Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பதிவைத் தடுப்பது யார் ?

Featured Replies

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பதிவைத் தடுப்பது யார் ?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள தடை என்ன என்பது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றுவரை பதிவு செய்யப்படாமலே இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டு காலமாகப் பதிவு தொடர்பாக எந்த முயற்சியும் எடுக்காதது அந்த அமைப்பினர் மீது பலத்த விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின்  உறுப்பினர்கள்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பதிவு செய்வதை தடுக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள செல்வராஜா கஜேந்திரன் இதற்குக் காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ள காங்கிரஸ் சாராத உறுப்பினர்களே எனக் குறிப்பிட்டார்.

இது  தொடர்பாக முகநூலில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்  “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பதிவு தொடர்பில் காங்கிரஸ் சார்ந்தவர்கள் எந்த முட்டுக்கட்டையும் இடவில்லை; மாறாக காங்கிரஸ் சாராத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்ந்தவர்கள் இதனை ஒரு கட்சி வடிவில் அல்லாமல் ஒரு தேசிய அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள். அதனாலேயே பதிவுதொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்தப்படவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://thuliyam.com/?p=27740

  • கருத்துக்கள உறவுகள்

ம் பதிஞ்சு என்ன செய்யப்போறியள்??? 

2 hours ago, MEERA said:

ம் பதிஞ்சு என்ன செய்யப்போறியள்??? 

புலம் பெயர் தேசத்தில் கிளைகளை உருவாக்கி நிதி திரட்டலாம் ,கடந்த தேர்தலுக்கு மக்கள் அவைக்காரர் ஒரு மில்லியன் டாலார் சேர்த்து கொடுத்தார்களாம் .

  • கருத்துக்கள உறவுகள்

பதியாமலேயே காசு போகுதே பிறகேன் பதிவு. 

3 minutes ago, Gari said:

புலம் பெயர் தேசத்தில் கிளைகளை உருவாக்கி நிதி திரட்டலாம் ,கடந்த தேர்தலுக்கு மக்கள் அவைக்காரர் ஒரு மில்லியன் டாலார் சேர்த்து கொடுத்தார்களாம் .

 

அது சரி நீங்கள் எப்ப பதியப்போறியள்????

நேற்று கட்சி துவங்கிய நாங்களே பதிந்து விட்டோம் ,என்று TNA யை கலாய்க்கத்தான் .

  • கருத்துக்கள உறவுகள்

நிதி என்கிறீர்கள் கலாய்க்க என்கிறீர்கள், என்ன தடுமாற்றம்?

இரண்டுக்கும் தான் 

  • தொடங்கியவர்
58 minutes ago, Gari said:

புலம் பெயர் தேசத்தில் கிளைகளை உருவாக்கி நிதி திரட்டலாம் ,கடந்த தேர்தலுக்கு மக்கள் அவைக்காரர் ஒரு மில்லியன் டாலார் சேர்த்து கொடுத்தார்களாம் .

கூட்டமைப்பின் பெயரைப் பாவித்து தமிழரசுக் கட்சி செய்வதுபோலா? அவையின்ர கணக்கெல்லாம் சொல்றியள் நீங்கள் சேர்த்த தொகையை ஏன் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்?

4 hours ago, கலையழகன் said:

கூட்டமைப்பின் பெயரைப் பாவித்து தமிழரசுக் கட்சி செய்வதுபோலா? அவையின்ர கணக்கெல்லாம் சொல்றியள் நீங்கள் சேர்த்த தொகையை ஏன் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்?

திமுக, அதிமுக போல இரண்டுமே கள்ளர் கோஷ்டி தான் ஒரு கள்ளர் கோஷடியின் ஆதரவாளர்  மற்ற கள்ளர் கோஷடியை திட்டுவது இயல்பு தானே. அதை தான் தமிழரசு கள்ளர் கோஷடி ஆதரவாளர் இங்கு  செயகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

இதொரு ரென்ட். புலிகள் மக்களுக்கு இனங்காட்டிச் சென்ற.. தமிழ் தேசிய நிழலில் நின்று கொண்டு புளொட்.. ரெலோ.. ஈபி என்று எல்லாம் ஒட்டுக்குழுக்களும்..வாக்குப் பொறுக்க முடியுது. அப்படித்தான்... தமிழரசுக் கட்சி.. தமிழ் காங்கிரஸ் எல்லாம்.

இவை யாருக்கும் தமிழ் தேசியத்தில் உறுதியான நம்பிக்கை இல்லை. வலுவிழந்து கிடக்கும்.. தங்கட கட்சி அரசியலை மக்கள் முன் திணிக்க தமிழ் தேசியம் என்பதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவ்வளவே.

இதில் சம் சும் மாவை கும்பல்.. இவை.. புளொட் ஈபி ரெலோ பிள்ளையான்.. ஒட்டுக்குழுக்கள் என்பன வேறு வேறல்ல. எல்லாம் ஒன்று தான். சின்னச் சின்ன வித்தியாசம் அவ்வளவே. 

மக்களுக்கும் வேறு உருப்படியான தெரிவும் இல்லை. சிந்தனையும் இல்லை.  தமிழ் தேசியம் என்று வாற எல்லாருக்கும்... வாக்கைப் போட்டு தொலைக்கிறார்கள். கள்ளன் கடையன் கடைப்புலி.. காப்பிலி வந்தாலும் சனம் போடும். கொடுமை.

புலிகள் இனங்காட்டியது ஒரு சிறுபான்மை இனம்.. வாக்குகளால் ஒற்றுமைப்பட்ட.. ஓர் இனமாக பரினமித்தால் தான் அதன் அரசியல் கோரிக்கைகள் நாட்டில்..உலகில்.. கணக்கில் எடுக்கப்படும்..என்பதற்காக. இப்ப சனமோ.. கள்ளன் கடைப்புலிக்கு எல்லாம் தமிழ் தேசியத்தில.. வாக்குக் கேட்டு வந்தால்.. வாக்குப் போடுது. இப்படி.. மொக்குத்தனமாப் போட்டு மக்கள் பிரதிநிதி ஆக்கச் சொல்லியல்ல.. புலிகள் சொன்னார்கள். மக்கள் சிந்திக்கனும்......!!!!  :rolleyes:

On 5/23/2016 at 9:49 PM, கலையழகன் said:

கூட்டமைப்பின் பெயரைப் பாவித்து தமிழரசுக் கட்சி செய்வதுபோலா? அவையின்ர கணக்கெல்லாம் சொல்றியள் நீங்கள் சேர்த்த தொகையை ஏன் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்?

கனடா TNA யில் உள்ளவர்கள் தங்களுடைய சொந்தச்செல்வாக்கினால் தான் நிதியை சேர்ப்பவர்கள் ,நாங்கள் புலிகளையோ ,மாவீரர்களையோ துணைக்கழைத்து நிதியை சேகரிப்பதில்லை .நாங்கள் ஒரு லட்சம் டொலருக்கு மேல் சேர்ப்பது கிடையாது ,இதை சகல மாவட்டங்களுக்கும் ,TNA யில் உள்ள சகல கட்சிகளுக்கும் கொடுத்துள்ளோம் .இதற்குரிய ஆதாரங்கள் ,பற்றுச்சீட்டுகள் எல்லாம் எங்களிடம் உள்ளது கனடா TNA க்கு .வங்கிக் கணக்கு உள்ளது .எங்களுக்கு நிதி தந்தவர்களுக்கும் ,TNA யின் பொதுச்சபைஅங்கத்தவர்களை கூட்டி  கணக்குகளை தெரிவித்து அங்கீகாரம் பெறப்படுகின்றது .
 
நான் 2016இல் நடைபெற்ற தேர்தலுக்கு நிதி சேர்க்கவில்லை ,ஒவ்வொரு மாவட்டத்திலும் வென்ற பாராளுமன்ற ,மாகாண ,உள்ளுராச்சி சபை உறுப்பினர்கள் தங்களுடைய வேதனத்திலிருந்து 5%த்தை கட்சிக்கு வழங்குவதன் முலம் ஒரு நிதியை தேர்தலுக்கு உருவாக்கவேண்டும் .நான் இனி எந்ததேர்தலுக்கும் நிதி சேர்க்க மாட்டேன் என்பதை எழுத்து மூலமாக தெரிவித்துள்ளேன் .

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு நிதி சேகரித்தவர்கள் முன்பு புலிகளுக்காக இயங்கியவர்கள்,கனடாவில் 2010இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு கூட்டம் ராஜ் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றபோது இவரும் அதில் பேசிய அனைவரும் மாவீரர்களையும் புலிகளையும் துணைக்கு அழைத்து உரையாற்றியவர்கள் ,நானும் போனனான் அதில் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தனான் ,எல்லோரும் தமிழ் ஈழம் இணைந்த ,வடக்கு கிழக்கில் திருகோணமலை தலைநகரம் என்று சொல்லிக்கொண்டு திருகோணமலையில் போட்டிக்கு ஆட்களை நிறுத்தி எங்களின் பிரதிநிதித்துவத்தை கெடுக்கப்போகின்றீர்களா ?கடந்த 2010,2016இல் தேர்தல்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குஆயிரம் வாக்குகள் தான் கிடைத்தது .நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் இருக்கலாம் .நான் பிறந்த மண்ணை அழிக்க நினைப்பவர்களை விமர்சிக்கும் உரிமையை எவரும் கேள்வி கேட்கமுடியாது .
 
திருகோணமலையில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு சிங்களவர்களும் ,முஸ்லிம்களும் 
முயல்கின்றார்கள் ,அதையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் செய்கின்றார்கள் அப்ப உங்களுக்கும் சிங்களவனுகளுக்கும் என்ன வித்தியாசம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.