Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்த ஆண்டில் 20 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இவ்வருட இறுதிக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், 1700 பேருக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிகழ்வு உள்விவகார அமைச்சர் எஸ். பி. நாவின்ன தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

இவ்வருட இறுதிக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், 1700 பேருக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிகழ்வு உள்விவகார அமைச்சர் எஸ். பி. நாவின்ன தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

   

2015 ஜனவரி 08 ஆம் திகதி முதல் இதுவரையில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் போலல்லாமல் தற்போது மிகுந்த நேர்மையுடனும் விரைவாகவும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுவதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார். வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் இயல்பாகவே இலங்கையின் குடியுரிமையை இழந்து விடுகின்றனர். இவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் இலங்கைக்கான குடியுரிமையினை பெற முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் அதேநேரம் மக்கள் வளத்தை வலுப்பெறச் செய்வது அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டில் கல்வித் தகைமை மற்றும் தொழில்துறையில் தேர்ச்சிபெற்ற பலர் நாட்டை விட்டு சென்றுள்ளனர். இவர்களது அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பு நாட்டிற்கு இன்றியமையாதது என்பதன் காரணமாகவே இந்த அரசாங்கத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை வழங்கலுக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக அவ்வதிகாரி கூறினார்.

இரட்டைக் குடியுரிமை கோரி மேலும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார். விண்ணப்பதாரிகள் இலங்கையில் வாழ்ந்திருந்தால் அக்காலப் பகுதியில் அவர்கள் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டுமென்பதில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அக்கறை கொண்டுள்ளது. இதற்கமைய விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் செயன்முறைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=160661&category=TamilNews&language=tamil

3 hours ago, தமிழரசு said:

இவ்வருட இறுதிக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை

சிங்கள-பௌத்த இனவெறி அரசின் புதிய வியாபார தந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த இனவெறி அரசின் புதிய வியாபார தந்திரம்.

நம்ம சனம் தான் அடிச்சு பிடிச்சு எடுக்க போகுதுகள்?☺

 

இதற்கு இலங்கைகாசு எவ்வளவு கட்டணமாக அறவிடப்படும் என்பது பற்றிய விபரம்ங்கள் தரமுடியுமா??

6 minutes ago, முனிவர் ஜீ said:

நம்ம சனம் தான் அடிச்சு பிடிச்சு எடுக்க போகுதுகள்?☺

 

இதற்கு இலங்கைகாசு எவ்வளவு கட்டணமாக அறவிடப்படும் என்பது பற்றிய விபரம்ங்கள் தரமுடியுமா??

3,00,000 + ஏனைய செலவுகள் 

12 minutes ago, முனிவர் ஜீ said:

நம்ம சனம் தான் அடிச்சு பிடிச்சு எடுக்க போகுதுகள்?☺

 

இதற்கு இலங்கைகாசு எவ்வளவு கட்டணமாக அறவிடப்படும் என்பது பற்றிய விபரம்ங்கள் தரமுடியுமா??

விண்ணப்பப்படிவங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
 

பிரதான விண்ணப்பதாரர் ரூ. 300,000
வாழ்க்கைத்துணை ரூ. 50,000
22 வயதுக்குக் குறைந்த திருமணமாகாத பிள்ளைகளுக்கு

ரூ. 50,000

http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&id=299&Itemid=59&lang=ta

 

சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு விடயத்திற்குப்  பொறுப்பாகவுள்ள அமைச்சருக்கு விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உரிய அனுமதியினைப் பெற்றுக்கொண்ட பின்னரே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்டணங்கள் அறவிடப்படும். உரிய கட்டணங்கள் செலுத்தப்படுவது தொடர்பாக திணைக்களத்தினால் விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்பட்டபடும். இதன் பின்னர் கட்டணங்கள் செலுத்தப்படல் வேண்டும்.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

3,00,000 + ஏனைய செலவுகள் 

நன்றி அண்ணே☺

ஒரு நண்பர் வினவி இருந்தார் அவருக்காக கேட்டேன் நன்றி தகவலுக்கு ???

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் எமக்கு இந்த செலவு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதம் 250,000 ரூபாவாக இருந்தது இப்போது 300,000 ரூபாவாக ஆகிவிட்டது.

11 hours ago, முனிவர் ஜீ said:

நம்ம சனம் தான் அடிச்சு பிடிச்சு எடுக்க போகுதுகள்?☺

மூன்று அமெரிக்கர்கள் தமது விண்ணப்பம் தொடர்பான நிலையை (status) அறிந்து சொல்லும்படி வற்புறுத்திக் கேட்டதால் புஞ்சி பொரளையில் உள்ள அலுவலகத்தின் 2வது மாடிக்கு 6 தரம் போய் வந்துள்ளேன்.

6 தரமும் பெருமளவு சிங்களவர்களையே, அதுவும் பெரும்பாலும் முதியவர்களையே காண முடிந்தது. அவர்கள் அங்குள்ள வரவேற்பு மண்டபத்தில் இருந்து கொண்டு அதிகாரிகளை திட்டி தீர்த்தத்தையும் காண முடிந்தது. ஒருசில தமிழர் பயபக்தியுடன் தமது இரட்டைக் குடியுரிமை நடைமுறைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.

மீரா கூறியபடி முன்னர்  250,000 ஆக இருந்த கப்பம் இப்ப 300,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு எனது அனுபவத்தில், காசு பிடுங்கும் தொழில் என்பதால் என்னவோ தெரியவில்லை, எனது வேலை சுலபமாக முடிந்தது.

உண்மையில் இனப் போரின் காரணமாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு, அவர்கள் பிள்ளைகளுக்கு இந்த வாக்களிக்கும் உரிமையற்ற இரண்டாம் தர குடியுரிமை வழங்குவதற்கு பதிலாக, கட்டணங்கள் (கப்பம்) இன்றி இலவசமாக, வாக்களிக்கும் உரிமையுடன் பூரண குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே நீதியாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.