Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரை சதத்தை பதிவு செய்து சாதனை: 50 ஆவது முறையாக இடிந்து விழுந்தது சென்னை விமான நிலைய மேற்கூரை

Featured Replies

Chennai Airport

சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை 50 ஆவது முறையாக இடிந்து விழுந்து, தனது அரை சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
 
ஆகஸ்ட்டு 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள, சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில், வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தின் 2 ஆவது தளத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது.
 
சென்னை விமான நிலையம் கடந்த 2013 ஆம் ஆண்டு. சுமார் 2,300 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டது.
 
அன்றிலிருந்து இன்றுவரை 50 முறை அதன் மேற்கூரை இடிந்து விழுந்து வெற்றிகரமாக தனது அரை சதத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-airport-roof-half-century-0th-time-fell-115081100015_1.html

 

  • கருத்துக்கள உறவுகள்

Chennai Airport

சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை 50 ஆவது முறையாக இடிந்து விழுந்து, தனது அரை சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-airport-roof-half-century-0th-time-fell-115081100015_1.html

to-success.jpg59775207.jpg

 

அரை சதம் கண்டு சாதனை படைத்த சென்னை விமான நிலையத்திற்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்..! :innocent:

இச்சாதனை தொடரட்டும்! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துக் கண்ணாடிகளும் விழுந்து உடைந்தபின் இப்படி பாழடைந்த தகரக்கொட்டாயாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லைபோலும்..

 

T3VGi1K.jpg

 

சில நாட்களுக்கு முன்தான் மத்திய அரசு இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களை அரசின் ஊழல் நிறுவனமான ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா(AAI)வின் பிடியிலிருந்து விடுவிக்க, தனியார் மயமாக்கலுக்கு இசைவு கொடுத்திருந்தது.. தனியார் மயமாக்கலுக்கு சென்னை ஏர்போர்ட் ஊழியர் சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக, சென்னை விமான நிலையத்தை மட்டும் அந்த தனியார் மயமாக்கல் அட்டவணையிலிருந்து எடுத்துவிட்டார்கள்..

இனி சென்னை விமான நிலையத்திற்கு முன்னேறும் விமோசனம் இல்லை..மற்ற விமான நிலையங்களான தில்லி, மும்பாய்,ஐதராபாத், பெங்களூர் போன்றவை தனியார் மயமாக்கல் மூலம் ஜெட் வேகத்தில் முன்னேறுகையில், சென்னை விமான நிலையம், அரசு ஊழியர்களின் ஊழல் நடத்தையில் சிக்கி, சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது..

அந்தோ பரிதாபம்! :(

  • தொடங்கியவர்

Photo Gallery

சென்னை விமான நிலையத்தை பல கோடி ரூபாய் கொட்டி புதுப்பித்தார்கள் ஆனாலும் பயணிகளை வரவேற்க வருபவர்கள் உட்காருவதற்கு இருக்கைகள் கிடையாது,ரோட்டிலும் வெட்ட வெளியிலும்தான் காத்துகிடக்கவேண்டி உள்ளது.

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=865&nid=26819&cat=Album#.VcvC7bLtmkp

  • கருத்துக்கள உறவுகள்


கூரைகள் தலையில் விழாமல் இருக்க உட்கூரை ஒன்றை அமைத்தால் என்ன?:(:grin:

நல்ல காலம் ... என் தலை தப்பிட்டு  :grin:


கூரைகள் தலையில் விழாமல் இருக்க உட்கூரை ஒன்றை அமைத்தால் என்ன?:(:grin:

இதுபோன்ற ஒரு சிந்தனாவாதியை  பெற்றிருப்பது யாழ் செய்த பாக்கியம்.

மீண்டும் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற ஒரு சிந்தனாவாதியை  பெற்றிருப்பது யாழ் செய்த பாக்கியம்.

மீண்டும் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி

அவர் எப்பவும் இப்படித்தான்..

இரண்டாவது தான் தாக்குப்புடிக்கும்  என்பார்....:grin::grin:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எப்பவும் இப்படித்தான்..

இரண்டாவது தான் தாக்குப்புடிக்கும்  என்பார்....:grin::grin:

என்ன சொல்ல வருகிறீர்கள், விசு?

தைரிய அனுசரனையுடன், 'இரண்டாவதுக்கு' அடித்தளமிடுகிறார் என்கிறீர்கள்?  terrific.gif

  • கருத்துக்கள உறவுகள்

கூரையை எடுத்துவிட்டு பாலித்தீன் பைகளால் மூடிவிடலாம், தலை தப்பும்.

வாசலில் ஹெல்மெட்டுகள் வைத்தால் பயணிகள் உட்புகும் போது பாவித்து விட்டு வரும்போது அங்கன வைத்து விட்டு வரலாம்...!  :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்துக் கண்ணாடிகளும் விழுந்து உடைந்தபின் இப்படி பாழடைந்த தகரக்கொட்டாயாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லைபோலும்..

 

T3VGi1K.jpg

 

சில நாட்களுக்கு முன்தான் மத்திய அரசு இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களை அரசின் ஊழல் நிறுவனமான ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா(AAI)வின் பிடியிலிருந்து விடுவிக்க, தனியார் மயமாக்கலுக்கு இசைவு கொடுத்திருந்தது.. தனியார் மயமாக்கலுக்கு சென்னை ஏர்போர்ட் ஊழியர் சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக, சென்னை விமான நிலையத்தை மட்டும் அந்த தனியார் மயமாக்கல் அட்டவணையிலிருந்து எடுத்துவிட்டார்கள்..

இனி சென்னை விமான நிலையத்திற்கு முன்னேறும் விமோசனம் இல்லை..மற்ற விமான நிலையங்களான தில்லி, மும்பாய்,ஐதராபாத், பெங்களூர் போன்றவை தனியார் மயமாக்கல் மூலம் ஜெட் வேகத்தில் முன்னேறுகையில், சென்னை விமான நிலையம், அரசு ஊழியர்களின் ஊழல் நடத்தையில் சிக்கி, சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது..

அந்தோ பரிதாபம்! :(

தென்னோலை / பனையோலையால் வேயும் எண்ணங்கள் ஏதுமில்லையா? :(

  • கருத்துக்கள உறவுகள்

கூரையை எடுத்துவிட்டு பாலித்தீன் பைகளால் மூடிவிடலாம், தலை தப்பும்.

வாசலில் ஹெல்மெட்டுகள் வைத்தால் பயணிகள் உட்புகும் போது பாவித்து விட்டு வரும்போது அங்கன வைத்து விட்டு வரலாம்...!  :grin:

தென்னோலை / பனையோலையால் வேயும் எண்ணங்கள் ஏதுமில்லையா? :(

ஆகா.. நல்ல நல்ல யோசனைகளெல்லாம் சொல்கிறீர்கள்..!

நீங்கள் ஈழத்தில் வாழ்ந்தால் கொழுந்துவிட்டு பிரகாசிப்பீர்கள்..!!

உங்கள் மண்  உங்களை சுமக்க கொடுத்துவைக்கவில்லை! :) :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தினமலரில் வெளிவந்த செய்தி:

 

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,000 கோடியில் புதிய முனையங்கள் !

சென்னை:''சென்னை விமான நிலையத்தில், பழைய முனையங்கள் இடிக்கப்பட்டு, 1,000 கோடி ரூபாய் செலவில், புதிய முனையங்கள் கட்டப்படும்,'' என, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின்(AAI) தலைவர், ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.


சென்னை விமான நிலையத்தை நேற்று பார்வையிட்ட அவர் அளித்த பேட்டி:


சென்னை விமான நிலையத்தில், மூன்று ஆண்டுகளாக வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. 'விமான நிலையம் தனியார் மயமாக்கப்படும்' என்ற எதிர்பார்ப்பில் பணிகள் நடக்கவில்லை. தற்போது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

"முதற்கட்டமாக, சென்னை விமான நிலையத்தில் உள்ள பழைய அண்ணா பன்னாட்டு விமான முனையம் மற்றும் காமராஜர் உள்நாட்டு முனையத்தை இடித்துவிட்டு, புதிய முனையங்கள், 1,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். விமான நிலையத்தில் பல அடுக்குகளுடைய, வாகன நிறுத்தமும் அமைக்க உள்ளோம்" இவ்வாறு அவர் கூறினார்.

விமான நிலைய இயக்குனர் தீபக் சாஸ்திரி கூறியதாவது:

"விமான நிலையத்தில், கண்ணாடிகள் விழுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆயிரம் கண்ணாடிகளுக்கு, ஒரு கண்ணாடி விழுவது இயல்பு. :shocked:  கண்ணாடி விழும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி மாதிரிகள், ஐ.ஐ.டி., வல்லுனர்களின் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. கண்ணாடிகளில் ஒருவித துாசு படலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கண்ணாடிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்.

 

டிஸ்கி: இச்செயல், ராஜபக்க்ஷவை விட்டு போர்க்குற்ற விசாரணை செய்ய சொல்வதற்கு சமம். ஊழலில் திளைக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம், அடுத்த வரும்படிக்கு வழி செய்துகொண்டார்கள், இவர்களின் பைகளில் இனி ஊழல் பணம் துள்ளும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.