Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNA – 13 - 14 – UNP 98 – 104 - SLFP 87 - 93 - UNP கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நிகழ்தகவு அடிப்படையில் நடத்தப்பட்ட மூன்று வௌ;வேறு ஆய்வு முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

225 மொத்த ஆசனங்களில் 113 ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெற்றுக் கொள்ளக்4டிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 முதல் 14 வரையிலான ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும் எனவும், எந்தவொரு கட்சிக்கு ஆதரவளிக்காது கூட்டமைப்பு பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஏதேனும் ஓர் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் ஆட்சியை அமைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் முதல் தடiவாயக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் அரச ஊடகங்கள் அரச வளங்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்ய முடியாத முடங்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக பாரியளவில் தனியார்துறையினர் பணம் வழங்கியுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பணம் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

கம்பாஹா, களுத்துறை, திகாமடுல்ல, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, குருணாகல், அனுராதபுரம், மொனராகல், இரத்தினபுரி மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டி மொத்தமாக 93 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மறு புறத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 98 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மற்றுமொரு நிகழ்தகவு ஆய்வில் கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, அம்பாறை(திகாமடுல்ல), திகோணமலை, புத்தளம், பொலனறுவை, பதுளை மற்றும் கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றியீட்டி 104 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டும் எனவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 87 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வாக்களிப்போரின் எண்ணிக்கையும் இதில் மிக முக்கிய தாக்கத்தை செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: எக்கனோமி நெக்ஸ்ட் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்..

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122790/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

225 மொத்த ஆசனங்களில் 113 ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெற்றுக் கொள்ளக்4டிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 முதல் 14 வரையிலான ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும் எனவும், எந்தவொரு கட்சிக்கு ஆதரவளிக்காது கூட்டமைப்பு பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இது கருத்துக்கணிப்பா??

உத்தரவா???

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வந்தது நன்றி விசுகு.

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நான் நினைச்சது பிழையா? புலம் சப்போர்ட் கஜே கோஸ்டி யாழில் 7 ஆசனங்களையும் மற்ற இடங்களில் 7 ஆசனங்களையும் பெற்று 14 ஆசனங்களைப் பெறும் எண்டல்லவா நினைச்சிருந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்களை அதிர வைத்துள்ள வாசிம் மற்றும் பிரகதீப் படுபயங்கர கொலை விபரங்கள், மகிந்த கனவை கலைக்கும்.

எனினும் வரப்போவது தேசிய அரசாயின் நமக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

வீடு என்பது வீடல்ல. வீடு பேறுமல்ல - வினோதரன்!

வீடு என்பது வீடல்ல. வீடு பேறுமல்ல. வீட்டை அடைதல் மட்டும் வீடல்ல. வீடு எம் குடும்ப அமைப்பின் அடிப்படை. பண்பாட்டின் குறியீடும் கூட. வீடு எம் முதுசம். வீடு எம் அலகை பாதுகாப்பு செய்யும்.வீடு கட்டுவதும், கல்யாணம் கட்டுவதும் மிக இயல்பானது அல்ல. பொதுவாக வீடு வாஸ்து சாத்திர அடிப்படையில் கட்டப்பட வேண்டும். வாஸ்து என்பது வடமொழி என நிராகரிக்க முடியாது. அதுவும் வேரொடு கலந்த விடயம். ஒற்றை எண் விழ அடிக்கணக்கு எல்லாம் உண்டு . வீட்டுக்கு ஜன்னல்கள் வேண்டும் , கதவும் வேண்டும். நல்ல காற்றும் வந்து போதல் வேண்டும். இது பொது நியதி. மனித எண்ணங்கள் வாய் மூலம் வெளிப்படும். வீடுகளின் சிறப்பு வாசல்கள் மூலம் வெளிப்படும்.

இங்குள்ள வீடு வடக்கு அல்லது கிழக்கு வாசல்களை கொண்டது. தெற்கு வாசல் இங்கு கட்டப்படுவது இல்லை என வைத்து கொள்ளலாம் . ஆக இது நாறசார வீடுமல்ல. சனங்களின் குண மாற்றங்களுடன் நாற்சார குடும்பங்கள் உடைந்து தனியாகின. ஆனால் எல்லோருக்கும் ஒரு வீடு அவசியம். அங்கு நீர்த்தாங்கியும், சங்கட படலையும் இருக்கவில்லை. ஆனால் சனங்களுக்கு வீடு அவசியம். இது எதுவரை அவசியம் ?

எண்பதுகளின் இளையோர் வீட்டை வெறுத்து நாடு என்ற பெரும் இராச கூட்டுக்குள் வந்தனர்.நாடே வீடானது. இங்கு தமிழ் வீட்டை பற்றி கதைக்கும் பேது நம் வளவுகளை மறந்து விடவில்லை. அத்திவாரம் நவரத்திர கற்களும், பஞ்சலோக கற்களும் போட பட்டனவா என நீங்கள் கேட்கலாம் . அதில் நியாயமும் இருக்கலாம் . இப்பவது கற்களை பற்றி பேசுகையில் வீட்டுக்கு குறுக்கே படிகளில் யாரும் வந்து குந்த கூடாது என்பதே முழு நோக்கம். குறுக்கே இருப்பது வீட்டுக்கும் கூடாது. இருப்பவருக்கு அறவே கூடாது. அதை விடுவம்.
வடக்கு வாசலைதள்ளி கிழக்கு வாசல் பூட்டிவிட வீட்டுக்குள் இருந்த பல்லு விழுந்த முதியோர் எந்த சலனமும் அற்று இருந்தனர். வீட்டில் படிப்பகம், கிடப்பகம், தூங்ககம், கழிப்பகம், கருத்தகம், உள்ளகம் வெளியகம் என எத்தனை அறைகள்இருந்தாலும் இந்த பல்லு விழுந்த முதியவர் சிலர் தூங்ககத்தில் ஆழ அறிதுயில் கொண்டனர். அடிக்கடி தெற்கு வாசல் வீட்டு கொண்டாட்டங்களில் உண்டு கொழுத்தனர்.இந்த வீட்டில் எல்லாரும் எல்லாம் செய்வதால் ஆருக்கும் சொந்தமுமல்ல , சொந்தம் கொண்டாட முடியாமலுமல்ல.

கிழக்கு வாசல் சூறாவளிக்கு பிறகு சேலைகளில் சனங்கள் வீடு கட்டினர். தறப்பாள்களுடன் திரிந்தனர். வடக்கு வாசலில் இடப்பெயர்வில் குழைக்காட்டு தென்னோலைகளில் வீடுகள் கட்டி சொந்த வீடு திரும்பும் வரை இதுதான் வீடுகள் என நிர்ணயம் செய்தனர். வீட்டுக்கு வீடு வாசல்படி என வாசிப்பவர் முணுமுணுப்பு காட்ட மாட்டீர்கள் என நம்பலாம் .

பிறகு சனங்களுக்கு ஒரு தறப்பாளையும். நாலைஞ்சு கட்டைகளையும். பத்து ஆணிகளையும் கொடுத்து வீடுகளை உருவாக்குங்கள் என்ற போது சனங்கள் பொறுமையாக காத்தனர். ஆனால் சனங்களுக்கு கட்டப்பட்ட பெரிய கூடு சனங்களிடமில்லை. சனம் நம்பிய அந்த வீட்டுக்குள் திருடர்களும், ஏமாற்றுக்கார நபர்களும், வாடகைக்கும் விடலாம் என கருதுவேரும், எப்போதுமே ஆழ தூங்குவோரும், அலைக்கழிப்போரும் சனங்களை தொடர்ந்தும் ஏமாற்றுவோர் அந்த வீட்டிற்குள் வேண்டுமா ? என்பது சனங்களின் கேள்வி. ஆனால் சனம்
நல்ல தெளிவு.

இப்போது சனங்களுக்கு இந்தியன் வீட்டு திட்டம் கிடைக்க போகிறதாம். அது எந்த அளவும் இல்லையாம். முந்தியும் உலகவங்கி, நோர்வே, ரீஆர்ஆர்ஓ , ஆசிய அபிவிருத்தி வங்கி , கரித்தாஷ் போன்ற அரசு சாராதவையளும் சனங்களுக்கு வீடு கட்டி கொடுத்தவை. ஆனால் சனங்களுக்கு ஆதர்சமான வீடுகள் அவையல்ல. வெறும் மறைப்புகள் தானே.

வெறும் மறைப்புகள் மட்டும் வீடுகளில்லை. மறைப்புகளுடன் வாழ்ந்தோம் முடித்தோம் என்பதும் எமது சனங்களின் நோக்கமும் அல்ல.
இப்போது உள்ள வீடு அத்திவாரம் இல்லாத வீடு. அத்திவாரம் இல்லாத வீடு வீடல்ல. அது சில்லுகள் பூட்டப்பட்டது. உருட்டக்கூடியது. ஆனால் தானாக உருள முடியாத து. ஆரும்

உருட்டலாம். எப்படியும் உருட்டலாம் . சிலர் உருட்டி கொண்டு போய் கிழக்கு வாசல்ல விடுகினம். கொஞ்சபேர் இழுத்து கொண்டு போய் இந்தியாவிலை விடுகினம். மற்றும் சிலர் ஐரோப்பிய கொண்டு போகினம். பிறகு திருப்பி இழுத்து தங்கட பக்கம் கொண்டு வருகினம். சனங்கள் பாத்து பாத்து ஏம்பலிச்சு நிக்குதுகள் . சனத்துக்கு தெரியுமே இது ஒரு அத்திவாரம் இல்லாத வீடெண்டு!

சில்லு இருக்கிறதால தேருமல்ல தேர்தல் வாகனமும் அல்ல என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேணும். வீடு வீடு வீடே தான் !

வாசல்கள் வீட்டுக்கு முக்கியம் தான் அது வடக்கு வாசல் கிழக்கு வாசல் கதைச்சுக்கொண்டு சுத்தி இருக்கிற அழகிய பச்சை மரங்களையும் கவனத்தில் கொள்ள வேணும். மரங்கள்அற்ற வெட்டை வீட்டை கட்டவே முடியாது. மரங்களை நாட்ட என்ன திட்டம் வீட்டுகார்ர்களுக்கு உண்டு?

சனத்தை எல்லாரும் அம்பிளி மாமா கதையள் சொல்லி ஏமாத்துகினம். இந்த முறை சனம் தங்கட தங்கட வீட்டை விட்டு வெளியில வரவேணும். அப்ப தான் ஏதாவது நடக்கும். இனி இந்த வீட்டை இடிச்சும் கட்டேலாது. அந்தளவு பாதகமா இடிஞ்சு போச்சுது.

இந்த முறை எல்லாரும் வெளியே வந்தால் தான் வீடு வீடாகும். அல்லது வீடு பேறாகும்.

thanks-facebook

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கருத்துக்கணிப்பா??

உத்தரவா???

உத்தரவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.