Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்

Featured Replies

கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்

 

கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்


கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டியதாக கிழக்கு மாகாண அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏ. நாசீர் அஹமட் இவ்வாறு கடற்படை அதிகாரியை, அமெரிக்கத் தூதுவர் அதுல் காசியப் முன்னிலையில் இழிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வரைமுறை தெரியாவிட்டால் இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கடற்படை அதிகாரியை முதலமைச்சர் கடுமையாக திட்டியுள்ளார். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நிகழ்வு ஒன்றில் முதலமைச்சருக்கு முதல் அமெரிக்கத் தூதுவர் மேடைக்கு அழைக்கப்பட்டமையை பகிரங்கமாக கண்டித்து இவ்வாறு திட்டியுள்ளார்.


நிகழ்வு நடைபெறும் தினத்தில் முதலமைச்சர் நாட்டில் இருக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் அழைப்பு விடுக்கப்படவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


நிகழ்வில் பங்கேற்குமாறு ஆளுனரே முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு விடுத்து மரியாதை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132465/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

இதனை ஏன் வேறு முதலமைச்சர்கள் திட்டவில்லை என கேட்கிறேன்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இதனை ஏன் வேறு முதலமைச்சர்கள் திட்டவில்லை என கேட்கிறேன்?

யாரு எங்கட பழைய முதலமைச்சரா...? அதுவும் ஆங்கிலத்திலா ...?
சும்மா போங்க ஜீ காமடி பண்ணாமல் ....tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

யாரு எங்கட பழைய முதலமைச்சரா...? அதுவும் ஆங்கிலத்திலா ...?
சும்மா போங்க ஜீ காமடி பண்ணாமல் ....tw_blush: 

ஜீ இது பெரியாருக்கு எழுதப்பட்டது. அவர் கிழக்கு முதலமைச்சர் சிங்கள மக்களை பற்றி ஏன் பேசவில்லையாம்.

5 hours ago, அக்னியஷ்த்ரா said:

யாரு எங்கட பழைய முதலமைச்சரா...? அதுவும் ஆங்கிலத்திலா ...?
சும்மா போங்க ஜீ காமடி பண்ணாமல் ....tw_blush: 

பழைய முதலமைச்சர் ஒரு பழைய புலி.

கடற்படைச் சிப்பாய்களை அவர் திட்டுவாரா? 

அவர் ஆயுதத்தால்  திட்டிப் பழக்கமானவராச்சே!

8 hours ago, nunavilan said:

இதனை ஏன் வேறு முதலமைச்சர்கள் திட்டவில்லை என கேட்கிறேன்?

வேறு முதமைச்சர்கள் என்றால் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

அரச அதிகாரியை திட்டினது குற்றம் ஆனாலும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று ......மாகாண அரசுகளுக்குரிய‌  மதிப்பை கொடுக்க இனிவரும் காலங்களில் முயற்சிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வெளிநாட்டுத் தூதுவருக்கு உள்ள அதிகாரம் கூட இல்லாதது உந்தப் பதவின்னு சிம்பாலிக்காச் சொல்லியும் புரியுதில்லையே... பப்பி சேம் நானா. tw_blush:

  • தொடங்கியவர்

கடற்படை அதிகாரிக்கும் முதலமைச்சருக்கும் இடையில் வாக்குவாதம் : தாக்குதலுக்கு இலக்கான சிறுமி : கடற்படை அதிருப்தி : முறைப்பாடு கிடைக்கவில்லை : பாதுகாப்புச்செயலர் (காணொளி இணைப்பு )

 

மாகாணத்தின் கௌரவத்தை காக்கவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருப்பதாகவும்  தான் கடற்படை அதிகாரியை திட்டியதாக கூறப்படும் விவகாரம் அவதூறு ஏற்படுத்தும் வகையில் சித்திரிக்கப்படுவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஷீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

7f381d66-13f2-4d9b-82cd-ecc9b1b47fa4.jpg

கிழக்கு மாகாண சபை முதல்வர் நஷீர் அஹமட், கடற்படை அதிகாரியொருவரை “ இந்த இடத்தில் இருந்து அகன்று செல்லுமாறு ”  திட்டிய காணொளி இணையத் தளங்களில் பரவிவருகின்றது.

இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்நிலையில் கடற்கடை அதிகாரியை திட்டிய வேகத்தில் திரும்பிய கிழக்கு மாகாண முதலமைச்சர் அருகில் நின்ற மாணவியின் கன்னத்திலும் எதிர்பாராத விதமாக அறையொன்றையும் விட்டார். 

இதையடுத்து தன்னை சுதாகரித்துக்கொண்ட மாணவி எதுவும் தெரியாதது போல் நிற்பதையும் காணொளியில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

திருகோணமலை - சாம்பூர் மகா வித்தியாலயத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

இச்சம்பவம் குறித்து கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஷீர் அஹமட் தெரிவிக்கையில்,

'யாராக இருந்தாலும் மாகாணத்தின் நெறிமுறைகள் , கௌரவம் மதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

இது தனிப்பட்ட ரீதியான பிரச்சினை இல்லை. மாகாணத்தின் கௌரவத்தை காக்கவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருப்பதாகவும் , நான் பேசியதால் தனிப்பட்ட ரீதியாக புண்பட்டிருந்தால் மனம் வருந்துவதாகவும் அவர் தெரவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட், பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை திட்டியமை குறித்து கடற்படை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை இன்றைய தினம் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியிடம் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/6804

15 hours ago, nedukkalapoovan said:

ஒரு வெளிநாட்டுத் தூதுவருக்கு உள்ள அதிகாரம் கூட இல்லாதது உந்தப் பதவின்னு சிம்பாலிக்காச் சொல்லியும் புரியுதில்லையே... பப்பி சேம் நானா. tw_blush:

இந்தியாவின் அழுத்தத்தால், மாகாண சபைகள், முதலமைச்சர்கள் என்று உதயமாகின.

இலங்கை அரசின் விருப்பத்தினால், உதயமாகியதல்ல.

அதனால், அதிகாரம் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெரியார் said:

இந்தியாவின் அழுத்தத்தால், மாகாண சபைகள், முதலமைச்சர்கள் என்று உதயமாகின.

இலங்கை அரசின் விருப்பத்தினால், உதயமாகியதல்ல.

அதனால், அதிகாரம் கிடையாது.

சரி... விடுங்க, 
அந்த முதலமைச்சர்..... திக்கி, திக்கி..... ஆங்கிலம்  கதைச்சாலும்,
பாடசாலை  சிறுமியின் மீது.. கை வைத்தது, சரியல்ல. 
அதற்காகத் தான்.... அந்தக் கடற்படை அதிகாரி..... அதனை தட்டிக் கேட்டவர் என, நினைக்கின்றேன்.
இதுக்குள்ளை.... இந்தியாவும், பொந்தியாவும் எண்டு காமெடி பண்ணாதீங்கப்பு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெரியார் said:

இந்தியாவின் அழுத்தத்தால், மாகாண சபைகள், முதலமைச்சர்கள் என்று உதயமாகின.

இலங்கை அரசின் விருப்பத்தினால், உதயமாகியதல்ல.

அதனால், அதிகாரம் கிடையாது.

ஹிந்தியா ஒரு அழுத்தமும் கொடுக்கேல்ல. ஜே ஆர் எழுதிக் கொடுத்ததுக்கு ராஜீவ் தலையாட்டினது தான் ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தம்.

அதுதான் வடக்குக் கிழக்கு இணைப்பே சட்டவிரோதம் என்றாக்கியாச்சு... இணைச்சதை பிரிச்சாச்சு.

ஆளுனரிடம் அதிகாரத்தை அள்ளிக் கொடுத்து.. முதலமைச்சரை செல்லாக் காசாக்கியாச்சு.

காணி பொலிஸ் நிதி அதிகாரங்கள் எதுவும் இல்லாத ஒரு வெற்று மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் நடத்தும் சபை தான் மாகாண சபைகள்.

அது மொக்கு ராஜீவை பயன்படுத்தி.. குள்ள்ந் அரி..ஜே ஆர் விடுதலைப்புலிகளை அழிக்க போட்ட திட்டத்தின் ஒரு பகுதிதானே தவிர.. வேறில்லை.

இன்று அது அப்பட்டமாகவே தெரிகிறது.

யாரும் மாகாண சபை போதுமுன்னு சொல்லேல்ல. எல்லாரும் அரசியல் அமைப்பு மாற்றம்.. கூடுதல் அதிகாரமுள்ள சமஷ்டியை தான் குறைந்த பட்சம் கேட்கினம். 13.. 13+ எல்லாம் செத்து சவக்கிடக்கிற்கே போய் விட்டது.

ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தம் தமிழ் மக்களை ஏமாற்றப்போடப்பட்ட ஒரு நாடகம் என்பது இன்று வரை நிதர்சனமாகிவிட்டது. புலிகள் இருந்த போது நாடகத்தை திட்டமிட்ட படி நடத்த முடியவில்லை. இப்போ.. முகமூடிகள் கிழிந்து தொங்கும் நிலையிலும் ஹிந்தியா என்ற போக்கிரி நாடு.. தமிழ் மக்களை இன்னும் இன்னும் ஏமாற்றலாம் என்று நினைத்து.. மாகாண சபை உச்சரிப்பில் காலம் கடத்த நினைக்கிறது.

ஆனால் தமிழ் மக்கள் 1987 இலேயே ஹிந்தியா என்னென்று படித்து விட்டார்கள். 2009 மே இல் அதன் உண்மைச் சொரூபம் என்ன என்று புரிந்தும் கொண்டு விட்டார்கள். எனி ஹிந்தியா தமிழ் மக்களின் காலில் விழுந்து நக்கினாலும்.. அதனை தமிழ் மக்கள் நம்பப் போவதில்லை. அது முடிந்த வரலாறு. tw_blush:

சம் சும் கும்பல்.. ஹிந்தியாவை நக்கி பதவி சுகம் தேடலாம். ஆனால் தமிழ் மக்கள் அதனை நம்பத் தயார் இல்லை எனி மேலும். tw_blush:

ஹிந்தியா ஒரு அழுத்தமும் கொடுக்கேல்ல. ஜே ஆர் எழுதிக் கொடுத்ததுக்கு ராஜீவ் தலையாட்டினது தான் ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தம். //////

 

இந்தியாவின் அழுத்தத்தின் பின்னால்தான் ஒப்பந்தமே!

அழுத்தமில்லாமல், ஜே.ஆர். எழுதிக் கொடுப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆர் மீது அழுத்தம் போட்டது இந்திரா அம்மையார் மட்டுமே. ராஜீவ் ஒரு மொக்கு. அதன் மீது அழுத்தம் போட்டு.. அதனை தனது நரித்தனத்தால்.. தமிழர்களுக்கு எதிரியாக்கி.. அதில் நன்மை அடைவதே ஜே ஆரின் திட்டம். அதில் ஜே ஆர் வென்றார். அதன் ஒரு பகுதிதான் அரைகுறை ராஜீவ் - ஜே அர் ஒப்பந்தம். அதில் போய் துவக்கால் அடியும் வாங்கிக் கொண்டு.. டெல்லிக்கு ஓடிச்சு ராஜீவ் என்ற மொக்கு. அடிவாங்கியும் அது திருந்தல்ல. கடைசில.. தமிழர்களோடு பகையை வளர்த்திட்டு.. ஜே ஆர் விரும்பியதை செய்திட்டு போய் சேர்ந்திட்டுது. அது இத்தாலிக்காரியோடு இத்தாலில கிடந்திருந்தால்.. இந்தளவுக்கு தமிழருக்கு ஈழத்தில் கேடு நேர்ந்திருக்கவே மாட்டுது. 

மொக்கன் ராஜீவ்.. ஈழப்பிரச்சனையின் ஆழம் தெரியாமல் காலைவிட்டு தானும் அழிந்து ஈழத்தமிழரையும் அழிச்சு.. சிங்களவனை வாழ வைச்சது தான் கண்ட மிச்சம். இப்ப சீனா வருகுது என்று வாயில வத்தில அடிச்சுக்கிட்டு.. சிங்களவனுக்கு கழுவிக்கிட்டு திரியுது.. ஹிந்தியா. இந்திரா காலத்தில்.. ஹிந்தியாவுக்கு சிங்களவன் பயம்.. இப்ப சிங்களவனுக்கு ஹிந்தியா பயம். இதனை மாற்றி அமைத்ததே ஜே ஆர் தான்.. மொக்க ராஜீவை பயன்படுத்தி. tw_blush:

ஹிந்தியா ஒரு அழுத்தமும் கொடுக்கேல்ல.  -   இது உங்கள்  முன்னைய கமெண்ட் 

ஜே ஆர் மீது அழுத்தம் போட்டது இந்திரா அம்மையார் மட்டுமே.  -    இது பின்னையது.

 

அழுத்தம் கொடுத்தது என்றும் கொடுக்கவில்லை என்றும் உங்களுக்குள்ளே முரண்படலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெரியார் said:

ஹிந்தியா ஒரு அழுத்தமும் கொடுக்கேல்ல.  -   இது உங்கள்  முன்னைய கமெண்ட் 

ஜே ஆர் மீது அழுத்தம் போட்டது இந்திரா அம்மையார் மட்டுமே.  -    இது பின்னையது.

 

அழுத்தம் கொடுத்தது என்றும் கொடுக்கவில்லை என்றும் உங்களுக்குள்ளே முரண்படலாமா?

ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தம் இந்திரா காலத்தில் எழுதப்படவும் இல்லை.. தயாராகவும் இல்லை. நாங்கள் குறிப்பிட்டது மொக்கர் ராஜீவ் கால ஹிந்தியா. அதுதான் ஈழத்தமிழருடன் பகை வளர்த்த ஹிந்தியா. ஜே ஆரின் சூழ்ச்சிக்கு பலியான ஹிந்தியா. அதற்கு முன் இருந்த ஹிந்தியா வேறு. அது நட்பு இந்திராவின் இந்தியா. tw_blush: உங்களுக்கு ஈழ அரசியல் சுத்த சூனியம் போல. இதில சிங்களவனோடு ஒண்டுக்குகிடவுன்னு ரெங்கமென்ட் வேற. 

Edited by nedukkalapoovan

ஹிந்தியா ஒரு அழுத்தமும் கொடுக்கேல்ல.  -   இது உங்கள்  முன்னைய கமெண்ட் 

ஜே ஆர் மீது அழுத்தம் போட்டது இந்திரா அம்மையார் மட்டுமே.  -    இது பின்னையது.

 

அழுத்தம் கொடுத்தது என்றும் கொடுக்கவில்லை என்றும் உங்களுக்குள்ளே முரண்படலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெரியார் said:

இந்தியாவின் அழுத்தத்தால், மாகாண சபைகள், முதலமைச்சர்கள் என்று உதயமாகின.

இலங்கை அரசின் விருப்பத்தினால், உதயமாகியதல்ல.

அதனால், அதிகாரம் கிடையாது.

ஓ அப்படியா ...எனக்கு இது தெரியாமல் போச்சே 
சரி இப்ப அதுக்கு என்ன செய்வோம் ...?

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓ அப்படியா ...எனக்கு இது தெரியாமல் போச்சே 
சரி இப்ப அதுக்கு என்ன செய்வோம் ...?

கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவதுதான் நல்லது.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெரியார் said:

கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவதுதான் நல்லது.

 

எது கிடைத்தது ..? வைத்துகொண்டு திருப்தியடைய...? 

On 26/05/2016 at 5:46 PM, அக்னியஷ்த்ரா said:

எது கிடைத்தது ..? வைத்துகொண்டு திருப்தியடைய...? 

மாகாண சபை 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெரியார் said:

மாகாண சபை 

இதையும் நீங்கள் தான் சொல்கிறீர்கள் ....

 

Quote

வடக்கில் இராணுவத்தை சிறிதும் அசைக்க முடியவில்லை வடக்கு முதல்வரால்.

அதுபோலத்தான் கிழக்கிலும்.

ஒரு மயிரும் புடுங்க முடியாது.

இதையும் நீங்கள் தான் சொல்கிறீர்கள் 
அதாவது ஒரு மயிரும் புடுங்க முடியாதவற்றை வைத்துகொண்டு திருப்தி அடைய சொல்கிறீர்கள் 

ஏற்கனவே என்ன எழுதினோம் என்று வாசித்துவிட்டு எழுதுகிறீர்களா ...இல்லை கண்ட பாட்டிற்கு உளறுகிறீர்களா .....?
இப்போது தெரிகிறது .....நீங்கள் ஆபத்தானவர்...நீங்கள் சிங்களவனின்  ஒண்ணுத்துக்கும் உதவாத   புஸ்வானத்தை தமிழர் மீது திணிக்க இப்படி களங்களில் கண்டபாட்டிட்கு எழுத தெரிவு  செய்யப்பட்டவராக கூட   இருக்கலாம்.

யாழ் களம் கொஞ்சம் அவதானமாய் இருப்பது நல்லது 
 

56 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இதையும் நீங்கள் தான் சொல்கிறீர்கள் ....


 

 

இலங்கையின் எல்லாப் பாகத்திலும் முப்படைகளும் இருக்க யாரின் அனுமதியும் தேவையில்லை.

கிடைத்தது மாகாண சபை.  

அதை வைத்துக் கொண்டு, அபிவிருத்தியை மேற்கொள்வதுதான் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.