Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.தே.க ஆட்சியமைக்க த.தே.கூ ஆதரவு வழங்கும்: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.தே.க ஆட்சியமைக்க த.தே.கூ ஆதரவு வழங்கும்: சம்பந்தன்
news
ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது இல்லத்தில் நேற்று பல்வேறு அமைப்புகளின் பிரதிநிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐ.தே.க. 105 ஆசனங்களுக்கு மேல் பெற்று வெற்றிப்பெறுமென கருத்துக்கணிப்புக்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றன. நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். 
 
இதேவேளை ஐ.ம.சு.மு 70க்கும் 85 க்கும் இடைப்பட்ட ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஐ.ம.சு. கூட்டணியிலுள்ள மைத்திரியணியினர் பெரும்பான்மையினோர். ஐ.தே.க உடன் இணைந்து 18ஆம் திகதி ஆட்சி அமைப்பாளர்கள் அந்த ஆட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு நல்க காத்திருக்கிறது.
 
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கப்படுமாயின் புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படும். அந்த அரசில் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படும். வரையப்படவுள்ள அரசியல் யாப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 65 வருடக்கால தமிழ் மக்களின் போராட்டத்துக்கு இதன் மூலம் உடனடி தீர்வு காணப்படுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
 
 
தமிழ் மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் விலை போனவர்கள் அல்லர். இனியும் நாம் விலைப்போகப் போவதில்லை. எமது நீண்ட கால போராட்டத்துக்கு உடனடியாக தீர்வு காணக்கூடிய ஒருவாய்ப்பான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதே எமது அதீதமான நோக்கமாகும்.
 
தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் இதை உள்ளூர் தலைவர்களுக்கு கூறி வந்துள்ளோம். சர்வதேச சமூகம் இதையேற்றுக்கொண்டுள்ளது. இனியும் காலத்தைக் கடத்தலாம். தமிழ் மக்களை ஏமாற்றலாமென யாரும் தவறான கணக்கை போட முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்பு எம்முடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என அவர் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
 
புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்கி தான் தொடர்ந்து ஆள வேண்டுமென்று நினைத்த மஹிந்த ராஜபக் ஷவை நாம் தோற்கடித்து நல்லாட்சியொன்றை நிறுவியிருக்கிறோம். இந்த ஆட்சிக்கு ஏற்ற புதிய மாற்றமொன்று நடைபெறும் தேர்தலிலும் இடம்பெற வேண்டும்.
 
தென்பகுதி மக்களிடம் மாற்றமொன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழ்இ முஸ்லிம் மக்கள் இந்த மாற்றத்தை நல்ல முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். மாற்றமொன்று மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நாம் உறுதி செய்ய வேண்டும் அதற்கு ஏற்றவகையில் எங்கள் வெற்றி அமைய வேண்டும்.
 
தமிழ் மக்கள் ஒருமித்த நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழவிரும்புகின்றார்கள். நாம் நாட்டை பிரிக்க விரும்பவில்லை பிளவுபடுத்தவும் முயற்சி செய்யவில்லை. எமது மக்கள் சகல உரிமைகளுடனும் சமத்துவமாக ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம் என்பதை தென்பகுதி மக்களும் சிங்களத்தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
சர்வதேச விசாரணை அடுத்த மாதத்தில் விசாரணையாக அறிக்கையாக வெளிவரவிருக்கிறது. உண்மைகள் அறியப்பட வேண்டும். அது வெளிப்படுத்தப்பட வேண்டும். மீண்டும் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையே நாம் உறுதி செய்ய வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறோம்.
 
தேசிய இனம் ஒன்று அழிக்கப்படுவதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சர்வதேச சமூகமும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஐ.நா. சபையும் இதை அங்கீகரிக்கப் போவதில்லை.
 
தமிழ் மக்களுடைய ஆதரவு இன்றி முஸ்லிம் மக்கள் எந்தவுரிமையையும் பெற்று விடமுடியாது. அதேபோன்றே முஸ்லிம் மக்களுடைய உதவியின்றி தமிழ் மக்களும் எதையும் சாதித்து விட முடியாது. எனவே வரவிருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்த தமிழ் முஸ்லிம் சமூகம் தவறிவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=248034197715663149#sthash.f2CIDhgX.dpuf

சா     சுதந்திர கட்சி வென்று  மகிந்தா பிரதமர் ஆனால்    இன்னும் எங்கட சொந்தக் காரர் கொஞ்ச பேரை கூப்பிட்டு பரிஸில் அசிலம் அடிக்க வைக்கலாம் என்று இருந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற குடும்பம், குட்டி, நண்டு சிண்டு - உரே பாரிசில்தான் லிவிங்ஸ்டன்.

சும்மா உரான் பிள்ளையளுக்குத்தான் போராட்டமும் புண்ணாக்கும்.

சா     சுதந்திர கட்சி வென்று  மகிந்தா பிரதமர் ஆனால்    இன்னும் எங்கட சொந்தக் காரர் கொஞ்ச பேரை கூப்பிட்டு பரிஸில் அசிலம் அடிக்க வைக்கலாம் என்று இருந்தேன்

இந்த ஒரு காரணத்திற்கு தானே ஓடாத சைக்கிளை கூட ஓட்ட வைக்க இந்த முக்கு முக்கிறம். 2009க்கு பிறகு விசிலடிக்க எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் தாங்கோவன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் கண்ணை மூடிக்கொண்டு கனவு காணுவார்.
நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும்  ஒரு புதிய அரசியல் யாப்பாம்.
அதில் வேறு தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வாம்.
ரணில் சம்பந்தருக்கு நல்லாத்தான் தண்ணி காட்டுகின்றார்.:grin:

நீங்க வேற குடும்பம், குட்டி, நண்டு சிண்டு - உரே பாரிசில்தான் லிவிங்ஸ்டன்.

சும்மா உரான் பிள்ளையளுக்குத்தான் போராட்டமும் புண்ணாக்கும்.

விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும் என்று நினைத்தேன் இந்த உலகிற்கே தெரியும் போல 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சரத்துக்கே ஆதரவு அளித்த ஆட்கள்.எங்களுக்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன>>

நாங்கள் மகிந்தாவிடம் காசு வாங்கி வெற்றி பெற செய்து பிறகு அவரிட்டையே அடி வாங்கி அழிந்த மூளைசாலிகள்  

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் காசு வாங்கி கொண்டு மகிந்தவையே வெல்ல வைத்த ஆக்கள். எமக்கு சிவம் என்ன சவம் என்ன. நக்கீட்டே இருப்பம்.

நாங்கள் காசும் வாங்குவம் தேசியமும் பேசுவம்.

கொத்துவும் விப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரனுக்கு நடைமுறை தெரியாமல் இருக்கலாம் எங்களுக்குமா?

அன்ரன் பாலசிங்கம் இருக்கும்போது கள நிலவரம் இப்போதிருக்குமாதிரி இல்லை. 

 

இன்னுமா கொத்து விக்க ஆசை?

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்து இத்தனை வருடங்களில் சிறையில் வாடிய இளைஞர் யுவதிகளை வெளியில் கொண்டு வர கூட்டமைப்பு செய்த சேவை அளப்பரியது. இது பதிவு செய்தி இல்லை,

  • கருத்துக்கள உறவுகள்

மயிலந்தனையில் தமிழர்களை கொலைசெய்த ராணுவத்தை வெளியில் எடுக்க பொன்னம்பலம் செய்தது தேசத்தொண்டு - இதுவும் பதிவுச் செய்தியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இனம் அழியும் போது கொறட்டை போல் நடித்த ஆட்களை மக்கள் இனம் கண்டு கொண்டனரா தெரியவில்லை,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.