Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். குடாவில் மணல் அகழ்விற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளது

Featured Replies

Nagarkovil4-300x199.jpg

 

யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்விற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளதாக மகாவலி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
 
 
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாரிய விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைக் காரணம் காட்டி மணல் அகழும் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
 
இது குறித்துக் கருத்து வெளியிட்ட மகாவலி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர்  நிஹால் ரூபசிங்க, யாழ்ப்பாணத்தில் மணல் வளம் கூடிய பகுதிகளில் அதனை அகழ்வதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வுகளின் முடிவின் அடிப்படையில் மணல் அகழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் யாழ். அரச அதிபரும் மணல் அகழ்வுக்கு விடுக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
 
எனவே யாழ்.குடாநாட்டில் சிறிய அளவில் மணல் அகழும் இடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் பரிசீலிக்கின்றோம் என்றார்.
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வல்லிபுரக்கோவில் நாகர்கோவில்களுக்கு பெருமை சேர்த்த மண்திட்டிகள் சம தரையாக போகின்றன என்ற கருத்தை விட்டு.......
 
சுனாமி / சிறு புயல்கள் போன்றவற்றின் அழிவுகளை தடுத்து நிறுத்தக்கூடிய இயற்கை தந்த அரண்களை  அழிக்கப்போகின்றார்கள்.. :(

 

வல்லிபுரக்கோவில் நாகர்கோவில்களுக்கு பெருமை சேர்த்த மண்திட்டிகள் சம தரையாக போகின்றன என்ற கருத்தை விட்டு.......
 
சுனாமி / சிறு புயல்கள் போன்றவற்றின் அழிவுகளை தடுத்து நிறுத்தக்கூடிய இயற்கை தந்த அரண்களை  அழிக்கப்போகின்றார்கள்.. :(

 

 

உண்மைதான் குசா அண்ணை.
 
அப்ப யாழ்ப்பாணத்தில் கட்டுற வீட்டுக்கு நல்லூர் கோயிலைச் சுத்திக் கொட்ட எங்கதான் மணல் எடுக்கிறது. ஆமிக்காரன் எல்லாத்தையும் இடிச்சுப் போட்டான் என்கிறியள். கட்ட வெளிக்கிட்டா ஐயோ இயற்கையை கெடுக்கிறாங்கள் என்கிறியள். இப்ப சனம் என்னதான் செய்ய?
 
மறுபடியும் வாசிக்கவும்.

 

எனவே யாழ்.குடாநாட்டில் சிறிய அளவில் மணல் அகழும் இடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் பரிசீலிக்கின்றோம் என்றார்.

 
இப்ப திருப்திதானே. 
 
இவங்கள் சொல்லுவாங்கள் செய்யமாட்டாங்கள் என்ற விளையாட்டுக்கு நான் வரல்ல.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

இதை எதிர்த்து ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கலாம்.

கூட்டமைப்பு எம்பிமார் வேலைக்காகாயினம்.

கஜன் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் சும்மா தானே இருக்கிறார் ? லண்டணில் எல்லாம் வந்து படிச்ச பாரிஸ்டர் - ஒரு வழக்கப் போடலாம்.

இதை எதிர்த்து ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கலாம்.

கூட்டமைப்பு எம்பிமார் வேலைக்காகாயினம்.

கஜன் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் சும்மா தானே இருக்கிறார் ? லண்டணில் எல்லாம் வந்து படிச்ச பாரிஸ்டர் - ஒரு வழக்கப் போடலாம்.

நாங்கள் தமிழ்தேசம் எடுக்கிற வேலையில வெரி பிஸி  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

உண்மைதான் குசா அண்ணை.
 
அப்ப யாழ்ப்பாணத்தில் கட்டுற வீட்டுக்கு நல்லூர் கோயிலைச் சுத்திக் கொட்ட எங்கதான் மணல் எடுக்கிறது. ஆமிக்காரன் எல்லாத்தையும் இடிச்சுப் போட்டான் என்கிறியள். கட்ட வெளிக்கிட்டா ஐயோ இயற்கையை கெடுக்கிறாங்கள் என்கிறியள். இப்ப சனம் என்னதான் செய்ய?
 
மறுபடியும் வாசிக்கவும்.

 

இப்ப திருப்திதானே. 
 
இவங்கள் சொல்லுவாங்கள் செய்யமாட்டாங்கள் என்ற விளையாட்டுக்கு நான் வரல்ல.

 

 

வீடு கட்ட பயன்படுத்த்க்கூடிய மணல் யாழ்மாவட்டத்தில் பல  பல இடங்களில் கிடைக்கின்றன. பல தரிசு நிலங்கள். ஆழமாக்கப்படவேண்டிய பல வயல் வெளிகள் இருக்கின்றன. அந்த மணல்களும் பலவகைகளில் பயன்படுத்தக்கூடியதே!!!
 
கட்டாயம் கண்டாவளை மண் வேணுமெண்டால் கண்டாவளைக்குத்தான் போகோணும்.  :D

 

வீடு கட்ட பயன்படுத்த்க்கூடிய மணல் யாழ்மாவட்டத்தில் பல  பல இடங்களில் கிடைக்கின்றன. பல தரிசு நிலங்கள். ஆழமாக்கப்படவேண்டிய பல வயல் வெளிகள் இருக்கின்றன. அந்த மணல்களும் பலவகைகளில் பயன்படுத்தக்கூடியதே!!!
 
கட்டாயம் கண்டாவளை மண் வேணுமெண்டால் கண்டாவளைக்குத்தான் போகோணும்.  :D

 

 

சூழல் பாதிப்பு எனும் விடயத்தில் நான் உங்களுடன் முற்றுமுழுதாக உடன்படுகின்றேன். 
 
"வீடு கட்ட பயன்படுத்த்க்கூடிய மணல் யாழ்மாவட்டத்தில் பல  பல இடங்களில் கிடைக்கின்றன. பல தரிசு நிலங்கள். ஆழமாக்கப்படவேண்டிய பல வயல் வெளிகள் இருக்கின்றன. அந்த மணல்களும் பலவகைகளில் பயன்படுத்தக்கூடியதே!!!"
 
இவற்றை விட்டு விட்டு ஏன்டா கண்டாவளையில தோண்டுகின்றீர்கள் என்று கேட்டா அதில் நியாயம் இருக்கு. இவ்வாறான மாற்று வழிகளையும் மாற்றுக் கருத்துக்களையுமே எதிர் பார்க்கின்றேன்.

 

வீடு கட்ட பயன்படுத்த்க்கூடிய மணல் யாழ்மாவட்டத்தில் பல  பல இடங்களில் கிடைக்கின்றன. பல தரிசு நிலங்கள். ஆழமாக்கப்படவேண்டிய பல வயல் வெளிகள் இருக்கின்றன. அந்த மணல்களும் பலவகைகளில் பயன்படுத்தக்கூடியதே!!!
 
கட்டாயம் கண்டாவளை மண் வேணுமெண்டால் கண்டாவளைக்குத்தான் போகோணும்.  :D

 

 

இதை பரிசீலிக்காமல் இல்லை, மணற்காடு போன்ற இடங்களில் தேவைக்கும் அதிகமாக இருக்கும் மண்ணினை அள்ளப்படுவதால் அந்த இடம் மீண்டும் பாவனைக்கு எடுத்துகொள்ள சந்தர்ப்பம் இருக்கும்.

 

போக அந்த மனற்கும்பிக்ளால் பெரும் நமைகள் இருக்கா அல்லது இருக்கும் நிலத்தை தோண்டி எடுக்கம்ப்படும் மணலால் நன்மை இருக்கா?

 

போக இதுவரைகாலமும் எந்த அனுமதியும் இல்லாமல் மணல் அள்ளப்பட்டது அதை இப்பொது கட்டுப்பாடோடு அனுமதியுடனே அல்லபடுகிறது.

 

இது முழுக்க முழுக்க சரி என்று சொல்லவில்லை, இருந்தாலும் அவர்கள் இதை ஆராயாமல் செய்கிறார்கள் என்று சொல்லவும் முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஞ்சல் குப்பை இல்லாத சுத்தமான மண் அள்ள வெளிக்கிட்ட மண்கும்பான் இப்ப எப்பிடி இருக்குது எண்டு ஆருக்கும் தெரியாது போலை கிடக்கு. ^_^

உணமை தான் கு. சா,

உங்கள் வாதத்தை மறுக்கவில்லை.

முன்னைய காலங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்க ஒரு பஜனைக் கோஸ்டியயையும் காணேல்ல.....நாங்கெல்லாம் அந்தக் காலத்தில....

அவன் இருந்தா.....

முன்பு அவர்கள் ஆட்சியில்......

இப்போதைக்கு ஒரு 4 பேராவது வந்திருக்கோணுமே :)

  • கருத்துக்கள உறவுகள்

மணல் வளம் போன்ற மீளக் காலம் எடுக்கும் வளங்கள் பாவனையில்.. அதுவும் கடல் விழுங்கும் யாழ் குடாநாடு மிகவும் அவதானமாக இருப்பது அவசியம்.

 

இந்த மணல் பாவனையில்.. sustainability and environmental issues முக்கியமாக கருத்தில் எடுக்கப்பட்டு.. இதனை மாகாண சுற்றுச்சூழல் அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்.. யாழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறைசார் நிபுணத்துவப் பரிந்துரைகளின் கீழ்..  செய்ய அனுமதிப்பது மட்டுமே சிறந்தது.

 

இங்கு ஊழல்.. சிங்கள..மத்திய அரசின் செல்வாக்கு.. துஸ்பிரயோகம்.. சிங்கள இராணுவச் செல்வாக்கு.. சிங்களப் பொலிஸ் செல்வாக்கு.. சிங்கள கடற்படை செல்வாக்கு.. ஒட்டுக்குழு செல்வாக்கு.. இந்திய தூதரகச் செல்வாக்கு.. அமெரிக்க தூதரகச் செல்வாக்குக்கு.. சம் சும் கும்பலின் சட்டத்தரணிகள் செல்வாக்கு.. இவற்றிற்கு.. எல்லாம் இடமளிக்கக் கூடாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஆட்சியில், சிங்களவன் குண்டு போட்டு.... வீடுகளை இடிக்க, இடிக்க....
மக்கள் வீடுகளை...திருத்திக் கட்டிக் கொண்டுதானே... இருந்தார்கள்.
அப்போ.... வராத மண் பிரச்சினை, இப்போ... ஏன் வந்தது.
புலிகளுக்கு.... தாம் நேசித்த நிலத்தின், சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் இருந்ததால்....
அவர்கள் கை காட்டிய இடத்தில் தான்.... மக்கள் மணல் எடுத்து. வீடு கட்டினார்கள்.
இப்போ.... தமிழ் நிலத்தில் அக்கறை இல்லாத, சிங்கள அரசு... ஆபத்தான இடங்களில்,

மண்ணை தோண்டி எடுக்கும் படி சொல்வது.... சந்தேகத்துக்குரியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.