Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடங்கியது தேர்தல் காய்ச்சல்!ஆதரவாளர்கள் சந்திப்பும் ஆரம்பம்!!

Featured Replies

இலங்கை நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படும் நிலையினில் தமிழ் தரப்புக்களும் ஆதரவாளர்கள் சந்திப்புக்களை ஆரம்பித்துள்ளன.கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் தனிதனியாக சந்திப்புக்களை ஆரம்பித்துள்ளன.
sures-4.JPG
சுரேஸ்பிறேமச்சந்திரன் தரப்பின்; கட்சி ஆதரவாளர்களுக்கான ஒன்றுகூடல் இன்று யாழினில் நடைபெற்றிருந்தது இதில் சமகால அரசியல் கருத்துக்களை தானும் வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும்,வடக்கு மாகாணசபை உறுப்பினர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோரும் வழங்கினோம்.நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி ஆதரவாளர்களும் தமது கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொண்டனதென சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
sures-1.JPG
இதனிடையே இம்முறை சம்பந்தனின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையினில் இலங்கை தமிழரசுக் கட்சி திருகோணமலை மாவட்ட கிளை கூட்டம் இன்று சனிக்கிழமை நியூ சில்வெர் ஸ்டார் விடுதியில் நடைபெற்றிருந்தது.கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சம்பந்தன் உள்ளி;ட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
sures-2.JPG
சம்பந்தனை வெற்றி கொள்ளவைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

  • கருத்துக்கள உறவுகள்
இம்முறை சம்பந்தனின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையினில் 

 

இது எப்படி பதிவுக்கு தெரியும். கருத்து கணிப்பு நடாத்தியதா??

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி பதிவுக்கு தெரியும். கருத்து கணிப்பு நடாத்தியதா??

 

வெற்றிலை சாத்திரம் பார்த்திருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

achaman-3.jpg

சம்பந்தனும், சுமந்திரனும்.... கட்டுக்காசை இழந்து.... தேர்தலில் மண்கவ்வப் போவது உறுதி.
இந்த முறை இருவருக்கும், பட்டை நாமம் சாத்தி.... தண்ணீர் தெளித்து,  கைகழுவி விட....
தாயகத்து மக்கள் உள்ளார்கள் என்று, அங்குள்ள மக்களிடம் தொலைபேசியில்.. உரையாடிய போது தெரிவித்தார்கள்.

 

இது எப்படி பதிவுக்கு தெரியும். கருத்து கணிப்பு நடாத்தியதா??

 

பதிவை பற்றி தெரியாதா? 

achaman-3.jpg

சம்பந்தனும், சுமந்திரனும்.... கட்டுக்காசை இழந்து.... தேர்தலில் மண்கவ்வப் போவது உறுதி.

இந்த முறை இருவருக்கும், பட்டை நாமம் சாத்தி.... தண்ணீர் தெளித்து,  கைகழுவி விட....

தாயகத்து மக்கள் உள்ளார்கள் என்று, அங்குள்ள மக்களிடம் தொலைபேசியில்.. உரையாடிய போது தெரிவித்தார்கள்.

 

 

நடந்த எந்த தேர்தல்களிலும் சம்பந்தர் கட்டுகாசை இழந்ததில்லை.

 

அனால் கடந்த நாடுமன்ர தேர்தலிலும் மாகாணசபை தேர்தல்களிலும் போட்டி தமிழ் தேசிய அமைப்பு கட்டுக்காசை இழந்தது.

 

உங்களுடன் உரையாடினவர்கள் பதிவு தளத்தில் வரும் செய்தியை மாத்திரம் படிப்பவர்களாக இருக்கும்  :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த எந்த தேர்தல்களிலும் சம்பந்தர் கட்டுகாசை இழந்ததில்லை.

 

அனால் கடந்த நாடுமன்ர தேர்தலிலும் மாகாணசபை தேர்தல்களிலும் போட்டி தமிழ் தேசிய அமைப்பு கட்டுக்காசை இழந்தது.

 

உங்களுடன் உரையாடினவர்கள் பதிவு தளத்தில் வரும் செய்தியை மாத்திரம் படிப்பவர்களாக இருக்கும்  :)  :)

 

என்னுடன் உரையாடியவர்கள் அனைவரும் சமூகத்தில், தினமும் பல்வேறு மக்களுடன் தொடர்புகளில் இருப்பவர்கள்.

உதாரணத்துக்கு... பாடசாலை ஆசிரியர்கள்,  சங்கக் கடை மனேஜர், சினிமா தியேட்டரில் வேலை செய்பவர்கள், கோவில் வாசலில் கற்பூரம், தேங்காய்  கடை வைத்திருப்பவர்கள், மரக்கறி, மீன்சந்தை வியாபாரிகள், திருமண புரோக்கர்  போன்றோர்.

அவர்கள் கணிப்பின் படி, சம், சும்... கோஷ்டிக்கு... இந்த முறை, அல்வா... தான்.. என்று, அடித்துக் கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் செல்வாக்கு மட்டுமல்ல.. சம் சும் மட்டுமல்ல.. மாவை பிரேமச்சத்திரன் போன்றவர்களின் பச்சோந்தித்தனமான நடவடிக்கைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கையும் மக்கள் மத்தியில் குறைத்தே வந்துள்ளது.

 

சம்.. சும் கும்பல்.. சிங்களப் பாராளுமன்றம் கலைக்க முன்னம் களத்தில் இறங்கியுள்ளமை.. சம்பூர் என்ற விழுதை பற்றிக் கொண்டு தொங்கிக் கொண்டுள்ளமை.. சும்மின் வடக்கில் வன்முறைகள்.. போதைப்பொருள் மீதான திடீர் கரிசணை.. எல்லாமே வாக்குப் பொறிக்கி அரசியலுக்கானது என்பதை யாழ் உறவுகள்.. பலர்.. இந்த இடிமுழக்கங்கள் எழ முன்னமே எதிர்வு கூறிவிட்டார்களே. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியெல்லாம் எமது போராட்டம் மாறிக்கொண்டு போகிறது.

சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக போராடிய நாங்கள், இப்போ எங்களுக்குள்ளேயே போராடத்தொடங்கிவிட்டோம்.

இது எம்மை எங்கே கொண்டுசெல்லப்போகிறது?

இது சிங்கள அரசாங்கத்தின் கெட்டித்தனமா அல்லது எம் இனத்தின் முட்டாள்தனமா? 

காலம் தான் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்கு எதிராக போராடிய ஒவ்வொரு பொழுதிலும்.. அரசியல் துரோகத்தனங்களுக்கு எதிராகவும் போராட வேண்டி இருந்தது. இது பொதுவாக எல்லா விடுதலைப் போராட்ட மக்களும் எதிர்கொண்ட பிரச்சனை தான். அதையும் தாண்டித் தான் வந்தாக வேண்டும்.. விடுதலை என்பதை சுவைக்க வேண்டின். :icon_idea:

என்னுடன் உரையாடியவர்கள் அனைவரும் சமூகத்தில், தினமும் பல்வேறு மக்களுடன் தொடர்புகளில் இருப்பவர்கள்.

உதாரணத்துக்கு... பாடசாலை ஆசிரியர்கள்,  சங்கக் கடை மனேஜர், சினிமா தியேட்டரில் வேலை செய்பவர்கள், கோவில் வாசலில் கற்பூரம், தேங்காய்  கடை வைத்திருப்பவர்கள், மரக்கறி, மீன்சந்தை வியாபாரிகள், திருமண புரோக்கர்  போன்றோர்.

அவர்கள் கணிப்பின் படி, சம், சும்... கோஷ்டிக்கு... இந்த முறை, அல்வா... தான்.. என்று, அடித்துக் கூறுகிறார்கள்.

 

உணம்யாகக்கூட இருக்கலாம் சிறி.

 

தேர்தல்கள் வந்துகொண்டேதான் இருக்கும் முடிவுகளும் வந்துகொண்டேதான் இருக்கும் சிலர் ஓரிரு முடிவுகளில் இருந்து பாடம் படிப்பார்கள் சிலர் இன்னும் சில அதிகமான முடிவுகளில் இருந்து படிப்பார்கள்.

 

இன்னும் சிலர் எப்பவுமே படிக்க மாட்டார்கள். 

 

எது எப்படியே பிரச்சனை மாத்திரம் இருந்து கொண்டேதான் இருக்கும். 

 

 

இன்னமொன்ரையும் சொல்ல மறந்திட்டன்.. உங்களின் தொடர்புகளை பார்த்தால் நீங்களும் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் போல இருக்கு.

நிங்கள் ஊரைவிட்டு வெளிக்கிட்டு முப்பது வருடங்கள் போனாலும் சமூகத்தோடு ஒட்டி இருக்கிறீர்கள்.

 

Edited by Sooravali

எப்படியெல்லாம் எமது போராட்டம் மாறிக்கொண்டு போகிறது.

சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக போராடிய நாங்கள், இப்போ எங்களுக்குள்ளேயே போராடத்தொடங்கிவிட்டோம்.

இது எம்மை எங்கே கொண்டுசெல்லப்போகிறது?

இது சிங்கள அரசாங்கத்தின் கெட்டித்தனமா அல்லது எம் இனத்தின் முட்டாள்தனமா? 

காலம் தான் பதில் சொல்லும்.

 

என்ன வசி இப்படிக் கேட்டுட்டீங்கள்.
 
நாம் என்றைக்குத்தான் சிங்கள அரசாங்த்தோடை மட்டும் போராடினாங்கள். ஆயுதம் தூக்கின நாளில் இருந்தே அவனைப் போடு இவனைப் போடு என்ற காட்டுக்கத்தல்தான் எல்லாரிடமிருந்தும் கேட்டது. 
 
அப்புறம் தேதவின் வழிநடத்தலில் மற்றய இயகங்களை போட வெளிக்கிட்டு, பின்னர் அவங்களும் ஒட்டுக்குழு ஒட்டாதகுழுக்களாகி நமைச்சல் குடுக்க - வேலில போன ஓணானை பிடிச்சு எங்கேயோ விட்ட கதையாகி ஐயோ குத்துது குடையுதெண்டு கத்தி குளறி...
 
சீ.. இவ்வளவும் நடந்திருக்கு நீங்கள் என்னடாவென்றால் நாங்கள் இப்போது எங்களுக்குள்ளேயே போராடத்தொடங்கிவிட்டோம் என்கிறீர்கள். 
 
இருப்பினும் ஜனநாயக ரீதியான இப்போதைய உள்போராட்டமானது வரவேற்கப்படக்கூடியதே. நிச்சயமாக கூட்டமைப்பிற்கும் ஒரு எதிர்கட்சி தேவையே. இல்லாவிட்டால் அவர்களும் கடிவாளம் இல்லாத குதிரைகள் போலாகி விடுவார்கள். மக்கள் மீது கூட்டமைப்பிற்கும் ஒரு பயம் இருக்க வேண்டியது முக்கியம்.
 
தேர்தலில் வெல்பவர்கள் யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. வென்றபின் மக்களின் அபிலாசைகளிற்கேற்ப ஒருங்கிணைந்து (ஒரு கட்சியில் இல்லை) மக்களிற்காக பணியாற்ற வேண்டும் என்பதே எனது அவா.
 
மக்களின் முடிவை ஆதரிப்போம். ஆனால் இப்போதைய நிலையில் கூட்டமைப்பைத் தவிர ஏனையோருக்கு சந்தர்ப்பம் இருப்பதாகத் தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.