Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு-கிழக்கு வாழ் சகல தமிழ் மக்களுக்கும் நானும் TNAயும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கின்றோம்:சுரேஷ். க.பிறேமச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Bookmark and Share
 

 

வடக்கு-கிழக்கு வாழ் சகல தமிழ் மக்களுக்கும் நானும் TNAயும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கின்றோம்:

 தென்னிலங்கை அரசியல் சமூகம் நேரடியாகவும் தனது முகவர்கள் மூலமாகவும் வேட்பாளர்களைக் களமிறக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைப் பறிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை எமது மக்கள் மிகவும் விழிப்புடன் இருந்து தகர்த்தெறிந்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு மகத்தான வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். இதற்காக வடக்கு-கிழக்கு வாழ் சகல தமிழ் மக்களுக்கும் நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் குறிப்பாக எனது வெற்றிக்காகவும் பலநூறு இளைஞர்களும் யுவதிகளும் நண்பர்களும் தோழர்களும் கல்விச்சமூகத்தினரும் பொது அமைப்பைச் சேர்ந்தவர்களும் கடுமையாக உழைத்தனர். எனது வெற்றிக்கான அவர்களது உழைப்பு திட்டமிட்ட வகையில் தட்டிப்பறிக்கப்பட்டாலும் அவர்களது கடின உழைப்பிற்கு நான் எனது சிரந்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


அதுமாத்திரமல்லாமல், ஒரு கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும் நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டவன் என்பதன் அடிப்படையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்ற அடிப்படையிலும் 2016ஆம் ஆண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்வேன் என்று திரு. சம்பந்தர் கொடுத்த வாக்குறுதியைச் செயற்படுத்துவதற்கும் அதற்கான பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும் குறைந்த பட்சம் தேசியப் பட்டியலிலாவது சுரேஷ் க.பிறேமச்சந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக்கப்படவேண்டும் என்று வடக்கிலும்-கிழக்கிலுமிருந்து பலநூறு நிறுவனங்களும் பொது அமைப்புக்களும் கூட்டமைப்பின் நலன்விரும்பிகளும் கோரிக்கைகளை விடுத்திருந்தார்கள். தொலைபேசி ஊடாகவும் நேரிலும் பலநூறுபேர் என்னுடன் தொடர்புகொண்டு நான் பாராளுமன்ற உறுப்பினராகவேண்டும் என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களது கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியின் தலைமையால் நிராகரிக்கப்பட்டாலும் அவ்வாறான ஒரு தேவையைக் கருதி எனக்காகக் குரல்கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.


பல்வேறுபட்ட தரப்பினரின் நிகழ்ச்சி நிரலுக்கமைய எனது வெற்றி தட்டிப்பறிக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரையில் கடந்த 35வருடங்களாக நான் செய்து வந்த சேவைகள் எமது மக்களின் விடியலிற்காக தொடரும் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன். எமது இனத்தின் விடுதலைக்கு எமது மக்களின் ஒத்துழைப்பு ப+ரணமாகத் தேவை. அதை எமது மக்கள் எப்பொழுதும்போல் தொடர்ந்தும் வழங்குவார்கள் என்றும் நம்புகின்றேன்.
சுரேஷ். க.பிறேமச்சந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123396/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணரின் அறிக்கையை சுருகிச் சொன்னா - வட போச்சே.

கூட்டமைப்பின் பேச்சாளராய் - தமிழ் இளைஞர்கள் கொன்று குவிக்காத, மக்களால் தேர்தலில் நிராகரிக்கப் படாத வியாழேந்திரன் அல்லது அவர் போன்ற வேறு ஒரு எம்பி அல்லது மாகாண சபை உறுப்பினரை நியமிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணரின் அறிக்கையை சுருகிச் சொன்னா - வட போச்சே.

கூட்டமைப்பின் பேச்சாளராய் - தமிழ் இளைஞர்கள் கொன்று குவிக்காத, மக்களால் தேர்தலில் நிராகரிக்கப் படாத வியாழேந்திரன் அல்லது அவர் போன்ற வேறு ஒரு எம்பி அல்லது மாகாண சபை உறுப்பினரை நியமிக்க வேண்டும்.

ஆம் கூட்டமைப்பில் போட்டியிடும் போது உங்களுக்கு தமிழ் இளைஞா;களைக் கொன்ற சுரோஷ்பிரேமச்சந்திரனை தெரியாது தோற்ற பின் தெரிகிறது...! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் கூட்டமைப்பில் போட்டியிடும் போது உங்களுக்கு தமிழ் இளைஞா;களைக் கொன்ற சுரோஷ்பிரேமச்சந்திரனை தெரியாது தோற்ற பின் தெரிகிறது...! 

இதற்குப் பெயர் தான்.... வாந்தி எடுப்பது, என்று சொல்வார்கள். 
தோற்றவனில்.... பிழை கண்டு பிடிப்பதே அவர்கள் பழக்கம்.
புலி... வென்று கொண்டு இருக்கும் போது, பேசாமல் இருந்து விட்டு... முள்ளி வாய்க்காலின் பின், முளைத்த ஆக்கள் இவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சன் ஆடிக்கொருக்கா அமாவசை ஒருக்கா கருத்தெழுதினா இப்படித்தான்.

சுரேசை நான் கதுத்தெழுத தொடங்கிய நாள் முதலே விமர்சிப்பவன் நான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன் ஆடிக்கொருக்கா அமாவசை ஒருக்கா கருத்தெழுதினா இப்படித்தான்.

சுரேசை நான் கதுத்தெழுத தொடங்கிய நாள் முதலே விமர்சிப்பவன் நான்.

அது ஒரு பிரச்சினையே இல்லை....

ஆனால் தமிழ்த்தேசிக் கூட்டமைப்புக்குள் அடாவடித்தனம் செய்யாதவர்கள்..? தமிழ் இளைஞர்களை கொல்லாதவர்கள் மட்டும் உள்ளனர் நான் நம்பி விட்டேன்...! 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும் வெளியேறும் காலம் வரணும். வரும். 

நீங்க என் முந்திய கருத்துக்களை வாசிக்கவில்லை என்றால் நான் பொறுப்பில்லை.

அவர்களும் வெளியேறும் காலம் வரணும். வரும். 

நீங்க என் முந்திய கருத்துக்களை வாசிக்கவில்லை என்றால் நான் பொறுப்பில்லை.

எல்லா கள்ளரும் கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டுமானால் அங்கு எவரும் இருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சித்தரும், செல்வம் அடைக்கலதானும் கiற படியாத கைக்குச் சொந்தக்காரர்களோ? சுரேஸ் தோற்கடிக்கப் பட வேண்டியவர்தான் இருந்தாலும் மற்றவர்கள் சுத்தமானவர்களில்லை. சுமத்திரனை விட சுரேஸ் பரவாயில்லை.சுரேஸ் நீண்ட காலமாக போராட்டத்திலும் அரசியலிலும் இருப்பவர். சுமத்திரனைப் போல் நேற்று முளைத்த காளான் இல்லை.புலிகளே சுரேஸை ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்ற நிலையில் சம்பந்தர் கூட அப்ப வாயைப் பொத்திக் கொண்டு இருந்தவர்தான்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா கள்ளரும் கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டுமானால் அங்கு எவரும் இருக்க மாட்டார்கள்.

பேசாமல் வரதரையும் டக்ளஸ் அன்னையையும் கூட்டமைப்பு உள்வாங்கினால் எல்லாம் சரியாகி விடும் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் வரதரையும் டக்ளஸ் அன்னையையும் கூட்டமைப்பு உள்வாங்கினால் எல்லாம் சரியாகி விடும் tw_blush:

தேவைப்பட்டால் டக்கிளஸ் அங்கிளையும், வரதரையும்  கொண்டுவருவதில் தப்பில்லை. கறைபடியாத புலிகளும் சுரேஸ், அடைக்கலநாதன் போன்றோரை ஏற்றுக்கொண்டு கொண்டு கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ள வைத்தவர்கள் தானே! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.