Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின் 10,000 புத்தகங்கள்

Featured Replies

எரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின் 10,000 புத்தகங்கள்

 

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் சிலர் இணைந்து 10,000 புத்தகங்களை ஞாயிறன்று அன்பளிப்பு செய்திருக்கின்றார்கள்.

                            151129164141_jaffna_library_books_donati

 தென்னிலங்கையைச் சேர்ந்த பலர் இணைந்து யாழ் நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் பங்குபெற்றனர்

கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு கடந்த நேரத்தில் இடம்பெற்ற அரச வன்முறைச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாணம் நூலகம் எரியூட்டப்பட்டது.

இதன்போது அங்கிருந்த சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகிப் போயின. இதனையடுத்து, இந்த நூலகம் படிப்படியாக புனரமைக்கப்பட்டு, பின்னர் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது.

அதன் பின்னர், முதற் தடவையாக பெருமளவிலான புத்தகங்கள் பொதுமக்கள் தரப்பில் இருந்து இந்த நூலகத்திற்கு இப்போதுதான் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

சிங்கள மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த உப்புல் சாந்த சன்னஸ்கல நாவலாசிரியரின் அம்மா என்ற நாவல், கவிஞரும் எழுத்தாளருமான வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்ட நிகழ்வையொட்டி இந்தப் புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.

151129163936_upul_sannasgala_writer_sri_  எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல

யாழ் நூலகத்தை மதவாதிகளும், இனவாதிகளுமே எரியூட்டினர் என இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல பிபிசி தமிழோசயிடம் தெரிவித்தார்.

அதன் பாதிப்பை உணர்ந்த தம்மைப் போன்றோருக்கு அதனைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அவா காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார்.

தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும், சிறுகதை, நாவல், இலக்கியம், கலை, கலாச்சாரம், அறியியல், சமூகவியல், சுயசரிதை என்று பல்துறை சார்ந்த நூல்களும் இவற்றில் அடங்கியிருக்கின்றன.

யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட வன்செயலை மூடிமறைப்பதற்கோ அல்லது அந்தப் பாதிப்புக்ககான நிவாரணமாகவே இந்தப் புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படவில்லை என யாழ் பல்கலைக்கழக மொழியியல் பிரிவின் மூத்த விரிவுரையாளர் சுவாமிநாதம் விமல் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த நூலகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற அறிவுசார்ந்த நடவடிக்கைக்குத் தங்களுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

இந்த நடவடிக்கையானது கடந்துபோன வரலாற்றை நோக்கிய ஒரு செயற்பாடல்ல. எதிர்காலத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகும் என்றும் சுவாமிநாதன் விமல் குறிப்பிட்டார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/11/151129_jaffna_library_bookdonation

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்படவேண்டிய நல்ல நிகழ்வு. மகிழ்ச்சியாக இருக்கின்றது! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவின் முதல்நிலை நூலகத்தை கடைநிலைக்கு கொண்டு வந்திட்டு.. அதுவும்.. 34 ஆண்டுகளுக்குப் பிறகு 10,000 நூல்கள்... அன்பளிப்புச் செய்கிறது சிங்களம். இதன் மூலம் இந்த நூலகம் ஆசியாவின் முதல்நிலையை அடைச்சிட்டுது என்றும் சிங்களவர்கள் தமிழர்களோடு சங்கமித்துவிட்டார்கள் என்றும் சில மகிழ்ச்சி வெளியிடுகிறார்கள். இதை எப்ப எரிக்கிறதோ..??! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சாட்சி உள்ள சிங்களவர்களுக்கு நன்றிகள். 34 வருடங்கள் மிக நீண்டது தான்.

நல்ல விடயம் .இப்படியான நிகழ்வுகள் தான் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட இடைவெளியை குறைக்க உதவும் .

கனடாவில் எரித்த நூல் நிலையம் போனது போனதுதான் .

ஆண்டவா, கொஞ்ச புத்தகங்களை கொண்டு வந்து கொடுத்து ... இனங்களுக்கிடையே காலாகாலமாக இருந்த இடைவெளியை குறைத்திட்டார்களாம்???

... எரிக்கப்பட்டது ...தமிழனின் வரலாற்று ஓலைச்சுவடுகள்! 

... எரிக்கப்பட்டது ... 1981,  30 வருடங்கள் தாண்டி விட்ட பின் ஞானோதயம் பிறந்திருக்கிறது! இவ்வளவு காலமும் எரிக்கப்பட்டது தெரியாதா??

.... இது தமிழர்களுக்கு படம் காட்டப்படுகிறது! ... அடியா விசில் ... மாகமாக்கள் ஓடி வந்து அடிப்பார்கள்! ... ஏனெனில் வேறு அரசியல் தற்போது இல்லை! புலி அழிப்புடன் அவர்கள் தம் தமிழ் மக்களுக்கான அரசியல் முடிந்து விட்டது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, arjun said:

நல்ல விடயம் .இப்படியான நிகழ்வுகள் தான் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட இடைவெளியை குறைக்க உதவும் .

கனடாவில் எரித்த நூல் நிலையம் போனது போனதுதான் .

இடை வெளியை குறைக்க கனடா தூரம் கூடிப்போச்சு......:grin:

கொழும்பிலை மாடு/நாய் இலையான் வராத நல்ல ஏரியா இருக்கு....அங்கையிருந்து கொண்டும் இடைவெளியை குறைக்கலாம். உதவி தேவையெனில் தண்ணி சொறி தனிமடலில் தொடர்புகொள்ளவும். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.