Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணைப் பொறிமுறை தொடர்பான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேறியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டும் : வடக்கு முதல்வரால் பிரேரணை முன்மொழிவு

news
இலங்கை இறுதி யுத்தத்தின் போது சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.என வடக்கு முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனால் பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டது.


வடமாகாண சபையின் 34 ஆவது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது. அந்த அமர்விலையே முதலமைச்சர் குறித்த பிரேரணையை முன் மொழிந்தார்.
 
அதனை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வழிமொழிந்தார்.
 
குறித்த பிரேரணையை தெளிவாக வாசித்து விளங்கி கொள்ள தனக்கு ஒரு சில மணித்தியால கால அவகாசம் வேண்டும்.

அதன் பின்னர் பிரேரணை தொடர்பில் விவாதத்தை மேற்கொள்ளலாம் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அவைத்தலைவரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- See more at: http://onlineuthayan.com

Edited by வாத்தியார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச விசாரணைப் பொறிமுறை தொடர்பான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேறியது
news

இறுதிப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைமீறல் குறித்த சர்வதேச விசாரணைக்கான பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் என்ற பிரேரணை வடமாகாண சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபை முதல்வர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் சபை கூடியிருந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்ட போது இதனை சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வழிமொழிந்திருந்தார்.


குறித்த பிரேரணையை தெளிவாக வாசித்து விளங்கி கொள்ள தனக்கு ஒரு சில மணித்தியால கால அவகாசம் வேண்டும். அதன் பின்னர் பிரேரணை தொடர்பில் விவாதத்தை மேற்கொள்ளலாம் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அவைத்தலைவரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் குறித்த பிரேரணை தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சியினரும் குறித்த பிரேரணைக்கு தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=892804236101703239#sthash.7KugOxr5.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நல்லசெய்தி.

சபா............ ஒருமாதிரி நிறைவேற்டிவிட்டினம்..................உந்த சூட்டில விக்கிஐயாவும் பரிவாளங்களும் குளிர்காய்வார்கள்.........

மாகாணம் தழுவிய ரீதியில் ஒரு கவனஈர்ப்புப்போராட்டம் கூட நடத்த இந்தியா அனுமதியளிக்கவில்லை போலும்.

சிவாஜிலிங்கம் என்கின்ற கோமாளி வாசலில் பதாகைகளுடன் நின்றாராம்.....அதைக்கண்ட ஐங்கரநேசன் சார் போய்சொன்னாராம் உள்ளுக்கு வாங்கோ முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றப்போறார் எண்டு.......அதுக்கு சிவாஜிலிங்கம் சொன்னாராம் அப்ப நான் தான் வழிமொழிவன் எண்டு.

மற்றவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் விளையாட்டுகள்தான் உது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் கீரைக் கடைக்கு எதிர்க் கடை.

தமிழர்க்கு ஆகக் கூடிய அதிகாரங்களை பெறும் ஒரு தீர்வை நோக்கி சம்சும் ஒரு பக்கத்தாலும் விக்கி மறுபக்கத்தாலும் முன்னேறுகிறார்கள்.

இது ஒரு ராஜதந்திரப் பெட்டி அடித்தல்.

முயற்சி பலிக்க வாழ்த்துக்கள்.

 

உண்மையில் இந்த இருவழி நகர்வு தற்போதைய நிலையில் கட்டயாமே ....மகிந்த எப்படி தன் இதர கட்சிகளை பயன்படுத்தி சில கருத்துகளை வெளி நாட்டுக்கு சொல்ல முனைந்தாரோ அதேமாதிரி இப்ப தமிழ் நகர்வும் உள்ளது ... வெற்றிகரமாக நகர்த்த வேண்டும் .....

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் கீரைக் கடைக்கு எதிர்க் கடை.

தமிழர்க்கு ஆகக் கூடிய அதிகாரங்களை பெறும் ஒரு தீர்வை நோக்கி சம்சும் ஒரு பக்கத்தாலும் விக்கி மறுபக்கத்தாலும் முன்னேறுகிறார்கள்.

இது ஒரு ராஜதந்திரப் பெட்டி அடித்தல்.

முயற்சி பலிக்க வாழ்த்துக்கள்.

 

இனத்தை விற்று பிழைக்கும் சம் சும் கும்பல் 
விக்கியாருக்கு பெட்டி அடிக்கும்போதும் 
இப்படி வந்து எழுதாது போனாலே போதும் !

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்களுடன் கதைத்தபோது

இது ஒருவித ராஐதந்திரம் என்று தான் சொல்கிறார்கள்

நம்புகிறார்கள்

வழமைபோல் பெருமிதம் கொள்கிறார்கள் 

ஆனால் இந்த ராஐதந்திரம் தமிழர்க்கு சரிவராது

இடைநடுவில் நரிகள் புகுந்து வீழ்த்திவிடும் என்பது தான் தமிழரின் வரலாறு சொல்லும் செய்தி

காலம் பதில் சொல்லும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்து மக்களை விடுங்கள் ஒண்ணும் தெரியாத மொக்குக்கூட்டம்.

புலத்துப் பினாமிகள் என்ன பீல் பண்கிறார்கள்? 

ராததந்திரம் எல்லாம் சரிவராது, புலத்தில் இருந்து படை எடுத்துப் போர் நடத்துவோம் எண்டா?

தாயகத்து மக்களை விடுங்கள் ஒண்ணும் தெரியாத மொக்குக்கூட்டம்.

புலத்துப் பினாமிகள் என்ன பீல் பண்கிறார்கள்? 

ராததந்திரம் எல்லாம் சரிவராது, புலத்தில் இருந்து படை எடுத்துப் போர் நடத்துவோம் எண்டா?

என்னதான் இருந்தாலும் முன்னம் மாதிரி கொத்து பிசினசு இருக்காதுதான். 

சம்பந்தரும் சுமந்திரனும் புகுந்து விளையாடுகிறார்கள்.. தீர்வு கிடைத்து வரும் காலங்களில் சம்பந்தர் ஓய்வு பெறும்போது செயல்வீரன் சுமந்திரன் எதிர்கட்சி தலைவர்.. 

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்து மக்களை விடுங்கள் ஒண்ணும் தெரியாத மொக்குக்கூட்டம்.

புலத்துப் பினாமிகள் என்ன பீல் பண்கிறார்கள்? 

ராததந்திரம் எல்லாம் சரிவராது, புலத்தில் இருந்து படை எடுத்துப் போர் நடத்துவோம் எண்டா?

இனி  நீங்க எழுதி  அனுப்புவதை மட்டும் பதிகின்றான்

ஆரம்பியுங்கள்

என்னதான் இருந்தாலும் முன்னம் மாதிரி கொத்து பிசினசு இருக்காதுதான். 

சம்பந்தரும் சுமந்திரனும் புகுந்து விளையாடுகிறார்கள்.. தீர்வு கிடைத்து வரும் காலங்களில் சம்பந்தர் ஓய்வு பெறும்போது செயல்வீரன் சுமந்திரன் எதிர்கட்சி தலைவர்.. 

உங்களுக்கு ஏதோ பிரச்சினை என்று நினைக்கின்றேன்

ஒரு வருடத்தில் ஒருக்காத்தான் அவர்கள் கொத்து ரொட்டி சாப்பிடுகிறார்கள்

நீங்கள் 365 நாளும் காவித்திரிகிறீர்கள்

நல்ல வைத்தியரை நாடவும்

உங்களுக்கு ஏதோ பிரச்சினை என்று நினைக்கின்றேன்

ஒரு வருடத்தில் ஒருக்காத்தான் அவர்கள் கொத்து ரொட்டி சாப்பிடுகிறார்கள்

நீங்கள் 365 நாளும் காவித்திரிகிறீர்கள்

நல்ல வைத்தியரை நாடவும் 

நெனைச்சது சரியாத்தான் இருக்கு.. வருசத்தில ஒருக்காத்தானா?

அப்ப கவலையாத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெனைச்சது சரியாத்தான் இருக்கு.. வருசத்தில ஒருக்காத்தானா?

அப்ப கவலையாத்தான் இருக்கும்.

என்ன செய்வது

துப்பாக்கி  வைத்திருப்பனைப்பார்த்து

அணுகுண்டு வைத்திருப்பவன் பயங்கரவாதி என்று சொல்வது தானே இப்ப ஐனநாயகம்... 

  • கருத்துக்கள உறவுகள்

சூறா

விடுங்க அழுதுடுவார்.

சூறா

விடுங்க அழுதுடுவார்.

தேர்தலும் முடிந்து திருவிழாவும் முடிந்து இன்றுதான் திரும்பினேன், அங்கேயும் கொத்து என்றவுடன் அவர்களாலும் சிரிப்பை நிப்பாட்ட முடியவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.