Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் அச்சத்துடனே வாழ்கிறோம்! சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்!!நயினை விகாராதிபதி

Featured Replies

யாழ்ப்பாணத்தில் அச்சத்துடனே வாழ்கிறோம்! சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்!!நயினை விகாராதிபதி

"யாழ்ப்பாணத்தில் மிகவும் அச்சத்தின் மத்தியிலேயே வாழவேண்டியுள்ளது. இதை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க ஓகஸ்ட் 17ஆம் திகதி சிங்களவர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்." - இவ்வாறு நயினைதீவு நாகவிகாரதிபதி வண. நவந்தகல பதுமகீர்த்தி தேரர் தெரிவித்தார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 61 பெளத்த மற்றும் சிவில் அமைப்புகள் நேற்று மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கைகோர்த்தன. இந்த நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,

மேலும் தெரிவித்தவை வருமாறு:-

"நான் யாழ்ப்பாணத்தில் 42 வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். அங்குள்ள நிலைமை என்ன என்பது எனக்குத்தான் நன்றாகத் தெரியும். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். ஈழம் முத்திரையிடப்பட்ட மேடையில் இருந்துதான் அவர் தேர்தல் பிரசாரம் செய்தார். விஜயகலா மகேஸ்வரனும் இருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களை எல்லாம் அகற்றுவதாக விஜயகலா கூறுகின்றார். கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலிருந்து நயினாதீவுக்கு வரும் யாத்திரிகர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களின் வாகனங்கள் சேதமாக்கப்படுகின்றன. நாம் மிகவும் அச்சத்துடன் வாழவேண்டியுள்ளது. இவ்வாறான பாரிய விடயங்கள் அங்கு நடக்கின்றன. அச்சத்தின் மத்தியில் வாழும் நிலைமையை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க சிங்களவர்கள் எதிர்வரும் ஓகஸ்ட்17ஆம் திகதி வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்'' - என்றார்.

http://www.malarum.com/article/tam/2015/08/03/11273/யாழ்ப்பாணத்தில்-அச்சத்துடனே-வாழ்கிறோம்-சிங்களவர்கள்-யார்-என்பதைக்-காட்டவேண்டும்-நயினை-விகாராதிபதி.html#sthash.AAGbJwOO.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரிகள் தாக்கப்பட்டார்களா? அப்படி நடந்து இருந்தால் இராணுவம் பிச்சிருக்குமே? பிக்குவுக்கும் மப்போ?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஜூலை மாதமும் காட்டுறியள் தானே?

இப்ப என்ன புதுசா....?

சிங்களவன் யாரென்று உலகத்துக்கே தெரியுமே!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான முற்போக்கு சக்திகளுடன் தமிழர்கள் கைகோர்த்து எமது அழ்கிய நாட்டை மேலும் அழகாகக்க வேண்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வெல்லுவதற்காக எப்படியான கீழ்த்தரமான பிரச்சாரம் செய்யுறாங்கள். இவங்கள் எல்லாம் மத குருக்கள். மதம் பிடிச்சு ஆடுறாங்கள். ஆமியை வைச்சு மக்களை அடக்கிறான்கள்.  பிறகு அவை பயந்து போச்சினமாம். அதுவும் 42 வருசமாய். ஏன் பயந்து கொண்டிருக்கினம்? வெளிக்கிட  வேண்டியதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரத்திலிருந்து நயினாதீவுக்கு பாலம் போட்ட பின்பு வெளிக்கிடிவினமாம்...

தமிழர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது வட மாகாணம் – சிங்களவர்களை உருவேற்றுகிறார் சங்கநாயக்கர்

AUG 04, 2015 | 6:36by கி.தவசீலன்in செய்திகள்

Navadagala Paduma Kiththi Tissaயாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு வரும் சிங்களவர்கள் தாக்கப்படுகின்றனர். இது தொடருமானால் வடமாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிடும் என்று சிங்கள பௌத்தவர்களுக்கு இனவெறியூட்டியிருக்கிறார் வடமாகாண சங்க நாயக்கர் வண. நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர்.

கொழும்பு விகாரமாதேவி உள்ளக அரங்கில் நேற்று, 61 சிங்கள பௌத்த அமைப்புகளுடன், மகிந்த ராஜபக்ச உடன்பாடு செய்து கொண்ட நிகழ்வில் உரையாற்றிய போதே, நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதியும், வடமாகாண சங்கநாயக்கருமான,  வண. நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில், “அண்மையில் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்ட கூட்டமேடை பிரிக்கப்பட்டு, இலங்கை ஈழ வரைபடம் வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் நின்றே, ரணில் உரையாற்றினார்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இந்த வடிவிலேயே ஈழ முத்திரையை வெளியிட்டிருந்தனர். இந்த மேடையில் விஜயகலா மகேஸ்வரனும் அமர்ந்திருந்தார்.

ஐதேகட்சி ஆட்சி உருவான பின்னர் வடக்கில் அனைத்து காவல்நிலையங்களும் மூடப்பட்டு வடக்கிலிருந்து காவல்துறையினர் வெளியேற்றப்படுவார்கள் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரது இக்கருத்து பிரிவினையை ஏற்படுத்தும், பயங்கரமான கருத்து.

யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை மோசமாக மாறியுள்ளது. தெற்கிலிருந்து வரும் சிங்கள யாத்திரிகர்கள் தாக்கப்படுகிறார்கள். விஜயகலா மகேஸ்வரன் மிரட்டுகிறார்.

இது தொடருமானால் வட மாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி விடும்.

எனவே எதிர்வரும் 17ஆம் நாள் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து, சிங்கள தேசியத்தை கட்டியெழுப்ப வாக்களித்து, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும்.

இங்கு நான் இவ்வாறு பேசிவிட்டு யாழ்ப்பாணம் செல்ல முடியுமோ என்ற நிலையுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

http://www.puthinappalakai.net/2015/08/04/news/8444

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாடகம் போடுது இந்த மனுசன். நயினா தீவு நாகவிகாரை தமிழருக்கே சொந்தமானது.  தமிழ் பவுத்தம் அழிந்து  வட இந்திய மாற்று மதங்களை பின்பற்றியபோது விகாரை இருக்குமிடமெல்லாம் தனது என சிங்களம் உரிமை கோரியது. 

  • கருத்துக்கள உறவுகள்

அச்சத்துடன் வாழுறாறாம், அஞ்ச மாட்டாராம். தலையில மிளகாய் அரைக்கிறார். அவர்களை உசுப்பேத்தி காரியம் பாத்து பழகிப்போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாடகம் போடுது இந்த மனுசன். நயினா தீவு நாகவிகாரை தமிழருக்கே சொந்தமானது.  தமிழ் பவுத்தம் அழிந்து  வட இந்திய மாற்று மதங்களை பின்பற்றியபோது விகாரை இருக்குமிடமெல்லாம் தனது என சிங்களம் உரிமை கோரியது. 

முற்று முழுதான.... தமிழர்கள்  வாழும் நிலத்தில், புரதான பௌத்த விகாரை எப்படி தோன்றியிருக்கும் என்ற..... 
எனது,  நீண்ட கால விடை தெரியாமல் இருந்த கேள்விக்கு, விடை கிடைத்தது வாலி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாடகம் போடுது இந்த மனுசன். நயினா தீவு நாகவிகாரை தமிழருக்கே சொந்தமானது.  தமிழ் பவுத்தம் அழிந்து  வட இந்திய மாற்று மதங்களை பின்பற்றியபோது விகாரை இருக்குமிடமெல்லாம் தனது என சிங்களம் உரிமை கோரியது. 

வாலி தமிழ் பெள‌த்தர்கள் என ஒர் இனம் இலங்கையில் வாழ்ந்தார்களா? தற்போதும் இத்தகையா தமிழ் பேசும் பெள‌த்தர்கள்
இலங்கையில் வாழ்கின்றார்களா?

வாலி தமிழ் பெள‌த்தர்கள் என ஒர் இனம் இலங்கையில் வாழ்ந்தார்களா? தற்போதும் இத்தகையா தமிழ் பேசும் பெள‌த்தர்கள்
இலங்கையில் வாழ்கின்றார்களா?

தமிழ் அரசியல் வாதிகளின் முன்னோர்களாக இருப்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

வாலி தமிழ் பெள‌த்தர்கள் என ஒர் இனம் இலங்கையில் வாழ்ந்தார்களா? தற்போதும் இத்தகையா தமிழ் பேசும் பெள‌த்தர்கள்
இலங்கையில் வாழ்கின்றார்களா?

சிட்னியில் oru தமிழ் பெளத்தர் இருக்கின்றார்.அதே போன்று சைவ சிங்களவர்களும் வாழ்ந்துள்ளார்கள்

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.