Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

மணக்கும் மலபார் மீன் குழம்பு செய்வது எப்படி

 

மீன் குழம்பில் தேங்காய் பால் ஊற்றி செய்யும் போது சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் பால் ஊற்றி மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
மணக்கும் மலபார் மீன் குழம்பு செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

வஞ்சிரம் மீன் - அரை கிலோ அல்லது துண்டு மீன்
சின்னவெங்காயம் - 3
தக்காளி - 2
சின்னவெங்கா மற்றும் தக்காளி விழுது - ஒரு கப் (ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்)
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வறுத்த வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்
முதலாவது (கெட்டியான) தேங்காய்ப்பால் - ஒரு கப்
இரண்டாவது (தண்ணியான) தேங்காய்ப்பால் - ஒரு கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.

201707141305468722_malabar-fish-curry._L

செய்முறை:

* கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி மற்றும் பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்துவைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காய விழுதை இதனுடன் சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கிளறவும்.

* அடுத்து அதில் இரண்டாவது தேங்காய்ப்பால், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

* மிளகாய்த்தூள் வாடை நீங்கியவுடன் மீனைச் சேர்த்து, மீன் வெந்தவுடன் முதல் தேங்காய்ப்பால் மற்றும் வெந்தயத்தூளைச் சேர்த்து, கொதி வருவதற்குள் அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

* மணக்கும் மலபார் மீன் குழம்பு ரெடி.
  • Replies 782
  • Views 227.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழினி
    தமிழினி

  • இட்டலியையும் பார்பிகியூப் ரேஞ்சுக்கு கொண்டு வந்தாச்சா..., இட்டலிக்கு வந்த வாழ்வைப் பார்....! 

  • நான் கொத்தமல்லி இலையையும்,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,இஞ்சி போன்றவற்றை தண்ணீர் விட்டு கிரைண்டரில் அரைத்துப் போட்டு அந்த தண்ணீரிலேயே அரிரியை அவிய விடுவேன். சுப்பராய் இருக்கும்.

  • தொடங்கியவர்

மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் சமோசா

பள்ளியில் இருந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் சமோசா
 
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
வெங்காயம் - 1
பட்டன் காளான் - 300 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்.

201707171526381729_mushroom-samosa._L_st

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காளாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்கவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக வதக்கியவுடன் காளான், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

* காளான் நன்றாக வெந்தவுடன் அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

* பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் சமோசாக்களாக செய்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

* இப்போது சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் சமோசா ரெடி!!
  • தொடங்கியவர்

சூப்பரான முட்டை பிரியாணி செய்வது எப்படி

 

சிக்கன், மட்டன் பிரியாணியை போல் முட்டை பிரியாணியும் சூப்பராக இருக்கும். இன்று முட்டை பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான முட்டை பிரியாணி செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - அரை கிலோ,
முட்டை - 10,
தக்காளி - 4,
பெரிய வெங்காயம் - 3,
கடைந்த தயிர் - 1 கப்,
எண்ணெய் - அரை கப்,
நெய் - கால் கப்,
உப்பு - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
இஞ்சி + பூண்டு விழுது - 4 டீஸ்பூன்.

அரைக்க:

பட்டை - 2,
லவங்கம் - 2,
ஏலக்காய் - 6,
பச்சை மிளகாய் - 5,
புதினா - ஒரு கைப்பிடி,
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி.

செய்முறை:

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியைக் நன்றாக கழுவி ஊறவிடவும்.

* அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

* முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள்.

* அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும்.

* எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.

* இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான முட்டை பிரியாணி ரெடி.

 

 

சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு

உடல் உபாதைகள், வயிற்று பிரச்சனைளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று செட்டிநாடு ஸ்டைலில் பூண்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு
 
தேவையான பொருட்கள் :

பூண்டு - 30 பல்
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 1
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

தாளிக்க :

கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 /2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

* புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

* வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.

* தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

* தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

* அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

* சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு ரெடி.

* பூண்டை வதக்கும்போது அதனுடன் சுண்டைக்காய் வற்றல் அல்லது மனத்தக்காளி வற்றல் சேர்த்தால், வத்தல் குழம்பு என ஆகிவிடும்.
  • தொடங்கியவர்

சக்கந்தி கிராமத்தில் சக்கைப்போடு போடும் உப்புக்கறி! - கிராமத்து மணம்

 

ன்று சவுத் இந்தியன், நார்த் இந்தியன், சைனீஸ், இத்தாலியன் என்று பலவகை சமையல்கள் நமக்கு அருகிலேயே கிடைத்தாலும், மண்பானையில் சமைத்து ஒவ்வொரு உருண்டையாக உருட்டி பாசத்தோடு கொடுக்கும் பாட்டியின் கைப்பக்குவத்துக்கு ஈடு இணையே இல்லை. சிவகங்கையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சக்கந்தி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் கூலி வேலை செய்பவர். வீட்டுக்கு முன் மண்ணாலான அடுப்பு, சாணம் பூசி அத்தனை அம்சமாக இருக்கிறது. ஆறு பேரக்குழந்தைகளும் பள்ளி சென்றுவிட, நமக்காக சக்கந்தி கிராமத்து உணவுகளை சமைத்துக் காட்டினார்.   

p36a.jpg

‘`ஆயிரம் வகை உணவு இருந்தாலும் உப்புக்கறிக்கு ஈடாகாது. எனக்கு 48 வயசாகுது. அம்மா காலத்திலிருந்தே ஊர்த் திருவிழா நேரத்தில் வீட்டுக்கு வீடு இந்தக் கறிதான் மணக்கும். விருந்தாளிகள், வீட்டு மாப்பிள்ளை என யார் வந்தாலும் உப்புக்கறிதான். இந்தக் கறியை எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பில் கொழுப்பு வைக்காது. எங்க வீட்டு சின்னப்பிள்ளைகள்கூட அசால்ட்டா ஒரு கிலோ கறியைச் சாப்பிடுவாங்க. ஒவ்வொரு வாரமும் உப்புக்கறிதான் செய்வோம். பழைய கஞ்சியை உப்புக்கறியோடு சாப்பிடும்போது சுவையே அலாதியா இருக்கும். இதோடு, மாங்காய் பச்சடி ஜாம் தொட்டுக்கிட்டா செரிமானம் சுலபமா நடக்கும்’’ என்கிற முனியாம்மா வழங்கிய உப்புக்கறி செய்முறை இதோ...      

p36b.jpg

உப்புக்கறி

தேவையானவை:

வெள்ளாட்டுக்கறி - ஒரு கிலோ
எண்ணெய் - 200 மில்லிகிராம்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 150 கிராம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 150 மில்லி
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு       

p36c1.jpgp36d.jpg


செய்முறை:

மண் அடுப்பில் தீயைப் பற்றவைத்து, மண்சட்டியை வைக்கவும். மண்சட்டி சூடானதும் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், சோம்பு போட்டு பொரியவிடவும். பிறகு, நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர், தயாராக இருக்கும் ஆட்டுக்கறியை மண்சட்டியில் போடவும். சீரகம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கிளறிவிடவும். தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும்வரை மண்சட்டியை மூடிவைக்கவும். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் கமகம மணத்துடன் உப்புக்கறி, நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்குத் தயாராகி இருக்கும். அந்த நேரத்தில், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவி, சிறிது நேரத்துக்குப் பிறகு சாப்பிடவும்.  

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்கு விருப்பமான கான்ட்வி செய்வது எப்படி

 

வீட்டிற்கு திடீரென விருந்தினர் வந்து விட்டால் அவர்களுக்கு இந்த கான்ட்வியை செய்து கொடுத்து அசத்தலாம். இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
குழந்தைகளுக்கு விருப்பமான கான்ட்வி செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 100 கிராம்,
புளித்த தயிர் - 3/4 கப் மற்றும் 2 1/4 கப் தண்ணீர் அல்லது புளித்த மோர் - ¾ கப்,
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பெருங்காயம் - சிறிது.
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்.

அலங்கரிக்க...

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - 8-10,
கடுகு - 1 டீஸ்பூன்,
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 1 அல்லது மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தயிர் அல்லது மோர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்து இதில் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து இத்துடன் கடலைமாவு சேர்த்து நன்கு மிருதுவான மாவாக கலக்கவும்.

ஒரு ட்ரேயில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக்  கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் மாவை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். விடாமல் கட்டியில்லாமலும் அடிப்பிடிக்காமலும் கிளறவும். சிறிதளவு மாவை ட்ரேயில் வைத்து ஆறியவுடன் ரோல் செய்யவும். செய்ய முடியாவிட்டால் மாவு சரியான பதத்துக்கு வரவில்லை என்று அர்த்தம்.

மாவு பதம் வந்தவுடன் அதை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி நன்கு கரண்டியால் பரப்பி விடவும். 1:3 என்ற விகிதத்தில் கடலைமாவு மற்றும் மோரை எடுத்து கலந்து மிதமான கலவையாக ஆக்கவும். வேண்டுமானால் இஞ்சி, பச்சைமிளகாய் பேஸ்ட் சேர்க்கலாம்.

இதன்மேல் தேங்காய்த்துருவல், கொத்தமல்லி தழை போட்டு ரோல் செய்யவும். சரியான அளவு துண்டுகளாக வெட்டவும்.

அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், எள் போட்டு வறுத்து கான்ட்வி ரோல் மேல் தூவி, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறலாம்.

சூப்பரான கான்ட்வி ரெடி.
  • தொடங்கியவர்

சூப்பரான சைடிஷ் நண்டு பொடிமாஸ்

 

சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள நண்டு பொடிமாஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த நண்டு பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான சைடிஷ் நண்டு பொடிமாஸ்
 
தேவையான பொருட்கள் :

பெரிய நண்டு - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தட்டிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சோம்பு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
எலுமிச்சை ஜூஸ் - சிறிது.
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்.

செய்முறை :

நண்டை சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதம் தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். நன்கு மசாலா வாடை போகுமாறு பிரட்டி விடவும்.

அடுத்து அதில் வேக வைத்து உதிர்த்த நண்டு சதை, தேவைக்கு உப்பு போட்டு நன்றாக பிரட்டி 5 நிமிடம் வேக விடவும். பிரட்டும் போதே உதிர்ந்து விடும்.

கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து சும்மா ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

சூப்பரான நண்டு பொடிமாஸ் தயார்.
  • தொடங்கியவர்

இன்னோவேட்டிவ் ரெசிப்பி

பிரியா சதீஷ்

 

p106a.jpg

கேசரியை அப்படியே எத்தனை நாள்தான் சாப்பிடுவது? அதையே `ஸ்வீட் ரோல்’ ஆக மாற்றினால்..? கற்பனைக்கே எட்டாத வகையில் தர்பூசணியில் கபாப் செய்தால்..? வாழைக்காயை `பேஸ்’ ஆக்கி பீட்சா தயாரித்தால்..? இவை அத்தனையும் ‘அடடா... என்ன ருசி’ என ரசிக்கும் வகையில் இருந்தால்..? அவைதாம் இன்னோவேட்டிவ் ரெசிப்பிகள். இப்படி பாரம்பர்யமும் நவீனமும் கலந்த ஃப்யூஷன் உணவுகளைக் கண்டறிந்து நமக்காக அளித்திருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ். சுவைக்கத் தூண்டும் படங்களைப் பிடித்தவரும் அவரே.  

p106b.jpg

ம்யூஸ்லி  மஷ்ரூம் பணியாரம்

தேவையானவை:

மைதா மாவு – ஒரு கப்
ம்யூஸ்லி – அரை கப் (சர்க்கரை சேர்க்காதது)  
முட்டை – 2
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கால் கப்
மஷ்ரூம் – 4 (பொடியாக நறுக்கவும்)
பால் – அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது)
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு      

p106c.jpg

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், குடமிளகாய், மஷ்ரூம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும். மைதா மாவுடன் ம்யூஸ்லி, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி, பால் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். இதனுடன் காய்கறிகளைச் சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லைச் சூடாக்கி, குழிகளில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.


சின்டா சிகுரு பொட்டேட்டோ லாலிபாப்

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 2
பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த கடலை மாவு – கால் கப்
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

அரைக்க:

பிஞ்சு புளியந்தழை – முக்கால் கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு    

p106d.jpg

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும். இதனுடன் பனீர் துருவல், கடலை மாவு, சாட் மசாலாத்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்துப் பிசையவும். இந்த மசாலா கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி உருண்டைகளைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, மொறுமொறுவென பொரித்து எடுக்கவும். இந்தப் பொரித்த உருண்டைகளின் நடுவே லாலிபாப் குச்சியைக் குத்தி,  தக்காளி சாஸ் அல்லது மயோனைஸுடன் பரிமாறவும்.


ஃபிஷ் ஸ்டஃப்டு பீட்ரூட் பான் கேக் சாண்ட்விச்

தேவையானவை:

பான் கேக் செய்ய:
மைதா மாவு – ஒரு கப்
பீட்ரூட் – ஒன்று
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
முட்டை – ஒன்று
உப்பு – கால் டீஸ்பூன்
பால் – கால் கப் (காய்ச்சி ஆற வைத்தது)
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

ஸ்டஃப்பிங் செய்ய:

மயோனைஸ் – அரை கப்
சூரை மீன் (டியூனா ஃபிஷ்) – அரை கப் (டின்களில் கிடைக்கும்)    

p106e.jpg

செய்முறை:

பீட்ரூட்டை வேகவைத்து, தோல் நீக்கி விழுதாக அரைக்கவும். இதுவே பீட்ரூட் ப்யூரி. மயோனைஸுடன் சூரை மீன் சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும். மைதா மாவுடன் பேகிங் பவுடர், உப்பு சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பால், பீட்ரூட் ப்யூரி சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் மைதா கலவையைச் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். சாண்ட்விச் டோஸ்டரில் முதலில் சிறிதளவு மைதா - பீட்ரூட் கலவையை ஊற்றவும். இதன் மேலே சிறிதளவு மயோனைஸ் கலவையை வைக்கவும். பிறகு, இதன்மீது மீண்டும் சிறிதளவு மைதா - பீட்ரூட் கலவையை ஊற்றி மூடி வேகவைத்து எடுக்கவும் (டூத் பிக்கால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும். அதுதான் சரியான பதம்). இதை சாஸுடன் பரிமாறவும்.


வாழைக்காய் ஜாமூன் ட்ரஃபிள்

தேவையானவை:

சாக்லேட் - க்ரீம் பிஸ்கட் - ஒரு பாக்கெட்
விப்பிங் க்ரீம் – தேவையான அளவு

ஜாமூன் செய்ய:

வாழைக்காய் – ஒன்று
பால் பவுடர் – அரை கப்
மைதா மாவு - 4  டேபிள்ஸ்ஸ்பூன்
ரவை – ஒரு டேபிள்ஸ்ஸ்பூன்
நெய் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

பாகு செய்ய:

சர்க்கரை – ஒரு கப்
தண்ணீர் – ஒரு கப்
ஏலக்காய் – 3  (நசுக்கவும்)     

p106f.jpg

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் ஏலக்காய் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும். இதுவே பாகு. வாழைக்காயை வேகவைத்து தோல் நீக்கி கட்டியில்லாமல் மசிக்கவும். இதனுடன் பால் பவுடர், மைதா, ரவை, நெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து தனியே வைக்கவும். உள்ளங்கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு, இந்த உருண்டைகளைப் பாகில் போட்டு ஊறவைக்கவும். பிஸ்கட்டுகளை கொரகொரப்பான தூளாக நொறுக்கவும். கண்ணாடிக் குவளையில் பிஸ்கட் தூளை முதல் லேயராக பரப்பவும். இதன் மீது ஊறிய ஜாமூன் உருண்டைகளை இரண்டாக நறுக்கி சேர்க்கவும். பிறகு இதன் மீது விப்பிங் க்ரீமைப் பரவலாக ஊற்றவும். இறுதியாக மேலே ஒரு ஜாமூன் உருண்டையை வைத்து அலங்கரிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பிறகு பரிமாறவும்.


வெற்றிலை - இறால் ஸ்கீவர்ஸ்

தேவையானவை:

இறால் – 25
வெற்றிலை - 6
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பைன் நட்ஸ் – 4 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
மூங்கில் குச்சிகள் (ஸ்கீவர்ஸ்) – தேவையான அளவு    

p106g.jpg

செய்முறை:

வெற்றிலையுடன் கொத்தமல்லித்தழை, பைன் நட்ஸ், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சுத்தம் செய்த இறால்களை, நடுவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை நீக்கிவிட்டு, அரைத்த விழுதுடன் சேர்த்துக் கலந்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஒவ்வொரு ஸ்கீவரிலும் 3 அல்லது 4 இறால்களைக் குத்தி வைக்கவும். கிரில் பேனை (Grill pan) சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தடவி ஸ்கீவர்ஸை அடுக்கி மேலே ஊறிய இறால் சாற்றைத் தடவி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாக மயோனைஸ் அல்லது சால்சாவுடன் பரிமாறவும்.


சூரை மீன் பவுல் கேக்

தேவையானவை:

மைதா மாவு - 2  டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
முட்டை - ஒன்று 
சூரை மீன் (ட்யூனா ஃபிஷ்) -
2 டீஸ்பூன் (டின்களில் கிடைப்பது)
ட்யூனா டின்னில் உள்ள எண்ணெய் -
2  டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு   

p106h.jpg

செய்முறை:

சூப் பவுலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்துக் கலக்கவும். மற்றொரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, ட்யூனா டின்னில் உள்ள எண்ணெயைச் சேர்த்து நன்கு அடிக்கவும். இதையும் மீன் துண்டுகளையும் மைதா கலவையுடன் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். பிறகு இந்த பவுலை `மைக்ரோவேவ் அவனில்’ ஒரு நிமிடம் முதல் ஒன்றரை நிமிடங்கள் வரை வைத்து வேகவிட்டு எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: டின் மீனில் உப்பு கலந்திருப்பதால் தேவையான அளவு உப்பு மட்டுமே சேர்க்கவும்.


கற்பூரவல்லி சிக்கன்

தேவையானவை:

எலும்பில்லாத சிக்கன் நெஞ்சுக்கறி – 2 துண்டுகள்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கற்பூரவல்லி
இலை - 15
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
சீரகத்தூள் – அரை  டீஸ்பூன் 
இஞ்சி – பூண்டு
விழுது – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
தயிர் - 4  டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு 
மூங்கில் டிக்கா குச்சிகள் (ஸ்கீவர்ஸ்) - தேவையான அளவு    

p106i.jpg

செய்முறை:

கற்பூரவல்லி இலையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகத்தூள், இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள், தயிர், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். சிக்கனை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கவும் (chicken strips). இதை அரைத்த விழுதுடன் சேர்த்துக் கலந்து ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். டிக்கா குச்சிகளைத் தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். டிக்கா குச்சிகளில் சிக்கனை மடித்து குத்தவும். கிரில் பேனை (Grill pan) சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தடவி டிக்கா குச்சிகளை அடுக்கி, சிக்கன் ஊறிய மீதமுள்ள சாற்றை மேலே தடவி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.


வாழைக்காய் பிளேட் பீட்சா

தேவையானவை:

பீட்சா பேஸ் செய்ய:

வாழைக்காய் – ஒன்று (வேகவைத்து தோல் சீவி, மசிக்கவும்) 
மைதா மாவு  – கால் கப்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
    
பீட்சா செய்ய:

வெங்காயம் – ஒன்று (வட்ட வடிவமாக நறுக்கவும்)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
மொசரல்லா சீஸ் துருவல் – ஒரு கப்
பாஸ்தா சாஸ் - 2  டேபிள்ஸ்பூன்
பீட்சா சீஸனிங், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - அலங்கரிக்கத் தேவையான அளவு     

p106j.jpg

செய்முறை:

மசித்த வாழைக்காயுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்துக் கலக்கவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது). இதனுடன் தேவையான அளவு எண்ணெய் விட்டு மாவாகப் பிசையவும். இந்த மாவை இரு பாகங்களாகப் பிரித்து வைக்கவும். பிறகு, ஒவ்வொரு பாகத்தையும் உருட்டி கைகளால் கனமான தட்டை போல தட்டவும். இதுவே பேஸ். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பீட்சா பேஸைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதன் மீது பாஸ்தா சாஸைப் பரவலாகத் தடவவும். மேலே வெங்காய வில்லைகள், தக்காளி, பச்சை மிளகாயை வைத்து அடுக்கவும். இதன் மீது சீஸ் துருவலைப் பரவலாகத் தூவவும்.  தோசைக்கல்லைக் காயவிட்டு, தயாரித்து வைத்துள்ள பீட்சாவை வைத்து மூடி, தீயைக் குறைக்கவும். சீஸ் உருகிய பிறகு எடுக்கவும். மேலே பீட்சா சீஸனிங், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் தூவி, சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: குடமிளகாய், மஷ்ரூம் பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.


தர்பூசணி ரிண்ட் கபாப்

தேவையானவை:

தர்பூசணியின் தோலுக்கும் சதைக்கும் நடுவில் இருக்கும் வெள்ளைப் பகுதி (துருவியது) – ஒரு கப்
வாழைக்காய் – ஒன்று (வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும்)
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்
முந்திரி - 4
ஏலக்காய் - ஒன்று 
அன்னாசி மொட்டு - ஒன்று
கிராம்பு - 2
காய்ந்த மிளகாய் - 2 
கொத்தமல்லித்தழை, புதினா – தலா ஒரு கைப்பிடியளவு
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
ஐஸ்க்ரீம் குச்சிகள் அல்லது மூங்கில் குச்சிகள் - 10 
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு      

p106k.jpg

செய்முறை:

தர்பூசணித் துருவலில் உள்ள தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும். இதை ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம், மல்லி (தனியா), முந்திரி, ஏலக்காய், அன்னாசி மொட்டு, கிராம்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் தண்ணீர்விடாமல் பவுடராக அரைக்கவும். வெந்த தர்பூசணி, மசித்த வாழைக்காய், மஞ்சள்தூள், சாட் மசாலாத்தூள், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் அரைத்த பவுடரைச் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை ஐஸ்க்ரீம் குச்சி அல்லது மூங்கில் குச்சியைச் சுற்றிலும் பிடித்து வைத்து கபாப் செய்யவும். தோசைக்கல்லைச் சூடாக்கி கபாப்களை அடுக்கி, சிறிதளவு எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும். புதினா சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.


கேசரி ஸ்வீட் ரோல்

தேவையானவை:

ஸ்பிரிங் ரோல் ஷீட் -  7
வறுத்த எள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மைதா மாவு – சிறிதளவு

கேசரி செய்ய:

வறுத்த ரவை – அரை கப்
சர்க்கரை – அரை கப்
நெய் – கால் கப்
தண்ணீர் – ஒன்றரை கப்
முந்திரி - 5 (நறுக்கவும்)
திராட்சை – 5
ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
பாகு செய்ய:
சர்க்கரை – ஒரு கப்
தண்ணீர் – ஒரு கப்    

p106l.jpg

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சையைச் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு, அதே பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர், ஃபுட் கலர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வறுத்த ரவை சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து, கட்டிதட்டாதபடி நன்கு கிளறவும்.  பிறகு சர்க்கரை, நெய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மேலும் கிளறவும்.  இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து இறக்கி ஆறவிடவும்.

மைதா மாவைச் சிறிதளவு தண்ணீர்விட்டு பேஸ்ட் போல கரைக்கவும். ஸ்பிரிங் ரோல் ஷீட்டில் ஒரு ஓரத்தில் சிறிதளவு கேசரி வைத்து பாய்போல சுருட்டவும். முனைகளில் மைதா கலவையைத் தடவி கேசரி வெளியே வராமல் ரோலை ஒட்டவும். எல்லா ஸ்பிரிங் ரோல் ஷீட்களையும் இப்படியே செய்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து இந்த ரோல்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பாகு செய்யக் கொடுத்துள்ள சர்க்கரையுடன், தண்ணீர் சேர்த்து இரண்டு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும். பொரித்த ரோல்களைப் பாகில் போட்டு இரண்டு நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கவும். மேலே வறுத்த எள் தூவி, சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும். 

  • தொடங்கியவர்

சூப்பரான இறால் – காய்கறி சூப்

 

இறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் – காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான இறால் – காய்கறி சூப்
தேவையான பொருட்கள் :

விருப்பமான காய்கறிகள் – 200 கிராம்
இறால் – 100 கிராம்
வெள்ளை வெங்காயம் – 1
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
கார்ன் ஃபிளார் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு

 

செய்முறை :

* இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள்.

* கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

* கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம், காய்கறிகயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* வெங்காயம், காய்கறிகளை தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

* வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரைத் தனியாக வையுங்கள்.

* வடிகட்டிய இந்த நீரில் சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வையுங்கள்.

* இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவிஇறக்குங்கள்.

* சத்து நிறைந்த இறால் – காய்கறி சூப் ரெடி.201703131522436537_prawn-vegetable-soup_SECVPF.gif

  • தொடங்கியவர்

சூப்பரான சைடிஷ் தயிர் உருண்டை குழம்பு

 

சாதத்திற்கு இந்த தயிர் உருண்டை குழப்பு சூப்பரான சைடிஷ். இன்று இந்த தயிர் உருண்டை குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
சூப்பரான சைடிஷ் தயிர் உருண்டை குழம்பு
 
தேவையான பொருட்கள் :

கடைந்த தயிர் - 250 மி.லி.

உருண்டை செய்ய...

கடலைப்பருப்பு - 100 கிராம்,
துவரம்பருப்பு - 50 கிராம்,
காய்ந்தமிளகாய் - 10,
தனியா - 2 டீஸ்பூன்,
உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தேவைக்கு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்.

அரைக்க...

தனியா - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 6,
இஞ்சி - 1 துண்டு,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
அரிசி - 1 டீஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து.

செய்முறை :

கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

கடலைப்பருப்பு, துவரம் பருப்பு நன்றாக ஊறியவுடன் தனியா, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள், சிறிது உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து கொள்ளவும்.

அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து வரும் போது அதில் வேக வைத்த உருண்டை, கடைந்த தயிரை ஊற்றி நுரைத்து வரும் பொழுது இறக்கவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி பரிமாறவும்.

சூப்பரான தயிர் உருண்டை குழம்பு ரெடி.
  • தொடங்கியவர்

சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸ் உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸை வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா
 
தேவையான பொருட்கள் :

கேரட் - 1 கப்
குடைமிளகாய் - 1 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
பீன்ஸ் - 1 கப்
வெங்காயம் - 2
ஓட்ஸ் - 1 டீ கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
கடுகு - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வழக்கமாக உப்புமாவுக்கு தண்ணீர் விட்டு செய்வது போல் ஓட்ஸ் உப்புமாவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டியதில்லை. ஒரு பெரிய டீ வடிகட்டி அல்லது சல்லடையில் ஓட்ஸைப் போட்டு அதைத் தண்ணீர் பைப்பின் அடியில் வைத்து, தண்ணீர் விட்டு லேசாக அலசி விட்டுப் போட்டாலே ஓட்ஸ் சாஃப்ட்டாகி விடும்!

வெங்காயம், ப.மிளகாய், கேரட், குடைமிளகாய், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் கேரட், குடைமிளகாய், பச்சை பட்டாணி போட்டு நன்றாக வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதில் ஓட்ஸ், உப்பு, தேங்காய் துருவல் போட்டு நன்றாக கிளற இறக்கவும்.

சூப்பரான சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா ரெடி.
  • தொடங்கியவர்

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தயிர் வெண்டைக்காய்

 

பூரி, புலாவ், பிரியாணி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையான இருக்கும் இந்த தயிர் வெண்டைக்காய். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தயிர் வெண்டைக்காய்
 
தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் - கால் கிலோ,
தக்காளி - ஒன்று,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
வெங்காயம் - 2,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
தயிர் - ஒரு கப்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.

வெண்டைக்காயை கழுவி துடைக்கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும்.

தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், கொத்தமல்லி, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

இந்த கலவையை கீறிய வெண்டைக்காயில் தடவவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும்.

கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

அனைத்தும் நன்றாக சேர்ந்து வந்ததும அதில் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து... தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை அதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.

ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • கருத்துக்கள உறவுகள்

வெண்டைக்காய் என்றாலே மோர்க்குழம்பு போன்ற ஆயிட்டங்கள் தான் முதலில் ஆக்கத் தோணும். அதன் சுவையே தனிதான், அன்போர்ச்சுனாலிட்டி ஐ டோன்ட் லைக் வெண்டைக்காய் ...!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

...அன்போர்ச்சுனாலிட்டி ஐ டோன்ட் லைக் வெண்டைக்காய் ...!  tw_blush:

...அன்போர்ச்சுனாலிட்டி வீ டோண்ட் லைக் திஸ் தமிங்லிஷ் ...!  bouh.gif

Say in English.. அல்லது தமிழில் சொல்லுங்கள்..!  vil-roulelangue.gif

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ராசவன்னியன் said:

...அன்போர்ச்சுனாலிட்டி வீ டோண்ட் லைக் திஸ் தமிங்லிஷ் ...!  bouh.gif

Say in English.. அல்லது தமிழில் சொல்லுங்கள்..!  vil-roulelangue.gif

துரதிஷ்டாவசமாக எனக்கு வெண்டைக்காய் பிடிக்காது என்ற அர்த்தத்தில் அதை எழுதியிருந்தேன் வன்னியர். சரியான அர்த்தத்தை நீங்கள் சொல்லுங்கள் திருந்திக் கொள்கிறேன்.கூல்...! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

un fortunately அட.... ஆக்ஸ்போர்ட் அகராதியில் கூட இப்படி ஒரு சொல்லு போட்டிருக்கிறார்கள்.  இருவருமாக சேர்ந்து சிரிப்பம்.  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

..சரியான அர்த்தத்தை நீங்கள் சொல்லுங்கள் திருந்திக் கொள்கிறேன்.கூல்...! tw_blush:

ஆங்கிலத்தில் மிகப்புலமை இருந்தால் நான் ஏன் இங்கே குப்பை கொட்டுகிறேன்..?

பிரித்தானியாவிற்கு  பறந்திருக்க மாட்டேனா..?  vil-nuage.gif

 

10 hours ago, suvy said:

 இருவருமாக சேர்ந்து சிரிப்பம்.  tw_blush:

சரி.. vil-donne5.gif

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ராசவன்னியன் said:

ஆங்கிலத்தில் மிகப்புலமை இருந்தால் நான் ஏன் இங்கே குப்பை கொட்டுகிறேன்..?

பிரித்தானியாவிற்கு  பறந்திருக்க மாட்டேனா..?  vil-nuage.gif

லண்டனிலை ஒரு சில ஏரியாக்களுக்கு போனால் எங்கட சனத்தின்ரை ஆங்கிலபுலமைய பார்த்து மயங்கி விழுந்துபோவியள்..:grin:

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா

 

வெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம்.

 
அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா
 
தேவையான பொருட்கள் :

இறால் - 200 கிராம்
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
சோம்பு தூள் - அரை ஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
தனியா தூள் - கால் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பஜ்ஜி மாவு - 1 கப்
அரிசி மாவு - 3 ஸ்பூன்.

செய்முறை :

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

இறாலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் இறால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இறால் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி அதை பஜ்ஜி மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை டீஸ்பூன் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றவும்.

வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா ரெடி.

 

 

சப்பாத்திக்கு சூப்பரான பிரெட் மஞ்சூரியன்

 

பன்னீர், சிக்கனில் மஞ்சூரியன் சாப்பிட்டு இருப்பீங்க. பிரெட்டில் செய்யும் இந்த மஞ்சூரியன் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

சப்பாத்திக்கு சூப்பரான பிரெட் மஞ்சூரியன்
 
தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் - 4
தக்காளி - 2
வெங்காயம் - 2
சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
குடை மிளகாய் - 1
வெங்காயத்தாள் - சிறிதளவு
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
மைதா - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்ளுங்கள்.

தக்காளியை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குடை மிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சோயா சாஸ் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள்.

கடைசியாக கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கி பரிமாறுங்கள்.

சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

லண்டனிலை ஒரு சில ஏரியாக்களுக்கு போனால் எங்கட சனத்தின்ரை ஆங்கிலபுலமைய பார்த்து மயங்கி விழுந்துபோவியள்..:grin:

பயப்படாம வாங்கோ வன்னியர்.... ஏதோ நம்மால முடிஞ்சது.

லண்டனில் தமிழ் படிப்பிக்கும் ஜேர்மன் பெண்மணி....

 

15 hours ago, ராசவன்னியன் said:

ஆங்கிலத்தில் மிகப்புலமை இருந்தால் நான் ஏன் இங்கே குப்பை கொட்டுகிறேன்..?

பிரித்தானியாவிற்கு  பறந்திருக்க மாட்டேனா..?  vil-nuage.gif

 

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

சப்பாத்திக்கு சூப்பரான வறுத்த மீன் குருமா

 

சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

சப்பாத்திக்கு சூப்பரான வறுத்த மீன் குருமா
 
தேவையான பொருட்கள் :

மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்)
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
தக்காளி - 2
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
பட்டை - மிகச் சிறிய துண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 +1/2  டீஸ்பூன்
மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

அரைக்க....

தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10

செய்முறை :

மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

மீனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது மீன் போட்டு நன்கு வேகும் படி மீனை பொரித்து எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விடவும், சோம்பு பட்டை போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும். தக்காளி நன்கு  வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு ஒரு சேர வதக்கவும்.

அடுத்து அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.  

அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

வறுத்த மீன் குருமா ரெடி.

இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். சீலா, வாவல், பாறை மீன் பொருத்தமாக இருக்கும்.
  • தொடங்கியவர்

தொலைதூரப் பயணம் செய்யும்போது, நெடுஞ்சாலைகளில் உள்ள ஹோட்டல், சாப்பாட்டுக் கடைகளில் குடும்பமாகவோ, கும்பலாகவோ இறங்கி, பசிக்கும் ருசிக்குமாக பரபரபவென்று சுவைத்து மகிழும் அனுபவமே அலாதிதான். அப்படி நெடுஞ்சாலை உணவகங்களில்  கிடைக்கும் சூப்பர் டேஸ்ட்டில் அசத்தும் டிஷ்கள் சிலவற்றை நமக்காகத் தயாரித்து அளிக்கிறார்  ‘க்ரவுன் பிளாசா’ ரெஸ்டாரென்ட்டின் செஃப் தேவ்குமார்.

p17.jpg

வெஜிடபிள் நூடுல்ஸ்

தேவையானவை:
ரெடிமேட் எக் நூடுல்ஸ் - 250 கிராம்
நறுக்கிய முட்டைகோஸ் - 50 கிராம்
நறுக்கிய கேரட் - 30 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 30 கிராம்
நறுக்கிய வெங்காயத்தாள் - 15 கிராம்
நறுக்கிய குடமிளகாய் - 25 கிராம்
வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 25 மில்லி
உப்பு - தேவையான அளவு

p17aa.jpg

செய்முறை:
நூடுல்ஸைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி, நூடுல்ஸைத் தனியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடமிளகாய் ஆகியவற்றை வதக்கவும். பிறகு, நூடுல்ஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். வெங்காயத்தாள் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.


தாபா தால் தட்கா (Dhaba Dal Tadka)

தேவையானவை:
துவரம்பருப்பு - 200 கிராம்
வெங்காயம் - 200 கிராம் (நறுக்கவும்)
தக்காளி - 100 கிராம் (நறுக்கவும்)
நெய் - 100 கிராம் (அல்லது தேவைக்கேற்ப)
சீரகம் - 10 கிராம்
காய்ந்த மிளகாய் - 10 கிராம்
நறுக்கிய பூண்டு - 50 கிராம்
கறுப்பு உளுந்து - 200 கிராம்
மிளகாய்த்தூள் - 20 கிராம்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 10 கிராம்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

p17a.jpg

செய்முறை:
துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு, சூடானதும், சீரகத்தையும் காய்ந்த மிளகாயையும் சேர்க்கவும்.

சீரகம் பொரிந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்க்கவும். வேகவைத்த பருப்பை, இதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர், நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.


ஹெர்ப் க்ரஸ்டட் ஃபிஷ் (Herb Crusted Fish)

தேவையானவை:
மீனின் சதைத் துண்டுகள் (fish fillet) - 200 கிராம்
 பிரெட்தூள் - 10 கிராம்
நறுக்கிய பார்ஸ்லே இலைகள் - 15 கிராம்
நறுக்கிய தைம் இலைகள் - சிறிதளவு
மிளகுத்தூள் - 10 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
அலங்கரிக்க...
கேரட் (சிறியது) - 3
லெட்யூஸ் இலைகள் - 15 கிராம்
ஆலிவ் ஆயில் - 15 மில்லி
மிகச் சிறிய முட்டை கோஸ் (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) - 4
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

p17c.jpg

செய்முறை:
வாணலியில் பிரெட்தூள், நறுக்கிய பார்ஸ்லே, தைம், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கலவையாக வைத்துக்கொள்ளவும். இக்கலவையை மீனின் மீது பூசி, லேசாக வறுத்துக்கொள்ளவும். பிறகு, நறுக்கிய கேரட், லெட்யூஸ் மற்றும் குட்டி முட்டைகோஸைத் தண்ணீரில் வேகவைக்கவும்.

தவாவில் ஆலிவ் ஆயில் ஊற்றி, வேகவைத்த கேரட், லெட்யூஸ் மற்றும் குட்டி முட்டைகோஸைச் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். மீனைத் தனியாக  ‘மைக்ரோவேவ் அவனி’ல் வைத்து ‘கிரில்’ செய்துகொள்ளவும். கிரில் செய்த மீனுடன் வதக்கியக் காய்கறிக் கலவையைச் சேர்த்துப் பரிமாறவும்.


கொத்து பரோட்டா

தேவையானவை: 

பரோட்டாவுக்கு...
மைதா மாவு - 500 கிராம்
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 180 மில்லி
கிரேவிக்கு...
வெங்காயம் - 250 கிராம் (நறுக்கவும்)
தக்காளி  - 100 கிராம் (நறுக்கவும்)
மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 20 மில்லி
உப்பு - சிறிதளவு
தாளிக்க...
நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்
நறுக்கிய தக்காளி - 30 கிராம்
பெருஞ்சீரகம்  - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

p17d.jpg

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதனுடன் மைதா மாவையும், பேக்கிங் பவுடரையும் சேர்ந்து நன்கு கலந்து பிசையவும். ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, இந்த மாவை, உருண்டைகளாக்கி பரோட்டாக்களாகத் திரட்டி, சுட்டு எடுக்கவும். 

பிறகு, வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிரேவியாக செய்துகொள்ளவும். 

தவாவில் எண்ணெய்விட்டு பெருஞ்சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், உப்பு, பிய்த்த பரோட்டா சேர்த்துக் கொத்திக்கொத்திக் கிளறவும்.  பின்னர், அதன்மேல் கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.


வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:
நறுக்கிய வெங்காயம் - 20 கிராம்
நறுக்கிய செலரி இலைகள் - 10 கிராம்
நறுக்கிய கேரட் - 15 கிராம்
வேகவைத்த சாதம் - 300 கிராம்
நறுக்கிய பீன்ஸ் - 15 கிராம்
நறுக்கிய பூண்டு - 10 கிராம்
நறுக்கிய முட்டைகோஸ் - 30 கிராம்
நறுக்கிய வெங்காயத்தாள் - 15 கிராம்
சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 30 மில்லி
வெள்ளை மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

p17e.jpg

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய கேரட், வெங்காயம், செலரி, முட்டைகோஸ் மற்றும் பீன்ஸை நன்றாக வேகும்வரை வதக்கவும். அதனுடன் பூண்டு, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். வேகவைத்த சாதத்தை ஆறவிடவும். பிறகு அதனுடன் வதக்கியக் கலவையைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும். 


ஜிலேபி வித் லச்சா ரபடி

தேவையானவை:
எண்ணெய் – தேவையான அளவு
ஜிலேபி செய்ய...
மைதா மாவு – அரை கிலோ
பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 250 மில்லி
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
பாகு செய்ய...
குங்குமப்பூ – ஒரு கிராம்
சர்க்கரை – அரை கிலோ
ரபடி செய்ய...
பால் – 2 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்

p17f.jpg

செய்முறை:
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், தண்ணீர், சமையல் சோடா சேர்த்துக் கரைத்து 12 மணி நேரம்  ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரை சேர்த்து, கெட்டியாகும் வரை சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிடவும். இதுவே ரபடி. பாகு செய்ய கொடுத்துள்ள சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு குங்குமப்பூ சேர்த்துப் பிசுக்குப் பதத்துக்குப் பாகு வைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மைதா மாவை சிறிய ஜிலேபிகளாகப் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். பிறகு, பொரித்த ஜிலேபிகளைச் சர்க்கரை பாகில் சிறிது நேரம் ஊறவைத்து எடுக்கவும். சூடாக ரபடியுடன் பரிமாறவும்.


மசாலா கொழுக்கட்டை

தேவையானவை:
பச்சரிசி மாவு - அரை கிலோ
ரவை - 100 கிராம்
தண்ணீர் - 200 மில்லி
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - சிறிதளவு
தாளிக்க:
பொடியாக நறுக்கிய
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய
கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 40 மில்லி

p17g.jpg

செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து, பச்சரிசி மாவு மற்றும் ரவையை தனித்தனியாக வறுத்தெடுத்து பிறகு ஆறவிடவும். மற்றொரு கடாயில் தண்ணீர் ஊற்றிச் சுடவைக்கவும். இதில் வறுத்து வைத்த பச்சரிசி மாவு, ரவை, ஒரு சிட்டிகை சமையல் சோடா, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும். கலவை வெந்து வந்ததும் இறக்கி ஆறவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளிக்கவும். இதை வெந்த பச்சரிசி - ரவை கலவையில் ஊற்றிக் கிளறிவிடவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாகப்  பிடித்து விரல்களால் அழுத்திவிடவும். பிறகு உருண்டைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

  • தொடங்கியவர்

பேரீச்சம்பழ ரெசிப்பி

 

 

`சத்துக்குச் சத்து... சுவைக்குச் சுவை’ என்று குறிப்பிடப்படும் உணவுப் பொருள்களில் பேரீச்சம் பழத்துக்குத் தனியிடம் உண்டு. வெறுமனே சாப்பிட்டாலும் அசத்தும் பேரீச்சம்பழத்தில் அல்வா, கீர், க்ரன்சீஸ் என்று விதவிதமாகச் செய்ய முடியுமென்றால் இரட்டைக் கொண்டாட்டம்தானே! அப்படியொரு கொண்டாட்டத்தை உங்கள் இல்லத்தில் நிகழ்த்த உதவும் வகையில் அசத்தலான ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர்.

p25.jpg

ஸ்டிக்கி டேட்ஸ் புட்டிங் வித் பட்டர்ஸ்காட்ச் சாஸ்

தேவையானவை:
பேரீச்சம்பழம்  – அரை கப்
மைதா மாவு – முக்கால் கப்
பால் – முக்கால் கப் (காய்ச்சி ஆறவைத்தது)
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
பட்டைத்தூள் - அரை  டீஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன்
பொடித்த வால்நட்ஸ் – சிறிதளவு (அலங்கரிக்க)
பட்டர் ஸ்காட்ச் சாஸ் செய்ய:
பிரவுன் சர்க்கரை – ஒரு கப்
உப்பு சேர்த்த வெண்ணெய் – கால் கப்
க்ரீம் – ஒரு கப்
வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்

p25a.jpg

செய்முறை:
மைக்ரோவேவ் அவனை 180 டிகிரி செல்ஷியஸுக்கு ப்ரீ ஹீட் செய்யவும். பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு, பாலுடன் சேர்த்து வேகவைத்து இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், பட்டைத்தூள், உப்பு சேர்த்துச் சலித்து வைக்கவும்.

இதனுடன் அரைத்த பேரீச்சம் விழுது சேர்த்து மிருதுவாகக் கலக்கவும். கப் கேக் மோல்டில் சிறிதளவு வெண்ணெயை தடவவும். இதனுள் மைதா - பேரீச்சக் கலவையை ஒரு சிறிய ஸ்பூனால் ஊற்றி நிரப்பவும்.
பிறகு, ப்ரீ ஹீட் செய்த அவனில் முப்பது நிமிடங்கள் வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து  சாஸ் செய்யக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறவும். பிறகு அடுப்பைத் சிறு தீயில் வைத்து மீண்டும் ஐந்து நிமிடங்கள் கிளறி சாஸ் பதத்துக்கு வந்த பிறகு இறக்கவும். ஆறிய கப் கேக்குகளை சாஸ் கலவையில் முக்கி எடுத்து மேலே வால்நட்ஸ் தூவிப் பரிமாறவும்.


நோ பேக் டேட்ஸ் குக்கீஸ்

தேவையானவை:
பேரீச்சம்பழம் – ஒரு கப்
மேரி பிஸ்கட் – 4
கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
சாக்லேட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்

p25b.jpg

செய்முறை:
பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கவும். இதனுடன் கோகோ பவுடர், சாக்லேட் துருவல், வெனிலா எசன்ஸ், வெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சிறிதளவு கலவையைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள கலவையை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு, இதை சிறிய உருண்டைகளாக்கி, பிஸ்கட் அளவுக்கு வட்டமாகத் தட்டி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். ஒரு பேரீச்சம்பழத் தட்டை மீது ஒரு மேரி பிஸ்கட்டை வைக்கவும். பிறகு, அதன்மீது மற்றொரு பேரீச்சம் தட்டை, பிஸ்கட் என மாற்றி, மாற்றி நான்கு பிஸ்கட்டுகளையும் அடுக்கவும். பிறகு, பிஸ்கட்டின் ஓரங்கள் வெளியே தெரியாத அளவுக்குச் சுற்றிலும் பேரீச்சம் கலவையை தடவவும். இதனை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து நான்கு பாகங்களாக வெட்டி, `ஜில்’லென்று பரிமாறவும்.


பேரீச்சம்பழ ஊறுகாய்

தேவையானவை:
பேரீச்சம்பழம் – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
வினிகர் – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 5 பல்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயத்தூள் – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

p25c.jpg

செய்முறை:
பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பூண்டு சேர்த்து வறுக்கவும். பிறகு, ஊறவைத்த பேரீச்சக் கலவையைச் சேர்த்து மென்மையான கூழ் போல ஆகும்வரை வதக்கவும். இறுதியாக வினிகர் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பிறகு சுத்தமான பாட்டிலில் சேகரித்து வைக்கவும்.


டேட்ஸ் கீர்

தேவையானவை:
பேரீச்சம்பழம் – ஒரு கப்
கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன்
உலர்திராட்சை – அரை கப்
பனை வெல்லம் – அரை கப்
பொடியாக நறுக்கிய பாதாம் -
முந்திரி கலவை – அரை கப்
தேங்காய்ப்பால் – 2 கப்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

p25d.jpg

செய்முறை:
கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைக்கவும். வெறும் வாணலியில் கசகசாவை வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு உலர் திராட்சை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி பாதாம், முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் அரைத்த பேரீச்சம் விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும். இதனுடன் பனை வெல்லம் சேர்த்துக் கிளறவும். பிறகு கார்ன்ஃப்ளார் கரைசல், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். கசகசா பவுடர் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும். மேலே வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து அலங்கரித்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

  • தொடங்கியவர்

டெசர்ட் ரெசிப்பி

 

`வாழ்க்கை நிலையற்றது. அதனால் என்ன? இப்போது டெசர்ட் சாப்பிடுங்கள்’ என்றொரு பொன்மொழி உண்டு. எந்த ஒரு விருந்தையும் முழுமையடையச் செய்யும் தன்மை டெசர்ட் வகைகளுக்கே உரியது. குல்ஃபி, ஜிகர்தண்டா, புடிங், கிரனிடா, ஃபலூடா, சோர்பே என விதவிதமான டெசர்ட் வகைகளை நினைவில் நிற்கும் சுவையோடு அளித்திருக்கிறார், ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லட்சுமி வெங்கடேஷ். பார்த்தவுடனே செய்ய தூண்டுகிற படங்களை எடுத்தவரும் அவரே.

p79.jpg

காலா கட்டா கிரனிடா

தேவையானவை:
காலா கட்டா சிரப் - அரை கப்
கறுப்பு உப்பு (Black Salt) -  கால் டீஸ்பூன்
தண்ணீர் - முக்கால் கப்

p79a.jpg

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர், கறுப்பு உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். அதில் காலா கட்டா சிரப் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில்  வைக்கவும். பின்னர் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். சர்பத் இப்போது பனிக்கட்டிகள் போல ஆகிவிடும். கடைசியாக முக்கால் மணிநேரம் ஃப்ரீசரரில் வைக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாக பந்து போல் உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் வைத்து மேலே சிறிது கறுப்பு உப்புத் தூவி குளிர்ச்சியாக காலா கட்டா கிரனிடாவைப் பரிமாறவும்.

குறிப்பு: இது வெகு விரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும்.


ரோஸ் கோலா

தேவையானவை:

ரோஸ் சிரப் - அரை  கப்
தண்ணீர் - ஒரு  கப்

p79b.jpg

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். அதை வெளியே எடுத்து ஒரு ஃபோர்க்கால் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். கடைசியாக 6-8 மணிநேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதை ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாக பந்து போல் உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் போட்டு,  மேலே ரோஸ் சிரப்பை ஊற்றி சில்லென ரோஸ் கோலாவைப் பரிமாறவும்.

குறிப்பு: இது வெகுவிரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும்.


நன்னாரி கிரனிடா

தேவையானவை:
நன்னாரி சிரப் - கால் கப்
எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
தண்ணீர் - முக்கால் கப்

p79c.jpg

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முக்கால்  கப் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு, நன்னாரி சிரப் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.

மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். சர்பத் இப்போது பனிக்கட்டி போல ஆகிவிடும். கடைசியாக 6-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாகப் பந்து போல உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் இதை போட்டு, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

குறிப்பு: இது வெகு விரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும்.


லெமன் மின்ட் கிரனிடா

தேவையானவை:

புதினா - 8-10 இலைகள்
எலுமிச்சை - 2
சர்க்கரை - 50 கிராம்
உப்பு - கால் டீஸ்பூன்
தண்ணீர் - இரண்டு கப்

p79d.jpg

செய்முறை:
எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். புதினா இலைகளைச் சுத்தம் செய்து, அதனுடன் சர்க்கரை, உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர் ஒரு ஃபோர்க்கால் ஐஸ்கட்டிகளைக் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ்கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். சர்பத் இப்போது பனிக்கட்டிகள் போல ஆகிவிடும். கடைசியாக 3-4 மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். ஐஸ்கிரீம் ஸ்கூப் வைத்து, குவியலாக பந்து போல உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் போட்டு மேலே புதினா இலைகளால் அலங்கரித்து லெமன் மின்ட் கிரனிடாவைக் குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

குறிப்பு: இது வெகு விரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும்.


ரோஸ் ஃபலூடா

தேவையானவை:
ரோஸ் கஸ்டர்ட் மில்க் - அரை  டம்ளர்
ஜெல்லி - தேவைக்கு
ஃபலூடா சேமியா - 4 டேபிள்ஸ்பூன்
சப்ஜா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி -
இரண்டு டேபிள்ஸ்பூன்
வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
ரோஸ் கஸ்டர்ட் மில்க் செய்யத் தேவையாவை:
வெனிலா கஸ்டர்ட் பவுடர் - ஒரு டீஸ்பூன்
காய்ச்சிய பால் - ஒரு கப்
மற்றும் கால் கப்
ரோஸ் சிரப் - 4 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - கால் கப்

p79e.jpg

ரோஸ் கஸ்டர்ட் மில்க் செய்முறை

ரோஸ் கஸ்டர்ட் மில்க்:
முதலில் கால் கப் பாலில் கஸ்டர்ட் பவுடர் மற்றும் ரோஸ் சிரப் சேர்த்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் காய்ச்சிய பால் எடுத்து அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இப்போது கஸ்டர்ட் பவுடர் பாலை இதனுடன் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து சற்று கெட்டியாகும் வரைக் கிளறவும். அடுப்பை அணைத்து பாலை ஆறவிடவும்.

ஜெல்லி செய்யத் தேவையாவை:

கடல் பாசி (சைனா க்ராஸ்) -
இரண்டு கிராம்
சர்க்கரை -  ஒரு டேபிள்ஸ்பூன்
ரோஸ் சிரப் - கால் கப்

ஜெல்லி செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கடற்பாசியைச் சிறுதுண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கடற்பாசி முழுவதும் கரைந்ததும் அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கி, சிறுதீயில் வைத்து ரோஸ் சிரப் சேர்க்கவும். சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டிய வுடன் அகலமான தட்டுகளில் ஊற்றி ஒரு மணி நேரம் செட் ஆக விடவும். பிறகு கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிக்கொள்ளவும்.

ஃபலூடா செய்முறை

சப்ஜா விதையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடித்து கொள்ளவும். சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் முறை

ஓர் உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஒரு டீஸ்பூன் ஜெல்லி போட்டு, பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை போடவும். அதன் பின் சேமியா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். மீண்டும் ஜெல்லியைச் சேர்க்கவும். இதில் ரோஸ் மில்க்கை ஊற்றி, பின் வெனிலா ஐஸ்கிரீம் வைத்து அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி தூவிப் பரிமாறவும்.


பிஸ்தா ஃபலூடா

தேவையானவை:
பிஸ்தா கஸ்டர்ட் மில்க் -
அரை டம்ளர்
ஜெல்லி - தேவைக்கு
ஃபலூடா சேமியா - 4 டேபிள்ஸ்பூன்
சப்ஜா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி -
இரண்டு டேபிள்ஸ்பூன்
பிஸ்தா ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
பிஸ்தா பருப்பு -
இரண்டு டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
பிஸ்தா கஸ்டர்ட் மில்க் செய்யத் தேவையானவை:
காய்ச்சிய பால் - ஒரு கப்
மற்றும் கால் கப்
சர்க்கரை - கால் கப்
பிஸ்தா கஸ்டர்ட் பவுடர் - ஒரு டீஸ்பூன்

p79f.jpg

செய்முறை:
பிஸ்தா கஸ்டர்ட் மில்க்
முதலில் கால் கப் பாலில் கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். இப்போது கஸ்டர்ட் பவுடர் பாலை இதனுடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து சற்று கெட்டியாகும் வரை கிளறவும். அடுப்பை அணைத்து பாலை ஆறவிடவும்.

ஜெல்லி செய்யத் தேவையாவை:
கடல் பாசி (சைனா க்ராஸ்) - இரண்டு கிராம்
சர்க்கரை -  ஒரு டேபிள்ஸ்பூன்
ஃபுட் கலர் - 5 - 8 துளிகள்

ஜெல்லி செய்முறை...

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்று அதில் கடல் பாசியை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடல் பாசி கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். அகர் அகர் முழுவதும் கரைந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்து ஃபுட் கலர் சேர்க்கவும். சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டிய உடன் அகலமான தட்டுகளில் ஊற்றி ஒரு மணி நேரம் செட் ஆக விடவும். பிறகு கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். 

ஃபலூடா செய்முறை...

சப்ஜா விதையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடித்துக் கொள்ளவும். ஃபலூடா சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் முறை

ஓர் உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஒரு டீஸ்பூன் ஜெல்லி போட்டு, பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை போடவும். அதன்பின் ஃபலூடா சேமியா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். பொடித்த பிஸ்தா அரை ஸ்பூன் சேர்க்கவும். இதில் பிஸ்தா கஸ்டர்ட் மில்க்கை ஊற்றி, பின் பிஸ்தா ஐஸ்க்ரீம் வைத்து அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி, பிஸ்தா பருப்பு தூவிப் பரிமாறவும்.


ராயல் ஃபலூடா

தேவையானவை:
குங்குமப்பூ கஸ்டர்ட்
மில்க் - அரை டம்ளர்
ஜெல்லி - தேவைக்கு
ஃபலூடா சேமியா - 4 டேபிள்ஸ்பூன்
சப்ஜா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி - இரண்டு டேபிள்ஸ்பூன்
குல்ஃபி ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
வறுத்துப் பொடித்த பிஸ்தா மற்றும்     முந்திரி - இரண்டு டேபிள்ஸ்பூன்

குங்குமப்பூ கஸ்டர்ட் மில்க் செய்ய:

குங்குமப்பூ - 5 சிட்டிகை
வெனிலா கஸ்டர்ட் பவுடர் -
ஒரு டீஸ்பூன்
காய்ச்சிய பால் - ஒரு கப்
மற்றும் கால் கப்
சர்க்கரை - கால் கப்

p79g.jpg

செய்முறை:
குங்குமப்பூ கஸ்டர்ட் மில்க்:
முதலில் கால் கப் பாலில் கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலுடன் குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். இப்போது கஸ்டர்ட் பவுடர் பாலை இதனுடன் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து சற்று கெட்டியாகும் வரை கிளறவும். அடுப்பை அணைத்து பாலை ஆறவிடவும்.

ஜெல்லி செய்யத் தேவையானவை:

கடல் பாசி (சைனா க்ராஸ்) -
இரண்டு கிராம்
சர்க்கரை -  ஒரு டேபிள்ஸ்பூன்
ஃபுட் கலர் - 5 - 8 துளிகள்

ஜெல்லி  செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்று அதில் கடல்பாசியைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடல் பாசியைக் கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். அகர் அகர் முழுவதும் கரைந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்து ஃபுட் கலர் சேர்க்கவும். சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டிய உடன் அகலமான தட்டுகளில் ஊற்றி ஒரு மணி நேரம் செட் ஆக விடவும். பிறகு கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். 

ஃபலூடா செய்முறை:

சப்ஜா விதையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடித்துக் கொள்ளவும். ஃபலூடா சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் முறை:
ஓர்  உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஒரு டீஸ்பூன் ஜெல்லி போட்டு, பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை போடவும். அதன்பின் ஃபலூடா சேமியா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். வறுத்துப் பொடித்த பிஸ்தா மற்றும் முந்திரி அரை டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். இதில் குங்குமப்பூ கஸ்டர்ட் மில்க்கை ஊற்றி, பின் குல்ஃபி ஐஸ்க்ரீம் வைத்து அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி, பிஸ்தா மற்றும் முந்திரிப் பருப்பு தூவிப் பரிமாறவும்.


மேங்கோ கோக்கனட் பான்னகோட்டா

தேவையானவை:
கடல் பாசி (சைனா க்ராஸ்) - 10 கிராம்
தேங்காய்ப்பால் பவுடர் - 5 டேபிள்ஸ்பூன்
மாம்பழக் கூழ் - அரை கப்
(இனிப்பு ரக மாம்பழம்)
சர்க்கரை - அரை கப்

p79h.jpg

செய்முறை:
தேங்காய்ப்பால் பவுடரை அரை கப் வெந்நீரில் கரைக்கவும். கடல் பாசியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் எடுத்து, அதில் ஊறவைத்த கடல் பாசியில் பாதியை எடுத்துச் சேர்த்து அடுப்பில் வைத்து கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். கடல் பாசி முழுவதும் கரைந்ததும் கால் கப் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்துக்கொண்டு மாம்பழக் கூழைச் சேர்த்துக் கிளறவும். உடனடியாக சிறுசிறு கண்ணாடி கோப்பைகளில் பாதி அளவு ஊற்றி,
ஒரு மணி நேரம் செட் ஆக விடவும்.

மீதம் இருக்கும் பாதி ஊறவைத்த கடல்பாசியை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். கடல் பாசி முழுவதும் கரைந்ததும் கால் கப் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்து அதில் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கிளறவும். உடனடியாக, கண்ணாடி கோப்பைகளில் ஏற்கெனவே செட்டாகி இருக்கும் மாம்பழக் கூழின் மேல் ஊற்றவும். ஒரு மணி நேரம் செட் ஆகவிடவும். பின்னர் 4-5 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.


ராஜ்போக் குல்ஃபி

தேவையானவை:
ஃபுல் க்ரீம் பால் - ஒரு லிட்டர்
பாதாம் மில்க் பவுடர் / மசாலா மில்க்     பவுடர் - இரண்டு டீஸ்பூன்
க்ரீம் - 1-2 கப்
கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
குங்குமப்பூ - இரண்டு சிட்டிகை
பொடித்த பிஸ்தா - கால் கப்
குல்ஃபி மோல்டு - தேவைக்கேற்ப
சர்க்கரை - இரண்டு கப்

p79i.jpg

செய்முறை:
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு, பால் பாதியாக சுண்டும் வரை மிதமான சூட்டில் நன்கு கொதிக்கவிடவும். அதில் சர்க்கரை, பாதாம் மில்க் பவுடர், குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதித்த பாலில் க்ரீம் மற்றும் கண்டன்ஸ்டு மில்க்கை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கலக்கவும். 10-15 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்கவிட்டு, அதில் பொடித்த பிஸ்தாவைச் சேர்த்து இறக்கவும். ஆறியதும் இதை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, மூடி போட்டு, குச்சிகளை அதனுள் வைத்து, 8 மணிநேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். ஃப்ரீசரில் இருந்து எடுத்ததும் அதன்மீது சிறிது தண்ணீர் விட்டு மோல்டில் இருந்து எடுத்து, பொடித்த பிஸ்தாவைத் தூவி ராஜ்போக் குல்ஃபியைப் பரிமாறவும்.


ஈஸி மாம்பழ சோர்பே

தேவையானவை:
இனிப்பு ரக மாம்பழத் துண்டுகள் - ஒரு கப்
ஃப்ரெஷ் க்ரீம் -  இரண்டு  டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - கால் கப்

p79j.jpg

செய்முறை:
மிக்ஸியில் மாம்பழத் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும். இக்கலவையை ஒரு டப்பாவுக்கு மாற்றி, இறுக மூடி 4 - 5  மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாக பந்து போல் உருட்டி எடுத்து ஐஸ்க்ரீம் பவுலில் வைத்து, மாம்பழ சோர்பேயைக் குளிர்ச்சியாகப் பரிமாறவும்.


மேங்கோ க்ரீம்

தேவையானவை:
குளிரவைக்கப்பட்ட க்ரீம்
(விப்பிங் க்ரீம்) - 500 மில்லி
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
மாம்பழக் கூழ் - ஒரு  கப்
(இனிப்பு ரக மாம்பழம்)
மாம்பழத் துண்டுகள் - ஒரு கப்
(இனிப்பு ரக மாம்பழம்)
ஐஸிங் சுகர்  - 4 டேபிள்ஸ்பூன்
மேங்கோ எசன்ஸ் - அரை  டீஸ்பூன் (விரும்பினால்)

p79k.jpg

செய்முறை:
விப்பிங் க்ரீமை ஒரு பாத்திரத்தில் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டரால் விப் செய்யவும். இடையில் ஐஸிங் சுகர் சேர்த்து மேலும் விப் செய்து கொள்ளவும். க்ரீம் பஞ்சு போல வர வேண்டும். அதாவது, எடுத்து ஒரு தட்டில் வைத்தால் அது கீழே விழாது. அந்தப் பதத்துக்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஃப்ரெஷ் க்ரீம், மாம்பழக் கூழ் மற்றும் மேங்கோ எசன்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் ஒரு  மணிநேரம் வைத்து எடுக்கவும். மேங்கோ க்ரீமில்  நறுக்கிய மாம்பழத்தை கட் & ஃபோல்டு முறையில் மெதுவாகக் கலக்கவும். விருப்பத்துக்கு ஏற்ப நறுக்கிய மாம்பழத்தை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.


மோக்கா கேரமல் கஸ்டர்ட் புடிங்

தேவையானவை:
கேரமல் செய்ய:
சர்க்கரை - கால் கப்
தண்ணீர் - 4 டீஸ்பூன்
இன்ஸ்டன்ட் காபி பொடி - ஒரு டீஸ்பூன்

p79l.jpg

கேரமல் செய்முறை:
இன்ஸ்டன்ட் காபி பொடியை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். கால் கப் சர்க்கரையில் 4 டீஸ்பூன்  தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். சர்க்கரை பாகு பிரவுன் நிறத்துக்கு வரும்வரை கிளறி கேரமல் தயாரித்துக் கொள்ளவும். தீய்ந்து விடாமல் கவனமாகச் செய்யவும். இதில் இன்ஸ்டேன்ட் காபி பொடி கலவையைச் சேர்க்கவும். இறக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றி கரண்டியால் பரப்பிவிடவும்.

கஸ்டர்ட் செய்ய:
காய்ச்சிய பால் - ஒரு கப்
கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப்
புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 3 டேபிள்ஸ்பூன்

கஸ்டர்ட் செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால், தயிர், கன்டண்ஸ்டு மில்க், வெனிலா எசென்ஸ் மற்றும் கார்ன் ஃப்ளார் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை கேரமல் ஊற்றி வைத்துள்ள கிண்ணத்தில் ஊற்றவும். கிண்ணத்தை அலுமினியம் ஃபாயிலால் மூடவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் கேரமல் கஸ்டர்ட் கலந்த கிண்ணத்தை வைத்து மூடி மிதமான தீயில் 30 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். நன்றாக வெந்தவுடன் புடிங்கை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பரிமாறும்போது ஒரு தட்டில் மோக்கா கேரமல் கஸ்டர்ட் புடிங் கிண்ணத்தை தலைகீழாகக் கவிழ்த்து, அனைத்துப் பக்கங்களையும் மெதுவாகத் தட்டிவிட்டு கேரமல் கஸ்டர்டை வெளியே எடுத்துவிட்டுப் பரிமாறவும். புடிங்கின் மேல் பாகத்தில் கேரமல் அழகாகப் பரவியிருக்கும்.


ஜிகர்தண்டா

தேவையானவை:
காய்ச்சிய பால் - அரை  லிட்டர்
கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
நன்னாரி சிரப் - 4 டேபிள்ஸ்பூன்
பாதாம் பிசின் - இரண்டு டேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப்
சர்க்கரை இல்லாத
பால்கோவா - இரண்டு டேபிள்ஸ்பூன்
குல்ஃபி ஐஸ்க்ரீம் - 4 ஸ்கூப்
சர்க்கரை - இரண்டு  டேபிள்ஸ்பூன்

p79m.jpg

செய்முறை:
பாதாம் பிசினை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி மூடிவைத்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் பாதாம் பிசின் நன்கு ஊறி ஊதியிருக்கும். மற்றொரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை எடுத்து அடுப்பில் வைத்துக் குறைவான தீயில் சுண்டும் வரை காய்ச்சவும்.

அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் சுண்டக் காய்ச்சவும். நிறம் மாறி பாதியானதும் பால் கோவா மற்றும் கண்டன்ஸ்டு மில்க்கைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்கு கலக்கிக் கொதிக்கவிட்டு, இறக்கி ஆற வைக்கவும். அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

ஓர்  உயரமான கண்ணாடி டம்ளரில் இரண்டு டீஸ்பூன் நன்னாரி சிரப், இரண்டு டேபிள்ஸ்பூன் பாதாம் பிசின், பால் கலவை ஊற்றி, பின் அதன் மேல் ஒரு ஸ்கூப் குல்ஃபி ஐஸ்க்ரீம் வைத்து ஜிகர்தண்டாவைப் பரிமாறவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ....அருமையான --- இனிமையான ஆயிட்டங்கள் பிள்ளைகளுக்கும் சுகர் இல்லாதவர்களுக்கும். நான் என்ன பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதா.....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இனிமையான ஆயிட்டங்கள் பிள்ளைகளுக்கும் சுகர் இல்லாதவர்களுக்கும். நான் என்ன பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதா.....! tw_blush:

இப்பொழுதான் தமிழ்நாட்டில் 'அயிட்டங்கள்' பற்றிய சர்ச்சை ஓய்ந்துள்ளது..! :unsure::grin:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.