Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் பொதுத்தேர்தலில் திருமலையில் போட்டியிட விண்ணப்பத்தை மாவையிடம் கையளித்தார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் பொதுத்தேர்தலில் திருமலையில் போட்டியிட விண்ணப்பத்தை மாவையிடம் கையளித்தார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2015, 02:35.49 AM GMT ]

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார்.

இலக்கம் 36 மார்டின்வீதி யாழ்ப்பணத்திலுள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் தமது எழுத்து மூலமான விண்ணப்பத்தை, நேற்று முன்தினம் சமர்ப்பித்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட இருந்த வட/கிழக்கு இடைக்கால நிருவாகக் கட்டமைப்பில் புலிகளின் சார்பில் ரூபனுடன் தெரிவாகி இருந்தவரும் தற்போதைய வடமாகாணசபை சபாநாயகர் ஆகிய திரு.சீ .வி . கே. சிவஞானம் அச்சமயம் மாவையுடன் இருந்தார். மேலும் கட்சியின் துணைத் தலைவர் திரு. க.துரைரட்ணசிங்கம் மூலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் திரு. இரா. சம்பந்தருக்கான பிரதியை அவர் அனுப்பி இருந்தார் . கட்சிச் செயலருக்கான பிரதியை பதிவுத் தபால் மூலம் அனுப்பி உள்ளார்.

மாவையிடம் சமர்பித்த இவ் விண்ணப்பத்தில் தாங்கள் கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் மட்டக்களப்பில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் தீவிரவாத இளைஞனாக இருந்த போது மட் / சிறையிலிருந்த அனுபவங்களை பகீர்ந்து கொண்டீர்கள் என்பதாலும், சுவிட்சர்லாந்தில் கருத்து தெரிவிக்கும் போது கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரனை சந்தித்த நாளை மறக்க முடியாத நினைவாக குறிப்பிட்டீர்கள் என்ற வகையிலும் தீவிரவாத இளைஞர்களின் உணர்வுகளை உங்களால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும் என்று முழுமையாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திருமலை மாவட்டத்தில் தனக்கு வேட்பாளாராக நிற்கும் வாய்ப்பு வழங்கப்படுமிடத்து இத் தேர்தலில் இம் மாவட்டத்திலிருந்து கட்சியின் சார்பில் இரு உறுப்பினர்களை தெரிவு செய்யப்படுவதற்கு ஏற்றவகையில் செயலாற்றும் திறன் தனக்கு உன்ளது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒரு போராளியாக இதுவரை மக்கள் சேவையை செய்து வந்த நான் பாராளுமன்ற அங்கத்துவத்தின் மூலம் போரால் பாதிக்கப்பட்டு சீரழிந்து போன மக்களுக்காக மட்டுமன்றி அனைத்து தமிழ் பேசும் மக்களுக்காகவும் இறுதிவரை பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

திரு.ரூபன் 13.05.1985 முதல் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த 17/05/2009 வரையிலான 24 வருடங்கள் புலிகள் அமைப்பில் போராளியாக விளங்கினார்.

1989 முதல் 1993 வரை திருமலை அரசியல் பொறுப்பாளராக கடமையாற்றினார்.

1990 யில் பிரேமதாசா அரசுடனான பேச்சு வார்த்தைகளில் பங்கு பற்றினார்.

1995 யில் சந்திரிக்கா அரசுடனான பேச்சுவார்த்தையின் நிமிர்த்தம் மீண்டும் திருமலை அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1996 யாழ் இடம்பெயர்வின் பின் 1996 செப்டெம்பர் முதல் 2000 டிசம்பர் வரை பொருமிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராக செயலாற்றினார்.

2000 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருமலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி 13000 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று தமிழ் பிரதிநித்துவம் இழந்தது. இதனை அடுத்து திரும்பவும் தமிழ் பிரதிநித்துவத்தை ஏற்படுத்தும் பொருட்டு மீண்டும் அரசியல் பொறுப்பளாராக தலைவர் பிரபாகரனால் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

23/10/2001 யில் சம்பந்தன் ஐயாவை சேனையூருக்கு அழைத்து இவ் விடயம் பற்றி கலந்துரையாடினார். அதன் பின் நடந்த தேர்தலில் கட்சி 66500 மேற்பட்ட வாக்குகளை பெறவும் சம்பந்தன் ஐயா மீண்டும் பாராளுமன்றத்துக்கு செல்ல வழிவகுத்தார்.

அமெரிக்காவில் அரசியல் கற்கை நெறிகளை கற்று வந்த ஒருவரின் துணையுடன் ஊடகவியாலாளர் ந.வித்தியாதரன் போன்றோர். முன்னநாள் போராளிகள் மாவீரர் குடும்பங்களின் வாக்குகளை சிதறடிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அரசியல் அனுபவமும் மக்களுடன் நெருங்கிய தொடர்பும் உள்ளவருமான ரூபன் தமிழரசுக் கட்சியிடம் வேட்பாளர் நியமனம் கோரியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

http://www.tamilwin.com/show-RUmtyGRcSUeo1A.html

  • கருத்துக்கள உறவுகள்

'புபுவா'களின் தாளத்துக்கு ஆடாதவரையில் முன்னாள் போராளியான ரூபன் தகுதியானவரே!  

  • கருத்துக்கள உறவுகள்

மாவை தமிழரசுக் கட்சி குறித்து அவதானத்தோடு நகர்வுகளைச் செய்வது மூத்த போராளிகளுக்கு நல்லது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியாக வந்தமையால் விண்ணப்பம் நிராகரிக்கப்படவே சாத்தியக்கூறுகள் அதிகம். புலிநீக்க அரசியல் செய்ய விரும்பும் சம்சும் பூசாரிகளிலான கூட்டமைப்பு எப்படி ஒரு முழுப்புலியை உள்ளே விடுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக அவருக்கு இடம் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். அனந்தியை அடக்கவும் வாக்குகளை பெறவும் இப்படியொரு அடையாளத்தை தமிழ் மக்களுக்குக் காட்ட வேண்டி உள்ளது.இவரும் துள்ளினால் அடுத்த தேர்தலில் இவரை விட்டு இன்னொரு புலியைப் போடுவார்கள். .திருகோணமலையில் சம்பந்தருக்கு எதிராக ததேமுன்னணி கடுமையாக வேலை செய்யும்.ஆகவே இப்படி ஒரு ஆளைப் போடுவது வாக்குகள் சிதறாமல் ததேமூட்டமைப்புக்கே போக வழிவகுக்கும்.புலியை எதிர்த்து ததேமுன்னணியினரும் பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். தன்னை விடக் கூடுதலான வாக்குகளைப் புலி பெற்று தனக்கு ஆப்பு வைத்து விடுவாரோ என்ற பயமும் சம்பந்தருக்கு இருப்பதால் ஒரு பிரதிநிதித்துவம் வந்தாலும் தனக்கு வரட்டும் என்று சம்பந்தர் நிராகரிக்கவும் இடமுண்டு.ஆனந்தசங்கரியின் நிலமை தனக்கு வரக்கூடாது என்று சம்பந்தர் நினைப்பார்.

ரூபனுக்கு போடியிட எக்காரணம் கொண்டும் இடம் கொடுக்க  அனுமதிக்க மாட்டோம் ,இவர் அரசியல் பொறுப்பாளராக இருக்கும் போதே எதையும் சாதிக்காதவர் இப்பொழுது சாதிக்கப்போகின்றார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரூபனுக்கு போடியிட எக்காரணம் கொண்டும் இடம் கொடுக்க  அனுமதிக்க மாட்டோம் ,இவர் அரசியல் பொறுப்பாளராக இருக்கும் போதே எதையும் சாதிக்காதவர் இப்பொழுது சாதிக்கப்போகின்றார் .

நீங்களும் நீங்கள் சார்ந்த கட்சியும் ஒருவர் சாதித்தார் என்பதை எதனை வைத்து அளவிடுகிறீர்கள்?

ஆமா தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் எல்லாரும் சாதித்தவர்களா? அவர்கள் சாதித்தது என்ன?

விடுதலைப் புலிகளின் தலைவர் சர்வாதிகாரி, விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை, விடுதலைப்புலிகள் செய்தது பிழை என்று சொல்லும் நீங்கள் ரூபன் எதையும் சாதிக்காதவர் என்பது முரண்.

ரூபனுக்கு போடியிட எக்காரணம் கொண்டும் இடம் கொடுக்க  அனுமதிக்க மாட்டோம் ,இவர் அரசியல் பொறுப்பாளராக இருக்கும் போதே எதையும் சாதிக்காதவர் இப்பொழுது சாதிக்கப்போகின்றார் .

அண்ணை அப்ப ரூபனுக்கு புனர்வாழ்வு குடுத்துதானே வெளியில விட்டனியல், அவர் இப்ப மாறியிருப்பார், ஒருக்கா சந்தர்பம் குடுத்து பாருங்கள், ப்ளீஸ்.....

அவருக்கு சாதிக்கத் தெரியாததால தான் கருணாவோட போகவில்லை

ரூபனுக்கு போடியிட எக்காரணம் கொண்டும் இடம் கொடுக்க  அனுமதிக்க மாட்டோம் ,இவர் அரசியல் பொறுப்பாளராக இருக்கும் போதே எதையும் சாதிக்காதவர் இப்பொழுது சாதிக்கப்போகின்றார் .

மக்களுக்கா போராடிய ஒரு போராளிக்கு கொடுக்க கூடாது என்று சொல்லும் அதிகாரத்தை யார் உங்களுக்கு தந்தது .இதென்ன உங்களின் சர்வாதிகரமா ? ...

ஆட்கள் இல்லாத இடத்தில எலிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்

இதில் கருத்துபதிவிட்ட எவராவது அவரை பற்றி தெரிந்தா கருத்திட்டீர்கள்.?

இந்த செய்தியை பார்த்த முன்னாள் போராளிகள் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு ரூபனை உள்வாங்க வேண்டாம் என்று சொன்னார்கள் ,அவர்களில் சிலரை மாவை ,சம்பந்தன் ஐயா வுக்கு சொல்லக்கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தேன் .ரூபனுடன் ஒன்றாக போராடியவர்களுக்கு தெரியாதது ,இதில் கருத்திட்ட உங்களுக்கு தெரியப்போகின்றதா ?
 
  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்துபதிவிட்ட எவராவது அவரை பற்றி தெரிந்தா கருத்திட்டீர்கள்.?

இந்த செய்தியை பார்த்த முன்னாள் போராளிகள் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு ரூபனை உள்வாங்க வேண்டாம் என்று சொன்னார்கள் ,அவர்களில் சிலரை மாவை ,சம்பந்தன் ஐயா வுக்கு சொல்லக்கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தேன் .ரூபனுடன் ஒன்றாக போராடியவர்களுக்கு தெரியாதது ,இதில் கருத்திட்ட உங்களுக்கு தெரியப்போகின்றதா ?
 

மாவை

சம்பந்தர் ஐயா அவர்கள் முன்நாள் புலிகளுடன் பேசுவார்களா??

தாயகத்தில் முன்நாள் புலிகளுடன் சற்றுதள்ளி நிற்பவர்கள்

 பயங்கரவாதிகளுடன்.....?

அதுவும்

புலம்பெயர்ந்த பயங்கரவாதிகளுடன்.......?:(

 

 

 

மாவை

சம்பந்தர் ஐயா அவர்கள் முன்நாள் புலிகளுடன் பேசுவார்களா??

தாயகத்தில் முன்நாள் புலிகளுடன் சற்றுதள்ளி நிற்பவர்கள்

 பயங்கரவாதிகளுடன்.....?

அதுவும்

புலம்பெயர்ந்த பயங்கரவாதிகளுடன்.......?:(

 

 

அவர்களில் சிலரை மாவை ,சம்பந்தன் ஐயா வுக்கு சொல்லக்கூடியவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தது குற்றம் இல்லையோ? 

ரூபனை பற்றி தெரிந்தவர்கள் தாராளமாக எழுதுங்கள். சும்மா புரளிகளை கிழப்பாதீர்கள்.

பிரபாகரனுடன் ஒன்றாக போராடியவர் தான் முரளிதரன் ( கருணா).

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு.... இந்த முறை சீட் கிடைக்குமோ தெரியாது?
பிறகு ஏன், முரளிதரன்... விண்ணப்பத்தை, மாவையிடம் குடுத்தவர்.:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.