Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாகதீப பெயரை நயினாதீவு என மாற்றக்கூடாது! வட மாகாண சபையின் தீர்மானம் முட்டாள்தனமானது -இரா.சம்பந்தன்.

Featured Replies

நாகதீப பெயரை நயினாதீவு என மாற்றக்கூடாது! வட மாகாண சபையின் தீர்மானம் முட்டாள்தனமானது!!

'நாகதீப' என்ற பெயரை 'நயினாதீவு' என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது. நாகதீப என்பதை நயினாதீவு என மாற்றக்கூடாது. இதற்கு நானும் எதிர்ப்பே. - இப்படித் 'திவயின' சிங்கள வார இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

நயினாதீவின் சில பகுதிகள் தமிழில் நாகதீப எனப் பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து தமிழில் நாகதீப எனப் பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அதனை மீண்டும் நயினாதீவு என மாற்ற வேண்டும் என வடக்கு மாகாண சபையில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கொண்டு வந்த பிரேரணை தீர்மானமாக நிறைவேறியது. இந்தத் தீர்மானம் தென்னிலங்கையில் பூதாகாரமாக திரிபுபடுத்தப்பட்டு நாகதீப என்ற பெயரை மாற்ற முடியாது என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையிலேயே இந்த விடயம் குறித்து சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாகதீப என்ற பெயரை மாற்ற வேண்டும் எனக் கூற முடியும். ஆனால் அப்படி இடமளிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறோம். ஒரே நாட்டுக்குள் நாம் பிரிந்து இருக்க முடியாது. நாம் ஒன்றாக வாழ விரும்புகையில் சிலர் அதனைக் குழப்ப முயல்கின்றனர். வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள்தனமானது என்று அந்த நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். -

http://malarum.com/article/tam/2015/11/21/12594/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%A

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 நீங்கள் எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து இணக்கமாய் வாழப்போறோம் எண்ணுரியள். அவன் உள்ளதையும் பிடுங்கிரதிலையே குறியாய் இருக்கிறான். பிறகென்ன ஒற்றுமை? ஒருகை தட்டி ஓசை வராது. தமிழன்ர கோமணத்தை உருவிற வரைக்கும் உந்தாளுக்கு ஒண்டும் வராது. உது வாக்கு மாறி படுத்திற பாடு.  

தாத்தாவின் திருவிளையாடல்கள் ... 

தமிழர்கள் இழந்து போன உரிமையை 2016க்குள்ளை வாங்கி தாறன் எண்டு சொல்கிற தலைவர் சொல்கிறார்...  தமிழர்களிடம் இருந்து வலுக்கட்டாயமக திணிக்கப்பட்ட பெயரை மாத்தக்கூடாதாம். 

அப்பிடி பார்தால் தமிழர்கள் வாழ்விடங்களில் வன்முறையை பிரயோகித்து வந்து குடியேறின இராணுவம், சிங்களவர்களை எல்லாம் வெளியேற சொல்லுறதும் பிழைதானே..?

தலைவர் சொன்னால் சரியாகதான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயாவின்ர சொந்த மாவட்டத்திலயே பல கிரமாங்கள ஜயா தத்து குடுத்திட்டார் அவருக்கு இதெல்லாம் ஜிஜீப்பி.......... இதெல்லாம் வயசுபோக போக அறளைபேந்த கதையல்தான் கதைக்குங்கள்............

இந்தாளுக்கு சித்தம் கலங்கி விட்டது .....ஓய்வு எடுப்பது நல்லம் தலைவரே 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபாதாசன் said:

இந்தாளுக்கு சித்தம் கலங்கி விட்டது .....ஓய்வு எடுப்பது நல்லம் தலைவரே 

ஒருக்கா அவுஸ்திரேலியாக்கு அனுப்பி எடுக்க எல்லாம் சரியாகிவிடும் .

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெருமாள் said:

ஒருக்கா அவுஸ்திரேலியாக்கு அனுப்பி எடுக்க எல்லாம் சரியாகிவிடும் .

பிரபாகரன் படையணி மீண்டும் களமிறங்குமெண்டு அவுசில் இருக்கும் புலன்பெயர் போராளிகள் சம்பந்தரை வெருட்டி அனுப்புவார்களாக்கும்!tw_blush:

பிரச்சினை எண்டு வந்தால் சிங்கன் இந்தியாவிலை எல்லோ போய் பதுங்கிறவர். அவர் ஏன் அவுஸ்ரேலியா போறார்...?

தமிழ்நெற்றில் Know the Etymology என்று அறிவார்ந்த ஒரு தமிழ் ஆய்வாளர் எழுதி வருகின்றார். தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை,அவர் நயினாதீவைப் பற்றி எழுதினால் அதன்பிறகு எனது பதிவை வைக்கின்றேன். 

நான் ஹிஸ்ரரியில கொஞ்சமில்லை ரொம்ப வீக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உவர் சொறீலங்காவின் எதிர்கட்சி தலைவர் ஆவதற்காக.. சிங்கக் கொடியை தூக்கினார். சொறீலங்காவின் இராணுவ அணிவகுப்பை சிங்களம் கொண்டாடிய சுதந்திர தினத்தில் கொட்டாவி விட்டபடி ஏற்றார். புலிகள் பயங்கரவாதிகள் என்றார். தமிழர்கள் தமிழீழமே கேட்கவில்லை என்றார். நாட்டில் நடந்தது பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தான் இனப்படுகொலை அல்ல என்றார்.

முள்ளிவாய்க்காலில் இவ்வளவு சனம் சாகேக்க மூச்சும் விடாத சம்பந்தன்.. இப்ப நாயினாதீவு நாக தீப ஆன போது மெளனம் காத்த சம்பந்தன்.. இதுக்கு கண்டனம் சொல்லாட்டி தான் ஆச்சரியம்.

விரைவில் இவரும் சுமந்திரனும்.. தங்கள் பெயர்களை சம்பந்த மாத்தையோ.. சுமந்திர மாத்தையோ என்று மாற்றிக் கொள்வார்கள். கவலை வேண்டாம். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, வாலி said:

பிரபாகரன் படையணி மீண்டும் களமிறங்குமெண்டு அவுசில் இருக்கும் புலன்பெயர் போராளிகள் சம்பந்தரை வெருட்டி அனுப்புவார்களாக்கும்!tw_blush:

நமட்டு கருத்துக்கள் வேண்டாம் ஐயா!

சம்பந்தன் சொன்னது சரியா? பிழையா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்.:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.