Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை சீண்டினால் புலியாக மாறுவேன்: குஷ்பு ஆவேசம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை சீண்டினால் புலியாக மாறுவேன்: குஷ்பு ஆவேசம்!

திருப்பூர்: "தில் இருந்தால் நேரடியாக பேச வேண்டும். பார்க்க அமைதியாகத்தான் இருப்பேன். சீண்டினால் புலியாக மாறிவிடுவேன்" என ஹசீனா சையத்துக்கு எதிராய் குஷ்பு ஆவேசமாய் பேசினார்.

நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என கார்த்தி சிதம்பரம் சொன்ன கருத்துக்கு பதிலளித்த குஷ்பு, "ப.சிதம்பரம், தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களை நம்பி காங்கிரஸ் இல்லை" என கருத்து தெரிவித்திருந்தார்.

kushboo%20speach04.jpg

குஷ்புவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

''காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத்துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது” என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், திருப்பூரில் இன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இதற்கு பதிலளித்தார் குஷ்பு.

''தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். அவர் பெயரை சொல்ல கூடவிரும்பவில்லை. நான் தி.மு.க.வில் இருந்தேன். வெளியே வந்தேன். ஏன் வெளியே வந்தேன் என இதுவரை சொல்லவில்லை. கருணாநிதி மீது உள்ள பாசத்தால் சொல்லவில்லை.

ஆனால், ஏன் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தேன் என ஊருக்கே தெரியும் என ஹசீனா சொல்லி இருக்கிறார். உனக்கு தில் இருந்தா நேரா வந்து பேசு. இப்படி பேப்பர்ல பேசுனா, பதிலுக்கு நானும் பேசுவேன். அப்புறம் நீ காணாம போய்டுவே. நான் அமைதியாதான் இருப்பேன். என்னை சீண்டினா புலியா மாறிடுவேன்” என்றார் ஆவேசமாக.

மேலும், ''கடந்த ஓராண்டில் தமிழக காங்கிரஸ் ஓஹோ என வளர்ந்து வருகிறது. நான் 30 ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறேன். எனக்கு சத்யமூர்த்தி பவன் எங்கே இருக்கிறது என தெரியாமல் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாகதான் சத்யமூர்த்தி பவன் எங்கு இருக்கிறது என தெரிகிறது. எனக்கு மட்டுமல்ல பலருக்கும் சத்யமூர்த்தி பவன் இருக்கும் இடமே இப்போதுதான் தெரிகிறது. இந்த ஒராண்டில்தான் சத்யமுர்த்தி பவன் செயல்படுகிறது. தொண்டர்களும் வந்து செல்கிறார்கள்” என்றார்

http://www.vikatan.com/

 

எனக்கென்னமோ பயமாய்க்கிடக்கு..:grin:

 
  • கருத்துக்கள உறவுகள்

படங்களில 'வசனம்' பேசிற மாதிரி..நிஜ வாழ்க்கையிலும் பேசுறா போல கிடக்கு!

கருணாநிதி மேல அவ்வளவு பாசமா?

அவ்வளவு நல்லவரா கருணா நிதி?

  • கருத்துக்கள உறவுகள்

"புலி"  என்ற, வார்த்தைக்கு.... அர்த்தம் தெரியாத குசுபு.

இவருக்கு... கட்சி மாறுவதே, அடிப்படை கொள்கை.
வட  இந்தியாவில்  முஸ்லீமாக பிறந்து... தமிழ் நாட்டுக்கு வந்து.... நடிகையாகி.....
அவருக்கு கோயில் கட்டி, "குஸ்பு  இட்டலி" .வித்ததும்....... தமிழன் தான்.

கறுப்புக்கண்ணாடி... கருணாநிதி, தன்னை ஏமாத்திப் போட்டான்... அல்லது ஸ்ராலின், அழகிரி விடயங்கள்...... நமக்கு... நன்றாகவே... தெரியும். இனி.... இவ, சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

குஸ்புவுக்கு......  தமிழ் நாட்டில் அரசியல் செய்ய.. சந்தர்ப்பம் இல்லை.
பெட்டி, படுக்கைக்களை... கட்டிக் கொண்டு... வட நாட்டுக்குப் போக.. " ரயில்  ரிக்கற் எடுங்கள் "

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து குஷ்புவை திட்டாதீர்கள். அவர் தமிழ்நாட்டின் மருமகள். happy01941.gif

 

inthira_zpslvpyxznr.jpg

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்பு புலியானால் ....
சுந்தர் என்ன செய்வார் ? அவரும் ஆண்புலி ஆகுவாரா ? 

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்பு புலியானால் ....
சுந்தர் என்ன செய்வார் ? அவரும் ஆண்புலி ஆகுவாரா ? 

மருது,

சுந்தர் எப்பவோ பூனையாக மாறிவிட்டார், இந்தப்புலி பல சர்க்கஸ் கூடரங்களில் இருந்துதான் இப்போது சுந்தரது முற்றத்தில கட்டுபட்டிருக்கு. அது உறுமின உறுமலில் சுந்தர் பூனையாகிவிட்டார், இவ ஒருமுறை ரஜனி வீடேறி பழைய நினைவுகளைக் கிளறிச் சுந்தருக்குப் படவாய்ப்புக்கேட்டர் அன்றுமுழுக்க ரஜனி கடவுளே கடவுளே எனக்கூறுக்கொண்டிருந்ததாக நெடுக்கர் சொல்லுறார்

அதுசரி காங்கிரசுக்குத்தான் புலியைப்பிடிக்காதே அப்படியென்றால் குஸ்புவுக்கு ஏழரை பிடிச்சிட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

சுந்தர் எப்பவோ பூனையாக மாறிவிட்டார், இந்தப்புலி பல சர்க்கஸ் கூடரங்களில் இருந்துதான் இப்போது சுந்தரது முற்றத்தில கட்டுபட்டிருக்கு. அது உறுமின உறுமலில் சுந்தர் பூனையாகிவிட்டார், இவ ஒருமுறை ரஜனி வீடேறி பழைய நினைவுகளைக் கிளறிச் சுந்தருக்குப் படவாய்ப்புக்கேட்டர் அன்றுமுழுக்க ரஜனி கடவுளே கடவுளே எனக்கூறுக்கொண்டிருந்ததாக நெடுக்கர் சொல்லுறார்

அதுசரி காங்கிரசுக்குத்தான் புலியைப்பிடிக்காதே அப்படியென்றால் குஸ்புவுக்கு ஏழரை பிடிச்சிட்டுது.

அப்படி சான்ஸ் வாங்கித் தான் 'அருணாசலம்' படம் எடுத்து ஊத்திக்கிட்டாங்க. 

விட்டதைப் பிடிக்க, திருப்பி சான்ஸ்  கேட்டுப் போகும் போது, 'ஆளை விடுங்க சாமி, இமையமலைக்கு யாத்திரை போறேன்', வந்தப் புறம் பார்க்கலாம்' என்று சாட்டு சொல்லி அனுப்பி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பத் தில்லான பெண்மணி..., அவவின் சதுரங்க ஆட்டத்தி மெச்சத்தான் வேண்டும்...!

சின்னத்தம்பியில் ஜில்லின்னு வந்து

பிரபு வீட்டோட பிடுங்குப் பட்டு

சுந்தர்வீட்டில் சிம்மாசனம் போட்டு

ரசிகர்கள் கோயில் கட்ட விட்டு

தி.மு.க வின் தொண்டராகி

லொள்ளு கருத்துக்கள் கொட்டி விட்டு

கால்செருப்புடன் கால்மேல் கால்

போட்டிருந்து, கலவரமாகி

கருணாநிதியின் கால் பிடித்து விட்டு

ஸ்டாலினால் ஹோல்டன் ஆகி

காங்கிரஸில் தொங்கிக் கொண்டு

அண்ணை ரைட்...!

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுத் தண்ணில, எவ்வளவு தூரம் பருப்பு வேகும் என்று பார்கிறார்.

விசயம் என்னெவெனில், சுந்தர் c யும், சீமானும் நல்ல நண்பர்கள். அதனால் சீமானிடம் இருந்து தப்புகிறார் போல தெரிகிறது.

இல்லாவிடில் காய்ச்சி  எடுத்திருப்பார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

11933463_951559051583906_512516332018732

tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.