Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து உயிரோடு மீண்ட மீனவர்! - ஸ்பெயின் நாட்டில் பரபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர். ஆனால்  ஆச்சரியப்படும் விதமாக  மிகப்பெரிய் இராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் இராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.

   

இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது...

நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார். இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=154841&category=Puthinam&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அடோய், டோய்....

திமிங்கல சைசில ரீல்...

போடா, போய், காதில பூ, ச..சா... வாயில சுருட்டு வைசுட்டு வருவார் ஒருத்தரு உங்க, அவர்கிட்ட சொல்லு... 

அக்கு வேற, ஆணி வேறயா விலாவாரியா போட்டு தாக்குவாறு, நம்ம தல... :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அடோய், டோய்....

திமிங்கல சைசில ரீல்...

போடா, போய், காதில பூ, ச..சா... வாயில சுருட்டு வைசுட்டு வருவார் ஒருத்தரு உங்க, அவர்கிட்ட சொல்லு... 

அக்கு வேற, ஆணி வேறயா விலாவாரியா போட்டு தாக்குவாறு, நம்ம தல... :grin:

அட தல வந்து லைக் மட்டும் போட்டுவிட்டு சென்றுவிட்டாரே, இனி இப்படி வலிந்து இழுந்தால்தான் வருவார் போலுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழரசு said:

நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார். இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

நாங்களும் புளுகர் பொன்னையாக்கள் தான். எண்டாலும் உந்தளவுக்கில்லை.....:cool:
எதுக்கும் ஒரு லிமிட் இருக்குtw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

அட தல வந்து லைக் மட்டும் போட்டுவிட்டு சென்றுவிட்டாரே, இனி இப்படி வலிந்து இழுந்தால்தான் வருவார் போலுள்ளது

தல திண்ணையிலையிருந்து பூமிக்கு லேசில இறங்க மாட்டார் , உடையார்!

அப்படி ஒரு ஓர்மம்....!:rolleyes:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

தல திண்ணையிலையிருந்து பூமிக்கு லேசில இறங்க மாட்டார் , உடையார்!

அப்படி ஒரு ஓர்மம்....!:rolleyes:

திண்ணையில, அர்ஜுன் அண்ண, காலை நீட்டிப் படுத்து இருந்தார் . உவர் தலை வந்து, காலை நீட்ட்ட்டிப் படுதாப்  பிறகு அந்தாள், திண்ணை ஓரமா ஒண்டிக் கொண்டு படுத்திருக்கிறார் பாவம், அப்பப்ப தலையை தூக்கி எதாவது சொல்லிப் போட்டு படுத்துடுவார்.

தல... !!:grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழரசு said:
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர். ஆனால்  ஆச்சரியப்படும் விதமாக  மிகப்பெரிய் இராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.

ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் இராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.

   

 

ஹ...ஹா.... ஹா....
இதில் பகிடி என்னவென்றால்.... இராட்சத திமிங்கிலம், கரைக்கு வந்து மணலில் கழிவு போட்ட பின்.. மற்றவர்கள் அதைக் கிளறி அவரை கண்டு பிடித்துள்ளார்கள்.  28.gif

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

ஹ...ஹா.... ஹா....
இதில் பகிடி என்னவென்றால்.... இராட்சத திமிங்கிலம், கரைக்கு வந்து மணலில் கழிவு போட்ட பின்.. மற்றவர்கள் அதைக் கிளறி அவரை கண்டு பிடித்துள்ளார்கள்.  28.gif

இதைத்தான் ஊரில் சொல்வார்கள் சிறி

கேட்கிறவன் கேணையன் என்றால்........???28.gif

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இதைத்தான் ஊரில் சொல்வார்கள் சிறி

கேட்கிறவன் கேணையன் என்றால்........???28.gif

இப்படியான செய்திகள் கொஞ்சம், மன இறுக்கத்தை குறைக்க உதவும், விசுகு.
ஆனால்... இதை நம்பி, "உச்சுக் கொட்டவும்" சனம் இருக்கு.tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.