Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவில் உதவியின்றி போரில் வெற்றிருக்க முடியாது! - சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீனாவின் உதவியில்லாமல் இறுதிப் போரில் இலங்கை இராணுவத்தினால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சீன செய்தி நிறுவனத்துக்கு சேவைக்கு கருத்துரைத்துள்ள அவர், சீனா இலங்கையின் பழைய மற்றும் வலுவான நட்பு நாடாகும். 2005ஆம் ஆண்டு முதல் அது இலங்கையின் போரை முடிவுக்கு கொண்டுவர உதவிகளை அளித்தது.

சீனாவின் உதவியில்லாமல் இறுதிப் போரில் இலங்கை இராணுவத்தினால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சீன செய்தி நிறுவனத்துக்கு சேவைக்கு கருத்துரைத்துள்ள அவர், சீனா இலங்கையின் பழைய மற்றும் வலுவான நட்பு நாடாகும். 2005ஆம் ஆண்டு முதல் அது இலங்கையின் போரை முடிவுக்கு கொண்டுவர உதவிகளை அளித்தது.

   

எனவே அந்த உதவியை மறந்துவிடக்கூடாது. சீனாவுடனான உறவை இலங்கை தொடர்ந்தும் பேணவேண்டும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்ற சீன- ஜப்பான் உலக பாஸிஸ எதிர்ப்பு போரின் 70வது நிறைவு நிகழ்வில் பங்கேற்ற சரத் பொன்சேகா, சீனா உலக சமாதானத்துக்காக பாரிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை சிறிய நாடு என்ற அடிப்படையில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=139963&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சிறிய நாடு என்ற அடிப்படையில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
.

 

உங்களிடம் சின்ன இனம் படுகிறபாடு மாதிரித்தான்.......இப்ப புரிகின்றதா ......சின்ன நாடு சின்ன இனத்தை அட க்கி நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரமில்லை

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாம்புக்கு (இந்தியாவுக்கு ) வாலையும் மீனுக்கு (சீனாவுக்கு ) தலையையும் காட்டடி விலாங்கு மீன்போல காரியத்தை சாதிக்கும் சிங்களவன் புத்தி சாலி என்பதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆகவேண்டி உள்ளது 

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

கருணா கும்மான் சொல்லுறார் இந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றி இல்லை என்று.

ரணிலார் சொன்னார் அமெரிக்காவின் உளவுத் தகவல்கள் ஒத்துழைப்பின்றி போரில் வெற்றி இல்லை என்று.

மகிந்த சொன்னார் ரஷ்சியாவின் மத்திய கிழக்கின் உதவி இன்றி யுத்தத்தில் வெற்றி இல்லை என்று.

சரத்பொன்சேகா சொல்கிறார் சீனாவின் உதவி இன்றி யுத்த வெற்றி இல்லை என்று.

கோத்தா சொல்கிறார் பாகிஸ்தானின் ஆயுதங்கள் இன்றி யுத்த வெற்றி இல்லை என்று.

இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க.. எங்கட புலம்பெயர் புத்திமான்கள் சொல்லினம்.. எல்லாம் கருணா கும்மானின் பிரிவால வந்த வெற்றி என்று. இன்னும் கொஞ்ச முன்னாள் ஒட்டுக்குழு கும்பல்கள் சொல்லினம் சிங்களவனின் அடிஅப்பட்டின்னு. 

மொத்தத்தில்... புங்கை அண்ணா சொன்னது போல.. கீதாச்சாரத்தில் கண்ணன் அர்ச்சுனனுக்கு சொன்னது தான் உண்மை போல.. எல்லாரும் கொன்ற பின் செத்த பாம்பை அடிச்சிட்டு.. நான் தான் கர்ணனைக் கொன்றேன் என்று எப்படி அர்ச்சுனா நீ உரிமை கோர முடியும் என்று.....................................:rolleyes:tw_anguished:

Edited by nedukkalapoovan

புலிகள் எப்ப செத்த பாம்பாச்சு .:grin:

புலிகள் எப்ப செத்த பாம்பாச்சு .:grin:

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரனின், "பகவத்கீதை"  கருத்தை தான்... நெடுக்ஸ் மேற்கோள் காட்டியுள்ளாரே தவிர... அது நெடுக்கரின் கருத்து அல்ல. :)

இதுதான் அவரின் கருத்து, இது உங்கள் கண்ணில் படாமல் போனது ஏனோ.... :grin:
//இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க.. எங்கட புலம்பெயர் புத்திமான்கள் சொல்லினம்.. எல்லாம் கருணா கும்மானின் பிரிவால வந்த வெற்றி என்று. இன்னும் கொஞ்ச முன்னாள் ஒட்டுக்குழு கும்பல்கள் சொல்லினம் சிங்களவனின் அடிஅப்பட்டின்னு. //

Edited by தமிழ் சிறி

புலிகள் எப்ப செத்த பாம்பாச்சு .:grin:

புலிகள் எப்ப செத்த பாம்பாச்சு .:grin:

நீங்கள் புலிகளை திட்டி திரிந்திருக்காமல் விட்டிருந்தால் அவர்களை வெற்றி கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை அர்ஜீன்.

அவர் அதை ஏற்ருக்கொண்ட படியால் தானே மேற்கோள் காட்டினார் .

  • கருத்துக்கள உறவுகள்

25 பேர் கூடி அடிச்சிட்டு.. ஒருத்தர் தான் அடிச்சன் என்று சொல்லித் திரிய மற்றவர் இல்ல நான் தான் அடிச்சன் என்று சொல்லித் திரிய......... இதை நோக்கித்தான் கீதாச்சாரம் வருகுது. விளங்கிறவைக்கு சரிவர விளங்கும். ஒற்றைப் புலியை கணடே ஓடின கூட்டத்துக்கு அது விளங்கிறது கடினம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் பட வசனத்தை போய் கீதாச்சாரம் எண்டு ஒரு ஆள் சொல்ல அதை நாலு பேர் காவியும் திரிகிறீகளே இதென்னப்பா அநியாயம்?

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

 

இதுதான் கீதாச்சாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் படத்தை பார்க்காததாலும், கீதாச்சாரத்தை வாசிக்காததாலும்  வந்த வினை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் படத்தை பார்க்காததாலும், கீதாச்சாரத்தை வாசிக்காததாலும்  வந்த வினை. :grin:

சரியாச் சொன்னியள் சிறீயண்ணா..

எதுக்கும் நூலை காட்டிவிடுவம்.. எனியாவது அறிஞ்சு கொள்ளட்டும். http://www.noolulagam.com/product/?pid=5770 

யுரியுப்பில் இருந்தால் கர்ணன் படத்தையும் போட்டு விடுவம். எனியாவது பார்க்கட்டும்.. அதற்குப் பின் வந்து கருத்தெழுதட்டும். இதிலையே இவ்வளவு குழப்பமுன்னா.. இவங்க கதைக்கிற அரசியல்....??! அதை பாவம் மக்கள் வாசிக்க வேண்டிய அவஸ்தை வேற. 

 

tw_blush::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
 

 

 

கர்ணன் பட வசனத்தை போய் கீதாச்சாரம் எண்டு ஒரு ஆள் சொல்ல அதை நாலு பேர் காவியும் திரிகிறீகளே இதென்னப்பா அநியாயம்?

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

 

இதுதான் கீதாச்சாரம்.

சுனாமியால் மொத்தக் குடும்பத்தையும் இழந்து தவிக்கும் ஒருவருடமோ அல்லது  முள்ளிவாய்க்கால் செல்வீச்சில் தன்.  குழந்தை சிதறியிருப்பதைப் பார்த்த ஒருதாயிடமோ ஏன் புலிகளால் கொல்லப்பட்ட உங்கள் தோழர்களின் உடலுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் உங்களிடமோ( மாற்றுக் கருத்தாளர்களிடமோ)மேற் சொன்ன பகவத்கீதை வாசகங்களைச் சொல்லலாமா எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று. இது வாசிக்க நல்லாயிருக்கும் நடைமுறைக்கு உதவாது தூக்கி குப்பையில் போட்டு விட்டு வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை விதைப்பான் என்று சொல்லங்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

 

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

 ஐயா தளபதியாரே!  உதை கொஞ்சம் சத்தமாய் சொல்லுங்கோ உங்களுக்கு புண்ணியமாய் போகும். இங்க சிலபேருக்கு தோட்டம் துலைவிலயாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.