Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் வசமாகுமா காங்கேசன்துறை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கிளப் செய்திகள் சுவாரஸ்யமாகவே இருக்கு ..... போட்டுத் தாக்குங்கள் ஜீவன்....!  tw_blush:

  • Replies 181
  • Views 20.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
7 minutes ago, suvy said:

உங்களின் கிளப் செய்திகள் சுவாரஸ்யமாகவே இருக்கு ..... போட்டுத் தாக்குங்கள் ஜீவன்....!  tw_blush:

நன்றி

ஆச்சி அண்ணையை நினைவு உள்ளது. முரளி யார் சுவிஸ் முரளியா? ஆசைப்பிள்ளை வாத்தியார் மூன்றாம் வகுப்பில் எமக்கு ஆங்கிலம் படிப்பித்தார்

 

  • தொடங்கியவர்
9 hours ago, கலைஞன் said:

ஆச்சி அண்ணையை நினைவு உள்ளது. முரளி யார் சுவிஸ் முரளியா? ஆசைப்பிள்ளை வாத்தியார் மூன்றாம் வகுப்பில் எமக்கு ஆங்கிலம் படிப்பித்தார்

 

இல்லை இவர் மார்க்கண்டு மாஸ்டரின் மகன்.

ஜீவன்,

குருநாதசுவாமி கோயிலடி பற்றி ஏதும் தகவல்? மற்றும் நமது வீடு விதானைவளவு பற்றி ஏதாவது தகவல்?

சிலர் கூறுகின்றார்கள் அது விடுவிக்கப்பட்டு விட்டது என்று. சிலர் இல்லை என்கின்றார்கள்.

எது உண்மை?

  • தொடங்கியவர்
Just now, கலைஞன் said:

ஜீவன்,

குருநாதசுவாமி கோயிலடி பற்றி ஏதும் தகவல்? மற்றும் நமது வீடு விதானைவளவு பற்றி ஏதாவது தகவல்?

சிலர் கூறுகின்றார்கள் அது விடுவிக்கப்பட்டு விட்டது என்று. சிலர் இல்லை என்கின்றார்கள்.

எது உண்மை?

குருநாதசுவாமி கோவிலடி, நாச்சிமார் கோவிலடி பெருமளவில் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்கள் இருந்த இடம் + அத்திவாரம் கூட தெரியவில்லை . விதானை வளவு எது என்று எனக்கு தெரியாது. இன்று மாலை விசாரித்து எழுதுகின்றேன். உங்கள் வீடும் எனக்கு எங்கிருந்து என்று  தெரியாது. நான் காங்கேசன்துறையை சேர்ந்தவன்தான். ஆனாலும் நான் அங்கு முழுமையாக வாழ்ந்தது ஏழு வருடங்களே. அதனால் பல பகுதிகள் எனக்கே தெரியாது. 

உங்கள் வீடு எங்கிருந்து என்று தெரியப்படுத்தினால் இன்று மாலைக்குள் விசாரித்து சொல்லமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒகோ  சூப்பர் தொடரட்டும் அண்ணை அப்பண்ணை தான் நிற்கிறார் கன படங்களில் யானைக்குட்டி போலtw_blush:

ஜீவனுக்குள் அருமையான ஒரு கதை சொல்லி இருக்கிறார்.... வாசிக்க இனிமையாக இருக்கின்றது

  • தொடங்கியவர்
9 minutes ago, நிழலி said:

ஜீவனுக்குள் அருமையான ஒரு கதை சொல்லி இருக்கிறார்.... வாசிக்க இனிமையாக இருக்கின்றது

நன்றி நிழலி

ஜீவன், Gnani Teacher இன் பழையவீடு தெரியாதா? குருநாதசாமி கோயில் வீதியோட இருப்பது. அதுதான் விதானை வளவு.

  • தொடங்கியவர்
3 minutes ago, கலைஞன் said:

ஜீவன், Gnani Teacher இன் பழையவீடு தெரியாதா? குருநாதசாமி கோயில் வீதியோட இருப்பது. அதுதான் விதானை வளவு.

ஞானி டீச்சரையும், வீட்டையும், கூத்தியாவத்தை பிள்ளையாரையும் மறந்தால் நான் மனுசனா?  உங்களுக்கு விபரம் படத்துடன் விரைவில்  கிடைக்கும்.

அந்த இடங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன.

நன்றி ஜீவன். 

ஜீவன், குருநாதசுவாமி கோயில் அயலில் இராணுவமுகாம் உள்ளதால் இதுவரை விடவில்லை என்றும் கூறுகின்றார்கள். கோயிலுக்கு தெற்காய் மாடிவீடு கட்டி ஆமி உட்கார்ந்து இருப்பதாய் ஓர் செய்தி. அது எல்லாம் எமது பகுதி. வீடுகள் எல்லாம் சில வருடங்கள் முன் முழுமையாக இருந்ததை ஆட்கள் கண்டுள்ளார்கள். இப்போது அது வெளியாக உள்ளது தோட்டம் செய்யப்படுகின்றது என்கின்றார்கள்.  வீட்டை இடித்து அந்த இடத்தில் தோட்டம் செய்யும் அளவிற்கு போனதற்கு இது எத்தனையாம் பராக்கிரமபாகு மன்னனின் சிந்தனை? எமது காங்கேசன்துறை எடுப்பார் கைப்பிள்ளை ஆகிவிட்டது.

  • 4 weeks later...

ஜீவன், நீங்கள் ஏன் இப்போது இந்த பகுதியில் எழுதுவது இல்லை? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கலைஞன் said:

ஜீவன், நீங்கள் ஏன் இப்போது இந்த பகுதியில் எழுதுவது இல்லை? :rolleyes:

அந்தாள் வடக்கையும் கிழக்கையும் தான் இணைக்க முடியவில்லை வடக்கையும் தெற்கையும் இணைக்கலாமா என்று முயற்சி செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பண்ணைப் பாலத்துக்கடியிலும் அவரைக் காணவில்லை,,,, துண்டில் மீனில மாட்டிட்டுதோ.....!  tw_blush:

  • தொடங்கியவர்
6 hours ago, கலைஞன் said:

ஜீவன், நீங்கள் ஏன் இப்போது இந்த பகுதியில் எழுதுவது இல்லை? :rolleyes:

 

5 hours ago, MEERA said:

அந்தாள் வடக்கையும் கிழக்கையும் தான் இணைக்க முடியவில்லை வடக்கையும் தெற்கையும் இணைக்கலாமா என்று முயற்சி செய்கிறார்.

 

2 hours ago, suvy said:

பண்ணைப் பாலத்துக்கடியிலும் அவரைக் காணவில்லை,,,, துண்டில் மீனில மாட்டிட்டுதோ.....!  tw_blush:

தேடியதற்கு நன்றி.

ஜீவன் இன்னமும் உயிருடன் உள்ளான் - ஆனால் கொஞ்சம் பிசி

அம்புட்டுத்தான்.

இருநாட்களின் முன்னரும் இதனை பதிவிட்டிருந்தேனே?

கலைஞன் 

காட்டடைப்பு வீதி முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ராஜபாலனின் டுடோரிக்கு பக்கத்தில் உள்ள ஒழுங்கையும், குரு வீதியும் நிர்மாணிக்கப் படுகின்றன. கல்லூரி வீதி முழுமையாக விடப்படாமையாலும், அமெரிக்கன் பாடசாலை அருகே பழைய ரயில் பெட்டிகள் குவிக்கப்பட்டுள்ளதாலும் இதுவரை புணரமைக்கப்படவில்லை.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

80களின் பின்னர் மறுபடியும் எனது அறையில் நான் குந்தியிருந்து எதையோ படித்தது போல இன்றும் நடித்தபோது...

இது வலி மிகுந்த ஒரு பதிவு

தயவுசெய்து யாரும் பச்சை குத்திடாதீங்கோ!

Image may contain: one or more people, tree, plant, shoes, outdoor and nature

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகள் மட்டுமே எஞ்சியது  என நினைக்க வேண்டாம் விடுவித்தால் வீட்டைக்கட்டலாம்   

நன்றாக இருக்கிறது போட்டோ பச்சை இல்லை குத்த  ஆங்tw_blush:

  • தொடங்கியவர்
8 hours ago, முனிவர் ஜீ said:

நினைவுகள் மட்டுமே எஞ்சியது  என நினைக்க வேண்டாம் விடுவித்தால் வீட்டைக்கட்டலாம்   

 

காங்கேசன்துறையில் வீடுகள் இல்லை. இருக்கும் வீடுகளில் இராணுவம் அல்லது போலீசார்தான் உள்ளனர். ஆனாலும் நாங்கள் இழந்தது வெறும் வீடுகள்தான் (வீடுகளின் உணர்வை இல்லை) - மறுபடியும் கட்டலாம்.

 ஆனால் அதற்கும் வழி இல்லாதவர்கள்?

பொருத்து வீடும் வேண்டாம் - ஆமா இந்த புலம் பெயந்தவர்கள் எல்லாம் வேறு வீட்டிலா வாழ்கிறார்கள். 

எனது வீடு அப்படி இருக்கு இப்படி இருக்கு என்று படம் காட்டுபவர்கள் வீட்டிற்கு போய் பாருங்கள். அப்புறமா இங்கும் வந்து பாருங்கள்.

புரியும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஜீவன் சிவா said:

காங்கேசன்துறையில் வீடுகள் இல்லை. இருக்கும் வீடுகளில் இராணுவம் அல்லது போலீசார்தான் உள்ளனர். ஆனாலும் நாங்கள் இழந்தது வெறும் வீடுகள்தான் (வீடுகளின் உணர்வை இல்லை) - மறுபடியும் கட்டலாம்.

 ஆனால் அதற்கும் வழி இல்லாதவர்கள்?

பொருத்து வீடும் வேண்டாம் - ஆமா இந்த புலம் பெயந்தவர்கள் எல்லாம் வேறு வீட்டிலா வாழ்கிறார்கள். 

எனது வீடு அப்படி இருக்கு இப்படி இருக்கு என்று படம் காட்டுபவர்கள் வீட்டிற்கு போய் பாருங்கள். அப்புறமா இங்கும் வந்து பாருங்கள்.

புரியும். 

பொருத்து வீடுகளுக்கும்.....அத்திவாரம் வெட்டி கட்டும் வீடுகளுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.

இலங்கை ஐரோப்பா கண்டத்தில் இல்லை....ஆசியா கண்டத்தில் உள்ளது. நீங்கள் விரும்பினால் விவாதத்தை தொடராலாம்.எனக்கு அனுபவம் நிறையவே உள்ளது.
என்னை பொறுத்தவரையில் பந்தாவுக்கு பொருத்து வீடுகளில் வசிப்பதை விட குடிசை கொட்டில்களில் வாழலாம்.

இதற்குள் அரசியல் இருக்குமாயின்...????????tw_thumbsdown:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பொருத்து வீடு ஆரம்பத்தில் நானும் வேண்டாம் என்றுதான் சொன்னன்  ஆனால் அது  கூட கிடைக்க கூடிய நிலையில் இல்லை மக்களுக்கு.  மாரி போய்விட்டது ஆனால் மழை இப்ப மெல்ல மெல்ல பெய்ய தொடங்குகிறது    மக்கள் வாழ்க்கை திண்டாட்டமா  போக போகிறது. என்ன வோ மக்களுக்கும் நல்லது நடக்க ( கிடைக்க வேண்டும் என்ற அவா) அது எது வானாலும் கிடைக்கட்டும் என்று சொல்ல தோன்றுகிறது இப்போ   நேரத்திற்கு நேரம்  அரசியல் வாசகம் பேசும் அரசியல் வாதிகளை நம்புவதை விட அரசை நம்பலாம் போல் கிடக்கு  மக்கள் நோக்கிய பார்வையில் தனிப்பட்ட கருத்து அல்ல

  • தொடங்கியவர்
18 hours ago, குமாரசாமி said:

பொருத்து வீடுகளுக்கும்.....அத்திவாரம் வெட்டி கட்டும் வீடுகளுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.

மண்ணை தோண்டி அத்திவாரம் போடவேண்டாம் - அவர்களுக்கு, அவர்களின் வாழ்க்கைக்கு அத்திவாரம் தேவை முதலில். அங்கிருந்துதான் அவர்களின் வாழ்க்கையே ஆரம்பம்.

இதற்குத்தான் அத்திவாரம் தேவை

18 hours ago, குமாரசாமி said:

எனக்கு அனுபவம் நிறையவே உள்ளது.
என்னை பொறுத்தவரையில் பந்தாவுக்கு பொருத்து வீடுகளில் வசிப்பதை விட குடிசை கொட்டில்களில் வாழலாம்.

அங்கிருந்து உதை சொல்லாமல் கொஞ்சம் நிதர்சனத்துக்கு வாங்கோ.

அதுசரி பொருத்து வீடு என்றால் என்ன என்று விளக்கம் தரமுடியுமா?

30  வருடம் உத்தரவாதம் தருகிறார்களே.

  • தொடங்கியவர்
19 hours ago, குமாரசாமி said:

நீங்கள் விரும்பினால் விவாதத்தை தொடராலாம்.எனக்கு அனுபவம் நிறையவே உள்ளது.

அதுசரி பொருத்து வீடு என்றால் என்ன என்று விளக்கம் தரமுடியுமா?

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான உங்கள் பதிலில் இருந்து ஆரம்பிக்கலாம்.
ஆதாரம் படங்களுடன் தரப்படும் என்பதையும் மறக்க வேண்டாம்.

இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பமும் 25 வருடங்களின் பின் இப்போது பல்கிப் பெருகி விட்டன என்பதையும் மறக்க வேண்டாம்.

52 minutes ago, ஜீவன் சிவா said:

என்னை பொறுத்தவரையில் பந்தாவுக்கு பொருத்து வீடுகளில் வசிப்பதை விட குடிசை கொட்டில்களில் வாழலாம்.

சும்மா உங்கிருந்து கதை அளக்காம நீங்க இங்கை வந்து கொட்டிலில் இருங்கோ - பாராட்டுகிறேன்.
 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, முனிவர் ஜீ said:

இந்த பொருத்து வீடு ஆரம்பத்தில் நானும் வேண்டாம் என்றுதான் சொன்னன்  ஆனால் அது  கூட கிடைக்க கூடிய நிலையில் இல்லை மக்களுக்கு.  மாரி போய்விட்டது ஆனால் மழை இப்ப மெல்ல மெல்ல பெய்ய தொடங்குகிறது    மக்கள் வாழ்க்கை திண்டாட்டமா  போக போகிறது. என்ன வோ மக்களுக்கும் நல்லது நடக்க ( கிடைக்க வேண்டும் என்ற அவா) அது எது வானாலும் கிடைக்கட்டும் என்று சொல்ல தோன்றுகிறது இப்போ   நேரத்திற்கு நேரம்  அரசியல் வாசகம் பேசும் அரசியல் வாதிகளை நம்புவதை விட அரசை நம்பலாம் போல் கிடக்கு  மக்கள் நோக்கிய பார்வையில் தனிப்பட்ட கருத்து அல்ல

தந்தை செல்வநாயகம் தொடக்கம் இன்றைய பசிக்காக போராடியிருந்தால் இத்தனை அழிவுகளும் இடம்பெயர்வுகளும் புலம்பெயர்வுகளும் வந்திருக்கவே மாட்டாது.

தூரநோக்குகள் இனிவரும் காலங்களுக்கு அதிலும் ஈழத்தமிழர்களுக்கு ஒவ்வாமையாக மாறிவிட்டது.

வந்தமாம் சாப்பிட்டமாம் போனமாம்.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.