Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பு அழைத்தால் இணையத் தயார்! சங்கரி

Featured Replies

கூட்டமைப்பு அழைத்தால் இணையத் தயார்! சங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைத்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி இனத்தின் நன்மை கருதி மீள இணைந்து கொள்ள தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைத்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி இனத்தின் நன்மை கருதி மீள இணைந்து கொள்ள தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில், இன ஒற்றுமையை வலியுறுத்தி தமிழர் விடுதலைக்கூட்டணி பல அறிக்கைகளை வெளியிட்டது. அதனையடுத்து வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எமது கட்சியின் செயலாளர் நாயகத்தினை கிளிநொச்சி மாவட்டத்தில் நிறுத்தியிருந்த போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சியின் சிலரால் தமிழர் விடுதலைக்கூட்டணி தோற்கடிக்கப்பட்டது.

எது எவ்வாறாயினும் இன்றும் ஒன்றுபட வருமாறு அழைப்பு விடுத்தால் இனத்தின் நன்மை கருதி நடந்ததை மறந்து இணைந்து செயற்பட தமிழர் விடுதலைக்கூட்டணி தயாராக உள்ளது. நாட்டில் பல்வேறு இன மக்கள் இன வேறுபாட்டை மறந்து ஒருவரோடு ஒருவர் சமாதானமாகவும் சம உரிமையோடும் வாழும் நிலை உருவாகும் வரை இனப்பிரச்சனைக்கு இந்திய முறையிலான அமைப்பை அமுல்படுத்த அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்.

13 ஆம் அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துமாறும் அழுத்தம் கொடுக்கும். அத்துடன் 1995 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டமும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும். தடுப்பு காவலிலுள்ள கைதிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிலர் கூறிவந்தாலும் அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்ற அமைச்சரின் கூற்று அதிர்ச்சியை தருகின்றது. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.jvpnews.com/srilanka/118976.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனம் இனத்தோடை சேருது.....இதிலையிருந்து என்ன தெரியுது????????

கள்ளர் கூட்டம் கள்ளரோடைதான் சேரும். 

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை உந்தாள் கூட்டமைப்பை திட்டியதாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை உந்தாள் கூட்டமைப்பை திட்டியதாக ஞாபகம்.

வாற கிழமையும்... உந்தாள் கூட்டமைப்பை திட்டும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

 அரசியல்வாதிகளின் பேச்சு தேர்தல் முடிஞ்சா போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தர் சேரவேண்டிய இடம் கஜே கோஸ்டி தான்! :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தர் சேரவேண்டிய இடம் கஜே கோஸ்டி தான்! :grin:

t2629.gif அந்தாள்.... சம்சும் கோஸ்டியில் சேரத்தான் ஆசைப்படுது.:grin:

ஒரிஜினல் காங்கிரஸ்  ஆள்  சங்கரி .

இப்ப வெல்ல போகின்றவர்களுடன் சேர நிற்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா உதய~ரியன் சின்னத்தை தர மறுத்த சங்கரியை சம்பந்தர் உள்ள கொண்டு வந்தார். மக்கள் தூக்கி எறிஞ்சிட்டினம்.அது சங்கரிக்கு விழுந்த குட்டு இல்லை.சம்பந்தருக்கு விழுந்த குட்டு அதுதான் அவரை வெளியே விட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாற கிழமையும்... உந்தாள் கூட்டமைப்பை திட்டும்.:grin:

இஞ்சை கொஞ்சப்பேர் காரணமில்லாமல்......... எதுக்கெடுத்தாலும்  அவங்களை திட்டுறமாதிரி..:grin:

  • தொடங்கியவர்

".....கொழும்பு மாவட்ட ஐதேக பட்டியலில், 15ம் இலக்கத்தில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவை தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும், விருப்பு வாக்குகளை பெறுவதில் எமக்கு போட்டியே. ரணில் சுமார் மூன்று இலட்சம் விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார். எனவேதான் நாம் எமது மூன்றாம் விருப்பு வாக்கை ரணிலுக்கு மாத்திரம் வழங்க கோருகிறோம். கட்டாயமாக, வெற்றியடையும் அந்த இலக்கத்துடன் எமது மூன்றாம் விருப்பு வாக்கு சேருவதில் எமக்கு நஷ்டமில்லை. ஆனால், 8, 9 ஆகிய எமது இலக்கங்களுடன் ஏனைய பிரபல கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை இணைத்து நாம் பிரச்சாரம் செய்தால் நாம் ஆபத்தில்தான் விழுவோம். இதன்மூலம் அவர்கள் எங்கள் வாக்குகளையும், தங்கள் வாக்குகளையும் பெற்று விருப்பு வாக்கு பட்டியலில் முன்சென்று வெற்றி பெறவும், நாம் எங்கள் வாக்குகளை மட்டும் பெற்று பின்தங்கவும் வழி ஏற்பட்டுவிடும். ஆகவேதான் உறுதியாக 8, 9, 15 என்ற நிலைப்பாட்டில் நின்று நாம் பிரச்சாரம் செய்கிறோம்......"

Mano Ganesan

  • தொடங்கியவர்

கொழும்பில் மனோ கணேசனை எதிர்த்து போட்டியிட ஆனந்த சங்கரி வேட்புமனு தாக்கல் செய்தது மிகவும் பிழையானதும் கேவலமானதுமான விடயம்.இதற்கு சம்பந்தர் மற்றும் சுமந்திரன் கூட உடந்தையாகவிருக்கலாம்.இப்போது வேட்புமனு தாக்கல் செய்தபின் மீண்டும் தமிழரசு கட்சி அழைத்தால் இணைந்துகொள்வேன் என்பது ஒரு வேடிக்கையான கேலிக்கூத்தாகும். நீங்கள் தமிழரசுக்கட்சியில் இணைந்து கொள்வது மிகவும் இலகுவான விடயம்.ஏனெனில் கொழும்பில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நாடகமாகத்தான் எனக்கு தெரிகின்றது.இருந்தாலும் சு.பசுபதிப்பிள்ளையிடம் தோற்றதை மறந்து விடாதீர்கள். பசுபதிப்பிள்ளை உங்களால் வளர்க்கப்பட்டவர்.இனிமேலும் உங்களுக்கு இப்படியொரு நிலை வேண்டாம்.கொழும்பில் தேர்தல் போட்டியிலிருந்து பின் வாங்குங்கள்.மனோ கணேசனுக்கு ஆதரவளியுங்கள். நீங்கள் இலங்கை அரசுடன் பின்கதவால் கதைப்பவர்கள்.இலங்கையில் இருந்து மஹிந்த குடும்பத்துடன் எதிர்ப்பு அரசியல் நடத்தி உயிருடன் இருப்பவர்கள் மனோ கணேசன் மற்றும் வித்தியாதரன் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.மனோகணேசன் ஒரு மனித உரிமைச் செயர்பாட்டாளர் கூட அவருக்கு இனம் மதம் கிடையாது.பாதிக்கப்படுபவர்கள் யாராயினும் அங்கு சமூகமளிப்பவர்.இதைவிட எனக்குத் தெரிந்தவரையில் சொந்தக் காசில் அரசியல் புரிபவர்.அவருக்கும் உங்களுக்கும் எந்த வித ஒற்றுமையும் கிடையாது.வேற்றுமைதான் அதிகம்.ஆகவே போட்டியிலிருந்து பின் வாங்குவதே சாலச் சிறந்தது. நீங்கள் ஒரு சிறந்த உதாரண புருசராயின் கொழும்பில் உல்ள ஒரு இளம் தலைவரை உருவாக்கி வழி விட்டிருக்கலாமே!

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

கொழுப்ம்பில் மனோ கணேசனை எதிர்த்து போட்டியிட ஆனந்த சங்கரி வேட்புமனு தாக்கல் செய்தது மிகவும் பிழையானதும் கேவலமானதுமான விடயம்.இதற்கு சம்பந்தர் மற்றும் சுமந்திரன் கூட உடந்தையாகவிருக்கலாம்

ஒரு பக்கம்  இனத்தின் ஒற்றுமை 

மறுபக்கம் குழிபறிப்பு..

தமிழேண்டா.........:(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.