Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த மதகுருவிற்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த மாணவி : பௌத்த குரு கைது

Featured Replies

பௌத்த மதகுருவிற்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த மாணவி : பௌத்த குரு கைது

 

பாடசாலை மாணவியொருவர்  தனது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான பௌத்த மதகுரு ஒருவருக்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த சம்பவமொன்று அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

Love-letters.jpg

அலவத்துகொட பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவியே 29 வயதான மதகுருவுக்கு இவ்வாறு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.

 

இதையடுத்து அம் மாணவியையும் மாணவியின் தாயாரையும் விகாரைக்கு அழைத்த குறித்த மதகுரு மாணவியின் செயலைக் கண்டிக்கும் வகையில் அடித்துள்ளார்.

 

இந்நிலையில், மாணவியை அடித்த குற்றத்திற்காக மதகுருவையும் மதகுருவின் சகோதரியையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/5755

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளையிண்ட, காதல் கனவை வளரவைத்து, கடிதம் மூலம் விஷயம் வெளிய வந்தோன்ன, கையை பிடிச்சு, உரிமையுடன் அடிச்சுப்போட்டார். ஆகவே அவர் காவியைக் கடாசிப் போட்டு, அந்தப் புள்ளியையே கலியாணம் கட்ட புத்தர் ஆசீர்வாதம் செய்ய வேணும்.  :love:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

புள்ளையிண்ட, காதல் கனவை வளரவைத்து, கடிதம் மூலம் விஷயம் வெளிய வந்தோன்ன, கையை பிடிச்சு, உரிமையுடன் அடிச்சுப்போட்டார். ஆகவே அவர் காவியைக் கடாசிப் போட்டு, அந்தப் புள்ளியையே கலியாணம் கட்ட புத்தர் ஆசீர்வாதம் செய்ய வேணும்.  :love:

புத்தர் மட்டும் என்னவாம்.. பொண்டில்.. பிள்ளை என்று வாழ்ந்திட்டு தானே.. உடையை காடாசிட்டு காவிக்கு தாவினவர். அவர் பரம்பரை... இப்படித்தான் இருக்கும். 

இப்ப பெரும்பாலான கொலிடே புலம்பெயர் தமிழர் வீடுகளில் புத்தர் அலங்கரிக்கிறார். ஆனால் அவை ஊரில இருக்கேக்க அவரை ஏறெடுத்தும் பார்க்கல்ல. tw_blush:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த குருவின்,  மாணவி,  நாலு அடி நீளமான...... காதல் கடிதத்தை, 
பிக்கு  ஐயா அவர்களிடம் கொடுக்கும் போதே...... 
அவர், படிப்பித்த திறமையை..... பாராட்ட வேண்டும்.
இதை விட்டுட்டு, அந்த மாபெரும்  ஆசானை... மதத் தலைவனை....  கைது செய்தது,  மாபெரும் தவறு.

(சின்ன ஐடியா....)tw_blush:
எதுக்கும்...... நம்ம  எதிர் கட்சி தலைவர், சிங்களவரை கவர் பண்ண....  நாளைக்கு  பாராளுமன்றத்தில், இதற்காக.... குரல் எழுப்பினால்,  ஓகோ... என்று இருக்கும். பதவிக்கும் பிரச்சினை இல்லை. ஒரு கல்லில், ஒரு குலை மாங்காய் அடித்த எ.க. தலைவர்,  ஒரு தமிழன் என்ற பெருமையும், கிடைக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nedukkalapoovan said:

இப்ப பெரும்பாலான கொலிடே புலம்பெயர் தமிழர் வீடுகளில் புத்தர் அலங்கரிக்கிறார். ஆனால் அவை ஊரில இருக்கேக்க அவரை ஏறெடுத்தும் பார்க்கல்ல. tw_blush:tw_angry:

நெடுக்கர்! அவையள் புத்தர் சிலையை சும்மா வடிவுக்கு வைச்சிருக்கினமாம்....அம்மி உரல் உலக்கை சுளகு  எண்டு புலம்பெயர் சனம் வடிவுக்கு வைச்சிருக்க வெளிக்கிட்டினமெல்லே tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலடி நீளத்தில்..அப்படி என்னதான் எழுதி இருப்பார்?

2 hours ago, குமாரசாமி said:

நெடுக்கர்! அவையள் புத்தர் சிலையை சும்மா வடிவுக்கு வைச்சிருக்கினமாம்....அம்மி உரல் உலக்கை சுளகு  எண்டு புலம்பெயர் சனம் வடிவுக்கு வைச்சிருக்க வெளிக்கிட்டினமெல்லே tw_blush:

இதென்ன பிரமாதம்.. வெளிநாட்டில நம்மட சில பென்டுகள்.. மனுசன்மாரையே வீட்டுக்குள்ள வடிவுக்குதான வச்சிருக்கினம்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Thirdeye said:

 

இதென்ன பிரமாதம்.. வெளிநாட்டில நம்மட சில பென்டுகள்.. மனுசன்மாரையே வீட்டுக்குள்ள வடிவுக்குதான வச்சிருக்கினம்..

இது எப்போது என்னடா ஒரே குழப்பமா இருக்கு:rolleyes::rolleyes:

 

6 hours ago, குமாரசாமி said:

நெடுக்கர்! அவையள் புத்தர் சிலையை சும்மா வடிவுக்கு வைச்சிருக்கினமாம்....அம்மி உரல் உலக்கை சுளகு  எண்டு புலம்பெயர் சனம் வடிவுக்கு வைச்சிருக்க வெளிக்கிட்டினமெல்லே tw_blush:

யெய்யாலுமா தாத்தா??

11 hours ago, குமாரசாமி said:

அவையள் புத்தர் சிலையை சும்மா வடிவுக்கு வைச்சிருக்கினமாம்....

எனக்கும் இந்த புத்தர், பிள்ளையார், குழலூதும் கண்ணன் சிலைகள் ரொம்பவே பிடிக்கும். புலத்தில் எனது வீட்டில் இருக்குது, இங்கும் புத்தரும் பிள்ளையாரும் இருக்கிறான்கள் ஆனா கண்ணன் இன்னமும் கிடைக்கவில்லை - சமய நம்பிக்கை சுத்தமா இல்லை. புத்தர் முகத்தில் இருக்கும் சாந்தம் பிடிக்கும், பிள்ளையாரின் யானை முகமும் தொந்திவயுறும் 4 கைகளும் பிடிக்கும், கண்ணன் குழலோடு ராதையை கட்டிப் பிடித்திருப்பதும் பிடிக்கும்.

 

ஆனால் எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும் 

9 hours ago, Thirdeye said:

நாலடி நீளத்தில்..அப்படி என்னதான் எழுதி இருப்பார்?


4 அடியில அப்படி என்னதான் எழுதியிருப்பா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.