Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"காலிஸ்தான்"... சீக்கியர்களின் ஆயுதப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்... உளவுத்துறை எச்சரிக்கை

Featured Replies

டெல்லி: காலிஸ்தான் தனிநாடு கோரி சீக்கியர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் விடுதலை இயக்கத்தின் இலட்சியம். இந்த கோரிக்கையை முன்வைத்து 1980களில் உக்கிரமான ஆயுதப் போராட்டம் நடைபெற்றது.

17-1434537718-khalistan.jpg

 

இந்த ஆயுதப் போராட்டத்தின் உச்சமாக 1984ஆம் ஆண்டு தனிநாடு கோரும் போராளிகள் தங்கியிருந்த அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து வேட்டையாடியது. இதில் தனிநாடு கோரும் இயக்கத்தின் தலைவர் பிந்தரன்வாலே உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். பஞ்சாப் பொற்கோவிலுக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த ப்ளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கவே அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடையோர் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என பல நாடுகளிலும் அகதிகளாக அடைக்கலம் புகுந்தனர். இருந்தபோதும் பல்வேறு வகைகளில் சீக்கியர்களுக்கான காலிஸ்தான் நாடு கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 6-ந் தேதியன்று ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது இந்திய அரசுக்கு எதிராகவும் காலிஸ்தான் விடுதலைப் போரை ஒழித்துக் கட்டியதைக் கண்டித்தும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. லண்டனின் ஹைட் பார்க்கில் 3 ஆயிரம் சீக்கியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் இங்கிலாந்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் இந்திய தூதரகத்துக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளும் சீக்கியர்களுடன் கரம் கோர்த்தனர். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு சீக்கியர்களின் குருத்வாராக்களே நிதி உதவி செய்வதாகவும் இந்தியாவில் சீக்கியர்களின் தீவிரவாதத்தை மீண்டும் துளிர்விட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா' அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். இந்த சீக்கிய தீவிரவாதத்தை தொடக்கத்திலேயே ஒடுக்குவதற்கான வியூகத்தையும் உளவுத்துறை வகுத்துவருகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/intel-alerts-centre-on-revival-sikh-militancy-228972.html

 

இந்தியாவிலும் ஒரு முள்ளிவாய்க்காலா? நம்பவே முடியவில்லையா? வினை விதைத்தால் தினையா அறுக்க முடியும் வினையத்தான் அறுக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய அரசுக்கு எதிராகவும் காலிஸ்தான் விடுதலைப் போரை ஒழித்துக் கட்டியதைக் கண்டித்தும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. லண்டனின் ஹைட் பார்க்கில் 3 ஆயிரம் சீக்கியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் இங்கிலாந்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் இந்திய தூதரகத்துக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளும் சீக்கியர்களுடன் கரம் கோர்த்தனர்.
புலம்பெயர்ந்த காலிஸ்தான் வால்கள்......சும்மா லண்டனிலும்,ஜெர்மனிலும் இருந்து வாளைத்தூக்காமல் இந்தியாவில போய் போராடவேணும் :D
  • கருத்துக்கள உறவுகள்

காலிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வதற்குப் பல இன மக்களின் போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன.

ஆனால் தமிழ் நாடு மட்டும் ஹிந்தியா ஹிந்தியா எனக்கூவி ஹிந்தியர்களின் வாலைப்பிடித்துத் தொங்குகின்றது

புலம்பெயர்ந்த காலிஸ்தான் வால்கள்......சும்மா லண்டனிலும்,ஜெர்மனிலும் இருந்து வாளைத்தூக்காமல் இந்தியாவில போய் போராடவேணும் :D

வாலுகள் என்றால் ஆடத்தானே செய்யும் .

பஞ்சாப் படுகொலைக்கு பிறகு இரண்டு தடவைகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.அரசியல் என்பது இதுதான் .

காலிஸ்தானுக்காக குரல் கொடுத்த பலர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து விட்டார்கள் .கனடா,பிரிட்டன் போன்ற நாடுகளில் அவர்கள் பெருமளவில் இருக்கின்றார்கள் .ஆனால் காலிஸ்தான் போராட்டம் நாட்டில் ஆரம்பித்த இணக்க அரசியலால் படுத்துவிட்டது என்றே சொல்லாலாம் .கனடாவில் இருந்தவர்களும் கனேடிய விமானத்திற்கு வைத்த குண்டுடன் ஓரளவு அடங்கிவிட்டார்கள் .

இந்திரா காந்தி கொலையுடன் காங்கிரஸ் செய்த அட்டூழியங்கள் அளவு கணக்கில்லை அதை சீக்கியர்கள் நினைவு கூரத்தான் வேண்டும் அதை வைத்துக்கொண்டு காலிஸ்தான் பிடிப்போம் என்றால் இங்கிருந்து எம்மவர் காணும் ஈழக்கனவு போலத்தான் அதுவும் .

  • கருத்துக்கள உறவுகள்

 இனி தெரு  ........குலைக்க வெளிகுடுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

வாலுகள் என்றால் ஆடத்தானே செய்யும் .

பஞ்சாப் படுகொலைக்கு பிறகு இரண்டு தடவைகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.அரசியல் என்பது இதுதான் .

காலிஸ்தானுக்காக குரல் கொடுத்த பலர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து விட்டார்கள் .கனடா,பிரிட்டன் போன்ற நாடுகளில் அவர்கள் பெருமளவில் இருக்கின்றார்கள் .ஆனால் காலிஸ்தான் போராட்டம் நாட்டில் ஆரம்பித்த இணக்க அரசியலால் படுத்துவிட்டது என்றே சொல்லாலாம் .கனடாவில் இருந்தவர்களும் கனேடிய விமானத்திற்கு வைத்த குண்டுடன் ஓரளவு அடங்கிவிட்டார்கள் .

இந்திரா காந்தி கொலையுடன் காங்கிரஸ் செய்த அட்டூழியங்கள் அளவு கணக்கில்லை அதை சீக்கியர்கள் நினைவு கூரத்தான் வேண்டும் அதை வைத்துக்கொண்டு காலிஸ்தான் பிடிப்போம் என்றால் இங்கிருந்து எம்மவர் காணும் ஈழக்கனவு போலத்தான் அதுவும் .

 

 

புலிகளை  வசை பாடுவதற்கான உங்களது காரணங்கள்

உங்களது இந்த எழுத்தின் மூலம் வலுவிழக்கின்றன.

 

 

அப்படியென்றால் இப்படி என்பதும்

இப்படியென்றால் அப்படியென்பதும் 

நாக்குவளைக்கமட்டுமே  உதவும் ........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.