Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலில் மூழ்கி பலியான சிறுவன் அய்லான் பற்றி கேலியான சித்திரம்... மீண்டும் சர்ச்சையில் "சார்லி ஹெப்டோ"

Featured Replies

பாரிஸ் : தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயந்து அகதிகளாக ஐரோப்பாவிற்கு சென்ற சிரியா நாட்டு குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறு குழந்தை அய்லான் கடலில் மூழ்கி பலியான சம்பவத்தை கேலி செய்யும் வகையில் பிரெஞ்சு இதழான சார்லி ஹெப்டோ கேலிசித்திரம் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடலோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அய்லானின் புகைப்படம், உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

charlie hebdo

இந்நிலையில் இச்சம்பவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு இதழான 'சார்லி ஹெப்டோ' கேலிசித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கார்ட்டூனில், ஏசு கிறிஸ்து போன்ற தோற்றத்தில் ஒருவர் கடல் நீரின் மீது நடந்து வருவதைபோலவும், அருகே, சிரியா நாட்டு குழந்தை கடலில் மூழ்கிய படமும் வரையப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்தவர்கள் நீரில் மேல் நடக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய குழந்தை நீரில் மூழ்கத்தான் முடியும் என்றும் அந்த கார்டூன் விளக்க குறிப்பு வேறு கொடுத்துள்ளது. இந்த கேலிசித்திரத்திற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. முன்பு இந்த பத்திரிகையில் நபிகள் நாயகத்தை பற்றி கேலி சித்திரம் வெளியானதை கண்டித்து, தீவிரவாதிகள் சிலர் 'சார்லி ஹெப்டோ' அலுவலகத்திற்குள் புகுந்து, 12 ஊழியர்களை சுட்டு கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/charlie-hebdo-stirs-new-controversy-with-drowning-boy-cartoo-235852.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பத்திரிகை அலுவலகத்தில் போய் சுட்டதில் ஒரு பிழையும் இல்லை என்று மீண்டும் நிருபித்துள்ளார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பத்திரிகை அலுவலகத்தில் போய் சுட்டதில் ஒரு பிழையும் இல்லை என்று மீண்டும் நிருபித்துள்ளார்கள்

அரபு நாட்டில் வசிக்கும் கிறிஸ்தவர்களை துன்புறுத்துபவர்களை....மேலைத்தேய நற்பணிமன்ற உறுப்பினர்களை கடத்தி கொலைசெய்பவர்களை.....மேலைத்தேய உடைகள் அணிந்து செல்பவர்களை கண்டால் காறித்துப்பும் அரேபியர்களை...அமெரிக்கர்களை கண்டால் செருப்பால் வீசும் முஸ்லீம்களை உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?

இந்த பத்திரிகை அலுவலகத்தில் போய் சுட்டதில் ஒரு பிழையும் இல்லை என்று மீண்டும் நிருபித்துள்ளார்கள்

செல்வம் கொழிக்கும் அரபு நாடுகள் இவர்களை ஏற்க மறுக்கும் மர்மத்தை விளங்கி கொண்டு  பத்திரிகை மீது பிழை பிடிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,ஒரு பொறுப்பான பத்திரிகை மத விரோதத்தை தூண்டும் விதமாக ஒரு மதத்தை உயர்த்தியும்,இன்னொரு மதத்தை தாழ்த்தி எழுதுவது கேவலம்

  • கருத்துக்கள உறவுகள்

12 பேரை காவு கொடுத்தவர்கள், சிறுவன் அயலான் அனுதாபத்தை வைத்து, இன்னும் தீவிரவாதிகள் வந்து அழிவை உண்டாக்கலாம் என்று கவலைப்படும் நியாயமும் இருக்கிறதே.

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையில் ஈடுபடுபவரைவிட வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு அதிக தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

சார்லிக்கு குழந்தையின் இறப்பில் பிழைப்பு நடத்தும் கேவலம் தேவையா

அப்படியா கதை போகுது அப்ப இப்படி பார்க்கலாம் இது கருத்து சுதந்திரம் உள்ள நாடுகள் ஏன் ஜனதிபதிக்கு கூட நக்கல் காட்டுன் போடுகின்ற நாடுகள் படம் போட்டவனை கழுத்தை சிவுவர்களுக்கு உகந்த நாடுகள் இவை இல்லை என நிநைக்கின்றேன் .  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பத்திரிகை அலுவலகத்தில் போய் சுட்டதில் ஒரு பிழையும் இல்லை என்று மீண்டும் நிருபித்துள்ளார்கள்

என்ன ரதியக்கா ,இதே போன்ற செயலை புலிகள் செய்திருந்தால் பயங்கரவாதம் என குத்தி முறியும் நீங்களா இப்பொழுது மதபயங்கரவாதிகளின் செயலுக்கு  ..ஆதரவு வழங்குவது.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா,ஒரு பொறுப்பான பத்திரிகை மத விரோதத்தை தூண்டும் விதமாக ஒரு மதத்தை உயர்த்தியும்,இன்னொரு மதத்தை தாழ்த்தி எழுதுவது கேவலம்

 சிரியா நாட்டுமக்கள் போர் அகோரத்தால் நாதியற்று அலையும் போது கண்டும் காணாமல் இருக்கும் அரேபிய செல்வந்த நாடுகளும் அரைகுறை முஸ்லீம்களும் ஏன் இந்த அய்லான் பற்றி அக்கறை காட்டவில்லை?

அவர்களின் சொந்த நாட்டில் அமெரிக்கனோ பிரான்ஸ்காரனோ பிரிட்டிஷ்காரனோ வந்தால் செருப்பால் அடிக்கும் இவர்களுக்கு தஞ்சம் என்றவுடன் ஐரோப்பா புண்ணியபூமியாக தெரிகின்றது.

ஆனால் அவர்களின் பிழைகளை சுட்டிக்காட்டக்கூடாது! :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குழந்தையின் தகப்பன் 'சர்வ தேச ஆள் கடத்தும் கும்பல் ஒன்றின்' தலைவர் என்று கூறப்படுகின்றது!

இறந்த குழந்தையின் படங்கள் சரியான கோணங்களில் ..எடுக்கப் பட்டு சில நோக்கங்ககுக்க்காகக் கசிய விடப் பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள்!

இதை விடவும் மிகவும் அநாதரவான நிலையில் எமது இனத்துக் குழந்தைகளின் இறந்து கிடந்த படங்கள் வெளி வந்த போது அவை.. எவரது மனதையும் உறுத்தவில்லை!

ஆனால் இந்தக் குழந்தையின் மரணம் மட்டுமே எல்லோரையும் உறுத்துகின்றது!

இந்தக் குழந்தையின் மரணத்துக்கு இந்தக் குழந்தையின் தகப்பனாரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்! சர்வ தேசமல்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.