Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர்நாடுகளில் தமிழ் பெண்களும் பொட்டும்

Featured Replies

தமிழப் பெண்களிடையே பொட்டுவைக்கும் பழக்கம் எந்தக்காலங்களில் ஏற்பட்டது :rolleyes:

பொட்டுவைக்கும் பழக்கம் திராவிடமரபில் வந்தவையா :lol: புலம் பெயர் நாடுகளில் இளம் சமுதாயப்பெண்களிடம் பொட்டுவைக்கும் பழக்கம் குறைந்து வருகின்றது இதுஅரோக்கியமானதா :lol:

பெண்கள் திருமணமானவரா இல்லையா என்பதை அறிவதற்காக ஆதிகாலத்தில் ஏற்படுத்தப்பட்டதுதான் பொட்டு. புலம்பெயர் நாடுகளில் பல இளம் பெண்கள் திருமணமாகவிட்டாலும் யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்திலை இப்பகொஞ்ச நாளாய் ஒரு கோஷ்டி கையிலை கத்தி இல்லாக்குறையாய் திரியுது.இன்னொரு கோஷ்டி துண்டைக்காணம் துணியை க்காணம் எண்டு திரியுது.உந்த பெண், பொட்டு சமாச்சாரங்கள் எண்டால் உடனை சீறிக்கொண்டு வருவினம் எண்டு நினைகிறன். B)

பொட்டு எப்படி வந்தது என்பது பற்றியும் ஒரு அருவருப்பான கதை சொல்லப்படுவது உண்டு.

அந்தக் கதை இதில் வேண்டாம்.

பொட்டு தேவையா, இல்லையா என்பதை பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இன்றைக்கு பொட்டு என்பது வெறும் அணிகலனாக மாறி விட்டது. அதற்கு ஏதும் விசேட அர்த்தங்கள் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அப்படி இருப்பது நல்லது என்றுதான் எனக்கு படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திலை இப்பகொஞ்ச நாளாய் ஒரு கோஷ்டி கையிலை கத்தி இல்லாக்குறையாய் திரியுது.இன்னொரு கோஷ்டி துண்டைக்காணம் துணியை க்காணம் எண்டு திரியுது.உந்த பெண், பொட்டு சமாச்சாரங்கள் எண்டால் உடனை சீறிக்கொண்டு வருவினம் எண்டு நினைகிறன். B)

இந்த கோஷ்டிகெல்லாம் யாருங்க தலைவர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கோஷ்டிகெல்லாம் யாருங்க தலைவர்?

ஏன் கொழுவி விட்டு வேடிக்கை பாக்கவோ. :angry:

பொட்டு எப்படி வந்தது என்பது பற்றியும் ஒரு அருவருப்பான கதை சொல்லப்படுவது உண்டு.

அந்தக் கதை இதில் வேண்டாம்.

பொட்டு தேவையா, இல்லையா என்பதை பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இன்றைக்கு பொட்டு என்பது வெறும் அணிகலனாக மாறி விட்டது. அதற்கு ஏதும் விசேட அர்த்தங்கள் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அப்படி இருப்பது நல்லது என்றுதான் எனக்கு படுகிறது.

:rolleyes:

எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்திருபிங்க போல இருக்கு? இதெல்லாம் எங்க தேடிப்பிடிக்கிறிங்க?

இந்த பொட்டு, பூ எல்லாம் சும்மா ஒரு பம்மாத்து என்டு தான் நான் நினைகிரேன். பெண்களை அழகு படுத்தவும், திருமணம் ஆனவர், ஆகதவர் என்று வேரு படுத்தவும் தான். ஆகையால் இது தற்போதைய சூழ்நிலைக்கு அவசியம் என்று நான் கருதவில்லை. என்ன, பொட்டு வைத்தால் கொஞ்சம் அழகு கூடும்.

நான் ஒரு அழகு சாதன கடைக்கு போனேன்(எனக்கும் பொட்டு வைக்கும் பழக்கம் குறைவு), கடைகாரர் கேட்டார் ஏன் நான் பொட்டு வைபதில்லை என்று, எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை,ஏனென்டால் எனக்கே தெரியா நான் என் பொட்டு வைபதில்லை என்று.

அப்புறம் அவர் சொன்னார், பொட்டு வைக்காத பெண்கள், இலகுவில் ஆண்களிடம் வசிய பட்டு விடுவார்களாம். பொட்டு பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாம்.

இதில் உண்மை பொய் எனக்கு தெரியாது. :lol:

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றி ஒரு வசியப்புள்ளி. அதை மறைப்பதே பொட்டு. இதை எங்கோ படிச்ச ஞாபகம். உண்மை பொய் தெரியாதுங்கோவ்..!

:rolleyes:

நாட்டுக்கு முக்கியமான நல்லதொரு சந்தேகம்....... :rolleyes:

  • தொடங்கியவர்

நாட்டுக்கு முக்கியமான நல்லதொரு சந்தேகம்....... :o

நல்லதொரு சந்தேகம்தான் நண்பரே :huh:

வசிண்ணா என்ன வெறுப்பில பதில் எழுதுறிங்க!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் பொட்டு வைப்பதும் வைக்காமல் விடுவதும் அவரவர் விருப்பம் . பொட்டு தங்களுக்கு அழகு என்று பெண்கள் கருதினால் வைக்கட்டும் இல்லையென்றால் வைக்கத் தேவையில்லை. ஆனால் பெண்கள் என்றால் பொட்டு வைக்கத்தான் வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அதற்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

எனக்கு பொட்டு வைத்த பெண்களின் நெற்றியை விட பொட்டு வைக்காத அவர்களின் நெற்றி பிடித்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு எப்படி வந்தது என்பது பற்றியும் ஒரு அருவருப்பான கதை சொல்லப்படுவது உண்டு.

அந்தக் கதை இதில் வேண்டாம்.

பொட்டு தேவையா, இல்லையா என்பதை பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இன்றைக்கு பொட்டு என்பது வெறும் அணிகலனாக மாறி விட்டது. அதற்கு ஏதும் விசேட அர்த்தங்கள் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அப்படி இருப்பது நல்லது என்றுதான் எனக்கு படுகிறது.

பொட்டு என்று விவாதம் தொடங்கிவிட்டது சபேசன் சார். கருத்தை வைங்க சார்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களவர் வீட்டுக்கு போனா இருக்கவே இருக்கிறது சிடிக்கர் பொட்டு எடுத்து நெத்தியில ஒட்டிட்டு போறது.குங்கும பொட்டு எண்டாலே என் நெத்திக்கு அலர்ஜி.

(கறுப்பியின் நெத்திக்கு வெள்ளை பொட்டு வைத்தால் எடுப்பாய் இருக்கும் அதை வைக்கமுடியுமோ)

இப்படித்தான் லண்டனுக்கு வந்த புதுசில்ல பொட்டொடு தான் திரிவன். ஒருக்கா டொக்டரிட்ட போனப்ப இந்த நாட்டு வெள்ளைத்தோல் கேட்டார் பொட்டைப்பத்தி.

எல்லாம் சொன்ன பிறகு நக்கலாக கலியாணத்துக்குமுன் கலியாணத்துக்கு பின் ஒரு நிறம் என்பது போல ஒவ்வொரு பிள்ளைக்கும் தாயாக போகும் போதும் பொட்டின் நிறமும் மாறுமா இல்லையா என்று கேட்டார்.

அதுக்கு பிறகு எல்லா இடத்துக்கும் பொட்டு வைக்கிறது இல்ல

  • கருத்துக்கள உறவுகள்

எங்களவர் வீட்டுக்கு போனா இருக்கவே இருக்கிறது சிடிக்கர் பொட்டு எடுத்து நெத்தியில ஒட்டிட்டு போறது.குங்கும பொட்டு எண்டாலே என் நெத்திக்கு அலர்ஜி.

(கறுப்பியின் நெத்திக்கு வெள்ளை பொட்டு வைத்தால் எடுப்பாய் இருக்கும் அதை வைக்கமுடியுமோ)

இப்படித்தான் லண்டனுக்கு வந்த புதுசில்ல பொட்டொடு தான் திரிவன். ஒருக்கா டொக்டரிட்ட போனப்ப இந்த நாட்டு வெள்ளைத்தோல் கேட்டார் பொட்டைப்பத்தி.

எல்லாம் சொன்ன பிறகு நக்கலாக கலியாணத்துக்குமுன் கலியாணத்துக்கு பின் ஒரு நிறம் என்பது போல ஒவ்வொரு பிள்ளைக்கும் தாயாக போகும் போதும் பொட்டின் நிறமும் மாறுமா இல்லையா என்று கேட்டார்.

அதுக்கு பிறகு எல்லா இடத்துக்கும் பொட்டு வைக்கிறது இல்ல

ஏன் கறுப்பி அடுத்தவர் கேட்டுட்டார்..குறை பிடிக்கிறார் என்பதற்காக உங்கள் பெற்றோரையும் யாரேனும் குறை கண்டுவிட்டால்... தூக்கி எறிஞ்சிடுவிங்களோ. :lol::lol: பக்கத்து வீட்டு பங்கஜம் அக்கா உங்கள் ஆத்துக்காரர் பற்றி ஏதாவது சொன்னாலும் அவரையும் பொட்டைப் போல கழற்றி விட்டிருவீர்கள் போல இருக்குதே...! :lol:

உங்களுக்குள் சுயமான ஏன் எதற்கு செய்யுறன் என்ற சிந்தனை இல்லாமையே அடுத்தவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் சுயத்தை இழந்து கொண்டிருக்கக் காரணம். கறுப்பு வெள்ளை என்ற பேதமையும் அதன் மூலமே உங்களுக்குள் வேரூன்றி உள்ளது. சுயமாகச் சிந்திக்கச் செயற்பட உறுதியெடுங்கள். அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான்...அதையெல்லாம் கணக்கில் எடுப்பதற்கு முன்னர் சிந்தியுங்கள்..சுயமாக..! :P :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொட்டு போடுவது அந்த டாக்டருக்கு இடைஞ்சலாக்கும்.

வைத்தியத்துக்காக போகும் போது ஏன் இந்த விவாதத்துக்கு கதை வைக்கோனும். எனக்கு தேவை வைத்தியம் அதில்தான் என் கவனமும்.

பொட்டு போடாமல்விட்டால் நம் கலை கலாச்சாரம் ஒன்றம் குறைந்து போகாது

நெடுக்கு சார், குண்டக்க மண்டக்க கதைவேணாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பு வெள்ளை என்ற பேதமையும் அதன் மூலமே உங்களுக்குள் வேரூன்றி உள்ளது.

அட அட அட--

காப்பிலி காப்பிரி எண்டுறவை கறுப்பு வெள்ளை பேதமை பற்றி கதைக்கினம்.

இதிலென்ன ஆச்சரியம்.

உது வழமையெண்டது தெரிஞ்ச விசயம் தானே

ஏன்ன காவடி விஞ்ஞான விளக்கம் ஒண்டையும் காணல :lol:

விஞ்ஞானரீதியில் நீங்கள் மேற்கோள் காட்டிறவை முரண்பாடாக இருக்கு என்று நிறுவமுடியுமா? மரபணு ஊடு காபன் வயது ஊடு ஆக்கியலொஜிகலாக நிறுவிறதைத்தான் தற்காலத்தில் ஏற்றுக் கொள்வார்கள். அவ்வாறான ஒரு கருத்தியலை நோக்கித்தான் உலகப்பந்து மிக வேகமாக உருண்டு கொண்டிருக்கு. :huh:

புரியாவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி மேற்பதிந்த ஒரு பதிவே அவரின் முரண்பாட்டுக்கு எடுத்துக்காட்டு

அப்படித்தானே காவடி

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொட்டு போடுவது அந்த டாக்டருக்கு இடைஞ்சலாக்கும்.

வைத்தியத்துக்காக போகும் போது ஏன் இந்த விவாதத்துக்கு கதை வைக்கோனும். எனக்கு தேவை வைத்தியம் அதில்தான் என் கவனமும்.

பொட்டு போடாமல்விட்டால் நம் கலை கலாச்சாரம் ஒன்றம் குறைந்து போகாது

நெடுக்கு சார், குண்டக்க மண்டக்க கதைவேணாம்

-நீங்கள் வைத்தியரிடம் வைத்தியத்துக்குப் போனீர்களா..அல்லது அவரின் வாயால் உங்களைப் பற்றி வரும் தனிமனித விமர்சனத்துக்கு செயல் வடிவம் கொடுக்கப் போனீர்களா? பொட்டே வைத்தியத்துக்குத் தடை என்றால்..இன்னும் என்னனென்ன தடை என்பாரோ வைத்தியர்...??! நல்ல வைத்தியரும் நல்ல நோயாளிகளும்..!

பொட்டு மட்டுமில்ல உடுப்பைக் கூட போடா விட்டாலும் யாரும் எதையும் இழந்து விடமாட்டார்கள். மானம் என்ற ஒன்று மனதளவில் உள்ளதுதானே. அது பொட்டிலும் இருக்கும் புடவையிலும் இருக்கும்..! ஆக உங்களுக்கு (உங்களை என்பது பொதுவாக அடுத்தவரைப் பார்த்து அல்லது அடுத்தவர் பேச்சுக் கேட்டு சுயமாக சிந்திக்காமல் நடப்பவர்களை என்றாகிறது.)அந்த மான உணர்வு இல்லை எனும் போது..பொட்டென்ன புடவையையும் அடுத்தவர் சொன்னதுக்காக எதையும் கழற்றி எறியக் கூடியவர். இதில் கலாசாரம் உங்களை நம்பி என்பதுதான் எங்கள் போன்றவர்களின் தவறான கண்ணோட்டம். போற இடத்தில் போறவைக்கு ஏற்ப வேடம் போடும் உங்களுக்கு கலாசாரம் என்ன பண்பாடென்ன..! புட்டும் இடியப்பமும் முருங்கைக்காயும் கிடைச்சால் சரி..! :huh::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலருக்குள்ள பிரச்சனையளுக்கு பொட்டுத்தான் சரி

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு வெள்ளை என்ற பேதமையும் அதன் மூலமே உங்களுக்குள் வேரூன்றி உள்ளது.

அட அட அட--

காப்பிலி காப்பிரி எண்டுறவை கறுப்பு வெள்ளை பேதமை பற்றி கதைக்கினம்.

இதிலென்ன ஆச்சரியம்.

உது வழமையெண்டது தெரிஞ்ச விசயம் தானே

பேதமை உள்ள வகையில் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்படும் வரை பேதமை இருக்கும். தனி ஒரு மனிதனிடமிருந்து அது அகன்றுவிடுவதால்..உலகில் உள்ள அனைவரும் அதை அகற்றி விட்டதாகப் பொருள் இல்லை. இதற்கு விஞ்ஞான ஆராய்ச்சி தேவையில்லை.

காப்பிலி போல மட்டும் பாவனை செய்வது வேட மிடுவது அவர்களை தங்களுக்கு ஒப்பீடாக்குவதன் மூலமே சிலர் தங்களை நிலை நிறுத்த விரும்புகின்றனர். அங்கு கூட இயலாமையும் பேதமையும்..அடுத்தவரை விட தான் தாழ்ந்தவனோ என்ற சிந்தனையுமே இருக்கிறது. பேதமை என்பது இல்லை என்றால் தமிழ் சிங்களம் என்ற பேதமை தான் ஏன். தமிழ் தேசியம் சிங்கள தேசியம் நாடுகள் தான் ஏன்..! முரண்படுவது நாமல்ல..நீங்களே..??! தனி மனிதர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பேதமைகளைக் காத்து வருகின்றனர். அவையே தனித்துவங்களாகின்றன. ஆனால் சில பேதமைகள் மனிதர்களைச் சிறுமைப்படுத்துகின்ற போது அவை கண்டிக்கப்படுகின்றன. அதற்காக அவை ஒழிக்கப்பட்டுவிட்டன என்பதல்ல அர்த்தம். அவை ஒழிய வேண்டின் மனிதர் அனைவரும் மனிதர்கள் என்ற ஒரு பரந்த நோக்கியல் இருக்க வேண்டும். அப்போது தான் தேசங்கள் இனங்கள்..மொழிகள் மதங்கள் நிறங்கள் அகன்ற மனித இனம் என்ற ஒரே பார்வை இருக்கும். அது தற்போதைய உலகில் சாத்தியமில்லாத ஒன்றாகியுள்ள நிலையில்..மனிதனை மனிதன் சிறுமைப்படுத்தும் அல்லது சிறுமைப்படுத்தக் கூடிய தனித்துவங்களை இழந்து அடுத்தவர் வழி போக எண்ணும் சிந்தனைகளைக் களைவதே பேதமையற்ற போக்குக்கான ஆரம்ப அடிகளாக இருக்க முடியும்..!

நீங்கள் அனைவருமே பேதமை என்ற நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அது இயற்கை செயற்கை என்று பல வழிகளில் மனிதரில் ஆளுமை செய்கிறது. அதில் சில மனிதரை மனிதர் சிறுமையும் படுத்துகிறது. அந்தச் சிறுமைகளை வளர்க்க முனனவதைத் தடுப்பதும்..அப்படியான பேதமைகளை சிந்தனையில் இருந்து வேறுபடுத்துவதுமே வேண்டப்படுகிறது. அடுத்தவரின் தனித்துவத்தில் எங்கள் தனித்துவம் காட்டப்பட வேண்டும் அல்லது மறைக்கப்பட வேண்டும் என்பதும் சிறுமைத்தனத்தின் வெளிப்பாடே..! :P :huh:

Edited by nedukkalapoovan

பொட்டு வைப்பதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். பொட்டு வைக்கும் இடத்தை ‘நெற்றிப் பொட்டு’ என்று சொல்வார்கள். எமது உடலில் அது ஒரு முக்கியமான இடம். அதில் ஏற்படும் விளைவுகள் எமது உயிரையே கொல்லக்கூடியது. ஆதில் காயம் பட்டாலோ அல்லது சுடப்பட்டாலோ உயிர் பிழைப்பது கடினம். அதற்காகவே பொட்டு வைக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். பண்டைய காலத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் பொட்டு வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவற்றில் பலமான சக்தி உள்ளது. அதனால்தான் நாம் அவற்றை தினமும் அணியும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளைடைவில், மத சார்பானதாகவும், கலாச்சார சார்பானதாகவும், பின்னர் அலங்காரமானதாகவும் திரிவுபடுத்தப்பட்டுவிட்டது. அதுமட்டுமின்றி, இப்போது அவற்றில் கலப்படங்கள் வந்துவிட்டதால், அவற்றால் அடையும் பலன்கள் எதிர்மாறானதாக உள்ளது. பல பெண்களுக்கு குங்குமம் அலர்ஜியாக இருப்பதற்கு அதில் சேர்க்கப்பட்ட கலப்படங்களே காரணமாகும். இந்து சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் அனைத்து விடயங்களுக்கும் முக்கியமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவை திரிவுபடுத்தப்பட்டு மூடநம்பிக்கைகளாக மாற்றப்பட்டுவிட்டன. வளர்ந்துவரும் சமுதாயம் இம்மூடநம்பிக்கைகளைக் கேள்வியாக்கும்போது, அவர்களுக்கு சரியான பதில்கள் கிடைப்பதில்லை. இதனாலேயே அவர்கள் இப்பழக்கவழக்கங்களைக் கைவிடும் நிலை தோன்றியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பென்கள் குளிர்மையானவர்களாம் ஆன்கள் சூடானவர்களாம்.இதைச்சமப்படுத

  • கருத்துக்கள உறவுகள்

குளிாமையான சந்தனத்தை பெண்களும் சூடான குங்குமத்தை ஆண்களும்

இட்டால் நல்லாத்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளிாமையான சந்தனத்தை பெண்களும் சூடான குங்குமத்தை ஆண்களும்

இட்டால் நல்லாத்தான் இருக்கும்

எல்லா விசயத்திலும் தலைகீழாகத்தான் யோசிப்பியளோ? :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.