Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வாய்த்தர்க்கம் போராட்டமாக முற்றியமை வருந்தத்தக்கது'

Featured Replies

'வாய்த்தர்க்கம் போராட்டமாக முற்றியமை வருந்தத்தக்கது'

 

(க.கமலநாதன்)

யாழ்ப்பாண  பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்பதற்கான நடன நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் போராட்டமாக முற்றியமை  தொடர்பில்  நாம் வருந்துகின்றோம். எனினும் இந்த விவகாரத்துக்காக  மாணவர்கள் இவ்வாறு மோதலில் ஈடுபடுவதை எம்மால் அனுமதிக்க முடியாதென இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழப்பாண பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அச்சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் சிங்கள மக்கள் தொடர்ந்தும் முகம்கொடுத்து வந்த பிரச்சனைகளே பல உள்ளன. அவற்றுக்கே இன்னும் தீர்வு காணப்படவில்லை. இவ்வாறான நிலையில் சாதாரணமான நடன விடயத்தை இவ்வாறு மோதல் சம்பவமாக முற்றுச் செய்தமை வேறு சில தரப்புக்களின் இனவாதத்தை தூண்டும் செயல் என்றே நாம் கருதுகின்றோம்.

13714429_10205234483096356_800321683_n.j

இதற்கு முன்னரும் பேராதனை பல்கலைக்கழகத்தில் இது போன்றதொரு சம்பவம் இடம்பெற்றது.  ஆனால் அதற்கு கிடைத்த பலன் யாழ்ப்பாணத்தில் கிடைத்தற்கும் பார்க்க முற்றிலும் வேறுபட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த விவகாரத்தினை சில தமிழ் ஊடகங்கள் சிங்கள் மாணவர்களின் தாக்குதல் முயற்சி என சுட்டிக்காட்டியுள்ளது.  மறுபுறம் சிங்கள ஊடகங்கள் சில இவற்றை தமிழ் மாணவர்களின் தாக்குதல் முயற்சியென சுட்டிக்காட்டியுள்ளது.

சில ஊடகங்கள் அதற்கு அப்பால் சென்று செய்திகளை வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும் இந்த மோதல் சம்பவத்திற்கு தீர்வு காணும் போது அந்த விடயத்தில் இனவாத போக்கு கடைபிடிக்கப்பட கூடாது.

யுத்தத்தின் பேரில் சில தமிழ்,சிங்கள மொழி ஊடகவியலாளர்களையும் சமூக சேவையாளர்களையும் கொலை செய்த காலகட்டத்தை நாம் மறந்துவிடவில்லை. அதேநேரம் வடக்கிலும் தெற்கிலும் ஊடக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் நாம் மறந்துவிடவில்லை. இந்த விடயங்கள் குறித்து அறிந்துள்ள மாணவர்கள் எதிர்காலத்திலும் இனவாதிகளுக்கு இடமளிக்க கூடாது.

அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்கச் செயற்திட்டம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை சிந்தித்து பார்க்க இதுவே தருணம். அதேநேரம் ஊடகவியலாளர்களை ரயில் ஊடாக யாழப்பாணம் அழைத்துச் சென்றால் மாத்திரம் நல்லிணக்கம் உருவாகிவிடாது என்பதை அரசாங்கம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். 

http://www.virakesari.lk/article/9138

அன்புள்ள பல்கலைக்கழக தோழர்களுக்கு ,

Posted on July 17, 2016 by yathaadmin

1276457

 

அன்புள்ள  பல்கலைக்கழக தோழர்களுக்கு ,

நேற்று யாழ்பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை.  கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள் காயம் வந்தது, பொலீஸ் வந்தது,சிங்களவன் என்றோம் ,தமிழன் என்றோம் என்ற பாணியில் மக்களை உசுப்பேத்தி  வர்ணனைகளை அள்ளி வீசும் எந்த ஊடகத்திற்கும் வெளியே நான் நிற்க பிரியப்படுகின்றேன். இது  நாம் உரையாடிக்கொள்ள வேண்டிய தருணம்.

நேற்று இரவு பல்கலைகழகத்தை கடந்துவரும் போது மயான அமைதியுடன் பொலீஸ் சூழ இருந்தது. பகல் நடந்தவைகள் , செய்தியில் திரிக்கப்பட்டவைகள் , ரோட்டில் கேள்வியுற்றவைகள் அனைத்தும் என்னை மிகவும் உணர்ச்சி வசப்படுத்தியிருந்தன. வந்தவுடன் பேஸ்புக்கில் ஒரு இஸ்டேட்டஸ் போட்டேன் பத்து நிமிடத்தில் அதை அழித்துவிட்டேன். எனக்குள்ளும் அந்த பதட்டமும் , உணர்வுச்சிக்கலும் தொற்றியிருந்தது. நீங்களும் அவ்வாறுதான். நம்முடைய மனதில் காழ்பு இல்லை என்பதை மீண்டும் மனதுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்போம்.

இப்போது

இத்தனை வருட கால இன முரண்பாடு , எங்களை எத்தனை உணச்சிக்கு ஆளாக்கி வைத்திருக்கின்றது என்பதை நம் ஒவ்வொருவராலும் உணர முடிகின்றது. நேற்று பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் எழுந்த முரண்பாட்டை  மாணவர்கள் அந்த இடத்தில் அணுகியதைவிட ஊடகங்களும் , வலைத்தள வாசிகளும் மிக கூர்மையாக ஆணுகினார்கள். பலருக்கு யாரோ சிலர் ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு  அவர்களுக்கு முன்னால் போய் நிற்கவேண்டும் , அது மட்டும்தான் வேண்டும் . அத்தனை பழி உணர்ச்சி.

குறிப்பாக  safe zone க்குள் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும், அதிகாரம் , அரசியல் பின்னனி சார்ந்தவர்களுக்கும் நாங்கள் ஆயுதம் தாங்கி அடிபடவேண்டும். எல்லா இன மக்களிடையேயும்  இப்படி சிந்திக்கும் பிற்போக்கு பேர்வழிகள் மலிந்து போய்க்கிடக்கிறார்கள்.

இது பல்கலைக்கழக பிரச்சினை , முன்பு போல் அதை  பகடை அரசியலாக்கி கொண்டிருக்கின்றன சிங்கள தமிழ் ஊடகங்கள்.  பார்க்கப்போனால் அது சில நபர்கள் சார்ந்தது மட்டுமே . முதல் உணர்வு வசப்பட்டு கையோங்கிய சிலரதும் அதற்கு பதில் கை ஓங்கிய சிலரதும் பிரச்சினை.  அந்த சிலர் இரண்டு தரப்பிலும்  பல்கலைக்கழக வளாகத்தில் உலவுகின்றனர்.

அவர்கள் நேற்று அங்கே தீடிரென முளைத்தவர்கள் கிடையாது. சமீப நாட்களாக இது பனிப்போர் போல் உள்ளே குமைந்து கொண்டு இருந்த ஒன்றுதான். விகாரை கட்ட வேண்டும் என்ற சுவரொட்டிகள் , நந்தி சிலை உடைப்பு , உட்காரும் பெஞ்ச்கள் உடைப்பு என  விஞ்ஞான பீடத்திற்கு நெருக்கமாக இருக்கும் இடங்களில்  மறைந்தும் மறையாமலும் குமைந்து வந்த பிரச்சினை நேற்று வெடித்திருக்கிறது. அது ஒரு தீடீர்காரணம்கிடையாது அது பல உபநிகழ்வுகளின் சமீபத்தைய வெடிப்பு .

ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களையோ ஒட்டுமொத்த சிங்கள மாணவர்களையோ இரண்டு தரப்பாக நிறுத்தி அடிபடுங்கள் என்று சொல்வதைப்போலிருக்கிறது ஊடகங்களினதும் சமூக வலைத்தளங்களினதும் பதிவுகள். அவர்களின் சுவாரஸ்ய பசிக்கும் , இனவாதத்தாகத்துக்கும்  மாணவர்கள் பலியாடுகள் .  கயவர்கள்.

 

சகல இனத்தவர்களுக்கும் தங்களுடைய  அடையாளம் சார்ந்த  ஆற்றுகைகளையும் வெளிப்படுத்த உருத்துடையவர்கள் தான் ஆனால் அது எந்தச்சூழலில் எப்போது நிகழ்த்தப்படுகின்றது என்பதும் . அது அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டு அரசினாலும் குறித்த பெரும்பான்மை அடிப்படை வாதத்தாலும் வஞ்சிக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் நடைமுறைச்சூழலில் வலிந்து செய்யப்படுவது மோசமானது. ஆனால் பல்கலைக்கழகத்திற்கு வெளியே முளைக்கும் புத்தர் சிலைகளை நோக்கி யாரும் ஏன் சுட்டு விரலைக்கூட தூக்க வில்லை என்பது நகை முரண் அல்லவா?  இதற்கு பின்னால் ஏதோ ஒன்று இயங்குவதை உணர்ந்துகொள்ளுங்கள்.

எல்லோரும் சுதந்தரமானவர்கள் , சமனானவர்கள் என்று பேச முன்வரும் யாரிடமும் நான் முன்பு குறிப்பிட்ட  சுவரொட்டிகள், நந்திசிலை உடைப்புகள் , கல்லாசன தகர்ப்புக்கள் நிகழ்த்தப்பட்ட பின்னனி என்ன என்பதற்கான விபரத்தை கோரி நிற்கின்றேன்.  நிச்சயமான இது ஒட்டு மொத்த இனச்சூழலின் வடிவமல்ல அடிப்படைவாத பிற்போக்கு மனநிலை கொண்ட ஒரு சிலரின் செயல்கள்.

ஏன் வழமைக்கு அதிகமாக கடந்த வருடங்களில் இனமுரண்சூழலை கட்டமைப்பது போல யாழ் பல்கலைக்கழகத்திற்கு அதிகமான சிங்கள மாணவர்கள் திணிக்கப்படுகின்றார்கள் என்பதற்கும் , ஏன் தமிழ் – சிங்கள மாணவர்கள் ஒரு சில பீடங்களைத்தவிர மிகுதியான பீடங்களில் எதிர்படுகையில் புன்னகைத்து கொள்வது கூட இல்லையென்பதற்கும்  தர்க்க ரீதியான பதில் அதிகாரம் சார்ந்த யாரிடமாவது இருக்கின்றதா ? இது கூட அங்குவரும் சிங்கள மாணவர்கள் செய்யும் செயலல்ல . அது இனவாதம் ஊறிப்போன அதிகார மையங்கள் செய்யும் கயமைத்தனம் .

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடக்கம் பல்கலைக்கழக நிர்வாகம் வரை இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நீர் சுத்திகரிப்பானில் நீர் பெறுவதில் இருந்து சிங்கள தமிழ் பிரச்சினை பல்கலைக்கழக வளாகத்தினுள் தினமும் கூர்ப்படைவதை பல்கலைக்கழக நிர்வாகம் எப்போது  உணரப்போகின்றது.

அதிகார பீடங்கள் எப்போதும் மக்களுக்கும் அறத்துக்கும் எதிரானவைதானே. ஆனால் இதை இப்படியே விட்டால் இந்த கொடுநோய் மீண்டும் அழிவுக்குத்தான் கொண்டு செல்லும்.

தவிர தமிழ்- சிங்கள் மாணவர்களைப்போலவே முஸ்லீம் மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்குமான உறவு நிலைகள் தொடர்ந்தும் நோயுற்று இருப்பதை மிகச்சாதாரணமாக கடந்து போக இயலுமா? முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறையில்  ஊற்றப்பட்ட ஓயில் கறை இன்னும் அகலாமல் கிடப்பதை உள்ளூர எவருமே உணரவில்லையா ?

மூன்று இனத்தவரும் ஒரே வளாகத்தில் எங்கிருந்தோ உருவாக்கப்படும் வேற்றுமனநிலைக்கு பழக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம்.  ஒரு குழு அலது குறுகி இயங்கும் ஆள்மனப்பதிவு ஒன்று தொடர்ந்தும் அந்த பல்கலைக்கழக வளாகத்தினுள் அடுத்தடுத்து கடத்தப்படுகின்றது.

லீவு விடுவதன்  ஊடாக காழ்ப்பு அல்லது எதிர்மறை நிலைஎன்ற கத்தியை உறைக்குள் திரும்ப அனுப்புகின்றது நிர்வாகம் . அதிகார பீடங்கள் எங்கும் அப்படித்தான்.  உறையிலடப்பட்ட கத்தியை எப்படி கண்டறிந்து அழிக்கப்போகின்றோம் என்ற மனித நிலைக்கு நாங்கள் எப்போது போகப்போகின்றோம்.  முரண்பாடு தவிர்ப்பு , முரண்பாடு நிலை மாற்றம் , முரண்பாட்டு அகற்றல் எல்லாம் பாடத்திட்டமாக மட்டும் பல்கலைக்கழகம் கடந்து போகின்றது.

நாம் இனி அடக்கு முறையை எப்போதும் ஆயுதத்தால் எதிர்கொள்ள போவதில்லை என்று  ஒரு  நம்பிக்கையை ஆவது உருவாக்கி கொள்வோம்.

மரபை , சுயத்தை , நமது இருப்பை அழிப்பது மாணவர்கள் இல்லை. அவ்வாறு இயங்குபவர்களுக்கு பின்னால் அதிகாரம் , அடிப்படை வாதம் சார்ந்த பெரிய அரசியல் , பணக்கொள்ளைக்கூட்டம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை உணரவேண்டும் சிந்தனை தளத்தில் இவைகளை எதிர்கொண்டால் மாணவர்கள் முன்னால் அவை கண்நேரமும் நிற்காது.

நாம் எமது இருப்பை பாதுகாக்க போராடுதல் தவறில்லை. ஆனால் அது உணர்ச்சி , பதட்டம் என்பவற்றின் தளத்தில் நடத்தல் கூடாது அது , சிந்தனைதளத்தில் நின்று நடக்க வேண்டும்.

உங்களை தூண்டி விட்டு குளிர் காய்பவர்கள் நாளை நீங்கள் ஒரு பிரச்சினைக்குள் போக அவர்கள் அரசியல் மேடைகளை அலங்கரித்து யாருக்கு எதிராக உங்களை கல்லெறியச்சொன்னார்களோ அவர்களோடு சேர்ந்து நிற்பார்கள்.

நாங்கள் மாணவர்கள். நாங்கள் அவர்களைப்போல் கயவர்கள்  இல்லை.

ஒரே வளாகத்தில் ஒரே வகுப்பறைகளில் ஒரே சிற்றுண்டிச்சாலைகளில்  உலவுகிறோம், கல்வி கற்கிறோம் , ஒவ்வொரு நாளும் எதிர்ப்படுகிறோம். நிமிர்ந்து பரஸ்பரம் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். எல்லோரும் மனிதர்களாகவே பிறக்கிறோம். ஆதலால்.

புன்னகைக்க தொடங்குவம்.

ஓம் அதையும் நாங்களே தொடங்குவம்.

 

அன்புள்ள

யதார்த்தன்

http://yatharthan.com/2016/07/17/அன்புள்ள-பல்கலைக்கழக-தோ/

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தன் என்ற பெயருக்குள் ஒரு முஸ்லீம் ஒளிந்திருக்கிறார் போலும். தமிழ் சிங்கள இனப் பிணக்கில் குளிர்காய்வதை நோக்காக்கக் கொண்டு அவரின் எழுத்து சுய முரண்பாடுகளின் மொத்த உருவமாக வெளிப்பட்டுள்ளது.

முதலில் யதார்த்தம் என்பது என்னென்று உள்ளவாறு உணரப்பட வேண்டும். இலங்கைத் தீவில் இரண்டு தமிழ் சிங்களம் என்று இரண்டு தேசிய இனங்களும்.. மலையக.. முஸ்லீம்.. பேர்கர் சமூகங்களும் வாழ்கின்றன. 

அதில் தமிழ் தேசிய இனம் தனக்கான உரிமைக்காக பிரித்தானிய சுதந்திரத்திற்கு முன்னிருந்தே போராடி வருகிறது. அதில் சிங்கள இனத்துடனான முரண்பாடு என்பது வரலாற்று நீளமானது.

அதற்கு தமிழர் நிலத்தில் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழான.. சிங்கள பெளத்த மயமாக்கமோ.. முஸ்லிம் இஸ்லாமிய ஊடுருவல்களும் பரம்பல்களும் தீர்வாக முடியாது. 

இந்தப் பின்னணியில்.. தென்னிலங்கை மாணவர்களை திட்டமிட்டு வடக்கிற்கு அனுப்ப வேண்டிய தேவை எதுவும் இல்லை. காரணம்.. இங்குள்ள எல்லா கற்கை நெறிகளும் தென்னிலங்கையில் கிடைக்கிறது. அதுபோக ஒரு தென்னிலங்கை மாணவன் வடக்கிற்கு வந்து படிக்க எவ்வளவோ செலவுகளையும் பெற்றோரையும் பிரிய வேண்டி இருக்கிறது. இது அநாவசியமான ஒன்று. 

வடக்குக் கிழக்கை சேர்ந்த தமிழ் மாணவர்கள் தென்னிலங்கைக்கு படிக்கப் போவதற்கு உள்ள பிரதான காரணம்.. கற்கை நெறிகளுக்கான பீடங்கள் வடக்குக் கிழக்கில் இன்னும் அமைக்கப்படாமை. அதை தீர்த்து வடக்குக் கிழக்கு மாணவர்கள் அங்கேயே படிக்க அனுமதித்தால் தென்னிலங்கைக்கு இவ்வளவு செலவு செய்து பெற்றோரை பிரிந்து போக வேண்டிய அவசியம் எழாது.

முஸ்லீம் மாணவர்களுக்கு தனி அலகுக்குள் ஒரு தனிப் பல்கலைக்கழகமான தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பச்சை அடித்து வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு படிக்கலாம். தமிழர்களோடு சிங்களவர்களும் முஸ்லீம்களும் சொறியத் தேவையில்லை.

முதலில் இன முரண்பாடு... அப்புறம் இந்த இன முரண்பாட்டுக்குள் குளிர் காய விளையும் முஸ்லீம் சமூகம் இவற்றின் சுயநலங்கள் தான்.. இப்பிரச்சனைகளின் தோற்றுவாய்கள்.

இவற்றுக்கு அந்தந்த இனம் தனது உரிமையை.. அதிகாரத்தை தக்க வைக்கும்.. தீர்வு பெறப்படாமல்.. வெறும் வாய் அளவில்.. எழுத்தளவில் இன ஐக்கியம்.. ஐக்கிய இலங்கை என்பதெல்லாம் சாத்தியமில்லை.

சிங்களவர்களின் அடி மனங்களில் படிந்து போய் கிடக்கும்.. ஆக்கிரமிப்பு எண்ணமும்.. தமிழர்களின் மனதில் அடிமைப்பட்டுக்கிடக்கிறோம் என்ற எண்ணமும்.. இந்த இரண்டில் இருந்து எப்படி உறிஞ்சி எடுப்பது என்ற ஒட்டுண்ணி எண்ணம் முஸ்லீம்களிடமும் உள்ள வரை..  இந்த எண்ணங்களுக்கான பரிகாரம்.. சரியான நடைமுறைகளின் கீழ் காணப்படாத வரை.. இதுபோன்ற நிகழ்வுகள் முடிவின்றி தொடரும். தற்காலிக அமைதி நிலவுவது போல தோன்றினாலும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலையில் பொல்லுடன்நின்ற சிங்கள மாணவர் இவர்தான்

13692637_632324226937266_903202379919241

 

யாழ் பல்கலை நிகழ்வுகளில் தடிகள்
பொல்லுகளுடன் நின்று தமிழ்மாணவர்களுடன் கலகம் விளைவித்த சிங்கள மாணவர்களின் படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.  அதில் தடிகள் பொல்லுகளுடன் காணப்படுவது தமிழ் மாணவர்கள் என்று சில ஊடகங்களில் வெளியாகிய தகவலை அடுத்து குழப்பம் விளைவித்த சிங்கள மாணவர்களின் முன்னின்று நடாத்தியவர் அனுராதபுரத்தை சேர்ந்த சுடேஸ் கொடகொட என அறியக்கிடைக்கிறது. அத்துடன் தடிகள் பொல்லுகளுடன் ஓடிஓடி தாக்கியவர்கள் அனைவரும் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் திருநெல்வேலிப்பகுதியில் பெரிய ரவுடிகளாக சுற்றிவருபவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த படத்திலுள்ள சிங்கள மாணவர்தான் முன்னிலையில் பொல்லுகளுடன் நின்று ஆரம்பித்து வைத்தார் என்றும் அதனை புகைப்படம் எடுத்த யாழ் செய்தியாளரை புகைப்படம் எடுத்தால் உனக்கும் அடிப்போம் என்று சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும் சொல்லப்படுகின்றது.

13680074_938984836212896_165126619989092http://www.tamilkingdom.com/2016/07/17_41.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு துட்டகைமுனுவின் கொப்பாட்டப்பிள்ளைன்னு நினைப்புப் போல. இது 21ம் நூற்றாண்டு பழைய மகாவம்ச வக்கிரங்களோடு பெரும்பான்மை.. சிங்கள பெளத்த ஆதிக்க ஆக்கிரமிப்புச் சிந்தனைகளோடு ஒரு சிங்கள மாணவனும்.. எந்தப் பல்கலைக்கழகத்துக்குள்ளும் அனுமதிப்படக்கூடாது. அது ஒன்றுதான் இவர்களின் சிந்தனைப் போக்கில் மாற்றத்தை உண்டு பண்ண முடியும். 

ஆனால் இது இலங்கைத் தீவில் நிகழ வாய்ப்பே இல்லை. எனும் போது இப்பிரச்சனைகளுக்கும் முடிவில்லை என்பதே உள்ள யதார்த்தம். 

அனைவரும் இரண்டு மொழியையும் கற்க வேண்டும்!- அப்பொழுது தான் ஒரே குரலில் பேச முடியும்

Posted on July 18, 2016 by yathaadmin

கருத்தியல் ரீதியில் பல்கலைக்கழக முரண்பாட்டை புரிந்து கொள்ளுதல்

• இனத்துவ அடையாளமும் தேசியவாதமும்

1891 இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 79 இனங்கள் இருப்பதாக கணக்கு உண்டு. அவற்றின் மூலம் “கலப்பு” இனம் சார்ந்த எண்ணிக்கை தான் மொத்தமும். “தூய” என்று எதுவும் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

ஆகவே தேசியவாதமும் இனத்துவ அடையாளமும் இங்கே மறைந்து விட்டது. இது ஒரு அரசியல் சார்ந்த இனத்துவ ஒழுங்குருவாக்கம்.

அதன் வெளிப்பாடுகளை சமூக வலைத் தளங்களில் நிகழும் வேறுபட்ட கதையாடல்கள் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்

1 – தீவிர தமிழ்த் தேசிய மற்றும் சிங்கள தேசிய வாதம் சார்ந்த பதிவுகள்
2 – மிதவாதக் கருத்துக்கள்
3 – நல்லிணக்கம் சார்ந்த பதிவுகள்

தீவிரம் –

//நேற்று ராத்திரி மூட்டை முடிச்சுகளோட இடம்பெயர்ந்தவர்களை பார்க்கேக்க
30வருச உயிர் வலிகளை இடம்பெயர்வுகளை
உணர்த்தின வன்மமான மகிழ்சி…
நாங்க வாணி விழா கொண்டாடினா நீங்க வெசாக் கொண்டாடுங்க அது சமத்துவம்..
ஆனா யாழ் பல்கலைகழகத்தோட தமிழ் கலாச்சாரம் அது எங்கட தனித்துவம்…
எங்கட கலாச்சாரம்/மொழி தான் எங்கட இருப்புக்கான சான்று அதனை விட்டு கொடுக்கமாட்டம்…//

இது ஒருவரின் முகநூல் பதிவு – இதில் உள்ள சிக்கலான இனத்துவ அடையாளம் பற்றி பார்ப்போம் ,

1 – விடுதலைப் போராட்டத்தில் எப்படி இனத்துவ அடையாளத்திற்காக தமிழர்கள் தாக்கப் பட்டார்களோ அதே காரணத்திற்காக சிங்களவர்கள் இப்படிப் பார்க்கப் பட்டிருக்கிறர்கள்.

2 – வாணி விழா = வெசாக் என்று சிந்திக்கும் சமத்துவம் கண்டிய நடனம் = மேள வாத்தியங்கள் என்று சிந்திக்கவில்லை. இதில் தான் அந்த இன உணர்வின் கூறு மறைந்துள்ளது.

இன்னுமொருவரின் பின்னூடங்களைப் பார்ப்போம்.

//கடந்த 2012ஆம் ஆண்டு மாவீரர் தின அனுஷ்டிப்பின்போது விடுதிகளில் இருந்த தமிழ் மாணவிகளின் முகத்தில் காணப்பட்ட ஓர்மத்தினை அங்கே சகபாடிகளாக இருந்த சிங்கள மாணவியொருத்தி மிக உருக்கமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்திருந்தாள்.

“தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக அன்று நான் உணர்ந்து கொண்டேன். 26ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவிதவெறி ஏறியிருந்தது. மாணவர்களைப் படையினர் தாக்க,மாணவிகளோ புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள். தாமுண்டு,தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள்,அன்று திடீரெனப் புலிகளாக மாறியிருந்தார்கள். அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள். மாலை 6.05க்கு படையினர் மாணவர்களைத் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது, தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக நான் உணர்ந்துகொண்டேன். நாங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று,தமிழ் மாணவர்களைப் புலிகளாக்கிவிட்டிருக்கிறார்கள்//

இதன் பின்னணியைப் பாருங்கள்,

இனத்துவம் சார்ந்த ஒரு பயம் அல்லது அச்சத்தை மற்றைய இனத்தின் மீது உணரும் தருணம் இது தான், இந்தப் பயம் தான் தேசியவாதத்தின் வெற்றி. இனத்துவ ரீதியில் தங்களை அந்நியமாக உணரும் “கலாசார அந்நியமாதல் ” இது.இதன் மூலமாக தான் “சிங்கலேயே “போன்ற கோஷங்கள் தெற்கில் உயிர் வாழுகின்றன.

மேலும்

// ஒரு தனித் தமிழ் இடத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொதுப் பாரம்பரியத்தை மாற்ற நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையாகும்.//

இங்கே பொதுப் பாரம்பரியம் என்று ஒன்று கிடையாது என்பது கூட பதிவை இட்டவருக்குத் தெரியவில்லை.

ஆனால் இவர் சொல்லியதில் ஒரு முக்கியமான புள்ளி உள்ளது. “தனித் தமிழ் இடத்தில்” என்பது தான் பல்கலைக்கழக யாழ்ப்பாண மனநிலை.

//நேற்றையான் சம்பவத்துக்கு பின்னர் சிங்கள நண்பர்களைக் கொண்ட செம்புதூக்கிகள் இன ஒருமைப்பாடு வேண்டும் எனவும், கிராமிய பொருளாதார அபிவிருத்தியை பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் கருத்துப்பகிர்நதுள்ளனர் (ஆங்கிலத்தில்).
சம்பவத்தை நான் ஆதரிக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை. பல்கலைக்கழகத்தை அன்மித்து வாழும் எனக்கு இது புதிதும் இல்லை.
இம்புட்டு நாளும் இவனுகள் அடிபடேக்க வராத சமுக அக்கறை சிங்களவன் அடிவாங்கீற்றான் எண்டோன வந்துட்டுது.
முதல்ல நமக்குள்ள ஒற்றுமையா இருப்பம். அப்புறம் மற்ற இனத்தானோட இருக்கிறத பற்றி யோசிப்பம்.//

13767255_10155027233464202_8106371100936112715_o

நமக்குள் ஒற்றுமையாக இருப்போம் என்பது, நாம் ஒரு தேசிய / இனம் என்று சிந்திக்க அழைக்கும் குரலே தேசியவாதத்தின் அழைப்பு ஒலி.

//நான் பட்டம் பெற்றது மொரட்டுவை பல்கலைக்கழகத்தில். என்னைப்போலவே நிறைய தமிழ் மாணவர்கள் பட்டம் பெற்றார்கள். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்புக்காக எங்களையும், விருந்தினர்களையும் அழைத்துக்கொண்டு போகும் போது கண்டிய பாரம்பரிய முறைப்படி வாத்தியம் கொட்டியும், கண்டிய நடனம் ஆடியும் அழைத்துப் போனார்கள். நான் உட்பட எந்த தமிழ் மாணவனுமே அதை ஆட்சேபிக்கவில்லை. அட… அதை சட்டையே செய்யவில்லை. காரணம் மொரட்டுவை பல்கலைக்கழகம் சிங்களவர்களை பெரும்பான்மையாகக்கொண்ட , சிங்கள இடத்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகம். அங்கே நட்டுவமும் பரதநாட்டியமும் வேண்டும் என்று அடம்பிடிக்க கூடாது என்றும், அது தொடர்பில் சட்டை செய்யக்கூடாது என்ற இங்கிதமும் எங்களுக்கு தெரிந்தருந்தது. எனக்கு தெரிந்து , யாழ் பல்கலைக்கழகம் மொரட்டுவையில் இல்லை.//

இதில் இவருக்கு இங்கிதம் என்பதும் உரிமை என்பதும் என்ன என்று தெரியவில்லை.அது தான் பிரச்சினை.

சிங்கள மாணவர்களும் இதே போல் தான் இனவாதத்தை கக்கியிருக்கிறார்கள். இது தான் முரண்பாட்டின் காரணம். இதில் குறித்த கருத்தியல்கள் தொடர்ந்து ஒரே விதமாக சிந்திக்கப்பட்டு, உரையாடப்பட்டு வருவதனாலேயே இளைஞர்களும் அப்படியே பேசுகிறார்கள்.

இங்கே இனவாதம் இருக்கிறது, அதனை தவிர்ந்த பல்வேறு காரணிகளும் இருக்கிறது. கலாசார அந்நியமாதல், ஒரு பிரதேச அடையாளம், இனத்துவ அடையாளம் பற்றிய தவறான புரிதல்கள், தாழ்வுணர்ச்சி, வெல்லும் ஆசை இன்னும் மற்றும் இன்னும் பல.

எப்பொழுது தமிழ் சிங்கள முஸ்லிம் மாணவர்களுக்கிடையில் உரையாடலும் புரிந்துணர்வும் வளர்கிறதோ அப்பொழுது தான் இது மாறும். அது வரை இனவாதம் வெல்லும் .

அனைவரும் இரண்டு மொழியையும் கற்க வேண்டும். அப்பொழுது தான் ஒரு குரலில் பேச முடியும்.

கிரிஷாந்த்-

http://yatharthan.com/2016/07/18/அனைவரும்-இரண்டு-மொழியையு/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில்.... நடக்கும் நிகழ்வு ஒன்றில்,  
நாதஸ்வரம், மேளதாளம் தான்.... முன்னிலை வகிக்க வேண்டும்.
சும்மா.... சகட்டு மேனிக்கு, கண்டிய நடனத்தை ஆட, விட முடியாது.
அப்படி என்றால்.... பேராதனையில், கட்டுப் பெத்தவவில்....  முதலில் நாதஸ்வரம் வாசிக்க விடுங்கள்.
அதை... விட்டுட்டு.... நொந்து இருக்கிறவன் மேல், ரவுடித்தனம் காட்டினால், அவன் சீறீ எழுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிய நடனம் இராணுவ ஏற்பாடு!

 
யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் ஆட வேண்டும் என கோரும் சிங்கள மாணவர்கள், ருகுணு பல்கலைக்கழகத்தி லும், பேராதனை பல்கலைக்கழகத்திலும் தமிழ் மரபு கலாசார நிகழ்வுகளை அனுமதிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ். பல்கலைக்கழகத்தில் இராணுவத்தின் துணையுடனேயே கண்டிய நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பகிரங்கமாக  தெரிவித்துள்ளார்.
 
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை ஒன்பது மணிமுதல் பிற்பகல் ஆறு மணிவரை ‘தடம்மாறுகிறதா தமிழ்த்தேசியம்’ எனும் தொனிப்பொருளிலான கருத்தாய்வு நிலை கருத்துபகிர்வுறவாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்;
 
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நல்லாட்சி அரசை குழப்ப வேண்டாம் எனவும், பொறுமை காக்கும் படியும் எமது அரசியல் தலைமைகளால் தொடர்ச்சியாக எம்மிடம் கூறப்பட்டு வருகின்றது. நாமும் கடந்த காலங்களில் பொறுமை காத்து வந்தோம். ஆனால் எம்மால் ஆட்சிக்கு வந்த அரசே தற்போது பௌத்த மயமாக்கலையும், இராணுவ மயமாக்கலையும் மேற்கொண்டு வருகின்றது.
 
இது தொடர்பில் நாங்கள் பொறுமை காக்க முடியாது. ஏனென்றால், எம்மால் கொண்டுவரப்பட்ட அரசு எமக்கு எதிராகவே செயற்பட ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் எமது மக்களை அன்னச்சினத்திற்கு வாக்களிக்க கோரிய எமது கூட்டமைப்பு அரசுடன் பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பேசியதாக எமக்கு தெரியவில்லை.
 
திருகோணமலை சாம்பல் தீவு, நயினாதீவு, முல்லைத்து உட்பட வடக்கு கிழக்கில் புத்தர் சிலைகளை இராணுவத்தின் துணையுடன் வைத்து வருவதோடு, சிங்கள குடியேற்றங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு போனால் எமது தேசம் முழுமையாக சிங்களமயமாக்கப்பட்டு விடும். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றுள்ளது.
 
வரவேற்பு நிகழ்வில் கண்டிய நடனம் வேண்டும் என கூறி சிங்கள மாணவர்களால் கண்டிய நடனம் அரங்கேற்றப்பட்டது. அதனை தட்டிக்கேட்ட தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னரே கலவரம் வெடித்துள்ளது. தமிழ் மக்களுடைய ஒரே ஒரு அறிவியல் சொத்தாக உள்ள யாழ்.பல்கலைக்கழகத்தில் வளமைக்கு மாறாக கண்டிய நடனத்தை கோரும்,
 
சிங்கள மாணவர்கள் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தமிழ் மரபு கலாசார நிகழ்வுகளை அனுமதிப்பார்களா? யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் அரங்கேற்றுவதற்கான உபகரணங்கள் எங்கிருந்து வந்தன? அவற்றை இராணுவமே திட்டமிட்டு வழங்கியிருந்தது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.velichaveedu.com/veli-20/

veli-20-696x341.png

  • கருத்துக்கள உறவுகள்

போராடிய புலிகளை காட்டிக் கொடுத்து விட்டு....
வடக்கில் வசந்தம், கிழக்கில் ஒளி என்று சொன்ன.... 
***** கூட்டங்கள் எங்கே.....?:unsure:
தமிழ் மக்களின் வாக்குகளை அள்ளி.... பாராளுமன்றத்தில், சொகுசு வாழ்க்கை வாழும் கூட்டமைப்பு எங்கே.....?
கேக் வெட்டுறாங்களா.... நியூஸ் பேப்பர் படிக்கிறாங்களா....  
மாணவ சமுதாயம்... இரத்தக் களரியில் நிக்குது, உங்களளுக்கு, அதை கவனிக்க நேரமில்லையா.......? tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஜீவன் சிவா said:

அனைவரும் இரண்டு மொழியையும் கற்க வேண்டும். அப்பொழுது தான் ஒரு குரலில் பேச முடியும்.

கிரிஷாந்த்-

ஏன் அண்ணே சர்வதேச மொழியை எல்லாரும் கற்றால் ஒரு பிரச்சனையும் இல்லையே. சர்வதேச மயமாகிடலாம். ஆளாளுக்கு அடிபடத் தேவையில்லை.. கண்டி யாழ்ப்பாணம் என்று கொண்டு. பேசாம... பழைய படி பிரித்தானிய காலணித்துவக் காலத்திற்குப் போய்ட்டால்.. பறுவாயில்லைப் போலக் கிடக்குது. வர வர எங்கள் ஆக்களின் சிங்களவனிடம் அடிபணியும் இங்கிதஸ்துக்கு விவஸ்தையே இல்லாமல் போய்க்கிட்டிருக்கு. அதுதான் அவன் இப்ப உள்வீட்டுக்க நுழைஞ்சு தன்னை நிலை நிறுத்தவும் அடிக்கவும் ஆரம்பிச்சிட்டான்.

அன்று கொழும்பில் தமிழன் அடிவாங்கினான்.. இன்று யாழ்ப்பாணத்தில் வாங்கிறான். அடிவாங்கிறது என்னவோ தமிழன் தான் எப்பவும். அதேன் மாறுதில்லை. :rolleyes:

யாழ் பல்கலை மீண்டும் புதன்கிழமை திறக்கப்படும்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பகிர்க
160718162826_srilanka_yaaz_university_64

யாழ் பல்கலைக்கழகத்திற்கான புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் சிங்கள மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பையடுத்து, இழுத்து மூடப்பட்ட யாழ் பல்கலைக்கழகம் புதன்கிழமை திறக்கப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரத்னம் அறிவித்துள்ளார்.

160718162939_srilanka_yaaz_university_64

இந்த மோதலைத் தூண்டியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் அமைதி நிலவுவதையடுத்து, 20 ஆம் தேதி மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவத்துறை மாணவர்களின் செய்முறைப் பயிற்சிகளுக்காக பல்கலைக்கழகத்தை திறப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார் வசந்தி அரசரத்னம்.

மருத்துவம் மற்றும் விவசாய பீடங்களின் பரீட்சைகளை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து படிப்படியாக பல்கலைக்கழகம் முழு அளவில் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160718_srilanka_kilinochi_college

 

 

34 minutes ago, nedukkalapoovan said:

ஏன் அண்ணே சர்வதேச மொழியை எல்லாரும் கற்றால் ஒரு பிரச்சனையும் இல்லையே. சர்வதேச மயமாகிடலாம். ஆளாளுக்கு அடிபடத் தேவையில்லை.. கண்டி யாழ்ப்பாணம் என்று கொண்டு. பேசாம... பழைய படி பிரித்தானிய காலணித்துவக் காலத்திற்குப் போய்ட்டால்.. பறுவாயில்லைப் போலக் கிடக்குது. வர வர எங்கள் ஆக்களின் சிங்களவனிடம் அடிபணியும் இங்கிதஸ்துக்கு விவஸ்தையே இல்லாமல் போய்க்கிட்டிருக்கு. அதுதான் அவன் இப்ப உள்வீட்டுக்க நுழைஞ்சு தன்னை நிலை நிறுத்தவும் அடிக்கவும் ஆரம்பிச்சிட்டான்.

அன்று கொழும்பில் தமிழன் அடிவாங்கினான்.. இன்று யாழ்ப்பாணத்தில் வாங்கிறான். அடிவாங்கிறது என்னவோ தமிழன் தான் எப்பவும். அதேன் மாறுதில்லை. :rolleyes:

முதலில் இங்கு என்ன நடந்தது என்று அறிஞ்சு எழுதணும். சும்மா எழுந்தமானத்துக்கு மற்றவர்களுக்கு உங்கள் காழ்ப்புணர்ச்சியை, இனவெறியை ஊட்ட எழுதுபவர்களுக்கு இனிமேல் நான் பதில் தரப் போவதில்லை. உங்கள் பதிலையும் வாசிக்க போவதில்லை நன்றி வணக்கம் - நெடுக்ஸ்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஜீவன் சிவா said:

முதலில் இங்கு என்ன நடந்தது என்று அறிஞ்சு எழுதணும். சும்மா எழுந்தமானத்துக்கு மற்றவர்களுக்கு உங்கள் காழ்ப்புணர்ச்சியை, இனவெறியை ஊட்ட எழுதுபவர்களுக்கு இனிமேல் நான் பதில் தரப் போவதில்லை. உங்கள் பதிலையும் வாசிக்க போவதில்லை நன்றி வணக்கம் - நெடுக்ஸ்.

அது உங்களுக்கான பதில் அல்ல. நீங்கள் இட்ட கருத்தை எழுதியவருக்கான பதில்.

நாங்கள் எழுதுவது இனவெறி.. நிறவெறி.. மதவெறி எதுவாகவும் இருக்கட்டும். அதுபிரச்சனை இல்லை.. யதார்த்தம் என்ற போர்வையில்.. உருப்புமறைப்புக்களைச் செய்து ஒரு போலியான நல்லிணக்கத்தையோ.. உரிமைப் பறிப்பையோ நிலை நாட்ட முடியாது இலங்கைத் தீவில்.

நடந்த சம்பவம் என்ன என்பதை களத்தில் இருந்து அவதானித்த செய்தியாளர்களும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற அரசியல்வாதிகளும்.. மாணவர்களும் சொல்லிவிட்டார்கள்.  நீங்க உட்பட யாரும் எனிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சொன்னாலும் நம்ப ஆக்களில்லை. காரணம் மக்கள் அறிவார் 68 வருட வரலாற்றையும் அதற்கு முந்தைய வரலாற்றையும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனமாகத் தோற்றுப் போனவர்கள் தமிழர்கள். வென்றவர்கள் சிங்களவர்கள். வீரமாகப் போராடியவர்களையே கைகட்டி, சேர் சேர் என்று உயிருக்காகக் கெஞ்சச் செய்தவர்கள். அதை எல்லாம் உணர்ந்தால் தேசிய நடனமான கண்டிய நடனத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

கண்டிய நடனத்திற்கு எதிர்ப்புக் காட்டுமளவிற்கு மைத்திரி, ரணில் கூட்டரசு ஜனநாயகவெளியைத் திறந்துவிட்டிருக்கின்றது. இதுவே மகிந்த ஆட்சியென்றால் இதே தமிழ் மாணவர்களே கண்டிய நடனத்தை ஆடி சிங்களத்தில் தேசிய கீதமும் படித்திருப்பார்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பிரச்சினை என்ன வென்றால் சும்மா போன நாகத்தை வேண்டுமென்றே மிதித்தார்கள் . அது கொத்தி விட்டது அவ்வளவுதான்.(ஏற்னெவே அடி;பட்ட நாகம்)

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை... இங்கு தான், ஆரம்பிக்கின்றது.
மகிந்த.... இருந்தாலும், மைத்திரி  இருந்தாலும்..... என்று.....
சப்புக் கொட்டுவதை விட்டு..... புலி இருந்திருந்தால் இப்படி, நடந்திருக்குமா?  என்று யோசியுங்கள்.

ஒரு மாவட்டத்தின்  பல்கலைக் கழகம், அந்த மக்களின் உயிர்  நாடி.  அங்கு பயிலும் மாணவர்கள், அந்த மாவட்டத்தை பிரதி பலிப்பவர்கள்.  அதன் உணர்வு.... ஆவேசமாக மாறும் போது, வரும் ஆபத்துக்களை, பல்கலைக்கழக நிர்வாகிகள், முற் கூட்டியே யோசித்திருக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிந்தாலும் தமிழ்சிறக்கு ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஜீவன் சிவா said:

அன்புள்ள பல்கலைக்கழக தோழர்களுக்கு ,

Posted on July 17, 2016 by yathaadmin

1276457

 

அன்புள்ள  பல்கலைக்கழக தோழர்களுக்கு ,

நேற்று யாழ்பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை.  கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள் காயம் வந்தது, பொலீஸ் வந்தது,சிங்களவன் என்றோம் ,தமிழன் என்றோம் என்ற பாணியில் மக்களை உசுப்பேத்தி  வர்ணனைகளை அள்ளி வீசும் எந்த ஊடகத்திற்கும் வெளியே நான் நிற்க பிரியப்படுகின்றேன். இது  நாம் உரையாடிக்கொள்ள வேண்டிய தருணம்.

நேற்று இரவு பல்கலைகழகத்தை கடந்துவரும் போது மயான அமைதியுடன் பொலீஸ் சூழ இருந்தது. பகல் நடந்தவைகள் , செய்தியில் திரிக்கப்பட்டவைகள் , ரோட்டில் கேள்வியுற்றவைகள் அனைத்தும் என்னை மிகவும் உணர்ச்சி வசப்படுத்தியிருந்தன. வந்தவுடன் பேஸ்புக்கில் ஒரு இஸ்டேட்டஸ் போட்டேன் பத்து நிமிடத்தில் அதை அழித்துவிட்டேன். எனக்குள்ளும் அந்த பதட்டமும் , உணர்வுச்சிக்கலும் தொற்றியிருந்தது. நீங்களும் அவ்வாறுதான். நம்முடைய மனதில் காழ்பு இல்லை என்பதை மீண்டும் மனதுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்போம்.

இப்போது

இத்தனை வருட கால இன முரண்பாடு , எங்களை எத்தனை உணச்சிக்கு ஆளாக்கி வைத்திருக்கின்றது என்பதை நம் ஒவ்வொருவராலும் உணர முடிகின்றது. நேற்று பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் எழுந்த முரண்பாட்டை  மாணவர்கள் அந்த இடத்தில் அணுகியதைவிட ஊடகங்களும் , வலைத்தள வாசிகளும் மிக கூர்மையாக ஆணுகினார்கள். பலருக்கு யாரோ சிலர் ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு  அவர்களுக்கு முன்னால் போய் நிற்கவேண்டும் , அது மட்டும்தான் வேண்டும் . அத்தனை பழி உணர்ச்சி.

குறிப்பாக  safe zone க்குள் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும், அதிகாரம் , அரசியல் பின்னனி சார்ந்தவர்களுக்கும் நாங்கள் ஆயுதம் தாங்கி அடிபடவேண்டும். எல்லா இன மக்களிடையேயும்  இப்படி சிந்திக்கும் பிற்போக்கு பேர்வழிகள் மலிந்து போய்க்கிடக்கிறார்கள்.

இது பல்கலைக்கழக பிரச்சினை , முன்பு போல் அதை  பகடை அரசியலாக்கி கொண்டிருக்கின்றன சிங்கள தமிழ் ஊடகங்கள்.  பார்க்கப்போனால் அது சில நபர்கள் சார்ந்தது மட்டுமே . முதல் உணர்வு வசப்பட்டு கையோங்கிய சிலரதும் அதற்கு பதில் கை ஓங்கிய சிலரதும் பிரச்சினை.  அந்த சிலர் இரண்டு தரப்பிலும்  பல்கலைக்கழக வளாகத்தில் உலவுகின்றனர்.

அவர்கள் நேற்று அங்கே தீடிரென முளைத்தவர்கள் கிடையாது. சமீப நாட்களாக இது பனிப்போர் போல் உள்ளே குமைந்து கொண்டு இருந்த ஒன்றுதான். விகாரை கட்ட வேண்டும் என்ற சுவரொட்டிகள் , நந்தி சிலை உடைப்பு , உட்காரும் பெஞ்ச்கள் உடைப்பு என  விஞ்ஞான பீடத்திற்கு நெருக்கமாக இருக்கும் இடங்களில்  மறைந்தும் மறையாமலும் குமைந்து வந்த பிரச்சினை நேற்று வெடித்திருக்கிறது. அது ஒரு தீடீர்காரணம்கிடையாது அது பல உபநிகழ்வுகளின் சமீபத்தைய வெடிப்பு .

ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களையோ ஒட்டுமொத்த சிங்கள மாணவர்களையோ இரண்டு தரப்பாக நிறுத்தி அடிபடுங்கள் என்று சொல்வதைப்போலிருக்கிறது ஊடகங்களினதும் சமூக வலைத்தளங்களினதும் பதிவுகள். அவர்களின் சுவாரஸ்ய பசிக்கும் , இனவாதத்தாகத்துக்கும்  மாணவர்கள் பலியாடுகள் .  கயவர்கள்.

 

சகல இனத்தவர்களுக்கும் தங்களுடைய  அடையாளம் சார்ந்த  ஆற்றுகைகளையும் வெளிப்படுத்த உருத்துடையவர்கள் தான் ஆனால் அது எந்தச்சூழலில் எப்போது நிகழ்த்தப்படுகின்றது என்பதும் . அது அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டு அரசினாலும் குறித்த பெரும்பான்மை அடிப்படை வாதத்தாலும் வஞ்சிக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் நடைமுறைச்சூழலில் வலிந்து செய்யப்படுவது மோசமானது. ஆனால் பல்கலைக்கழகத்திற்கு வெளியே முளைக்கும் புத்தர் சிலைகளை நோக்கி யாரும் ஏன் சுட்டு விரலைக்கூட தூக்க வில்லை என்பது நகை முரண் அல்லவா?  இதற்கு பின்னால் ஏதோ ஒன்று இயங்குவதை உணர்ந்துகொள்ளுங்கள்.

எல்லோரும் சுதந்தரமானவர்கள் , சமனானவர்கள் என்று பேச முன்வரும் யாரிடமும் நான் முன்பு குறிப்பிட்ட  சுவரொட்டிகள், நந்திசிலை உடைப்புகள் , கல்லாசன தகர்ப்புக்கள் நிகழ்த்தப்பட்ட பின்னனி என்ன என்பதற்கான விபரத்தை கோரி நிற்கின்றேன்.  நிச்சயமான இது ஒட்டு மொத்த இனச்சூழலின் வடிவமல்ல அடிப்படைவாத பிற்போக்கு மனநிலை கொண்ட ஒரு சிலரின் செயல்கள்.

ஏன் வழமைக்கு அதிகமாக கடந்த வருடங்களில் இனமுரண்சூழலை கட்டமைப்பது போல யாழ் பல்கலைக்கழகத்திற்கு அதிகமான சிங்கள மாணவர்கள் திணிக்கப்படுகின்றார்கள் என்பதற்கும் , ஏன் தமிழ் – சிங்கள மாணவர்கள் ஒரு சில பீடங்களைத்தவிர மிகுதியான பீடங்களில் எதிர்படுகையில் புன்னகைத்து கொள்வது கூட இல்லையென்பதற்கும்  தர்க்க ரீதியான பதில் அதிகாரம் சார்ந்த யாரிடமாவது இருக்கின்றதா ? இது கூட அங்குவரும் சிங்கள மாணவர்கள் செய்யும் செயலல்ல . அது இனவாதம் ஊறிப்போன அதிகார மையங்கள் செய்யும் கயமைத்தனம் .

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடக்கம் பல்கலைக்கழக நிர்வாகம் வரை இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நீர் சுத்திகரிப்பானில் நீர் பெறுவதில் இருந்து சிங்கள தமிழ் பிரச்சினை பல்கலைக்கழக வளாகத்தினுள் தினமும் கூர்ப்படைவதை பல்கலைக்கழக நிர்வாகம் எப்போது  உணரப்போகின்றது.

அதிகார பீடங்கள் எப்போதும் மக்களுக்கும் அறத்துக்கும் எதிரானவைதானே. ஆனால் இதை இப்படியே விட்டால் இந்த கொடுநோய் மீண்டும் அழிவுக்குத்தான் கொண்டு செல்லும்.

தவிர தமிழ்- சிங்கள் மாணவர்களைப்போலவே முஸ்லீம் மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்குமான உறவு நிலைகள் தொடர்ந்தும் நோயுற்று இருப்பதை மிகச்சாதாரணமாக கடந்து போக இயலுமா? முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறையில்  ஊற்றப்பட்ட ஓயில் கறை இன்னும் அகலாமல் கிடப்பதை உள்ளூர எவருமே உணரவில்லையா ?

மூன்று இனத்தவரும் ஒரே வளாகத்தில் எங்கிருந்தோ உருவாக்கப்படும் வேற்றுமனநிலைக்கு பழக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம்.  ஒரு குழு அலது குறுகி இயங்கும் ஆள்மனப்பதிவு ஒன்று தொடர்ந்தும் அந்த பல்கலைக்கழக வளாகத்தினுள் அடுத்தடுத்து கடத்தப்படுகின்றது.

லீவு விடுவதன்  ஊடாக காழ்ப்பு அல்லது எதிர்மறை நிலைஎன்ற கத்தியை உறைக்குள் திரும்ப அனுப்புகின்றது நிர்வாகம் . அதிகார பீடங்கள் எங்கும் அப்படித்தான்.  உறையிலடப்பட்ட கத்தியை எப்படி கண்டறிந்து அழிக்கப்போகின்றோம் என்ற மனித நிலைக்கு நாங்கள் எப்போது போகப்போகின்றோம்.  முரண்பாடு தவிர்ப்பு , முரண்பாடு நிலை மாற்றம் , முரண்பாட்டு அகற்றல் எல்லாம் பாடத்திட்டமாக மட்டும் பல்கலைக்கழகம் கடந்து போகின்றது.

நாம் இனி அடக்கு முறையை எப்போதும் ஆயுதத்தால் எதிர்கொள்ள போவதில்லை என்று  ஒரு  நம்பிக்கையை ஆவது உருவாக்கி கொள்வோம்.

மரபை , சுயத்தை , நமது இருப்பை அழிப்பது மாணவர்கள் இல்லை. அவ்வாறு இயங்குபவர்களுக்கு பின்னால் அதிகாரம் , அடிப்படை வாதம் சார்ந்த பெரிய அரசியல் , பணக்கொள்ளைக்கூட்டம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை உணரவேண்டும் சிந்தனை தளத்தில் இவைகளை எதிர்கொண்டால் மாணவர்கள் முன்னால் அவை கண்நேரமும் நிற்காது.

நாம் எமது இருப்பை பாதுகாக்க போராடுதல் தவறில்லை. ஆனால் அது உணர்ச்சி , பதட்டம் என்பவற்றின் தளத்தில் நடத்தல் கூடாது அது , சிந்தனைதளத்தில் நின்று நடக்க வேண்டும்.

உங்களை தூண்டி விட்டு குளிர் காய்பவர்கள் நாளை நீங்கள் ஒரு பிரச்சினைக்குள் போக அவர்கள் அரசியல் மேடைகளை அலங்கரித்து யாருக்கு எதிராக உங்களை கல்லெறியச்சொன்னார்களோ அவர்களோடு சேர்ந்து நிற்பார்கள்.

நாங்கள் மாணவர்கள். நாங்கள் அவர்களைப்போல் கயவர்கள்  இல்லை.

ஒரே வளாகத்தில் ஒரே வகுப்பறைகளில் ஒரே சிற்றுண்டிச்சாலைகளில்  உலவுகிறோம், கல்வி கற்கிறோம் , ஒவ்வொரு நாளும் எதிர்ப்படுகிறோம். நிமிர்ந்து பரஸ்பரம் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். எல்லோரும் மனிதர்களாகவே பிறக்கிறோம். ஆதலால்.

புன்னகைக்க தொடங்குவம்.

ஓம் அதையும் நாங்களே தொடங்குவம்.

 

அன்புள்ள

யதார்த்தன்

http://yatharthan.com/2016/07/17/அன்புள்ள-பல்கலைக்கழக-தோ/

 

Edited by anni lingam

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

முதலில் இங்கு என்ன நடந்தது என்று அறிஞ்சு எழுதணும். சும்மா எழுந்தமானத்துக்கு மற்றவர்களுக்கு உங்கள் காழ்ப்புணர்ச்சியை, இனவெறியை ஊட்ட எழுதுபவர்களுக்கு இனிமேல் நான் பதில் தரப் போவதில்லை. உங்கள் பதிலையும் வாசிக்க போவதில்லை நன்றி வணக்கம் - நெடுக்ஸ்.

இதில் உங்களுக்கு வித்தியாசமாய் என்ன விளங்கினது என்பதை அறிய ஆவலாக உள்ளது ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.