Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியாவை விட வேறு இடத்தில் பொருளாதார மையம் அமைக்கக்கூடாது.தீர்மானம் நிறைவேற்றம்

Featured Replies

வவுனியாவை விட வேறு இடத்தில் பொருளாதார மையம் அமைக்கக்கூடாது.தீர்மானம் நிறைவேற்றம்
 
 
வவுனியாவை விட வேறு இடத்தில் பொருளாதார மையம் அமைக்கக்கூடாது.தீர்மானம் நிறைவேற்றம்
 வவுனியாவை விடுத்து வேறு மாவட்டத்தில்  பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கக்கூடாது என்றும் வவுனியாவில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம்  நிறைவேற்றப்ப ட்டுள்ளது.
1470288000_download%20%281%29.jpg
பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பது தொடர்பாக தீர்மானத்தினை எடுப்பதற்காக வவுனியா மத்தியஸ்த சபையின் தலைவர் எஸ். வரதகுமார் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த 20 பொது அமைப்புக்கள் கூடி பல வாதப்பிர திவாதங்களுக்கு மத்தியில் 3 தீர்மானங்களை எடுத்திருந்ததுடன் அவற்றை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் நாளை வெள்ளிக்கிழமை கையளிப்பது எனவும் தீர்மானித்தனர்.
 
இதன்போது வவுனியா மாவட்டத்தினை விட்டு பொருளாதார மையம் வேறு இடத்தில் அமைக்கப்படக்கூடாது, வவுனியா நகருக்கு வடக்கு பக்கமாக ஏதேனும் ஒரு பகுதியில் அமைக்கப்படவேண்டும் மற்றும் இது தொடர்பாக இறுதி முடிவெடுப்தற்காக வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்பாக கூட்டப்படவேண்டும் என்ற தீர்மானங்களே எடுக்கப்பட்டுள்ளன.
 
இதேவேளை 35 பேர் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் ஒருமித்த கருத்தாக வவுனியாவில் நகருக்கு வடக்கு பக்கமாக எப்பகுதியில் பொருளாதார மையம் அமைக்கப்பட்டாலும் அதனை ஏகமனதாக ஏற்றுக்கொள்வது எனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது

http://onlineuthayan.com/news/15827

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பிரச்சனை இன்னும் முடியவில்லையா:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதனூடாக இந்த உலகுக்கு நாங்கள் சொல்ல வருவது யாதெனில், 
ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் இடத்தேர்வையே செய்ய முடியாத தமிழ்தலைமைகளாகிய நாம் ; நாட்டை தந்தால்(!) எப்படி என்ற சிந்தனையையேயாகும்.
 

Edited by nochchi

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் 

1.பணத்தை முஸ்லிமிடம் வாங்கி விட்டு வவுனியாவை விற்றுவிட்டான் தமிழன்.

2. முதலமைச்சரை பழிவாங்க வவுனியாவை விற்றுவிட்டான் தமிழன்.

எது எப்படியாயினும் வெல்வது முஸ்லீம் தோற்ற்ப்பது தமிழன்.
இதன் பலனை எல்லாம் சொந்த மண்ணில் முஸ்லிமிடம் அடிமையாக வாழும் போது தான் தெரியும்.

2 hours ago, Dash said:

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் 

1.பணத்தை முஸ்லிமிடம் வாங்கி விட்டு வவுனியாவை விற்றுவிட்டான் தமிழன்.

2. முதலமைச்சரை பழிவாங்க வவுனியாவை விற்றுவிட்டான் தமிழன்.

எது எப்படியாயினும் வெல்வது முஸ்லீம் தோற்ற்ப்பது தமிழன்.
இதன் பலனை எல்லாம் சொந்த மண்ணில் முஸ்லிமிடம் அடிமையாக வாழும் போது தான் தெரியும்.

இப்படியே சொல்லிக்கொண்டு இருங்கோ 

இந்த திட்டமும் மதவாச்சிக்கோ அனுராதபுரத்துக்கோ போனப்புறம் கம்மென்னு இருங்கோ.

உந்த 65000 வீட்டுக்கு என்ன மாற்றீடு? நிறுத்திய பின்னர் யாராவது வாயை திறந்தார்களா?

உலக வங்கியின் திட்டத்தில் யாழ் நகர அபிவிருத்தி திட்டத்துக்கு என்ன நடந்தது. திரிகோணமலை முஸ்லீம்கள் ஒரு சிங்கப்பூர் கொம்பனியுடன்  எப்பவோ அக்ரிமெண்ட்  போட்டுட்டாங்களாம். நாங்கள் இப்பவும் ஆளுநர் மாளிகையில் சந்திக்க மாட்டம் என்று அடம் பிடிச்சு கத்துறம்.

உருப்பட்ட மாதிரித்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.