Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வி நிலையென நினைத்தால்..! சம்பந்தருக்காக இசைக்கப்பட்டதா? சம்பந்தமில்லாமல் இசைக்கப்பட்டதா?

Featured Replies

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்துக்கு வருகைதந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல் அனைவரையும் வெகுவாக உணர்ச்சிமேலிடச்செய்தது.

வந்தாறுமூலையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வினை முடித்துவிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேடையில் இருந்து விடைபெற்றுச்செல்லும்போது தோல்வி நிலையென இருந்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்னும் பாடல் ஒலிக்கச் செய்யப்பட்டது.

அவ்வேளை அவ்விடத்தில் கூடியிருந்த பலரும் உணர்ச்சி வசப்பட்டார்கள். தமிழ் இனம் தோல்வியை தழுவி, விடுதலைப்போராட்டம் சிதைக்கப்பட்டு, தமிழீழ மண்ணை பறிகொடுத்து, இன்று மற்றவர்களின் அடிமைத்தனத்திற்கும், கூட்டிக்கொடுப்பிற்கும் இரையாகிப்போயிருக்கும் நிலையில் இது போன்ற பாடல்கள் நிச்சையம் உணர்வை தட்டி எழுப்பவே செய்யும்.

இந்நிலையில் சம்பந்தர் மேடையை விட்டு கீழிறங்கி சென்றவேளை மேற்படி தோல்வி நிலையென நினைத்தால் என்ற பாடல் ஒலிபரப்பு செய்த வேளை பெரியவர் ஒருவர், இந்தப்பாடல் சம்பந்தருக்காக ஏன் இசைக்கப்பட்டது? அல்லது ஒலிவாங்கி பரிசோதகர் சம்பந்தமில்லாமல் போட்டுவிட்டாரா என்று புறுபுறுத்துக்கொண்டார்.

பெரியவரின் இந்த முணுமுணுப்பை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாயினும், சம்பந்தர் மீது அவர் ஏதோ கடுப்பில் இருக்கின்றார் என்ற உண்மை மட்டும் புலனாகின்றது.

ஆக தோல்வி நிலையென நினைத்தால் என்ற பாடலை ஒலிவாங்கி பரிசோதகர் ஏன் போட்டார் என்கின்ற உண்மை யாருக்கும் புரியாதாயினும், நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் இந்த சூழலில் பாடல் ஒலிபரப்பட்டமையானது ஏதோ செய்தி சொல்ல வருகின்றது என நினைக்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் அவர்கள் தேர்தலில் களமிறங்கவுள்ளமையும் அறிந்ததே...!

 

http://www.tamilwin.com/show-RUmtyFSUSUiv6C.html

 

இதெல்லாமா செய்தி?

இலங்கை முளுக்க இப்ப அல்லக்கைகள் காலம் என நினைக்கிறேன்.

யாரோ ஒருத்தர் பாட்டுப்போட்டாரம் அதுக்கு ஒரு கிழவர் முணுமுணுத்தாராம்.

இது அடுத்த தேர்தலுக்கு கட்டியமாம்.

இதெல்லாமா செய்தி?

இலங்கை முளுக்க இப்ப அல்லக்கைகள் காலம் என நினைக்கிறேன்.

யாரோ ஒருத்தர் பாட்டுப்போட்டாரம் அதுக்கு ஒரு கிழவர் முணுமுணுத்தாராம்.

இது அடுத்த தேர்தலுக்கு கட்டியமாம்.

 

 
சூறாவளி அதிகம் கோபப்படாதீர்கள்.
 
இன்று 35 மரணங்கள் நேற்று 42 மரணங்கள் என்ற செய்திகள் பத்திரிகைகளை நிரப்பி வந்த காலமும் இருந்தது.
 
பேப்பர் முழுவதும் வெள்ளைவான் கடத்தல், வீதியோரங்களில் தலையில்லா சடலங்கள் போன்ற செய்தி வந்த காலமும் இருந்தது.
 
இப்போது வாள்வெட்டுத்தான் பேப்பர்களில் வரும் முக்கிய செய்தி. அப்புறம் மாங்காய் தின்னக் கொடுத்த ஆசிரியர் என்பது முதல் கூட்டமைப்பின் கூட்டத்தில் போட்ட பாட்டுக்கள் போன்ற செய்திகள்தான் பத்திரிகையை நிரப்புகின்றன. இந்த விடயத்தில் நான் மிகவும் சந்தோசப்படுகின்றேன்.அன்று மலிவாக இருந்த அர்த்தமற்ற மனித மரணங்கள் பத்திரிகைகளை நிரப்பின. இம்மரணங்கள் குறைந்த இக்காலப்பகுதியில் இவ்வாறான செய்திகள்தான் பத்திரிகைகளது தீனி. இவ்வாறான செய்திகள் அதிகமாக பத்திரிகைகளில் வெளிவருவது ஒரு விடயத்தை இங்கு ஆணித்தரமாக நிறுவுகின்றது. அதாவது எமது சமுதாயம் மெல்ல மெல்ல கொலைக் கலாச்சாரத்திலிருந்து வெளியே வருகின்றது என்பதுதான் அது.
 
வெறும் கொலைகளின் எண்ணிக்கைகளையும் அவற்றின் விபரணப் படங்களையும் பத்திரிகைகளில் பார்த்து அழுத கண்களிற்கு இவ்வாறான செய்திகள் பத்திரிகைகளை நிரப்புவது ஒரு வித ஆறுதலைக் கொடுக்கின்றது. விரைவில் வாள்வெட்டு செய்திகளும் நிறுத்தப்பட வேண்டுமென்பது எனது அவா.

 

 
சூறாவளி அதிகம் கோபப்படாதீர்கள்.
 
இன்று 35 மரணங்கள் நேற்று 42 மரணங்கள் என்ற செய்திகள் பத்திரிகைகளை நிரப்பி வந்த காலமும் இருந்தது.
 
பேப்பர் முழுவதும் வெள்ளைவான் கடத்தல், வீதியோரங்களில் தலையில்லா சடலங்கள் போன்ற செய்தி வந்த காலமும் இருந்தது.
 
இப்போது வாள்வெட்டுத்தான் பேப்பர்களில் வரும் முக்கிய செய்தி. அப்புறம் மாங்காய் தின்னக் கொடுத்த ஆசிரியர் என்பது முதல் கூட்டமைப்பின் கூட்டத்தில் போட்ட பாட்டுக்கள் போன்ற செய்திகள்தான் பத்திரிகையை நிரப்புகின்றன. இந்த விடயத்தில் நான் மிகவும் சந்தோசப்படுகின்றேன்.அன்று மலிவாக இருந்த அர்த்தமற்ற மனித மரணங்கள் பத்திரிகைகளை நிரப்பின. இம்மரணங்கள் குறைந்த இக்காலப்பகுதியில் இவ்வாறான செய்திகள்தான் பத்திரிகைகளது தீனி. இவ்வாறான செய்திகள் அதிகமாக பத்திரிகைகளில் வெளிவருவது ஒரு விடயத்தை இங்கு ஆணித்தரமாக நிறுவுகின்றது. அதாவது எமது சமுதாயம் மெல்ல மெல்ல கொலைக் கலாச்சாரத்திலிருந்து வெளியே வருகின்றது என்பதுதான் அது.
 
வெறும் கொலைகளின் எண்ணிக்கைகளையும் அவற்றின் விபரணப் படங்களையும் பத்திரிகைகளில் பார்த்து அழுத கண்களிற்கு இவ்வாறான செய்திகள் பத்திரிகைகளை நிரப்புவது ஒரு வித ஆறுதலைக் கொடுக்கின்றது. விரைவில் வாள்வெட்டு செய்திகளும் நிறுத்தப்பட வேண்டுமென்பது எனது அவா.

 

நீங்க சொவது உண்மைதான் இருந்தாலும், இவ்வாறன செய்திகள் விமர்சனங்களுக்கு அப்பால் வெறும் காழ்ப்புணர்ச்சியோடு வருவது அருவருக்கத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தாங்கள் பத்திரமாக நாட்டை விட்டு வெளியேறி வசதியான அந்நிய நாட்டில் குடியேறிவிட்டோம் என்ற புளகாங்கிதத்தில் சாத்தான் வேதம் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் சிங்களத்திடமும் முஸ்லீம்களிடமும் அடிபட்டுக் கொண்டு... உரிமைகளை..நிலத்தைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிற மக்களுக்குத் தான் தெரியும்.. அவர்கள் எதிர்பார்க்கும் விடுதலையின் தேவை. சம்பந்தனுக்கு அது அவ்வளவு இலகுவாகப் புரியக் கூடிய மொழி இல்லை என்பதால்.. யாரோ ஒரு அன்பர் இந்தப் பாடலை ஒலிபரப்பி இருக்கக் கூடும். இதன் பின்னராவது சம்பந்தன் மக்களின் உணர்வுகளை உள்வாங்கிச் செயற்படும் நிலைக்கு தன்னை திருத்திக் கொண்டால் நல்லது. விக்கி ஐயோ போன்று.

 

இந்தியப் படைகள் காலத்தில் யாழ் நகரில்.. உள்ள ஒலிபரப்புச் சேவையில்.. இதே பாடல் யாரோவால் ஒலிபரப்பட்டது. இந்தியப் படைகள் வந்து நிறுத்தின. இறுதியில் அதன் விளைவு 1989 தேர்தலில் தெரிந்தது. இறுதியில் இந்தியப் படை விலகில் முடிந்தது. மக்கள் சிலதை வாக்குச் சீட்டுக்களுக்கு முதல் கட்டியமாக கூறிவிடுவார்கள். விளங்கிக் கொள்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் மக்களால் விலக்கப்படுவார்கள். :icon_idea::)

Edited by nedukkalapoovan

நீங்க சொவது உண்மைதான் இருந்தாலும், இவ்வாறன செய்திகள் விமர்சனங்களுக்கு அப்பால் வெறும் காழ்ப்புணர்ச்சியோடு வருவது அருவருக்கத்தக்கது. 

எவனோ சாக அதை வைத்து அசைலம் அடிச்சு பிழைப்பு நடத்தும் மக்கட்கு இப்படியான செய்தி பிடிக்கும். 

 

நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களித்தார்கள் அதனடிப்படைல் அடுத்த மக்களில் ஆணைவரை காத்திருப்பதே சரி. 

 

ஆரோக்கியமான விமர்சங்களாக இருந்தால் எப்பவுமே நல்லது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய முன்னாள் ஐனாதிபதி அப்துல் கலாம்

யாழ் பல்லைக்கழகத்துக்கு வந்தபோது

ஒரு கேள்வி  மட்டுமே கேட்கப்பட்டது

அதற்கு பதிலை எதிர்பாராது பலத்த கை தட்டல் மட்டுமே செய்யப்பட்டது

அந்த ஞாபகம் தான் வந்து   போகுது

புரியவேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும்.............. :icon_idea:

Edited by விசுகு

இந்திய முன்னாள் ஐனாதிபதி அப்துல் சலாம்

யாழ் பல்லைக்கழகத்துக்கு வந்தபோது

ஒரு கேள்வி  மட்டுமே கேட்கப்பட்டது

அதற்கு பதிலை எதிர்பாராது பலத்த கை தட்டல் மட்டுமே செய்யப்பட்டது

அந்த ஞாபகம் தான் வந்து   போகுது

புரியவேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும்.............. :icon_idea:

 

அண்ணை, அவர் இஸ்லாமியர் தான் இருந்தாலும் அப்துல் சலாம் இல்லை 

 

அப்துல் கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை, அவர் இஸ்லாமியர் தான் இருந்தாலும் அப்துல் சலாம் இல்லை 

 

அப்துல் கலாம்.

 

 

நன்றி

நீங்கள் எனது  கருத்தை பார்க்கவில்லை என்பது புரிகிறது... :(

நன்றி

நீங்கள் எனது  கருத்தை பார்க்கவில்லை என்பது புரிகிறது... :(

 

மன்னிக்கவும், நான் உங்கள் கருத்தை பார்க்காமல் இல்லை, பார்த்திருந்தேன் இருந்தாலும் அப்துல் கலாமிடம் கேட்கபட்ட கேள்வி எனக்கு நினைவில் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்துக்கு வருகைதந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல் அனைவரையும் வெகுவாக உணர்ச்சிமேலிடச்செய்தது.

வந்தாறுமூலையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வினை முடித்துவிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேடையில் இருந்து விடைபெற்றுச்செல்லும்போது தோல்வி நிலையென இருந்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்னும் பாடல் ஒலிக்கச் செய்யப்பட்டது.

அவ்வேளை அவ்விடத்தில் கூடியிருந்த பலரும் உணர்ச்சி வசப்பட்டார்கள். தமிழ் இனம் தோல்வியை தழுவி, விடுதலைப்போராட்டம் சிதைக்கப்பட்டு, தமிழீழ மண்ணை பறிகொடுத்து, இன்று மற்றவர்களின் அடிமைத்தனத்திற்கும், கூட்டிக்கொடுப்பிற்கும் இரையாகிப்போயிருக்கும் நிலையில் இது போன்ற பாடல்கள் நிச்சையம் உணர்வை தட்டி எழுப்பவே செய்யும்.

இந்நிலையில் சம்பந்தர் மேடையை விட்டு கீழிறங்கி சென்றவேளை மேற்படி தோல்வி நிலையென நினைத்தால் என்ற பாடல் ஒலிபரப்பு செய்த வேளை பெரியவர் ஒருவர், இந்தப்பாடல் சம்பந்தருக்காக ஏன் இசைக்கப்பட்டது? அல்லது ஒலிவாங்கி பரிசோதகர் சம்பந்தமில்லாமல் போட்டுவிட்டாரா என்று புறுபுறுத்துக்கொண்டார்.

பெரியவரின் இந்த முணுமுணுப்பை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாயினும், சம்பந்தர் மீது அவர் ஏதோ கடுப்பில் இருக்கின்றார் என்ற உண்மை மட்டும் புலனாகின்றது.

ஆக தோல்வி நிலையென நினைத்தால் என்ற பாடலை ஒலிவாங்கி பரிசோதகர் ஏன் போட்டார் என்கின்ற உண்மை யாருக்கும் புரியாதாயினும், நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் இந்த சூழலில் பாடல் ஒலிபரப்பட்டமையானது ஏதோ செய்தி சொல்ல வருகின்றது என நினைக்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் அவர்கள் தேர்தலில் களமிறங்கவுள்ளமையும் அறிந்ததே...!

 

http://www.tamilwin.com/show-RUmtyFSUSUiv6C.html

 

 

கூட்டணி / தமிழரசுக்கட்சியள் எல்லாம் பாட்டு போட்டு சனத்தை உசுப்பேத்திறதிலை வலு கெட்டிக்காரர். :D

 

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி / தமிழரசுக்கட்சியள் எல்லாம் பாட்டு போட்டு சனத்தை உசுப்பேத்திறதிலை வலு கெட்டிக்காரர். :D

 

 

பாவம் இம்முறை அந்த அஸ்திரம் திருப்பி அடிச்சுட்டுது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.