Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லைகா மொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் அலுவலகத்தில் ரெய்டு... மோசடிப் புகாரில் 19 பேர் கைது!!

Featured Replies

லைகா மொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் அலுவலகத்தில் ரெய்டு... மோசடிப் புகாரில் 19 பேர் கைது!!

Lycamobile French offices 'raided over fraud allegations'

லண்டன்: மொபைல் சர்வீஸ் துறையில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது பிரான்ஸ் போலீஸ். இதில் அந்த நிறுவனம் ஏராளமான பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்களில் லைகா மொபைலின் இயக்குநர்களுள் ஒருவரான் அலெய்ன் ஜோசிமெக்கும் ஒருவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட 19 பேரில், 9 பேர் வரி ஏய்ப்புக்காவும், மீதி 10 பேர் பண மோசடிக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

 

இந்த வரி ஏய்ப்பின் அளவு 13.4 மில்லியன் பவுன்டுகள். பல்வேறு வழிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், சந்தேகத்துக்குரிய நிறுவனங்களிலிருந்து பல நூறு கோடி பவுண்ட் பணம் கோணிப் பைகளில் லண்டன் தபால் நிலையங்கள் மூலம் பரிமாறப்படுவதைக் கண்காணித்துக் கண்டுபிடித்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் பல ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய நிறுவனமாக உள்ளது.

 

கடந்த 2011-ம் ஆண்டு பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 2.2 மில்லியன் பவுன்டுகள் அன்பளிப்பு தந்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளானது. தொடர்ந்து ஈழத்தில் இனப் படுகொலை செய்த ராஜபக்சேவின் கூட்டாளி இந்த நிறுவனம் என்று கூறப்பட்டது. அதன் காரணமாக இந்த நிறுவனத்தின் சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் முதல் முறையாக விஜய்யை வைத்துத் தயாரித்த கத்தி படத்துக்கு ஏராளமான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் லைகா நிறுவனம் தமிழகத்தில் படம் தயாரிக்க தடை ஏதுமில்லை என்று அறிவித்ததால் எதிர்ப்புகள் அடங்கிவிட்டன.

 

அதைத் தொடர்ந்து இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் ரஜினியை வைத்து 2.ஓ படத்தைத் தயாரித்து வருகிறது. கமல் ஹாஸனை வைத்து சபாஷ் நாயுடு படத்தை எடுத்து வருகிறது. அடுத்த விஜய் படத்தையும் தயாரிக்கிறது. இந்தியில் அக்ஷய் குமார், தெலுங்கில் மகேஷ் பாபு என பெரிய நடிகர்களை வைத்து பல படங்களைத் தயாரித்து வருகிறது. இந்த சூழலில் மோசடிப் புகாரில் இந்த நிறுவனத்தின் வெளிநாட்டு அலுவலகம் சோதனையிடப்பட்டு 19 பேரும் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/lycamobile-french-offices-raided-over-fraud-allegations-256514.html

பெருமளவு பணத்தை வைத்துக் கொண்டு பேராசையில் மேலும் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

  • தொடங்கியவர்

லைகா மொபைல் நிறுவனத்தின் பாரிய பண மோசடி அம்பலம்; 19 பேர் கைது

 

லைகா மொபைல் நிறுவனத்தின் பாரிய பண மோசடி அம்பலம்; 19 பேர் கைது

 

சர்வதேச அளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

09 பேர் பணமோசடி குற்றச்சாட்டிலும் 10 பேர் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல மில்லியன் பவுன் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் லைகா மொபைல் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான அலெய்ன் ஜோசிமெக்கும் (Alain Jochimek) ஒருவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வரி ஏய்ப்பின் அளவு 13 மில்லியன் பவுன்களுக்கும் அதிகம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் நம்புகின்றனர்.

பல்வேறு வழிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், சந்தேகத்துக்குரிய நிறுவனங்களிலிருந்து பல கோடி பவுன் பணம் லண்டன் தபால் நிலையங்கள் மூலம் பரிமாற்றப்படுவதைக் கண்காணித்துக் கண்டுபிடித்ததாகவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கடந்த 2011ம் ஆண்டு முதல் பிரித்தானியப் பிரதமரின் கட்சிக்கு 2.2 மில்லியன் பவுன்கள் நிதி வழங்கியுள்ளமையும் கூறத்தக்கது.

அத்துடன் அந்த நிறுவனம் தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டைகளை போலியான பற்றுச்சீட்டுக்கள் மூலம் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

உலகில் பாரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக திகழும் லைகா மொபைல் சர்வதேச அளவில் உள்ள தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவரான சுபாஸ்கரன் அல்லிராஜா (Subaskaran Allirajah) இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=80908

ஏன் இந்த அவலம்? நேர்மையாக உழைத்திருக்காலம். லைகாவில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கூட கொடுப்பதாக காட்டி
அவர்களே வரி கட்டிவிட்டு, ஊழியர்களுக்கு குறைந்த சம்பபளமே கொடுக்கின்றார்கள், இதற்காக அவர்கள் ஊழியர்களுக்கு,
அவர்கள் உறவுகளை கூட்டிவர விசா மற்ற வசதிகள் செய்து கொடுப்பதாக கேள்வி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவையள்தானே அங்கை ஊரிலையெல்லாம் வீடுகள் கட்டிக்குடுத்து கிணறுகள் தோண்டிக்குடுத்து மோட்டச்சைக்கிள் எல்லாம் வாங்கிக்குடுத்து  நல்லது செய்தவையள் எண்டு சொல்லீனம்!!!! :cool:

  • தொடங்கியவர்

வரி ஏய்ப்பு, நிதி மோசடி குற்றச்சாட்டு: லைகா நிறுவனம் மறுப்பு

 

 

 
lyca_2905437h.jpg
 

பிரான்ஸ் நாட்டில் லைக்கா நிறுவனம் நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக கைது நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு லைக்கா நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, "கடந்த இரு தினங்களாக லைகா மொபைல், லைகா தயாரிப்பு நிறுவனம் குறித்து தமிழ்நாட்டு ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகி வருகின்றன. அவை முற்றிலும் தவறான செய்தி.

லைகா மொபைல் நிறுவனம் 21 நாடுகளில் தொலைதொடர்பு சேவை அளித்து வருகிறது. அதுவும் குறிப்பாக அதிக செலவு வைக்கும் தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவையைப் பெற முடியாதவர்களுக்காக நாங்கள் சேவை வழங்கி விருகிறோம்.

லைகா தயாரிப்பு நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

தற்போது நாங்கள் பிரபல தமிழ் நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அக்‌ஷய்குமார், தனுஷ், ஜி.பி.பிரகாச்ஜ், விஜய் ஆண்டனி ஆகியோருடன் பணியாற்றுகிறோம். இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடனும் தொடர்பில் இருக்கிறோம்.

எங்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக சட்டபூர்வமாக இயங்கிவருகிறது. எங்கள் நிறுவனத்துக்கு எதிராக சட்டப்படி எந்த குற்றச்சாட்டும் இல்லை. பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை." என்று லைக்கா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/வரி-ஏய்ப்பு-நிதி-மோசடி-குற்றச்சாட்டு-லைகா-நிறுவனம்-மறுப்பு/article8764399.ece?widget-art=four-all

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா இதை மாறி எத்தனை ரெய்டுகளை பார்த்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

லைக்கா இதை மாறி எத்தனை ரெய்டுகளை பார்த்திருக்கும்.

அது தானே...

  • கருத்துக்கள உறவுகள்
On 6/21/2016 at 10:18 AM, போல் said:

பெருமளவு பணத்தை வைத்துக் கொண்டு பேராசையில் மேலும் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

கோத்தபாயாவின் கறுப்பு பணம் முழுதும் 
வெள்ளை பணமாக மாற்றிய முகவர்கள் இவர்கள்தான்.

இவர்கள்  நாட்டுக்கு நாடு பூச்சுத்துவதால்தான் தப்பி கொள்கிறார்கள் 
சில தடவை தப்புவதால் இவர்களுக்கும் தைரியம் கூடுகிறது.

ஐரோப்பிய யூனியன் களத்தில் இறங்கினால் 
இவர்கள் அசைய முடியாது.
இன்கம் டாக்ஸ்   கட்டிய விபரம் மட்டுமே மெய்ப்பணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.