்,

மன நிலையில் நான்..!

 

எனக்கு மட்டும் புரிகின்றது,

இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று!

 

  • கருத்துக்கள உறவுகள்

பதின்மூன்று..பதினாலு.,

பத்தொன்பது என்று,

தீர்வுத் திட்டங்களின்,

வரிசை நீள்கின்றது!

 

 

உண்மைதான். திட்டங்கள் என்ற பெயரால் ஏமாற்றப்படும் நாடகங்கள் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அநீதியை பொறுக்க முடியாமல் மக்கள் எழுந்து

கொண்டு போராட்டங்களை நடத்த முற்படும் வேளைகளிலெல்லாம் சில கறுப்பு ஆடுகள் புகுந்து கெடுத்துவிடும் கொடுமையும் அல்லவா தொடர்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.